துரையில் இந்து முன்னணி சார்பாக நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் அ.தி.மு.க. மாஜி அமைச்சர்கள் அமர்ந்திருக்கும்போது, பெரியார், அண்ணாவை அவதூறு செய்யும் வகையில் வீடியோ ஒளிபரப்பானது. அதில், "அதர்மம் ஒழிக!'’என்று கூறியவாறு பெரியார், அண்ணா ஆகியோரது படங்களை திரையில் காட்டி, "திராவிடம் அழியும்! தர்மம் வெற்றி பெறும்!' என்று வீடியோ திரையில் ஓடியது. இந்த வீடியோவுக்கு எந்த ரியாக்சனும் காட்டாமல் சைலண்ட்டாக வேடிக்கை பார்த்தனர் அ.தி.மு.க. மாஜிக்கள். இதற்கு திராவிடப் பற்றாளர்களிட மிருந்தும், தமிழ் ஆர்வலர்களிடமிருந்தும், அ.தி.மு.க. நிர்வாகிகளிடமிருந்தும் கடும் எதிர்ப்பு எழுந்ததால் அ.தி.மு.க. தலைமை விழிபிதுங்கிக் கிடக்கிறது. இதே மாநாட்டில் கலந்துகொண்ட முன்னாள் பா.ஜ.க. தலைவரும், முன்னாள் கவர்னருமான தமிழிசை சௌந்தரராஜனை மேடையில் அமர வைக்காமல், பார்வையாளர் வரிசையில் அமர வைத்து அசிங்கப்படுத்திய சம்பவமும் நடந்தது.

இந்நிலையில், அதில் பங்கேற்ற அ.தி.மு.க. மாஜி இராஜேந்திர பாலாஜி, "அண்ணாவை  வஞ்சிப்பது போன்று வெளியிட்ட அந்த வீடியோ காட்சியை தவிர்த்திருக்கலாம்'' என்று பட்டும் படாமல் எதிர்ப்பை வெளிப்படுத்தினார். அண்ணா, பெரியாரை விமர்சித்த வீடியோ சமூக வலைத் தளத்தில் வைரலாக, அ.தி.மு.க.வின் சாதாரணத் தொண்டர்களே அதற்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தத் தொடங்கினர். இதையடுத்து அ.தி.மு.க. ஐ.டி.விங் சுதாரித்துக்கொண்டு, இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்படி தலைமைக்கு சொல்ல, வேறுவழியின்றி, அ.தி.மு.க. எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் தன்னிலை விளக்கமாக வீடியோ வெளியிட்டார். 

Advertisment

அந்த வீடியோவில், "பேரறிஞர் அண்ணா சொன்னதுபோல மாற்றான் தோட்டத்து மல்-கைக்கும் மணம் உண்டு என்ற கூற்றின்படி முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்துகொண்டோம். இந்நிலையில், அந்த மாநாட்டில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணாவை அவதூறு செய்யும் வீடியோ ஒளிபரப்பப்பட்ட செய்தி தற்போது வெளிவந்துள் ளது. எடப்பாடி பழனிச்சாமியை பொறுத்தவரை அண்ணாவைப் பற்றி, ஜெயலலிதாவைப் பற்றி அவதூறாக பேசிய காரணத்தினால் என்ன முடிவு எடுத்தார் என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றா கத் தெரியும். நடைபெற்ற முருகன் மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானத்திற்கும், அ.தி.மு.க.விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை தீர்க்கமாகக் கூறுகிறோம். அண்ணாவைப் பற்றி பெரியாரைப் பற்றி ஒளிபரப்பிய முழு வீடியோவை நாங்கள் பார்க்க முடியவில்லை. நாங்கள் வீடியோ ஒளிபரப்பு செய்த பகுதிக்கு பின்புறத்தில்தான் அமர்ந்திருந் தோம். எது எப்படியிருந்தாலும், தந்தை பெரியாரை, அண்ணாவைப் பற்றி தவறாக யார் பேசினாலும் அதை நெஞ்சுரத்துடன் அ.தி.மு.க. எதிர்க்கும்'' என்று வெளியிட்டிருந்தார். 

muruganconference1மாநாட்டிற்கு சென்ற அ.தி.மு.க.வை சேர்ந்த வட்டச்செயலாளர் உதயகுமாரிடம் பேசினோம். "உண்மை என்னெவென்றால், மாநாட்டில் அ.தி.மு.க. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மேடைக்கு எதிரே கூட்டத்தோடு உட்கார வைக்கப்பட்டிருந்தனர். பவன் கல்யாணும், நயினார் நாகேந்திரனும் மேடை ஏறியதும் இந்து முன்னணி தலைவரை அழைத்து அவர்களை மேடையில் உட்காரவைக்கச் சொல்ல, அவரோ, நிகழ்ச்சி நடக்கும் மேடையில் அமர வைக்காமல், அருகில் கலைநிகழ்ச்சிகள் நடக்கும் மேடையில் அமரவைத்தார். இதனிடையே இந்து முன்னணியின் அண்ணா குறித்த வீடியோ ஒளிபரப்பப்பட்டபோது செல்லூர் ராஜூ போன் பேசியபடியே எழுந்துபோக, மேடையில் இருந்த நயினார் அதுகுறித்து சைகையில் கேட்டபோது, சைகையிலேயே செல்போன் பேச எழுந்த விவரத்தை தெரிவித்தார். செல்லூரார் திரும்பவும் மேடையில் உட்கார, வீடியோ காட்சி முடிவுற்றது. மாநாட்டில் எல்.ஈ.டி. திரையை இடது, வலது புறங்களில் வரிசையாக எங்கிருந்து பார்த்தாலும் தெரியும்படி அமைத்திருந்தனர். அதேபோன்று மேடையை சுற்றிலும் ஆடியோ ஸ்பீக்கர் அமைக்கப்பட்டிருந்தது. இதற்குமேலும் உதயகுமார் அந்த வீடியோவை பார்க்கவில்லை என்றால் கண் ணைத்தான் மூடியிருக்க வேண்டும். அப்படியும்கூட அந்த வீடியோவின் ஆடியோ சத்தம் காதைக் கிழித்தது. ஆக, முழுப் பூசணிக்காயை மறைக்கிறார் சார். ஜெயலலிதா இருந்திருந்தால் இப்படியெல் லாம் கண்றாவி நடந்திருக்குமா? தலைமை தேர்தல் கமிஷனராக இருந்த சேஷன், தனது சுயசரிதை புத்தகத்தில் அறிஞர் அண்ணாவைப் பற்றி தவறாக எழுதிவிட்டார் என்பதற்காக மன்னிப்பு கேட்டு, அந்த பக்கத்தை கிழித்தெறிந்து விட்டுத்தான் தமிழ்நாட்டிற்குள் வரவேண்டும், இல்லையென்றால் உள்ளே நுழைய முடியாது என்று ஜெயல-தா எச்சரிக்கை விடுத்த அடுத்தகணமே தமிழ்நாடெங் கும் அ.தி.மு.க. தொண்டர்கள் கொந்தளிப்போடு தமிழ்நாட்டுக்குள் வரமுடியாதபடி விரட்டி விரட்டி அடித்த வரலாறு தெரியாதா? எம்.ஜி.ஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் அண்ணா மீதுள்ள அன்பும், பற்றும் அ.தி.மு.க. தொண்டர் களுக்கு தெரியுமென்பதால் தான் சமூக வலைத்தளத்தில் ஆதங்கத்தை கொட்டித் தீர்த் திருக்கிறார்கள். எப்படியிருந்த கட்சி, இப்படிக் கூனிக்குறுகி யிருப்பது மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது சார்'' என்றார்.

இதுகுறித்து அ.தி.மு.க. வின் மாணவரணி ஒன்றிய செயலாளர் பாலகுமார், "இந்து முன்னணி அமைப்பின் மாநாட்டில் அ.தி.மு.க.வை சேர்ந்த மாஜி அமைச்சர்கள் பங்கேற்றதே முதலில் தவறு. அந்த மாநாட்டில் தந்தை பெரியார் மற்றும் அறிஞர் அண்ணாவை அவதூறாகப் பேசி வீடியோ ஒளிபரப்பானபோது எதுவுமே தெரியாதவர்களைப் போல, அமைதியாக மாஜி அமைச்சர்கள் உட்கார்ந்திருந்தது கடும் கண்டனத்திற்கு உரியது. அதுவும் அந்த வீடியோவை பார்க்கவே இல்லை என்பவர்களை எங்கள் ஆத்தாவே (ஜெயலலிதா) கண்ணை குத்திடும். பெரியார், அண்ணா வழியில் செயல்படும் கொள்கைப் பிடிப்பாளர்களாக அவர்கள் இருந்திருந்தால், உடனடியாக அந்த மேடையிலிருந்து கீழிறங்கி வந்து தங்கள் எதிர்ப்பை, கண்டனத்தை பதிவு செய்திருக்க வேண்டும். 

Advertisment

இந்து முன்னணி மாநாட்டில் பங்கேற்ற அ.தி.மு.க. மாஜி அமைச்சர் கள், எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் தங்களின் செயலுக்காக கட்சித் தொண்டர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இந்து முன்னணியின் செயலுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும். இவர்கள் பா.ஜ.க.வோடு கூட்டணி சேர்ந்ததே பிடிக்காமல் இருக்கோம். வேறுவழி இல்லை என்று சொன்னீர்கள், பொறுத்து கொண்டோம். அதற்காக நம் தலைவர்களையே தவறாக, அவதூறாக நம்மை அருகில் வைத்துக்கொண்டே சொல்கிறார்கள். குறைந்தபட்சம் எழுந்தாவது வந்திருக்கலாமே. அ.தி.மு.க. வெட்கம், மானம் எல்லாவற்றையுமா அடகு வைத்துவிட்டது? எனக்கெல்லாம் கட்சியில் இருக்கவே பிடிக்கவில்லை சார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்காக இருக்கேன். மனசு வலிக்குது, ஊருக்குள்ள நடமாட முடியவில்லை. எங்களின் எதிரி கட்சி தி.மு.க.காரனின் முகத்தில் முழிக்கமுடியவில்லை. நாக்கப் பிடுங்கிற மாதிரி கேக்கறான், பதில் சொல்லமுடியவில்லை. சும்மா என் படத்துடன் போடுங்க, கட்சியை விட்டு நீக்கினாலும் பரவாயில்லை'' என்றார் ஆதங்கத்துடன்.

அடுத்து, அ.தி.மு.க.வின் இராமச்சந்திரன், "அண்ணே, மேடையில் இருந்துகொண்டு இரண்டு பக்கமும் இருந்த வீடியோவை பார்க்கவில்லை என்பதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு?

காது கூடவா கேட்கவில்லை? எங்க கட்சியே அண்ணா பெயரில் தான் இருக்கு. அவரையே தவறா சித்தரித்து நமக்கே போட்டுக் காண்பிக்கிறான். இந்நேரம் கொந்தளித்திருக்க வேண்டாமா? என்னத்த சொல்றது? அ.தி.மு.க. எனக்கு பிறகும் 100 ஆண்டுகள் ஆல்போல் நிலைத்து நிற்கும்னு ஜெயலலிதாம்மா சொன்னார்கள். அதெல்லாம் கனவா போயிடும் போல. என்ன செய்ய, கட்சியை காப்பாற்று வதைவிட தங்களிடமுள்ள ஆயிரக்கணக்கான கோடி சொத்துக்களை காப்பாற்றவேண்டுமென்று அவர்களின் காலடியில் இருக்கிறார்கள். அதற்காக கட்சியையே அடமானம் வைத்துவிட்டார்கள். இப்பல்லாம் அ.தி.மு.க. உறுப்பினர் அட்டை மட்டும் தான் வைத்திருக்கிறேன். மற்ற படி அ.தி.மு.க.வில் தொடர்ந்து பயணம் செய்ய மனம் வராமல் காலம் தள்ளுகிறேன். என்னத்த சொல்ல'' என்று நொந்து கொண்டார். 

 

muruganconference2

அடுத்து பேசிய ஈஸ்வரன், "இந்து முன்னணி, சந்து முன்னணியெல்லாம். ஜெயலலிதா இருக்கும் திசைப் பக்கம் வரவே பயப்படுவாய்ங்க இவர்களையெல்லாம் கட்சியாகவோ, இயக்கமாகவோ மதிக்கக்கூட மாட்டோம். இவிங்க என்னடான்னா எங்க தலைவர்களை அருகில் வைத்துகொண்டே நாங்க தெய்வமாக மதிக்கக்கூடிய பேரறிஞர் அண்ணாவை, பெரியாரை அவதூறா பேசி வீடியோ போடுறான். எல்லாம் காலம் செய்த கோலம்'' என்று தன் உள்ளக்குமுறல்களைக் கொட்டினார்கள் அ.தி.மு.க.வின் நிர்வாகிகள் 

அண்ணா குறித்த அவதூறு வீடியோ, அ.தி.மு.க. தொண்டர்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியிருப்பது, அ.தி.மு.க. தலைமையையே உலுக்கிவிட்டது. இருந்தும், அ.தி.மு.க. தலைமை கொஞ்சங்கூட உணர்வற்றுக் கிடப்பது அப்பட்ட மாக வெளிப்படுகிறது. இனி தலைவர்களை நம்பி பிரயோஜனம் இல்லையென்ற நிலைப்பாட்டிற்கு தொண்டர்கள் வரக்கூடும்.