தமிழகத்தில் நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் கட்சிகளின் சின்னம் என்பது மிகப்பெரிய விவாதப்பொருளாக ஆகிவிட்டது. கடந்தமுறை விழுப்புரம் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட ரவிக்குமார், தன்னை எதிர்த்து நின்ற வேட்பாளரை விட லட்சத்துக்கும் அதிக மான வாக்குகள் அதிகமாகப் பெற்றார். ஆனால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உதய சூரியனில் நிற்காமல் பானைச் சின்னத்தில் போட்டியிட்டதனால் வெறும் 3000 வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றார். இது, தேர்தலில் சின்னம் எவ்வளவு முக்கியம் என்பதற்கு ஒட்டுமொத்த தமிழகத்துக்கே பாடமாக அமைந்தது.
அதனால் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளின் போதே வி.சி.க.வையும், ம.தி.மு.க.வையும் நீங்கள் ‘உதயசூரியன் சின்னத்தில் நில்லுங்கள்’ என தி.மு.க. வலியுறுத்தியது. அதை இரு கட்சிகளுமே ஏற்க மறுத்தன. தனிச் சின்னத்தில் போட்டி யிட்டால்தான் தங்களது அரசியல் கட்சியை தேர்தல் கமிஷன் அங்கீகரிக்கும் என இரு கட்சிகளும் சொல்லின. அதை தி.மு.க. ஏற்றுக் கொண்டது. ஆனால், நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் வழங்கப்படாமல் மறுக்கப்பட்டது முதல் பிரச்சினை தொடங்கியது. சின்னம் மறுக்கப்பட்டதை எதிர்த்து நாம் தமிழர் கட்சி வழக்குப் போட்டது. “நாங்கள் ஏற்கெனவே பல மாநிலங்களில் இயங்கும் ஒரு கட்சிக்கு விவசாயி சின்னத்தைக் கொடுத்து விட்டோம். எனவே நாம் தமிழர் கட்சிக்கு அதைத் தர முடியாது” என சொன்ன தேர்தல் கமிஷனின் வாதத்தை கோர்ட் ஏற்றுக்கொண்டது. கடைசியில் மைக் சின்னத்தை ஏற்று சீமான் போட்டியிடுகிறார். தமிழகத்தில் 40 தொகுதிகளில் போட்டியிடும் சீமானுக்கு சொன்ன வாதத்துக்கு நேர் எதிரான வாதத்தை ம.தி.மு.க. பம்பரச் சின்னத்தைக் கேட்டு தொடர்ந்த வழக்கில் தேர்தல் கமிஷன் முன்வைத்தது. "ம.தி.மு.க. ஒரு தொகுதியில்தான் போட்டியிடு கிறது. பம்பரச் சின்னம் பொதுவான சின்னங்கள் வழங்கும் பட்டியலில் இல்லை. அதற்கான உத்தரவு இன்னமும் பிறப் பிக்கப்படவில்லை. எனவே பம்பர சின்னத்தை ம.தி.மு.க.வுக்கு தர முடியாது'’என தேர்தல் கமிஷன் சொன்னது.
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒரு எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உள்ள னர். அந்தக் கட்சி தென்னிந்தியா முழுவதும் போட்டியிடுகிறது. ஆனால், இதுவரை 1 சத வீதத்துக்கு அதிகமான வாக்குகளை வாங்க வில்லை. மூன்று ஆண்டுகளாக கட்சியின் வரவு செலவு அறிக்கைகளை தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்யவில்லை என அக்கட்சிக்கு பானை சின்னத்தை ஒதுக்க தேர்தல் கமிஷன் மறுத்து விட்டது. அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள புதிய தமிழகம் டி.வி. சின்னத்தைக் கேட்டது. அதையும் தேர்தல் கமிஷன் தர மறுக்க, தென்காசி தொகுதியில் நான் இரட்டை இலை சின்னத்திலேயே நிற்கிறேன் என கிருஷ்ணசாமி அறிவித்து விட்டார்.
"கிருஷ்ணசாமி போலவே நீங்களும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுங்கள் நீங்கள் புதிய சின் னம் பெற்றாலும் அந்த சின்னத்தை 20 நாட்களுக்குள் மக்களிடம் கொண்டு சேர்க்க முடியாது என ம.தி.மு.க.விடமும், வி.சி.க.விடமும் தி.மு.க. தலைமை சொல்கிறது. அதை அவர்கள் கேட்கத் தயாராக இல்லை. இதனால் இந்தக் கட்சிகள் போட்டியிடும் 3 தொகுதிகளில் ஆளும் தி.மு.க. கூட்டணிக்கு சின்னத்தினால் பலவீனம் ஏற்படுமோ என்கிற பயம் தி.மு.க. கூட்டணி வட்டாரங்களில் எதிரொலிக்கிறது.
அதே நேரத்தில், ம.தி.மு.க., வி.சி.க.வை விட பலம் குறைந்த கட்சியான டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க. கட்சிக்கு குக்கர் சின்னத்தையும், ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரசுக்கு சைக்கிள் சின்னத்தையும் எந்த விவாதமும் இல்லாமல் தேர்தல் கமிஷன் வழங்கியது. இது பா.ஜ.க. ஆதரவு நிலை. ஒரு கண்ணில் வெண்ணெய்யும் மற்றொரு கண்ணில் சுண்ணாம்பும் தேர்தல் கமிஷன் வைக் கிறது என விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுபற்றி நம்மிடம் பேசிய தேர்தல் கமிஷன் அதிகாரிகள், "நாங்கள் அ.தி.மு.க.விற்கு இரட்டை இலை சின்னத்தைக் கொடுத்துள்ளோம். அந்தக் கூட்டணியில் இருக்கும் தே.மு.தி.க.வுக்கு முரசு சின்னத்தைக் கொடுத்து உள்ளோம். ஒவ்வொரு கட்சியும் விண்ணப்பிக்கும்போது என்ன நிலையில் இருக்கிறது என்பதைப் பொறுத்தே நாங்கள் சின்னத்தை ஒதுக்குகிறோம். சின்னம் ஒதுக்கவில்லை என்றால் அதற்கான காரணத்தைச் சொல்கிறோம். அந்தக் காரணம் வலுவான காரணமாக இல்லையென்றால் கோர்ட்டுகள் எங்கள் வாதத்தை ஏற்காது''’என்கிறார்கள்.
ஆனால் தேர்தல் கமிஷன் முரண்பாடுகள் அற்ற அமைப்பாக செயல்படவில்லை. சமீபத்தில் மேற்கு வங்கத்தில் நான்கு கட்டங்களாக தேர்தல் நடத்தலாம் என மம்தா சொன்னார். "அதுதான் சரி. ஏழு கட்டங்களாக நடத்தவேண்டாம்' என சொன்னதற்காக அருண்கோயல் என்கிற தேர்தல் கமிஷனர் ராஜினாமா செய்ய வைக்கப்பட்டார். அவர் போனபிறகு இரண்டு புதிய தேர்தல் கமி ஷனர்கள் ஒன்றிய பா.ஜ.க. அரசால் நியமிக்கப்பட் டார்கள். அதில் ஒருவர் மோடிக்கு மிக மிக நெருக்க மானவர். அவர் காஷ்மீரில் நிர்வாக அதிகாரியாக மோடி யால் நியமிக்கப்பட்டு பணி யாற்றியவர். அருண் கோயல் ராஜினாமாவின்போதே தேர்தல் கமிஷனில் கருத்து வேறுபாடுகள் சகஜம் என தலைமை தேர்தல் ஆணையாளர் பேட்டியளித்தார்.
“இன்று இந்தியா முழுவதையும் தேர்தல் கமிஷன்தான் ஆண்டு கொண்டிருக்கிறது. சாதாரண இன்ஸ்பெக்டர் வரை தேர்தல் கமிஷன் மாற்று கிறது. ஆனால் எதிர்க்கட்சிகளைக் குறிவைத்து நடத்தப்படும் அமலாக்கத்துறை ரெய்டுகளை நடத் தும் அதிகாரிகள் ஒருவர் கூட மாற்றப்படவில்லை. சென்சிட்டிவான கோவைக்கு சாதாரண மாநில சர்வீசில் உள்ள ஒரு எஸ்.பி.யை தேர்தல் பார்வை யாளராக தேர்தல் கமிஷன் அனுப்பியுள்ளது.
"மொத்தத்தில் எதிர்க்கட்சிகளுக்கு ஜன நாயகக் காற்றை சுவாசிக்கும் உரிமை இல்லாத ஒருதலைப்பட்சமாக பா.ஜ.க. அரசு நடத்தும் உள்ளாட்சித் தேர்தலாகவே பாராளுமன்றத் தேர்தலை தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளது'’ என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.