பிரதமர் மோடியின் தமிழக விஜயம் பரபரப்பான அரசியல் திருப்பங்களு டன் அமைந்திருந்தது என்கிறார்கள் பா.ஜ.க.வினர். பொதுவாக பிரதமர் ஒரு மாநிலத்துக்கு வருகிறார் என்றால் அந்த மாநிலத்தின் பா.ஜ.க. தலைவருக்கு முக்கியத் துவம் கொடுப்பார்கள். கர்நாடகாவுக்கு சென்றால் கர்நாடக மாநிலத் தலைவர் எடியூரப்பாவும், கவர்னரும், முதல்வரும் பிரதமரின் மேடையை அலங்கரிப்பார்கள்.
அதற்கு நேர்மாறாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, பிரதமரின் விழா மேடையில் இடம் பெறவில்லை என்பதோடு, அண்ணாமலை யின் நெருங்கிய ஆதரவாளரான அமர்பிரசாத் ரெட்டி உட்பட யாரும் பிரதமர் கலந்துகொண்ட விழாவுக்கும், அவரை சாலையில் நின்று வரவேற் பதற்கும் செல்லவில்லை. பிரதமரை வரவேற்க அமைக்கப்பட்டிருந்த பேனர்கள் எல்லாம் அண்ணாமலை வைத்த பேனர்கள் இல்லை. பல்லாவரத்தில் பிரதமர் கலந்துகொண்ட கூட்டத்தில் கூட தி.மு.க.வினர் நிறைந்திருந்தனர். இப்படி தமிழக பா.ஜ.க. தலைமையை மோடி புறக்கணித்ததும், மோடியை அண்ணாமலை புறக்கணித்ததும் என வித்தி யாசமான காட்சிகள் பிரதமர் விசிட்டில் அரங்கேறியது.
பிரதமர் வருகிறார் என்ற தும் பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டத்தைக் கூட்டிய அண்ணாமலை தமிழக பா.ஜ.க. தலைவர்களில் யார், யார் அவரை வரவேற்பது, கை கொடுப்பது, நேரடியாக வணக்கம் சொல் வது என ஒரு லிஸ்ட்டை தயாரித்தார். பிரதமரிடம் நேரடி அறிமுகம் பெற பத்து லட்ச ரூபாய் தரவேண்டும் என அண்ணா மலையும், பிரதமருக்கு வணக்கம் சொல்ல ஐந்து லட்ச ரூபாய் தரவேண்டும் என கரு. நாகராஜனும் லிஸ்ட் தயாரித்தார்கள். பிரதமரை வரவேற்கும் பொறுப்பு அமர்பிரசாத் ரெட்டிக்கும், வினோஜ் பி.செல்வத்துக்கும் அளிக்கப்பட்டது. அதனடிப் படையில் பேனர்கள் தயாரிக்கப்பட்டன. ஆனால் பிரதமர் வருகைக்கு முந்திய தினம் அண்ணா மலையை அழைத்த பா.ஜ.க. தலைமை, நீ டெல்லிக்கு வரவேண்டும் என கட்டளையிட்டது.
"நாளைக்கு பிரதமர் வருகிறார் நான் தமி ழகத்தில் இருக்க வேண்டும்'' என அண்ணாமலை கெஞ்சினார். "நீ டெல்லிக்கு வரவேண்டும்'' என ஒற்றை வார்த்தைக் கட்டளை யாக வர... அண்ணாமலை வேறு வழியில்லாமல் டெல்லிக்குப் பயணமானார். மறுநாள் பிரதமர் வருகையின்போது சென்னையில் இருக்கவேண்டும் என பனிரெண்டரை மணிக்கு சென்னை வரும் விமானத்தில் டிக்கெட் புக் செய்தார் அண்ணாமலை. பிரதமரை சந்திக்கும் நபர்களின் பட்டியலில் பிரதமரின் பாதுகாப்பு குழு அண் ணாமலையின் பெய ரையும் சேர்த்திருந்தது.
காலையில் டெல்லியில் இருந்து பிளைட் ஏறத் தயா ரான அண்ணாமலைக்கு நீ தமிழகத்திற்கு போகக்கூடாது என, பா.ஜ.க.வின் தேசியத் தலை மை உத்தரவிட்டது. அதிர்ந்து போன அண்ணாமலை அப்படியே டெல்லியில் கண்ணீரும் கம்பலையு மாக உட்கார்ந்து விட்டார். இதற் கிடையே தமிழக அரசின் அழுத்தத் தைத் தொடர்ந்து பிரதமர் தமிழகத் துக்கு வருகிறார் என்பதால் வழக்கம் போல் ஒலிக்கும் ‘"கோ பேக் மோடி'’ என்கிற கோஷம் டுவிட்டரில் ட்ரெண்ட் ஆகாமல் தடுக்க தஞ்சை டெல்டா பகுதிகளில் நிலக்கரி எடுக்க அனுமதி கொடுத்த டெண்டர்களை நிறுத்தி வைப்பதாக மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் அறிவித்தார். அது டெல்லியில் இருக்கும் அண்ணாமலையின் அழுத்தத்தால் வந்தது என சோகத்துக்கு இடையேயும் அண்ணாமலை சமூக வலைத் தளங்களில் பெருமை பீற்றிக் கொண்டார்.
அண்ணாமலை வரவில்லை என்பது தமிழக பா.ஜ.க. தலைவர்களுக்கே ஒரு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. அண்ணா மலையிடமிருந்து தமிழக பா.ஜ.க. தலைவர் பதவியைப் பறிக்கும் கடிதத்தை தேசியத் தலைமை எழுதி வாங்கிவிட்டது. அதனால் தான் “தமிழகத்தில் நீ ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம்” என பிரதமர் விசிட்டில் அண்ணாமலையை கலந்து கொள்ளச் செய்யவில்லை என செய்திகள் பரவியது.
சென்னைக்கு வந்த பிரதமர், கவர்னர் ரவியுடன், முதல்வர் ஸ்டாலினுடனும் சிரித்துப் பேசியபடி விழாக்களில் கலந்து கொண்டார். பிரதமரை வரவேற்க மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. அண்ணாமலையின் அரசியலுக்கு எதிரியான எல்.முருகனுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது பா.ஜ.க.வினரை ஆச்சரியப்பட வைத்தது. மறுநாள் கர்நாடகாவுக்குச் சென்று மைசூர் வழியாக முதுமலைக்கு வரும் பிரதமரை எப்படியாவது அவர் தேர்தல் பொறுப்பாளராக இருக்கும் கர்நாடகத்திலோ, முதுமலையிலோ வந்து அண்ணாமலை சந்திப்பார் என அண்ணாமலைக்கு நெருக்கமான வட்டாரங்கள் செய்தி பரப்பிக் கொண்டிருந்தன. அண்ணாமலையும் அதற்கு அனுமதி கேட்டார். பிரதமர் அலுவலகம் ஸ்ட்ரிக்டாக "நோ' சொல்லிவிட்டது.
பிரதமர் தமிழகம் வந்து முதுமலைக்குப் போய் இரண்டுநாள் பயணம் முடித்து டெல்லிக்குச் சென்று கர்நாடக தேர்தல் தொடர்பாக பா.ஜ.க.வின் பார்லிமெண்ட் குழு கூட்டத்தை நடத்தினார். அமித்ஷா ஜே.பி நட்டா ஆகியோர் கலந்துகொண்ட அந்தக் கூட்டத்தில் ஒரு மூலையில் அண்ணாமலையும் அமர வைக்கப்பட்டி ருந்தார். அண்ணாமலைக்கு கர்நாடகாவின் வேட்பாளர் தேர்ந்தெடுக்கும் வேலை கொடுக்கப்பட்டிருந்தது. அதனால்தான் அவர் சென்னைக்கு வரவில்லை. பாருங்கள் அதே பிரதமருடன் பா.ஜ.க.வின் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டிருக்கிறார்'' என அண்ணாமலை ஆதரவாளர்கள் பேசத் தொடங்கினார்கள்.
இதுபற்றி நம்மிடம் பேசிய டெல்லி பா.ஜ.க. தலை வர்கள் "அந்தக் கூட்டத்தில் அண்ணாமலையின் குருவான பி.எல்.சந்தோஷ் மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரும் கர்நாடக தேர்தல் பொறுப்பாளருமான மாண்டவியா போன்ற எடியூரப்பாவின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். கர்நாடக பா.ஜ.க.வில் பிராமணரான ஆர்.எஸ்.எஸ். தலைவர் பி.எல்.சந்தோஷுக்கும் எடியூரப்பாவுக்கும் இடையே பெரிய மோதல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. பி.எல்.சந்தோஷ் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் லிஸ்ட் ஒன்றை தயாரித்திருக்கிறார். அதற்கு நேரெதிராக எடியூரப்பா ஒரு லிஸ்ட்டை தயாரித்திருக்கிறார். பி.எல்.சந்தோஷ், தேஜஸ்வி யாதவ், சி.டி.ரவி ஆகியோருடன் சந்தோஷ் தயாரித்த இந்த வேட்பாளர் பட்டியலுக்கு டைப் அடிக்கும் வேலையை அண்ணாமலை செய்தார். சந்தோஷின் இந்த வேட்பாளர் பட்டியலை அமித்ஷாவும் மோடியும் நிராகரித்து விட்டார்கள். பி.எல்.சந்தோஷ் பொறுப்பாளராக இருக்கும் கர்நாடகா, தமிழகம், கேரளா ஆகியவற்றில் பா.ஜ.க. படுமோசமாக சீரழிந்துவிட்டது என கூட்டத்தில் கடுமையான குற்றச் சாட்டுகளை அமித்ஷா முன்வைத்தார்.
அப்பொழுது அண்ணாமலையைக் கைகாட்டிய அமித்ஷா “"இந்த ஆள் தமிழ்நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தி வருகிறார் ஆகவேதான் இவரை தமிழ் நாட்டுக்கு பிரதமர் செல்லும்போது போக வேண்டாம் என தடுத்தோம். ஒரு வேலை பார்க்கச் சொன்னால் ஏழு வேலை பார்க்கும் இவரால் பிரச்சினைகள் அதிகமாகிறது. கர்நாடகாவில் பி.எல்.சந்தோஷ் செய்த வேலையால் பா.ஜ.க. தோற்கும் நிலை உருவாகி இருக்கிறது. எனவே எடியூரப்பா சொல்லும் ஆட்களை வேட்பாளராக நிறுத்துவோம் அவரால்தான் கர்நாடகாவில் பா.ஜ.க.வை காப்பாற்ற முடியும்'' எனச்சொல்ல, அமித்ஷாவை சமாதானப்படுத்தி தனது ஆட்களுக்கு சீட் வாங்கிக் கொடுக்க பி.எல்.சந்தோஷ் முயற்சி செய்ய ஏகப்பட்ட ஆவேசமான குற்றச்சாட்டுகளுடன் அந்தக் கூட்டம் நடந்தது'' என்கிறார்கள் டெல்லி பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள்.
இதற்கிடையே ஆருத்ரா வழக்கில் அண்ணா மலையுடன் இணைத்துப் பேசப்படும் முக்கியக் குற்றவாளியான ஹரீஷை மூன்றாவது முறையாக கஸ்டடியில் எடுத்திருக்கிறார்கள் போலீசார். அத்துடன் அந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் ராஜசேகர் உட்பட ஏழு பேரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்திருக்கிறார்கள். இது அண்ணாமலைக்கும், அமர்பிரசாத் ரெட்டிக்கும் பேரிடியாக அமைந்துள்ளது. பிரதமர் விசிட் முடிந்ததும் அமர்பிரசாத் ரெட்டி கைது செய்யப்படுவார், அண்ணாமலை பா.ஜ.க. தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படுவார் என்கிற செய்தி பா.ஜ.க. வட்டாரங்களில் அலைமோதி, எப்பொழுது இது நடக்கும் என ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
இதற்கிடையே ஏப்ரல் பதினாலாம் தேதி தி.மு.க. அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என அறிவித்துள்ள அண்ணா மலைக்கு பதில் கொடுக்கும் விதமாக, அண்ணா மலை, அமர்பிரசாத் ரெட்டி ஆகியோர் “சுரானா, ஆருத்ரா” போன்ற மக்கள் பணத்தை சுமார் இருபத்தி ரெண்டாயிரம் கோடி ரூபாய் கொள்ளையடித்த நிதி நிறுவனங்களிடம், எவ்வளவு கோடி கமிசனாகப் பெற்று அவர் களுக்கு பா.ஜ.க.வில் பதவி தந்து தலைமறைவாக வைத்திருந்து காப்பாற்றினார்கள் என்பதை வெளியிட தமிழகப் போலீஸ் வட்டாரம் தயாராகி வருகிறது.
______
இறுதிச் சுற்று!
தமிழ்நாடு சட்டப்பேரவையின் மாண்பினை குறைக்கும் வகையில் பேசிவரும் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக, 10-ந்தேதி திங்கள்கிழமை நடந்த பேரவைக் கூட்டத்தில் தனித் தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அதேசமயம், ஆளுநரை பற்றி சட்டப்பேரவையில் விவாதிக்கக் கூடாது என்கிற விதியை தளர்த்துவதற்கான தீர்மானத்தை தாக்கல் செய்தார் அவைமுன்னவர் துரைமுருகன். அவையில் இருப்பவர்களில் 4-ல் 3 பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்பதால் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. கவர்னருக்கு எதிரான தீர்மானத்தில் கலந்துகொள்ளக்கூடாது என்பதற்காக, எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவி விவகாரத்தை கிளப்பி எடப்பாடி தலைமையில் அ.தி.மு.க. வெளிநடப்பு செய்தது. இந்த தீர்மானம் வருவதை அறிந்து பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் நயினார் நாகேந்திரனும், வானதி சீனிவாசனும் பேரவைக்கு வரவில்லை. பா.ஜ.க.வின் மற்ற 2 உறுப்பினர்களான காந்தி, சரஸ்வதி ஆகியோர் தீர்மானத்தை எதிர்த்தனர். வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில் அவையில் இருந்த 146 பேரில் 144 பேரின் ஆதரவு இருந்ததால் தீர்மானம் நிறைவேறியது.
தனித்தீர்மானத்தின் மீது ஆளுநரை கண்டித்தும் அவரை ஒன்றிய அரசு திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும் என்றும் உறுப்பினர்கள் பலரும் பேசினர். ஆளுநருக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியது.
-இளையர்