குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (CAA) எதிராக வன்முறைப் போராட்டங்களில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட டெல்லி, ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீதான குற்றச்சாட்டில் உண்மை யில்லை எனக்கூறி, 11 மாணவர்களை விடுதலை செய்து டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு அறிவித்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (ஈஆஆ) எதிரான போராட்டங்கள், கடந்த 2019, டிசம்பர் 12ஆம் தேதி ஜனாதிபதி ஒப்புதல் வழங்கப்பட்டதும் வலுவடையத் தொடங்கின. அதற்கு மறுநாள், டிசம்பர் 13ஆம் தேதி, பாராளுமன்றத்தை முற்றுகையிடுவதற்காக டெல்லியிலுள்ள ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் சுமார் 800 பேர்வரை ஊர்வலமாகச் சென்றபோது, போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்ட னர். போராட்டத்தை ஒடுக்குவதற்காக மாணவர் கள்மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகள் வீசப்பட்டன. தடியடி நடத்தப்பட்டது. கல்வீச்சு நடந்தது. அந்தப் பகுதியே போர்க்களமானது. இந்த வன்முறையில் மாணவர்கள் தரப்பில் பலருக்கும் காயமேற்பட்டத
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (CAA) எதிராக வன்முறைப் போராட்டங்களில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட டெல்லி, ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீதான குற்றச்சாட்டில் உண்மை யில்லை எனக்கூறி, 11 மாணவர்களை விடுதலை செய்து டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு அறிவித்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (ஈஆஆ) எதிரான போராட்டங்கள், கடந்த 2019, டிசம்பர் 12ஆம் தேதி ஜனாதிபதி ஒப்புதல் வழங்கப்பட்டதும் வலுவடையத் தொடங்கின. அதற்கு மறுநாள், டிசம்பர் 13ஆம் தேதி, பாராளுமன்றத்தை முற்றுகையிடுவதற்காக டெல்லியிலுள்ள ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் சுமார் 800 பேர்வரை ஊர்வலமாகச் சென்றபோது, போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்ட னர். போராட்டத்தை ஒடுக்குவதற்காக மாணவர் கள்மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகள் வீசப்பட்டன. தடியடி நடத்தப்பட்டது. கல்வீச்சு நடந்தது. அந்தப் பகுதியே போர்க்களமானது. இந்த வன்முறையில் மாணவர்கள் தரப்பில் பலருக்கும் காயமேற்பட்டது.
அந்த கலவரத்தையடுத்து, ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள், தங்கள் பல்கலைக் கழகத்தினுள் இருந்தபடி பல்வேறு போராட்டங் களைத் தொடர்ச்சியாக நடத்தி வந்தனர். இந் நிலையில், பல்கலைக்கழகத்தினுள் போலீசாரும், போலீசாரின் உடையிலில்லாத குண்டர்களும் நுழைந்து, பல்கலைக்கழக நூலகத்தில் குழுமியிருந்த மாணவர்களின்மீது கடுமையான தடியடியில் ஈடுபட்டனர். நாடெங்கும் நடைபெற்றுவந்த சி.ஏ.ஏ. எதிர்ப்புப் போராட்டங்கள், 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமானதையடுத்து தற்காலிக மாகக் கைவிடப்பட்டன. போராட்டங்கள் கைவிடப் பட்டாலும், கொரோனா பரவல் இருந்த காலகட் டத்திலும், ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களைத் தேடித்தேடிக் கைது செய்யும் நடவடிக்கையில் டெல்லி காவல்துறை இறங்கியது. அரசுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டி, மாணவர்களை ஒருங் கிணைத்து வன்முறையைத் தூண்டியதாகக் கூறி 11 மாணவர்கள் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒரு மாணவர் தவிர அனைவரும் இஸ்லாமிய மாணவர்கள்.
குறிப்பாக, ஜாமியா பல்கலைக்கழகத்தின் அலுமினி அசோசியேஷன் தலைவர் ஷியாஃபூர் ரஹ்மான் கைது செய்யப்பட்டார். சஃபூரா ஜர்கர் என்கிற ஜாமியா மிலியா பல்கலைக்கழக ஆய்வு மாணவி, 6 மாத கர்ப்பிணியாக இருந்த சூழலில் கைது செய்யப்பட்டு இரு மாத காலத்துக்கு திஹார் ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவரது ஜாமீன் மனு பலமுறை ரத்து செய்யப்பட்டு, அரசின் விசாரணைக்கு ஒத்துழைப்பு தர வேண்டுமென்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது. இவரது கைது நடவடிக்கைக்கும், இவரோடு சேர்ந்து கைது செய்யப்பட்ட மாணவர்களையும் விடுவிக்க வேண்டுமென்றும், ஊபா சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாதென்றும், அம்னெஸ்டி இன்டர்நேஷனல் உள்ளிட்ட பல்வேறு சமூக நல அமைப்புகளும், மாணவர் அமைப்புகளும் குரல்கொடுத்துவந்தன. அன்றைய காலகட்டத்தில் காவல்துறை மட்டுமல்லாது, நீதிமன்றமே அச்சுறுத்தப்பட்டது. உதாரணத்துக்கு, கடந்த 2020, பிப்ரவரி 23 முதல் பிப்ரவரி 26 வரை, டெல்லியில், சி.ஏ.ஏ. எதிர்ப்புப் போராட்டக்காரர்கள்மீது வன்முறை ஏவிவிடப்பட்டதில், 53 பேர் வரை கொல்லப்பட்டனர். இதில், வன்முறையை ஏவிய பா.ஜ.க.வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டு மென்று உத்தரவிட்ட ஒரே காரணத்துக்காக நீதிபதி முரளிதர், இரவோடு இரவாக மாற்றம் செய்யப் பட்டார்!
அப்படியான சூழலில், ஜாமியா பல்கலைக் கழக மாணவர்களின் கைதுக்கு எதிராகத் தொடுக் கப்பட்ட வழக்கில், கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி, சனிக்கிழமை யன்று, அம்மாணவர் களை விடுதலை செய்த டெல்லி நீதிமன்றம், உண்மையான குற்றவாளி களைப் பிடிக்கக் காவல் துறை தவறிவிட்டதாக வும், இம்மாணவர்கள் பலியாடுகளாக்கப்பட் டதாகவும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ததற்குப் போதுமான ஆதாரங்கள் இல்லை என்றும், சாட்சிகளின் வாக்குமூலங்கள் ஒரு வருட காலத்துக்குப்பின் வாங்கப்பட்டது நம்பும்படியாக இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கையில் காவல்துறையினர் பதிவு செய்ததற்கும், காவல்துறையினரின் சாட்சிகள் கூறியதற்கும் நிறைய முரண்பாடுகள் இருக்கின்றன. அரசுக்கு எதிரான சதித்திட்டங்கள் தீட்டப்பட்டதாகவோ, அதன்படி ஒருங்கிணைக்கப்பட்டதாகவோ, அதற்கான டூல்கிட் உருவாக்கப்பட்டதாகவோ எவ்வித ஆதாரமும் குற்றப்பத்திரிகையில் இல்லை என்று குறிப் பிட்டுள்ளது.
வழக்கு விசாரணை விவரங்களை விசாரணை அதிகாரியோ, உதவி போலீஸ் கமிஷனரோ, துணை கமிஷனரோ முறையாக அரசு தரப்பு வழக்கறிஞ ரிடம் ஒப்படைக்காமல் காலம் தாழ்த்திவந்தனர். இதுகுறித்து அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞரோடு காவல்துறை தரப்பில் சரியாக ஒத்துழைக்காததை நீதிமன்றம் சுட்டிக்காட்டியதோடு, இதற்காகக் காவல்துறை தரப்பில் சொல்லப்பட்ட காரணங்கள் தெளிவற்றதாக இருப்பதாகக் குற்றம்சாட்டியது. மாணவர்கள் மீது ஊபா சட்டத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதை நீதிமன்றம் கண்டித்ததோடு, நிரபராதிகளான மாணவர்களை விடுதலை செய்துள்ளது. சிறுபான்மையினர்களுக்கு எதிராக மோடி அரசு வன்மத்தோடு செயல்படுவதற்கு, இந்த வழக்கில் நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்ட காவல்துறையினரின் வன்முறைச் செயல்பாடுகளே சரியான உதாரணமென்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.