"ஹலோ தலைவரே, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டி ருக்கும் நிலையில் இந்தியா கூட்டணி பக்கம் புதிய விறுவிறுப்பைப் பார்க்க முடியுது.''

"ஆமாம்பா, மும்பையில் நடந்த இந்தியா கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினும் கலந்துகொண்டிருக்காரே?''

"உண்மைதாங்க தலைவரே, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், ராகுல் காந்தியின் தேச ஒற்றுமைப் பேரணியின் நிறைவு நிகழ்ச்சியாக, மிக பிரமாண்டமான பொதுக்கூட்டம் மும்பையில் 17ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த சரத்பவார், உத்தவ் தாக்கரே, தேஜஸ்வி யாதவ், அகிலேஷ் யாதவ், வைகோ, திருமாவளவன் உள்ளிட் டவர்களோடு ஸ்டாலினும் கலந்துக்கிட்டார். ஐக்கிய ஜனதா தளத் தலைவரும் பீகார் முதல்வருமான நிதீஷ்குமார் இந்தக் கூட்டணியில் இருந்து விலகிய நிலையிலும், மேற்கு வங்கத்தில் மம்தாவின் திரிணாமூல் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகிற சூழலிலும் இந்தக் கூட்டம் நடந்ததால், இதுகுறித்த எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. இந்தக் கூட்டம் பா.ஜ.க.வைத் திகைக்க வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.''

"இந்தக் கூட்டத்தில், இந்தியாவுக்கு ஆபத்தே பா.ஜ.க.தான்னு ஸ்டாலின் பேசியிருக்காரே?''

Advertisment

"ஆமாங்க தலைவரே, இந்தக் கூட்டத்தில் ஸ்டாலினின் உற்சாகமாக பேச்சு பெரும் கவனத்தைப் பெற்றிருக்கிறது.''

"என் அன்புச் சகோதரர் ராகுல்காந்தி அவர் களுக்கு முதலில் வாழ்த்துகளைக் கூறுகிறேன்னு தன் உரையை ஆரம்பித்த அவர், கன்னியாகுமரியில் ராகுலின் பேரணியைத் தொடங்கி வைத்த பெருமிதம் குறையாமல் இங்கே நிற்கிறேன். ராகுல் எங்கு சென்றாலும் அது திருவிழாபோல் காட்சியளிக்கிறது. அந்த அளவுக்கு மக்கள் அவர் மீது அன்பைச் செலுத்துகிறார்கள்னு ராகுலை வெகுவாகப் பாராட்டியதோடு, இப்போது நமக்குத் தேவை ஒற்றுமை. அந்த ஒற்றுமையோடு பா.ஜ.க. விரைவில் வீட்டுக்கு அனுப்புவோம். கடந்த பத்தாண்டு ஆட்சி யில் மோடி, வெளிநாட்டுப் பயணத்தையும், பொய்ப் பிரச்சாரத்தையும் தவிர வேறு எதையும் செய்யவில்லை. இந்தியாவுக்கு இப்போது இருக்கும் மிகப்பெரிய ஆபத்தே பா.ஜ.க.தான்னு குறிப்பிட்டு, அதிரடி கிளப்பியிருக்கிறார் ஸ்டாலின்.''”

"சரிப்பா, இந்த நிலையில் தி.மு.க.வுக்கும் காங்கிரஸுக்கும் இடையே கூட்டணி உடன் பாடு இழுபட்டு ஒரு முடிவுக்கு வந்திருக்கே?''”

Advertisment

"தி.மு.க. கூட்டணியில், காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் எவை எவை என்பதை முடிவு செய்வதில் தி.மு.க.வுக்கும் காங்கிரசுக் கும் இடையில் ஞாயிற்றுக்கிழமை வரை இழு பறி நீடித்தது. இந்த நிலையில், மும்பையில் ராகுல்காந்தியின் நடைபயணம் நிறைவு நிகழ்ச்சிக்கு அழைப்பு வந்ததால், ஸ்டாலின் மும்பைக்குக் கிளம்பிவிட்டார். இதைத் தொடர்ந்து, மும்பையில் ராகுலிடமே தொகுதி உடன்பாடு குறித்து சில நிமிடங்கள் அவர் பேசினாராம். அப்போதே ராகுல், உற்சாகமான மன நிலையோடு, உங்களுக்குத் தெரியாதது எதுவும் இல்லை. அதனால் நீங்களே அதுகுறித் துத் தீர்மானியுங்கள் என்று சொல்லிவிட்டா ராம். இந்த நிலையில் மும்பையிலிருந்து திரும்பியிருக்கும் ஸ்டாலின், காங்கிரஸின் நிர் வாகிகளை அழைத்து, ஒப்பந்தத்தை முடிவு செய்திருக்கிறார். காங்கிரஸ் தரப்பும் மகிழ்ச்சியான மன நிலையில்தான் இருக்கிறது.''”

"இந்த இரு கட்சிகளுக்கும் இடையில் சில தொகுதிகள் தொடர்பான பிரச்சினை இருப்பதாகச் சொல்கிறார்களே?''”

rr

"இந்தமுறை காங்கிரஸின் சிட்டிங் தொகுதியான திருச்சியைக் கைப்பற்ற நினைத்தது தி.மு.க. அதற்கு ஈடாக காங்கிரஸ் மயிலாடுதுறையைக் கேட்டது. அங்கு காங்கிரஸ், தங்கள் கட்சியின் டேட்டா அனலைஸசராக இருக்கும் ப்ரவீன் சக்ரவர்த்தியை நிறுத்த நினைப்பதை அறிந்து தி.மு.க. எரிச்சலாகிவிட்டதாம். காரணம், கடந்த ஆண்டு அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாக ராஜன் பேசியதாக வெளியான ஆடியோவின் பின்னணியில், இந்த ப்ரவீனும் இருந்தாராம். அதனால், மயிலாடுதுறையில் பி.டி.ஆரின் வில்லனான அவர் நிறுத்தப்படுவதை தி.மு.க. விரும்பவில்லையாம். இதனால், சில தொகுதி களைக் குறிப்பிட்டு, அங்கே யாரை நிறுத்தப் போகிறீர்கள் என்று தி.மு.க. விசாரித்ததாம். நிலைமை இப்படிப் போவதால், காங்கிரஸி லேயே ஒரு தரப்பினர், அந்த ப்ரவீனுக்கு சீட் கொடுத்தால், தி.மு.க. நமக்கு ஒத்துழைப்பு தராது. அதனால் வேறு ஒருவரை மயிலாடுதுறையில் நிறுத்தலாம் என்று வலியுறுத்துகிறார்களாம்.''’

"காங்கிஸின் சிட்டிங் எம்.பி.க்கள் சிலருக்கு மீண்டும் சீட் கொடுக்கக்கூடாதுன்னு அவர்கள் கட்சியிலேயே கடும் எதிர்ப்பு இருக்குதே?''”

"அதுவும் உண்மைதாங்க தலைவரே, அண் மையில் தி.மு.க. எடுத்த ஒரு ரகசிய சர்வேயில், தி.மு.க. மற்றும் காங்கிரஸ் சிட்டிங் எம்.பி.க் களில் பெரும்பாலானோருக்கு தொகுதியில் அதிருப்தி நிலவுவது தெரியவந்தது. இந்த நிலையில், காங்கிரஸ் சிட்டிங் எம்.பி.க்கள் 5 பேருக்கு இந்த முறை சீட் ஒதுக்கக்கூடாது என அவர்கள் கட்சியினரே கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருவதோடு, காங்கிரஸின் தேசி யத் தலைமைக்கும் புகார் மனுக்களை அனுப்பியிருக்கிறார்கள். எனினும் இந்த முறையும் நாங்கள் நின்றே தீருவோம் என்று சிட்டிங் எம்.பி.க்கள் வரிந்து கட்டி நிற்கின்றனர். இவர்களில் 3 பேர் ஒருபடி மேலே சென்று, எங்கள் தொகுதிகளை தி.மு.க. வாங்கிக்கொண் டாலும், அதற்கு பதில் அது ஒதுக்கும் தொகுதியில் எங்களுக்கு வாய்ப்பைக் கொடுங்கள் என்று கட்சித் தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்கள். எனவே இது தொடர்பான பஞ்சாயத்து சத்யமூர்த்தி பவனில் நடந்துகொண்டு இருக்கிறதாம்.''”

"தங்கள் கூட்டணிக்கு வரும்படி அ.தி.மு.க.வை மிரட்டி வந்த பா.ஜ.க., இப்போது கெஞ்சிக்கொண்டு இருக்கிறதே?''

rr

"எப்படியும் அ.தி.மு.க.வை தங்கள் கூட்டணிக்குக் கொண்டுவரும் ஆசையில் பல்வேறு பகீரத முயற்சிகளை, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மேற்பார்வை யில் எடுத்துவந்தது டெல்லி. அன்பாக ஆரம்பித்து, ரெய்டு மிரட்டல்வரை விட்டுப் பார்த்தும் எடப்பாடி அசரவில்லை. அதேபோல் இன்னொரு பக்கம் ஓ.பி.எஸ். தரப்பு மூலம் நீதிமன்ற வழக்குகளை முடுக்கி, அதன்மூல மான நெருக்கடிகளும் கொடுக்கப்பட்டன. இதற்கும் எடப்பாடி அசைந்துகொடுக்கவில்லை. இப்போது தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், கடைசி முயற்சியாக பா.ஜ.க. தரப்பு கோவை ஈஷா மைய ஜக்கி மூலம், டீலிங் என்ற பெயரில் கெஞ்சிக்கொண்டு இருக்கிறது. டெல்லிக்காக எடப்பாடியிடம் பேசிய ஜக்கி, தமிழகத்திலிருந்து பா.ஜ.க. சார்பில் 5 எம்.பி.க்களாவது வெற்றிபெற்றாக வேண்டும் என்று பிரதமர் மோடியும் அமித்ஷாவும் விரும்புகிறார்கள். நீங்கள் பா.ஜ.க. கூட் டணியில் சேராவிட்டாலும் பரவாயில்லை. பா.ஜ.க. கள மிறங்கும் தொகுதிகளில் ஒப்புக்கு சப்பாணிகள் போன்ற வலுவில்லாத வேட்பாளர்களை நிறுத்தவேண்டும். இதையாவது செய்யுங்கள் என்று சொல்லியிருக்கிறார்.''’

"இதற்கு எடப்பாடி என்ன பதில் சொன்னாராம்?''”

"ஜக்கி மூலம் பா.ஜ.க. கெஞ்சுவதை உணர்ந்து எரிச்சலான எடப்பாடி, பா.ஜ.க. எதிர்பார்க்கிற மாதிரி, நாங்கள் டம்மியான வேட்பாளர்களை நிறுத்தினால், அந்த இடத்தில் தி.மு.க. அணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுவிட மாட்டார்களா? அப்போது என்ன செய்வார் கள்? அதனால், இதெல்லாம் வேலைக்கு ஆகாது. பா.ஜ.க. எப்படிப்பட்ட வேட்பாளரை நிறுத்தினாலும் அவர்கள் தோற்கத்தான் போகிறார்கள். ஏனென்றால், பா.ஜ.க.வுக்கு அடித்தளமும் இல்லை. வாக்கு வங்கியும் இல்லை. அதேபோல் சரியான நிர்வாகிகளும் இல்லை. அதனால், வேறு ஏதேனும் யோசனையிருந்தால், அதன்படி முயற்சி பண்ணச் சொல்லுங்கள். அவர்களுக்காக எங்களால் பரி தாபப்படத்தான் முடிகிறது என்று சொல்லியிருக்கிறார். இதை அப்படியே ஜக்கி, டெல்லிக்குப் பாஸ் பண்ண, எடப்பாடி மீது கடும் ஆத்திரத்தில் இருக்கிறதாம் டெல்லி.''”

"மத்திய மண்டல காவல்துறையில் சல சலப்பு தெரியுதே?''”

"காவல்துறையில் பணியிடமாற்றம் என்பது வழக்கமானதாக இருந்தாலும், திருச்சி மத்திய மண்டல காவல்துறையின் பணியிட மாறுதல்களில் பல உள்குத்து அரசியல் நடக்குதுன்னு சொல்றாங்க. குறிப்பாக, திருச்சி மத்திய மண்டலத்தில் சமீபத் தில் 8 பணியிட மாறுதல்கள் தொடர்ச்சியாக போடப்பட்டு, காவல் ஆய்வாளர்கள் அலைக் கழிக்கப்பட்டார்கள். இந்த மத்திய மண்ட லத்தில் 9 மாவட்டங்கள் அடங்கியுள்ளன. இதற்கு ஐ.ஜி.யாக கார்த்திகேயேன் பொறுப்பு வகிக்கிறார். இவருக்கு கீழ் இரண்டு டி.ஐ.ஜி.க் கள் மற்றும் 9 எஸ்.பி.க்கள் பணியாற்றுகிறார்கள். பொதுவாக ஒரு பணியிட மாறுதல் என்பது அந்தந்த மாவட்டத்திற்கு உட்பட்ட எஸ்.பி. மற்றும் டி.ஐ.ஜி. வழியாக ஐ.ஜி.யின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். ஆனால் இங்கே மட்டும் எஸ்.பி. மற்றும் டி.ஐ.ஜி. வழியாக எந்த பணியிட மாறுதலும் வழங்கப்படாமல், நேரடியாக ஐ.ஜி.யே பணியிடமாற்றம் செய்து உத்தரவிடும் நிகழ்வுகள் நடைபெறுகிறதாம்.''”

"அப்படியா?''”

"ஆமாங்க தலைவரே, அதிலும் பெரும் குளறுபடிகள் நடப்பதாக காவல் ஆய்வாளர்கள் குமுறுகிறார்கள். அதில் பாதிப்பிற்கு உள்ளான ஆய்வாளர்களில் ஒருவரான கார்த்திக் பிரியா, இந்தப் பணியிடமாறுதல் தொடர்பாக நீதிமன் றத்தை நாடியிருக்கிறார். திருச்சி புறநகரில் இருந்த இவர், கடந்த ஓரிரு மாதங்களில் மட்டும் கரூர் மாவட்டத்திற்கும், பின்னர் பெரம்பலூர் மாவட்டத்திற்கும், அடுத்து புதுக்கோட்டை மாவட்டத்துக்கும் என்று மாற்றி, மாற்றி தூக்கி அடிக்கப்பட்டிருக்கிறார். இது காவல்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதோடு, மிகவும் சென்சிடிவான பகுதிகளில் திறமையான காவல் ஆய்வாளர்களை நியமித்து சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்த முயற்சி செய் யாமல், திறனற்றவர்களை அப்படிப்பட்ட காவல்நிலையங்களில் உட்காரவைத்து, பிரச்சினைகளை அதிகப்படுத்தும் போக்கும் அங்கே இருக்கிறதாம். இதுவும் துறைக்குள் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.''”

rr

"நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். அண் மையில் பா.ஜ.க. ஜோதியில் ஐக்கியமான நடிகர் சரத்குமாரிடம், ஒரு முக்கிய அசைன்மெண்ட்டைக் கொடுத்து, இதை வெற்றிகரமாக செய்துமுடித்தால், முக்கியத்துவம் வாய்ந்த அரசுப் பதவி ஒன்று உங்களுக்குப் பரிசாக வழங்கப்படும்னு பா.ஜ.க. சொல்கிறதாம். அது என்ன அசைன்மெண்ட் என்றால், தென்மாவட்டத்தில் இருக்கும் நாடார் சமூக வாக்குகளை முழுமையாக பா.ஜ.க. பக்கம் சரத் வளைக்கவேண்டும் என்பது தானாம். ஆனால், இந்து நாடார் சமூகத் தினரை மட்டுமல்லாமல் அங்குள்ள கிறிஸ்தவ நாடார் சமூகத்தினரையும் ஒட்டுமொத்தமாக தி.மு.க. பக்கம் திருப்பி வைத்திருக்கிறார் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன். அதனால், தடுப்புச் சுவராக நிற்கும் அனிதாவைத் தாண்டி சரத்தால் எப்படி இந்த அசைன்மெண்ட்டை முடிக்க முடியும்? என்று விபரமறிந்தவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.''