கடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில், தென்காசி மாவட்ட செங்கோட்டை யூனியனில் வருகிற சீவநல்லூர் ஊராட்சி தலைவர் பதவி, தாழ்த்தப்பட்ட பட்டியலின சமூகத்தைச் சார்ந்த பெண்களுக்கு என்று ஒதுக்கப்பட்டது. இங்கு பட்டியலினத்தைச் சேர்ந்த முத்துமாரி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். எனினும் கவுன்சிலர்கள் செய்த ஜனநாயகப் படுகொலை யால் முடங்கிவிட்டது ஊராட்சி. ஏன்?
ஊராட்சித் தலைவி முத்துமாரி தி.மு.க.வைச் சார்ந்தவர். அந்த ஊராட்சியின் 9 கவுன்சிலர்களில், தி.மு.க. 2, அ.தி.மு.க. 3, பா.ஜ.க. 01, சுயேட்சை 3 என்ற எண்ணிக்கையில் இருக்கின்றனர். தேர்தலுக்குப் பின் நடந்த ஊராட்சித் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட பா.ஜ.க. கவுன்சிலர் பட்டுராஜ், துணைத் தலைவரானவர். ஊராட்சியின் 9 கவுன்சிலர்களில் தி.மு.க. உறுப்பினர் தவிர்த்து மற்ற 7 கவுன்சிலர்களும் பா.ஜ.க. பட்டுராஜின் பக்கமிருக்கிறார்கள்
இந்நிலையில் ரியல் எஸ்டேட் தொழிலிலிருக்கும் துணைத்தலைவர் பட்டுராஜின் உறவினர் ஒருவர், ஊராட்சிப் பகுதியில் ஒரு ஏக
கடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில், தென்காசி மாவட்ட செங்கோட்டை யூனியனில் வருகிற சீவநல்லூர் ஊராட்சி தலைவர் பதவி, தாழ்த்தப்பட்ட பட்டியலின சமூகத்தைச் சார்ந்த பெண்களுக்கு என்று ஒதுக்கப்பட்டது. இங்கு பட்டியலினத்தைச் சேர்ந்த முத்துமாரி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். எனினும் கவுன்சிலர்கள் செய்த ஜனநாயகப் படுகொலை யால் முடங்கிவிட்டது ஊராட்சி. ஏன்?
ஊராட்சித் தலைவி முத்துமாரி தி.மு.க.வைச் சார்ந்தவர். அந்த ஊராட்சியின் 9 கவுன்சிலர்களில், தி.மு.க. 2, அ.தி.மு.க. 3, பா.ஜ.க. 01, சுயேட்சை 3 என்ற எண்ணிக்கையில் இருக்கின்றனர். தேர்தலுக்குப் பின் நடந்த ஊராட்சித் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட பா.ஜ.க. கவுன்சிலர் பட்டுராஜ், துணைத் தலைவரானவர். ஊராட்சியின் 9 கவுன்சிலர்களில் தி.மு.க. உறுப்பினர் தவிர்த்து மற்ற 7 கவுன்சிலர்களும் பா.ஜ.க. பட்டுராஜின் பக்கமிருக்கிறார்கள்
இந்நிலையில் ரியல் எஸ்டேட் தொழிலிலிருக்கும் துணைத்தலைவர் பட்டுராஜின் உறவினர் ஒருவர், ஊராட்சிப் பகுதியில் ஒரு ஏக்கர் 20 சென்ட் அளவிலான இடத்தை வாங்கி, அதனை 34 பிளாட்டுகளாக்கியுள்ளார். அவற்றுக்கு ஊராட்சி டி.டி.சி.பி.யின் ஒப்புதலுக்காக துணைத் தலைவர் பட்டுராஜ், தலைவி முத்துமாரியிடம் கேட்டபோது, ஒப்புதல் அளிப்பது தொடர்பாக இருவருக்குமிடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது. விளைவு, துணைத் தலைவரின் ஆதரவு கவுன்சிலர்கள் அவருடன் இணைந்துகொண்டு அவரின் இழுப்புக்கேற்ப தலைவிக்கு ஒத்துழைக் காமல் போனதால், கிட்டத்தட்ட ஏழு மாதமாக ஊராட்சி மன்றக் கூட்டம் நடக்காமல் முடங்கிக்கிடக் கிறது.
இது குறித்து ஊராட் சித் தலைவி முத்து மாரியைச் சந்தித்தபோது, ""அந்த பிளாட்களின் ஒப்புதலுக்காக துணைத் தலைவர் என்னிடம் கேட்டபோது, விதிகளின் படி ஊராட்சியின் பயன்பாட்டிற்காக விதிமுறைப்படி இடம் ஒதுக்கப்பட வேண்டும் என்றேன். பெயரளவுக்கு சாலையோரமுள்ள குறைவான இடத்தைக் கொடுத்தார். அதில் ஊராட்சி சார்பில் போர் போடப்போனபோது தடுத்தார். எனவே ஊராட்சி ப்ளாட் அப்ரூவல் தரவில்லை. அப்ரூவல் இல்லாததால் ப்ளாட் விற்பனையில் அவருக்கு சிக்கல். அந்த ஆத்திரத்தால், அவரோடிருக்கும் கவுன்சிலர்களை மன்றக் கூட்டத்தில் கலந்துகொள்ள விடாமல் செய்கிறார். இதனால் மன்றக் கூட்டத்தை நடத்த முடியாமல் போனது.
இந்நிலையில், எங்கள் சீவநல்லூர் கிராமத்தில், இதே பஞ்சாயத்தில் பத்தாண்டுகள் தலைவராக இருந்த சட்டநாதன், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக இருக்கும் அவரது மனைவி கன்னிமுத்து, இருவரும் அவர்களின் புதிய மருந்துக் கம்பெனியின் மருத்துவக் கழிவு களை அகற்றுவதற்காக ஊராட்சியின் ஒப்புதல் அக்ரிமெண்ட் வேண்டுமென்று கேட்டனர். மருந்துக் கம்பெனிக்கான அனுமதி உள்ளிட்ட விவரங்களைக் கேட்டு, அவர்கள் தராததால் அதில் கையெழுத்திட ஒப்புக்கொள்ளவில்லை. அதனாலும் என்மீது அவர்களுக்கு கோபம். இதற்காக மன்றக்கூட்டத்தை நடத்தவிடாமல் செய்கிறார்கள்''’என்றார்.
மேலும், ""கூட்டம் நடக்காததால், தெருவிளக்கு, பைப்லைன் ரிப்பேர், ஆழ்கிணறு தூர் வாருதல் போன்ற பணிகளுக்கான கூலியைக் கொடுக்கமுடியவில்லை. அவர்கள் கூட்டத்திற்கு வராததைப் பற்றி, முதல்வர், கலெக்டர் தொடங்கி, ஏ.டி. பஞ்சாயத்து, யூனியன் அதிகாரி கள் என அனைவருக்கும் மனுக்களை அனுப்பி னேன். இதன்பின், பி.டி.ஓ. ஊராட்சிக்கு வந்து, துணைத் தலைவர் மற்றும் கவுன்சிலர்களை வரவழைத்தார். ஒத்துழைப்பு கொடுங்கள் என்று, துணைத்தலைவரிடமும், கவுன் சிலர்களிடமும் பி.டி.ஓ. கேட்டும், அவர்கள் எதுவும் சொல்லாமல் வெளியேறி விட்டனர். இந்த நிலையில், ஏ.டி.பஞ்சாயத்து அதிகாரியான பிரான்சிஸ் மகாராஜன், அனைவரிடமும் பேசி, மன்றக் கூட்டத்திற்குச் செல்லுங்களென எச்சரித்த பின்னர், அனைவரும் கூட்டத்திற்கு வருவார்கள், வருகைப் பதிவேட்டில் கையெழுத்தை மட்டும் போட்டுவிட்டுச் சென்று விடுவார்கள். இப்படித்தான் இங்கே நடக் கிறது'' என்றார் கலக்கமாக.
ஊர் மக்களான இசக்கி முத்து, சங்கர், அசோக்குமார் ஆகியோர் நம்மிடம் “""குடி தண்ணீர், கழிவுநீர் போக்கு, தெரு லைட்டுன்னு மக்களோட அத்தியாவசிய வேலைகள செய்யறதுக்குக் கூட ஆதரவு குடுக்கல. அந்தம்மா ரொம்ப கஷ்டப்படுது. அதுக்கு இங்க ஒத்துழைக்க மாட்டீங்கறாங் கய்யா''’என்றனர் கவலையாய். இரண்டாவது வார்டு கவுன்சிலர் கார்த்திகாவும், ஐந்தாவது வார்டு கவுன்சிலர் அழகுசுந்தரியும் ""ஊருக்குத் தேவையான அடிப் படை வசதியைக்கூடச் செய்வ தற்கு மத்த வார்டு மெம்பருங்க ஒத்துழைப்பு இல்லங்க. அஜண்டா பாஸ் பண்ணாத்தானே நிதி அனுமதி கிடைக்கும். அதுக்குக்கூட வர மாட்டேங்குறாங்க. கெட்ட பெயர் எற்படுத்தணும்னு அவங்க எண்ணம்''’என நடப்புகளைச் சுட்டிக்காட்டினர்.
நாம் சட்டநாதனைத் தொடர்பு கொண்டதில், ""எனக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லை. இந்தம்மா தேவையில்லாமல் என் பெயரை இழுக்கிறார்கள். நான் ஏற்கெனவே 15 ஆண்டுகள் இந்த பஞ்சாயத்தின் தலைவ ராக இருந்து, முதல்தர பஞ்சாயத்தாக்கி, அவார்டெல்லாம் வாங்கிக் கொடுத்திருக்கேன்'' என்றார்.
இது குறித்து பிரான்சிஸ் மகா ராஜனைக் கேட்டபோது ""அடுத்தவாரம் அனைவரிடமும் விசாரணை நடத்தப் படும்''’என்றார்.
துணைத்தலைவரான பா.ஜ.க. பட்டுராஜை பலமுறை தொடர்புகொள்ள முயன்றும் அழைப்பை ஏற்கவில்லை. அவரது விளக்கம் கிடைத் தால் பிரசுரிக்கத் தயாராக உள்ளோம்.
-செய்தி & படங்கள்: ப.இராம்குமார்