புதுடில்லியின் துவாரகாவிலிருந்து, ஹரியானா மாநிலம் குர்கானுக்கு விரைவுச் சாலை அமைக்க ஹரியானா அரசு கடந்த, 2006ல் திட்டமிட்டது. இதற்கான நிலமும் கையகப் படுத்தப்பட்டது. நிதிப் பற்றாக்குறை உள்ளிட்ட கார ணங்களால் இந்தத் திட்டத்தை ஹரியானா அரசால் நிறை வேற்ற முடியவில்லை. இதை யடுத்து, 'பாரத்மாலா தேசிய நெடுஞ்சாலை 1' திட்டத்தின் கீழ், இந்த விரைவுச் சாலையை அமைக்கும் பணியை, மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம், 2019ஆம் ஆண்டில் துவக்கியது. அப்போது துவாரகா சாலைத் திட்டம் 8 வழிச்சாலையாகத் திட்டமிடப் பட்டு, மதிப்பீடும் திருத்தி யமைப்பட்டது. இந்தத் திட்டத்துக்கு, 1 கி.மீ.க்கு, 18.20 கோடி ரூபாய் செலவு செய்ய, மத்திய அரசின் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்திருந்தது.
டெல்லி -ஜெய்ப்பூர் -அகமதாபாத் -மும்பை நகரங்களுக்கு செல்லும் தங்க நாற்கர சாலையின் ஒரு பகுதியாக, டெல்லி -குருகி ராமுக்கு இடைப்பட்ட துவாரகா 8 வழி உயர்த் தப்பட்ட விரைவுச்சாலை கட்டமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 29 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த விரைவுச் சாலை, ஹரியானாவில் 18.9 கி.மீ தூரத்துக்கும், டெல்லியில் 10.1 கி.மீ தூரத்துக்கும் அமைக் கப்படுகிறது. இதில் சுமார் 3.6 கி.மீ. தூரம் சுரங்கப்பாதையாக அமைக்கப்பட்டுள்ளது. இதில், சுரங்கப்பாதை, தரைநிலைப் பாதை, உயர்த்தப்பட்ட மேம்பாலம், மேம்பாலத்துக்கு மேல் மேம்பாலம் என்றெல் லாம் அமைக்கப்படுகிறது. இந்த உயர்த்தப்பட்ட மேம்பால விரைவுச் சாலைக்கு இரு புறமும், 3 வழி சர்வீஸ் சாலைகள் கட்டப்படுகின்றன. இந்த பாலத்திற்காக 2 லட்சம் மெட்ரிக் டன் எஃகு இரும்பும், அதிக அளவு கான்கிரீட்டும் பயன்படுத்தப்படுவதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இந்த துவாரகா சாலைத் திட்டத்துக்காக ஒன்றிய அரசு அனுமதி அளித்ததை விட, 14 மடங்கு அதிகம் செலவு செய்யப்பட்டதாக, சி.ஏ.ஜி. அறிக் கையில் தெரிவிக்கப்பட்டதுதான் தற்போது புயலைக் கிளப்பியுள்ளது.
இந்தத் திட்டத்துக்கு, 1 கி.மீ.க்கு, 18.20 கோடி ரூபாய் செலவிட அரசு அனுமதி அளித்திருந்தது. இதன்படி, ஒட்டுமொத்த சாலைப் பணிக்கும், 529 கோடி ரூபாய் செலவிடப்பட வேண்டும். ஆனால், கி.மீ.க்கு, 250.77 கோடி ரூபாயாக செலவு அதிகரிக்கப்பட்டு உள்ளது. அதாவது, 14 மடங்கு தொகை அதிகமாக, மொத்தம் 7,287 கோடி ரூபாயாக செலவு அதிகரித்துள்ளது. அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்ததை விட, 6,758 கோடி கூடுதலாக செலவிடப்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டியுள்ளது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட எதிர்க்கட்சித்தலைவர்கள் பலரும் ஒன்றிய அரசின் மெகா ஊழலை லெப்ட் அன்ட் ரைட் வாங்கியுள்ள னர். ஒன்றிய அரசைப் பொறுத்தவரை இதுநாள் வரை கேள்வி ஏதும் கேட்க வாய்ப்பில்லாமல், எதிர்க் கட்சிகள் பிளவுபட்டும், மத்திய புலனாய்வு அமைப்புகள் அனைத்தும் அவர்களின் சேவகர் களாகவும் இருந்த சூழலில், தனிக்காட்டு ராஜாவாகத் திட்டச்செலவினங்களில் புகுந்து விளையாடியிருப்பது இப்போது அம்பலப்பட்டுள்ளது.
உள்கட்டமைப்புப் பணி களில் திட்டமிட்டதைவிட சற்றுக் கூடுதலாக செலவாவ தற்கு வாய்ப்புகள் இருக்கலாம். ஆனால் வெறும் 4 ஆண்டு காலத்திலேயே 14 மடங்கு செலவு அதிகரித்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத மெகா ஊழலாகும்!
சி.ஏ.ஜி.யின் புகாரை மறுத்துள்ள பா.ஜ.க. தரப்போ, "சி.ஏ.ஜி.க்கு கணக்கே போடத் தெரியவில்லை என்ற ரேஞ்சுக்கு ஆளாளுக்கு ஒரு கணக்கை எடுத்துவிடுகிறார்கள். இதில் தமிழக பா.ஜ.க. செய்தித்தொடர்பாளர் நாராயண் திருப்பதி தனது ட்விட்டர் பதிவில், துவாரகா விரைவுச் சாலை 29 கிலோ மீட்டர் தூரம் என்றாலும், இந்த தூரத்தில் 563 கிலோ மீட்டர் நீளம் சாலை அமைக்கப்பட்டுள்ளது என்று நிதர்சனத்தை மறந்து எடுத் தோம், கவிழ்த்தோம் என அறிக்கைகள் விடப்பட்டு வருகின்றன என்கிறார். சென் னையிலிருந்து திருச்சி 320 கிலோமீட்டர் தூரம் என்றால் 2 வழி சாலை எனில் அமைக்க வேண்டிய சாலையின் நீளம் 640 கிலோமீட்டர் என்ற உதாரணத்தைக் கூறி, துவாரகா விரைவுச் சாலை 29 கிலோ மீட்டர் தூரம் என்றாலும், இந்த தூரத்தில் 563 கிலோ மீட்டர் நீளம் சாலை அமைக்கப்பட்டுள்ளது'' என்று புதுக்கணக்கை கூறுகிறார்.
எந்தவொரு சாலைத் திட்டமும், அது நான்குவழிச் சாலையோ, ஆறுவழிச் சாலையோ, தொடக்கப் புள்ளிக்கும் இறுதிப்புள்ளிக்கு மான நீளத்தைத்தான் கணக் கில்கொண்டு தூரம் குறிப் பிடப்படும். அதேபோல், திட்ட வரையறையை வகுக்கும் போது, அது எத்தனை வழிச்சாலை, சர்வீஸ் சாலைகள் எத்தனை, மேம் பாலங்கள், சுரங்கப்பாதைகள், அந்த இடத்தின் நில மதிப்பு எவ்வளவு என அனைத்தும் கணக்கிடப்பட்டுதான் திட்டத்துக்கான தொகை வரையறுக்கப்படும். அப்படி வரையறுக்கப்பட்டதுதான் 14 மடங்காகத் தற்போது அதிகரித்துள்ளது. எனவே இதில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பது வெட்ட வெளிச்சமாகிறது. மத்தியில் ஆட்சி மாற்றம் ஒன்றே இதுகுறித்து விசா ரணை நடக்க வழி வகுக்கும்!