"ஹலோ தலைவரே, ஒட்டு மொத்த தமிழக மக்களின் கவனத்தையும் தங்கள் பக்கம் ஈர்க்கும் விதமாக ஒரு புதிய திட்டத்தை மோடி அரசு கையில் எடுத்திருக்கிறது.''”
"என்னப்பா, புதிரெல்லாம் போடுறே?''”
"விசயத்துக்கு நேரடியாகவே வர்றேங்க தலைவரே, கச்சத்தீவை இலங்கையிடமிருந்து மீட்கவேண்டும் என்கிற குரல் பலகாலமாக இங்கே ஒலித்துக்கொண்டி ருக்கிறது. இதை தாங்கள் செய்தால், அதன்மூலம், தமிழக மீனவர்கள் பிரச்சினையைத் தீர்த்துவைப்பதோடு, ஒட்டுமொத்த தமிழக மக்களின் அமோக ஆதரவையும் பெற்றுவிடலாம் என்று கருதுகிறது மோடி அரசு. எனவே, இது தொடர்பான பேச்சுவார்த்தையை இலங்கை அரசோடு சீக்ரெட்டாக அது நடத்த ஆரம்பித்திருக்கிறது. இதைத் தொடர்ந்துதான், ஒன்றிய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன், அண்மையில் இலங்கைக்கு விசிட் அடித்தாராம். அப்போது, ஜோதி டர்கள் சொன்ன ரகசிய பலன்களின் படி, இங்கிருந்து ஒரு யானையையும், ஒரு யானைக் குட்டியையும் கொண்டுபோய், அங்குள்ள இந்துக்கோயில் ஒன்றுக்கு அன்பளிப்பாகக் கொடுத்திருக்கிறார் நிர்மலா. கச்சத்தீவை மீட்கவேண்டும் என்று பல ஆண்டுகளாக திராவிடக் கட்சிகள் குரல் கொடுத்து வரும் நிலையில், இதைச் சத்த மில்லாமல் சாதித்து, அதன் முழுப்பயனையும் வாக்குச் சீட்டுகளாக அறுவடை செய்து விடவேண்டும் என்று லாபக்கணக்கு போட்டுப் பார்க்கிறதாம் டெல்லி.''”
"அ.தி.மு.க.வில் எடப்பாடிக்கு எதிரான உள்ளடி வேலைகள் தீவிரம் அடைந்திருக்கிறதே?''”
"உண்மைதாங்க தலைவரே, அ.தி.மு.க.வில் மாஜி மந்திரி வேலுமணி, கட்சியின் பவரைப் பிடிக்கும் முயற்சியில் தீவிரம் காட்டிவருகிறார். எக்ஸ் எம்.எல்.ஏ.வான தி. நகர் சத்யாவும், அ.தி.மு.க. தலைமைக்கழகச் செயலாளர் மகாலிங்கமும், தமிழகம் முழுதும் இருக்கும் கட்சி நிர்வாகிகளிடம் அவருக்கு ஆதரவு திரட்டும் பணியில் மறைமுகமாக ஈடுபட்டு வருகிறார்களாம். சென்னையில் இருக்கும் அ.தி.மு.க. மா..செ.க்கள் அனைவரையும் லீட் செய்வது தி.நகர் சத்யாதானாம். சத்யா, தீபாவளியை முன்னிட்டு எடப்பாடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற அதே நாளில், சென்னை மா.செ.க்கள் அனைவரும் ’மாஜி’ வேலுமணியை நேரில் சந்தித்து வாழ்த்தை யும், தீபாவளி கிஃப்ட்டையும் பெற்றிருக்கிறார்கள். அ.தி.மு.க.வில் தொடங்கியிருக்கும் இந்த பவர் யுத்தம், யாருக்கு சாதகமாகப் போகிறது என்பதைக் கீழ்மட்டத் தொண்டர்கள் குழப்பத்தோடு கவனித்து வருகிறார்களாம்.''”
"இதற்கிடையே சசிகலாவும் இந்த தீபாவளி நேரத்தில் புதிய சபதம் எடுத்திருக்கிறாராமே?''”
’"ஆமாங்க தலைவரே, தீபாவளியை முன்னிட்டு தன்னை வந்து சந்தித்த பிரமுகர்களிடம், 500 கோடி, 1000 கோடின்னு செலவானாலும் பரவாயில்லை. அக்கா அமர்ந்திருந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவியில் நான் உட்கார்ந்தே தீருவேன். அதற்காக எந்த விலையைக் கொடுக்கவும் நான் தயங்கமாட்டேன். இப்போது அ.தி.மு.க.வில் இருக்கும் மா.செ.க்கள் தொடங்கி, முன்னாள் மந்திரிகள் வரை, என்னால் உருவாக்கப்பட்ட வர்கள்தான். அதனால் நான் நேரடி யாகப் பேசினால், அவர்கள் என் னோடு வரத் தயங்கமாட்டார்கள். நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும், நான் யாருன்னு இந்தத் தமிழகத் துக்குக் காட்டப்போகிறேன்’ என்ற ரீதியில் சூளுரைத்திருக்கிறாராம். இந்தத் தகவல் அரசல் புரசலாக எடப்பாடி காதுக்குப் போக, சசிகலா எந்த ரூட்ட
"ஹலோ தலைவரே, ஒட்டு மொத்த தமிழக மக்களின் கவனத்தையும் தங்கள் பக்கம் ஈர்க்கும் விதமாக ஒரு புதிய திட்டத்தை மோடி அரசு கையில் எடுத்திருக்கிறது.''”
"என்னப்பா, புதிரெல்லாம் போடுறே?''”
"விசயத்துக்கு நேரடியாகவே வர்றேங்க தலைவரே, கச்சத்தீவை இலங்கையிடமிருந்து மீட்கவேண்டும் என்கிற குரல் பலகாலமாக இங்கே ஒலித்துக்கொண்டி ருக்கிறது. இதை தாங்கள் செய்தால், அதன்மூலம், தமிழக மீனவர்கள் பிரச்சினையைத் தீர்த்துவைப்பதோடு, ஒட்டுமொத்த தமிழக மக்களின் அமோக ஆதரவையும் பெற்றுவிடலாம் என்று கருதுகிறது மோடி அரசு. எனவே, இது தொடர்பான பேச்சுவார்த்தையை இலங்கை அரசோடு சீக்ரெட்டாக அது நடத்த ஆரம்பித்திருக்கிறது. இதைத் தொடர்ந்துதான், ஒன்றிய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன், அண்மையில் இலங்கைக்கு விசிட் அடித்தாராம். அப்போது, ஜோதி டர்கள் சொன்ன ரகசிய பலன்களின் படி, இங்கிருந்து ஒரு யானையையும், ஒரு யானைக் குட்டியையும் கொண்டுபோய், அங்குள்ள இந்துக்கோயில் ஒன்றுக்கு அன்பளிப்பாகக் கொடுத்திருக்கிறார் நிர்மலா. கச்சத்தீவை மீட்கவேண்டும் என்று பல ஆண்டுகளாக திராவிடக் கட்சிகள் குரல் கொடுத்து வரும் நிலையில், இதைச் சத்த மில்லாமல் சாதித்து, அதன் முழுப்பயனையும் வாக்குச் சீட்டுகளாக அறுவடை செய்து விடவேண்டும் என்று லாபக்கணக்கு போட்டுப் பார்க்கிறதாம் டெல்லி.''”
"அ.தி.மு.க.வில் எடப்பாடிக்கு எதிரான உள்ளடி வேலைகள் தீவிரம் அடைந்திருக்கிறதே?''”
"உண்மைதாங்க தலைவரே, அ.தி.மு.க.வில் மாஜி மந்திரி வேலுமணி, கட்சியின் பவரைப் பிடிக்கும் முயற்சியில் தீவிரம் காட்டிவருகிறார். எக்ஸ் எம்.எல்.ஏ.வான தி. நகர் சத்யாவும், அ.தி.மு.க. தலைமைக்கழகச் செயலாளர் மகாலிங்கமும், தமிழகம் முழுதும் இருக்கும் கட்சி நிர்வாகிகளிடம் அவருக்கு ஆதரவு திரட்டும் பணியில் மறைமுகமாக ஈடுபட்டு வருகிறார்களாம். சென்னையில் இருக்கும் அ.தி.மு.க. மா..செ.க்கள் அனைவரையும் லீட் செய்வது தி.நகர் சத்யாதானாம். சத்யா, தீபாவளியை முன்னிட்டு எடப்பாடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற அதே நாளில், சென்னை மா.செ.க்கள் அனைவரும் ’மாஜி’ வேலுமணியை நேரில் சந்தித்து வாழ்த்தை யும், தீபாவளி கிஃப்ட்டையும் பெற்றிருக்கிறார்கள். அ.தி.மு.க.வில் தொடங்கியிருக்கும் இந்த பவர் யுத்தம், யாருக்கு சாதகமாகப் போகிறது என்பதைக் கீழ்மட்டத் தொண்டர்கள் குழப்பத்தோடு கவனித்து வருகிறார்களாம்.''”
"இதற்கிடையே சசிகலாவும் இந்த தீபாவளி நேரத்தில் புதிய சபதம் எடுத்திருக்கிறாராமே?''”
’"ஆமாங்க தலைவரே, தீபாவளியை முன்னிட்டு தன்னை வந்து சந்தித்த பிரமுகர்களிடம், 500 கோடி, 1000 கோடின்னு செலவானாலும் பரவாயில்லை. அக்கா அமர்ந்திருந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவியில் நான் உட்கார்ந்தே தீருவேன். அதற்காக எந்த விலையைக் கொடுக்கவும் நான் தயங்கமாட்டேன். இப்போது அ.தி.மு.க.வில் இருக்கும் மா.செ.க்கள் தொடங்கி, முன்னாள் மந்திரிகள் வரை, என்னால் உருவாக்கப்பட்ட வர்கள்தான். அதனால் நான் நேரடி யாகப் பேசினால், அவர்கள் என் னோடு வரத் தயங்கமாட்டார்கள். நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும், நான் யாருன்னு இந்தத் தமிழகத் துக்குக் காட்டப்போகிறேன்’ என்ற ரீதியில் சூளுரைத்திருக்கிறாராம். இந்தத் தகவல் அரசல் புரசலாக எடப்பாடி காதுக்குப் போக, சசிகலா எந்த ரூட்டில் வந்தாலும் அவரை முறியடிக்கத் தயார் என்று அவர் எரிச்சலோடு சொல்லத் தொடங்கி யிருக்கிறாராம்.''”
"மாஜி அ.தி.மு.க. மந்திரி விஜயபாஸ்கர், பா.ஜ.க.வினரை ஆரத் தழுவிக்கொண்டு இருக்கிறாரே?''’
”பா.ஜ.க.வுடன் இனி இந்த உறவும் இல்லை என்று அ.தி.மு.க. கூறியபடி, அதற்கு எதிராக முண்டா தட்டி வரும் நிலை யில், புதுக்கோட்டை மாவட்டத்தில் அண்ணா மலையின் "என் மண்; என் மக்கள்'’ பிரச்சார யாத்தி ரைக்கான முழுச்செலவையும் அ.தி.மு.க. மாஜி மந்திரி விஜயபாஸ்கர்தான் ஸ்பான் சர் செய்திருக்கிறார். இதை யொட்டி கொங்கு பகுதியில் கூட இல்லாத அளவிற்கு, இந்த பா.ஜ.க.வின் யாத்திரைக்கு வரவேற்பு விளம்பரங்கள் தொடங்கி, அதிக அளவில் ஆள் திரட்டுவது வரையிலான அத்த னையிலும் அதகளம் செய்திருக் கிறார்கள். இந்த ஏற்பாடுகளை விஜயபாஸ்கரும் அவர் உதவியாளர் ராமச்சந்திரனுமே நேரடியாக கவனித்ததைப் பார்த்து அ.தி.மு.க. வினரே, விஜயபாஸ்கர் கட்சி தாவி விட்டாரா? என குழம்பிப் போயிருக் கிறார்களாம். அந்த அளவுக்கு மாஜி விஜயபாஸ்கருக்கு பா.ஜ.க. மீது காதல் பெருகியிருக்கிறதாம். அவர் உதவியாளரான இந்த ராமச்சந்தி ரன்தான் அண்ணாமலைக்கு முதன் முதலில் வார்ரூம் அமைத்துக் கொடுத்துப் புண்ணியம் தேடிக் கொண்டவர் என்கிறார்கள்.''”
"இதற்கிடையே ஓ.பி.எஸ். ஸுக்கு நீதிமன்றத்தில் பலமான அடி விழுந்திருக்கே?''”
“"ஆமாங்க தலைவரே, அ.தி. மு.க.வின் பெயர், கொடி, சின்னம் ஆகியவைகளைப் பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் எடப்பாடி தொடர்ந்த வழக்கின் விசாரணை, கடந்த 7ஆம் தேதி வந்தபோது, "இந்த விவகாரத்தில் எத்தனை முறைதான் நீதிமன்றத்துக்கு வருவீர் கள்?' என்று நீதிபதி சதீஷ்குமார், ஓ.பி.எஸ். தரப்பைக் கடிந்து கொண்டதோடு, எடப்பாடியின் கோரிக்கையை ஏற்று இடைக் காலத் தடை உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார். மேலும் வழக்கின் விசாரணை, வரும் 20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப் பட்டிருக்கிறது. இந்தத் தகவல் சிங்கப்பூர் டூரில் இருந்த ஓ.பி.எஸ்.ஸுக்குப் போனதால் அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாகத் தமிழகம் திரும்பிவிட்டார். சோர்ந்து போய்விட்ட தன் சகாக் களிடம் "ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் நாம் போட்டிருக்கும் மேல்முறை யீட்டு வழக்கில் நமக்கு நல்ல தீர்ப்பு வரும்' என்று ஆறுதலூட்டியிருக் கிறாராம்.''”
"உயர்நீதி மன்றத்தின் இந்த இடைக்காலத் தடையை எதிர்த்து, அப்பீல் போக முடிவெடுத்திருக்கிறாரே ஓ.பி.எஸ்?''”
’"ஆமாங்க தலைவரே, இந்த விவகாரத்தை எப்படி சமாளிக்கிறதுன்னு தன் அரசியல் சகாக்களான பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டவர்களிடமும், தனது வழக்கறிஞர்களிடமும் ஆலோசித்திருக்கிறார் ஓ.பி.எஸ். அப்போது பண்ருட்டி ராமச்சந்திரன், இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்திடமே மேல்முறையீடு செய்வோம்னு சொல்லியிருக்கிறார். இப்படிப்பட்ட சூழலில், தனிக்கட்சி தொடங்குவது தான் சரியாக இருக்கும் என ஓ.பி.எஸ்.சுக்கு ஆலோசனையும் தரப்பட்டிருக்கிறதாம். அது குறித்த ஆலோசனையிலும் ஓ.பி.எஸ். இருக்கிறாராம். இல்லையென்றால் கட்சியில் இருக்கும் பிரமுகர்கள் பலரும் எடப்பாடி பக்கம் பாயும் மன நிலையில் இருக்கிறார்களாம். அப்படி ஒரு நிலைமை வருவதற்குள் புத்திசாலித்தனமான ஒரு முடிவை எடுக்கவேண்டும் என்று பலரும் ஓ.பி.எஸ்.சிடம் வலியுறுத்தத் தொடங்கியிருக் கிறார்களாம்.''”
"சரிப்பா, எடப்பாடி தரப்பு என்ன மாதிரி ஃபீல் பண்ணுது?''”
’"தங்கள் கோரிக்கையை ஏற்று, அ.தி.மு.க.வின் பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றைப் பயன்படுத்தக்கூடாது என்று உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருப்பதால், எடப்பாடி தரப்பு பலத்த உற்சாகத்தில் இருக்கிறது. அடுத்து, எதிர்முகாமில் இருக்கும் ஓ.பி.எஸ்., தினகரன், சசிகலா இந்த மூவரைத் தவிர, மற்றவர்களைத் தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியை மீண்டும் எடப்பாடி முடுக்கிவிட்டிருக்கிறாராம். இதையொட்டி, தீபாவளி கிஃப்ட்டுகளைக் கொடுக்கும் சாக்கில், எதிர்முகாமில் இருக்கும் பிரமுகர்களுக்கு அ.தி.மு.க. வினர் வலை வீசிவருகின்றனர். பரிசுப் பொருட்களும் கரன்சிக் கட்டுகளும் கூட சில இடங்களில் விநியோகிக்கப்படு கிறதாம். சிலருக்கு எடப்பாடிதானே, நேரடியாக தீபாவளி கிஃப்ட்டுகளை அனுப்பி, தூண்டில் போட்டுக் கொண்டிருக்கிறாராம்.''”
"பெரம்பலூர் டெண் டர் விவகாரத்தை தி.மு.க. வுக்கு எதிரான அஸ்திர மாக பா.ஜ.க. கையில் எடுக்கிறதாமே?''”
"பெரம்பலூர் மாவட்ட குவாரிகளுக்கான டெண்டர் ஏலம் நடந்த போது, இதில் கலந்து கொள்ள வந்த பா.ஜ.க.வினர் கடுமையாகத் தாக்கப்பட்ட தாகப் புகார் எழுந்தது. இதைக் கண்டித்து பா.ஜ.க., அ.தி.மு.க. கட்சிகளைச் சேர்ந்தவர்கள், தீபாவளிக்குப் பிறகு பெரிய அளவில் ஆர்ப்பாட்டத்தை நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரின் உதவியாளர் மகேந்திரன், பெரம்பலூர் எம்.எல்.ஏ. பிரபாகரன் மற்றும் இவர்களது ஆதர வாளர்கள் என 200-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் பற்றிய விபரங்கள் முதல்வர் ஸ்டாலினுக்குப் போனபோது, அவர் ரொம்பவே ஷாக் ஆகிவிட்டாராம். இதைத் தொடர்ந்துதான் டெண்டர் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அதோடு, தி.மு.க.வினர் 12 பேர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், பா.ஜ.க. தரப்போ, அமைச்சரின் உதவியாளர் மகேந் திரன், எம்.எல்.ஏ. பிரபாகரன் ஆகியோரின் கண்ணசைவில்தான் தாக்குதலே நடந்தது. இவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என்ற புகாரோடு, வீடியோ ஆதாரங்கள் சகிதம் அமித்ஷாவின் ஒன்றிய உள்துறை அமைச்சகத்தை முட்டிமோதி வருகிறது. இதற்கான முன்னெடுப்பை அண்ணாமலை எடுத்துவருகிறாராம்.''”
"தைலாபுரத்தில் தந்தைக்கும் மகனுக்குமான கருத்து மோதல் அதிகரித்திருப்பதா தகவல் வருதே...''”
"உண்மைதாங்க தலைவரே, ஆரம்பகாலத்தில் வன்னியர் சங்கமாக இருந்த அமைப்பை, பா.ம.க. என்னும் ஒரு அரசியல் கட்சியாக வளர்த்தெடுக்க கடுமைய வியர்வை, ரத்தம் சிந்தியவர் டாக்டர் ராமதாஸ். இதற்காக இரவு பகல் பாராமல் பட்டிதொட்டி களில் எல்லாம் அவர் அலைந்துதிரிந்திருக்கிறார். பல்வேறு எதிர்ப்புகளையும் சமாளித்து வடமாவட்டங்களில் பா.ம.க.வுக்கு பலமான வாக்கு வங்கி ஏற்படவும் அவரே காரணமா இருந்தார். நிர்வாகிகளுக்கு பயிற்சி வகுப்புகளெல்லாம் நடத்தி கட்சியை பலப்படுத்தினார். ஒவ்வொருநாளும் மாநிலம் முழுவதுமிருந்து வரும் கட்சி நிர்வாகிகளை இப்போதும் சந்திக்கிறார் ராமதாஸ். ஆனா தலைவரா இருக்கும் அன்புமணி அப்படிப்பட்ட உழைப் பைக் கொடுக்கலைன்னு நினைக்கிறார். இப்படி வளர்த்த கட்சி, இன்று பலவகையிலும் பல வீனமாக மாறிவிட்ட தாகவும், கட்சியைக் காப்பாற்ற முடியாம போயிடுமோன்னும் மருத்துவர் ராமதாஸ் மனம்குமைந்து வருகிறாராம். மகன் அன்புமணியின் பேச்சைக் கேட்டு கட்சியின் சீனியர்கள் பலரையும் தூரத்தில் நிறுத்தியதால்தான் இந்த நிலை என்றும் அவர் கருதுகிறாராம். இத்தகைய காரணங் களால் ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள், இருவருக்கும் இடையிலேயே ஒரு சுவர் எழுகிற அளவுக்கு வளர்ந்துவிட்டதாம். கிட்டத்தட்ட கட்சியிலிருந்து மருத்துவரை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ள நினைக்கிறார் அன்புமணின்னு ராமதாஸுக்கு நெருக்கமானவர்கள் நினைக்கிறாங்க. இந்த நிலையில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதிலும் இருவரும் எதிரும்புதிருமா இருக்கிறார்களாம்.''”
"எப்படி?''”
"ஒன்றிய அமைச்சரவையில் தனக்கு பதவி தருவதா சொல்லி முதுகில் குத்திய பா.ஜ.க.வுக்கு பாடம்புகட்ட தி.மு.க. கூட்டணியில் இணைவதே பொருத்தமாயிருக்கும் என நினைத்துக் காய்நகர்த்தி வருகிறாராம், இந்த முறை காங்கிரஸ்தான் ஆட்சிக்கு வருமென நம்பும் அன்புமணி. தேர்தலில் பா.ம.க. வெற்றி பெற்றாலும் இல்லாவிட்டாலும் தன் மாமனார், மச்சான் மூலமாக மத்தியில் ஒரு பொறுப்பைப் பெற்றுவிடலாம் என்பது அவர் கணக்கு. மாறாக, தி.மு.க. பக்கம் சென்றால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இருக்கிறது. தவிரவும் கட்சியும் வளராது. வேண்டாமென அபிப்ராயப் படுகிறார் மருத்துவர். இதில் வாக்குவாதம் முற்றிய தில் மருத்துவருக்கு எதிரா கடுமையான வார்த்தை களை பிரயோகிக்கும் அளவுக்குப் போயிட்டதா வருத்தப்படறாங்க மருத் துவரோட இருக்கிறவங்க. பதிலுக்கு மருத்துவரும் வெளியே போன்னு சொல்ற அளவுக்கு உச்சகட்ட மோதலாயிடுச்சாம்.''
"கொஞ்சம் பொறுப்பா... அடுத்த செய்தியைப் பார்ப்போம். பா.ம.க. அப்பா-மகன் சிக்கலை அப்புறம் பேசலாம் 2024 சர்வதேச புத்தகக் கண்காட்சி தனியார் இடத்தில் நடக்கப் போகுதுனு அதிர்ச்சிச் செய்தி வந்ததே... உண்மையா?''…”
"ஆமாங்க தலை வரே, எந்த அதிமேதாவி சொன்ன அதிகப் பிரசங் கித்தனமான திட் டம் இதுன்னு தெரியலை. கடந்த வருடம் டெல்லிக்கு அடுத்தபடியா சென்னையில் முதன்முறையாக சர்வதேச புத்தகக் கண்காட்சி நடந்தது. இதனால் தமிழ் நூல்களின் உரிமைகளை சர்வதேசப் பதிப்பாளர்களும், பல்வேறு மொழி நூல்களின் உரிமைகளை தமிழ்ப் பதிப்பாளர்களும் ஆர்வமா வாங்கினாங்க. பல்வேறு மொழிபெயர்ப்பு ஆக்கவேலைகளும் நடந்தது. வாசகர்களுக்கும் சர்வதேச புத்தகக் கண்காட்சி பற்றிய ஒரு அறிமுகம் கிடைச்சுச்சு. இந்த முறை வழக்கமான சென்னை புத்தகக் கண்காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. வளாகத்திலும், சர்வதேச புத்தகக் கண்காட்சியை நந்தம்பாக்கத்திலும் அதே பொங்கல் விடுமுறை நாட்களில் தனித்தனியா நடத்த யாரோ யோசனை சொல்லியிருக்காங்க. உலக புத்தக சந்தைக்கு வருகிறவர்கள் ஒப்பந்தம் மட்டும்தானே போட வருகிறார்கள். அதனால் ஒரே இடத்தில் எதற்கு என்கிறார்கள். இதோட சாதக பாதகம் பற்றி பதிப்பாளர்கள் சங்கத்துல ஆலோசனைகூட கேட்கப் படலை. ரெண்டும் ரெண்டு தொலைவான இடங்களில் நடந்தால் வாசகர்கள் எப்படி இரண்டுக்கும் போய் வருவாங்க. இது புத்தகப் பதிப்பாளர்களை அவமானப்படுத்துவதாக வும், அவர்களது சோற்றில் மண்ணள்ளிப் போடுவதாக வும் உள்ளது. இரண்டு கண்காட்சியையும் தனித்தனியா நடத்த என்ன தேவை? தமிழ் புத்தகப் பதிப்பு, விற்பனை இரண்டிலும் ஒரு தொய்வு இருக்கும் சூழலில் இத்தகைய புத்தகக் கண்காட்சிகள்தான் பதிப்பாளர்களுக்கு நம்பிக் கையளிப்பதா உள்ளது. ஆனால், இப்படி புத்தகக் கண்காட்சி களை தனித்தனியாக பிரித்து நடத்த யோசனை சொல்லும் அதிகாரிகள் இருக்கும்வரை யில் பதிப்புத் துறை செழித்து வளர்வதற்கான வாய்ப்பே இல்லை.''’
"நான் தீபாவளி தொடர்பான ஒரு இனிப்புத் தகவலைப் பகிர்ந்துக்கறேன். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், தி.மு.க.வினரை குளிர்விக்க தீபாவளி கிஃப்ட் பாக்ஸுகளை மா.செ.க்கள், ந.செ.க்கள், ஒ.செ.க்கள் தொடங்கி, கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் அனுப்பி வருகிறது அறிவாலயம். தீபாவளியை செழுமையாகக் கொண்டாடும் வகையில் அவரவர்களின் பொறுப்புகளுக்கு ஏற்ப இந்த கிஃப்ட் பாக்ஸுகளின் எடையும் இருக்கிறதாம். கடந்த வருட தீபாவளியின் போது இந்த கிஃப்ட் பாக்ஸுகளைக் கொடுக்கும் பொறுப்பை அமைச்சர் செந்தில்பாலாஜி ஏற்றுக்கொண்டிருந்தாராம். இப்போது அவர் சிறையில் இருப்பதால், தலைமையே இதை நேரடியாக கவனிக் கிறதாம். இந்த செலவினங்களுக்கு டாஸ்மாக் நிறுவனம் அழுத்தமாகக் கைகொடுத்திருக் கிறதாம்.''
___________
இறுதிச் சுற்று!
தமிழ் பத்திரிகை உலகின் மூத்த புகைப்பட கலைஞரான சு.குமரேசன், நவம்பர் 8, புதனன்று இரவில் மாரடைப்பால் காலமானார். விகடன் குழுமத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய அவர், தற்போது தமிழ்நாடு நியூஸ் நவ் ஊடகத்தில் முதன்மை பத்திரிகை யாளராக பணியாற்றிவந்தார். மகாமதுர கவி வி.வே.முருகேச பாகவதரின் பேரனான இவர், 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தனது கேமிரா வின் மூலமாக, தமிழக அரசியலின் முக்கிய நிகழ்வுகளின் நேரடி சாட்சியாக விளங்கினார். அரசியல் தொடர்பான நிகழ்வுகளில் நடமாடும் என்சைக்ளோபீடியாவாகப் போற்றப்பட்ட அவரது திடீர் மறைவு, தமிழ் இதழியல் துறைக்கு பேரிழப்பாகும். அவருக்கு ரத்தினகுமாரி என்ற மனைவியும், ஸ்ரீனிவாசன் என்ற மகனும் உள்ளனர்.
தமிழ்நாட்டில் ஓராண்டு பயிற்சி பெற்ற அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டிலுள்ள கோயில்களில் ஆகம விதிகளுக்கு முரணாக அர்ச்சகர்கள் நியமனம் செய்யப்படுவதாக உச்ச நீதிமன்றத்தில் ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக உள்ள வழக்குகள் அனைத்தையும் உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த வழக்கில், நவம்பர் 8 புதனன்று நடைபெற்ற விசா ரணையில், "எதன் அடிப்படையில் அர்ச்சகர்கள் நியமிக்கப்படுகிறார்கள்?'' என்று நீதிபதிகள் கேள்வி எழுப்ப, "பயிற்சி பெற்றுள்ள அர்ச்சகர்கள், ஆகம விதிகளைப் படித்தவர்கள்தான் நியமனம் செய்யப்படுகிறார்கள். மேலும் அர்ச்சகர்களாக நியமனம் செய்ய அரசு சார்பில் கூடுதல் பயிற்சிகள் வழங்கப்படுகிறது'' என்று தமிழக அரசு கூறியது.
இன்றைய விசாரணை முடிவில், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் தமிழக அரசின் ஆணைக்குத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், இது தொடர்பான வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றமே தொடர்ந்து விசாரிக்கும் என்று கூறி இந்த வழக்கு ஜனவரி 25ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-கீரன்