"ஹலோ தலைவரே, கொடநாடு விவகாரம் க்ளைமாக்ஸ் கட்டத்தை நோக்கி விறுவிறுப்பா நகருது.''”
"ஆமாம்பா, சி.பி.சி.ஐ.டி.யின் டி.ஜி.பி.யான ஷகீல் அக்தர், கொடநாட்டுக்கே போய் விசாரணை நடத்தி இருக்காரே?''”
"உண்மைதாங்க தலைவரே, ஷகிலின் விசாரணை அணுகுமுறை, அங்குள்ள காவல்துறையினரையே திகைக்க வைக்கிறதாம். பல்வேறு ஆவணங்களை அவர் துருவிவரும் நிலையில், எடப்பாடியையும், அவரது தோஸ்த்தான சேலம் இளங்கோவனையும் தீவிரமாக விசாரிப்பதற்கான ஆயத்தங்கள் நடக்கிறது. பாரபட்சம் பார்க்காமல் விசாரணை செய்யுங்கள். சாட்சிகளைக் கலைத்துவிடுவார்கள் என்று கருதினா லும் அல்லது குற்றச்சாட்டு வலுவாக இருந்தாலும் கொஞ்சமும் யோசிக் காமல் எடப்பாடியை நீங்கள் கைது செய்யவும் தடையில்லை. அதனால் இங்கே சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என்றெல்லாம் கருதத் தேவையில்லை என்று, மேலிடத்தில் இருந்து க்ரீன் சிக்னல் காட்டப்பட்டிருக்கிறதாம். இந்தத் தகவல் எடப்பாடித் தரப்புக்குச் செல்ல, அங்கே ஹைவோல்ட் அதிர்ச்சி பரவி இருக்குதாம்.''”
"அது சரிப்பா, கோவையில் அரங்கேறிய கார் குண்டுவெடிப்பு, ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிரவச்சிருச்சே?''”
"ஆமாங்க தலைவரே, தமிழக மக்களின் தீபாவளி மனநிலையை... அந்த குண்டு வெடிப்பு சிதறடிச்சிடுச்சுன்னுதான் சொல்லணும். இந்த விவகாரம், மத நல்லிணக்கத்தை கெடுத்துடுமோங்கிற பதட்டம், பலரையும் பிடித்து ஆட்டி வச்சிடுச்சி. ஆனாலும் இந்த விவ காரத்தை மிகவும் எச்சரிக்கையாகக் காவல்துறை கையாண்டு, உடனடியாகப் பதட்டத்தைத் தணிச்சிடிச்சி. இருப்பினும், இது முதல்வர் ஸ்டாலினை ரொம்பவே அப்செட் ஆக்கிவிட்டது. இதனால் அவர் 26ஆம் தேதி உயர் அதிகாரிகளின் அதிரடி ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டினார். இதில், தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர் பனீந்திரரெட்டி, முதல்வரின் முதன்மைச் செயலாளர் உதய சந்திரன், டி.ஜி.பி. சைலேந்திரபாபு, உளவுத் துறை ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் தேவஆசிர்வாதம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதில் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள் குறித்து, நீண்ட ஆலோசனையை நடத்தினார் ஸ்டாலின்.''
"அதில் என்ன விவாதிக்கப்பட்டது?''”
"குண்டுவெடிப்பு எப்படி நடந்தது? இதை நம் உளவுத்துறை எப்படி கவனிக்காமல் விட்டதுன்னு, தனது ஆதங்கத்தை அந்தக் கூட் டத்தில் முதல்வர் பகிர்ந்துக்கிட் டாராம். இது தொடர்பாக 2 அதிகாரிகளை அவர் வெளிப் படையாகவே கடிந்து கொண் டாராம். உங்கள் ரிப்போர்ட்டு களை நம்பித்தானே இங்கே அரசின் நடவடிக்கைகள் எடுக்கப்படுது. ஆனாலும், குற்றங்களைத் தடுக்க முடியலையே.. என்கிற ரீதியில், அவர் கடுமையைக் காட்ட, சம்பந்தப் பட்ட அந்த அதிகாரிகள் பதில் கூற முடியாமல் நெளிஞ்சிருக்காங்க. நீண்ட விவாதங்களுக்குப் பிறகு, கார் குண்டு வெடிப்பு தொடர்பாக மேற்கொள்ளப்படும் விசாரணையை தேசிய புலனாய்வு முகமையிடம் (என்.ஐ.ஏ.) ஒப்படைத்துவிடலாம்னு இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டிருக்கு.''”
"இந்த தேசிய புலனாய்வு முகமையின் தன்னிச்சையான விசாரணைகளை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் பலவும் தொடர்ச்சியாக எதிர்த்துவரும் நிலையில், விசாரணையை அதனிடமே அரசு ஒப்படைப்பது சரியாக இருக்குமா?''”
"ஆமாங்க தலைவரே, இந்தக் கேள்விதான் பெரும்பாலான அதிகாரிகள் மத்தியில் எழுந்திருக்கு. எனினும், இந்தக் கார் குண்டு வெடிப்பில் வெளிநாட்டுத் தொடர்புகள் இருக்க வாய்ப்பு இருப்பதால், இந்த விசாரணையை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டிய நிலைமை இருக்கிறது என்று அரசுத் தரப்பில் சொல்லப்படுகிறது. இதையே சாக்காக வைத்து, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை, ஒன்றிய அரசான நாங்களே பார்த்துக் கொள்கிறோம்னு டெல்லி அறிவித்தால் என்ன பண்றதுங்கிற கேள்வியும் சில அதிகாரிகளிடம் எழுந் திருக்கு.''”
"கோட்டையில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்த நேரத்தில், உளவுத்துறை ஏ.டி.ஜி.பி.யிடம் இன்னொரு விசயத்துக்காக முதல்வர் கோபத்தைக் கொட்டினாராமே?''”
"ஆமாங்க தலைவரே, சில மாதங்களுக்கு முன், அமலாக்கத் துறையினர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்கைப் பதிவு செய்தபோது, அவரை கேபினெட்டில் இருந்து நீக்கிவிடலாமான்னு ஸ்டாலின் ஆலோசித் தார். அப்போது, அனிதாவை நீக்கினால், அமைச்சர் செந்தில் பாலாஜி மீதும் அமலாக்கத் துறையின் வழக்கு இருக்கிறதே என்ற கேள்வி வரும் என்று சொன்னதோடு, அனிதாவை நீக்கினால் அவர் தன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 15 பேருடன் பா.ஜ.க.வுக்குப் போய்விடுவார் என்றெல்லாம் உளவுத்துறை ஏ.டி.ஜி.பி. டேவிட்சன், ஸ்டாலினுக்கு அப்போது ரிப்போர்ட் அனுப்பினாராம். இதைச் சுட்டிக் காட்டிய ஸ்டாலின், உங்கள் ரிப்போர்ட் டால்தான் அனிதா மீது நான் நடவடிக்கை எடுக்கவில்லை. அவர் பற்றி நீங்கள் கொடுத்த ரிப்போர்ட் சரியானது அல்லன்னு அவரிடம் எரிந்து விழுந்தாராம் ஸ்டாலின்.''”
"தி.மு.க.வின் உட்கட்சித் தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், அதன் அணிகளின் நிர்வாகிகளை நியமிப்பதற்காக ஆயத்தங்கள் நடக்குதே?''”
"ஆமாங்க தலைவரே, இந்த முறை கட்சியினரின் அதிருப்தியைச் சம்பா தித்த மா.செ.க்களுக்கு கட்சித் தலைமை கல்தா கொடுக்கும் என்று எதிர்பார்க்கப் பட்டது, ஆனால் கட்சித் தலைமையோ, ’10 ஆண்டுகளா எதிர்க்கட்சியா தி.மு.க. இருந்தப்ப கட்சி அறிவித்த போராட்டங்கள், செயல்திட்டங்களை நிறைவேற்றியதால இப்போது இருப்பவர்களே இருக்கட்டும்னு சொல்லி, கட்சி நிர்வாகிகள் பலரையும் தொடர வச்சிருக்கு. இந்த நிலையில், இப்ப அணிகளின் நிர்வாகிகளை நியமிக்கும் விசயத்தில், பழைய நிர்வாகிகளைத் தூக்கிவிட்டு, தங்களுக்குத் தோதான புதியவர்களை நியமிக்க வடசென்னை தி.மு.க. மா.செ.க்கள் திட்டமிட்டிருக்காங்களாம். இந்த விவகாரம் வெளியே போகாமல் இருக்க, சம்பந்தப்பட்டவர்களின் போன்களையும் பறிமுதல் செய்கிறார்களாம். இதை எல்லாம் அறிந்து நொந்து போயிருக்கும் அணிகளின் சிட்டிங் நிர்வாகிகள், எங்களிடம் இருக்கும் பதவிகளை 10 லட்சம் வரை பேரம் பேசி விற்கப் பார்க்கிறார்கள். அப்படிச் செய்தால், பதவியிழக்கும் பலருக்கும் பா.ஜ.க. வலை விரித்துவிடும் என்கிறார்கள் எரிச்சலாக.''’
"தேவர் ஜெயந்திப் பரபரப்பு இப்போதே தென்மாவட்டங்களைப் பற்றிக்கொண்டு இருக்கிறதே?''”
"இம்மாதம் 30-ஆம் தேதி வரும் தேவர் ஜெயந்தியை, முக்குலத்தோர் சமூகப் பிரமுகர்கள், பிரமாண்டப்படுத்தத் திட்ட மிட்டிருக்காங்க. இந்த நேரத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படலாம் என்பதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என்கிறது உளவுத்துறை. ஜெயந்தி அன்று பசும்பொன்னுக் குச் செல்ல இருந்த எடப்பாடி, பயணத்தை கேன்சல் செய்துவிட்டார். காரணம், ஆறுமுகசாமி மற்றும் அருணா ஜெகதீசன் ஆணைய ரிப்போர்ட்டுகளை வச்சி, தனக்கு எதிராக ஓ.பி.எஸ். தரப்பு பிரச்சனை செய்ய லாம்ங்கிற சந்தேகம் அவருக்கு இருக்கிறதாம். அதேபோல் ஜெ.’ மரண விவகாரத்தில், ஆறுமுகசாமி ஆணையத்தின் குற்றச்சாட்டால் திகிலில் இருக்கும் சசிகலாவும், பசும்பொன் பயணத்தை ரத்து செய்யலாமான்னு யோசிக் கிறாராம். ஆனால், அவர் உறவினர்களோ, பயப்படாமல் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளோடு பசும்பொன்னுக்குச் செல்லுங்கள்னு வலியுறுத்தறாங்களாம். இதனால் பசும்பொன்னுக்கு செல்கிறாராம் சசி.''”
"ஜெ.வின் உறவுமுறை வாரிசுகளான தீபாவிற்கும் தீபக்கிற்கும் இடையிலான உரசல் அதிகரித்திருக்கிறதே?''”
“"ஜெ.வுக்கு சொந்தமான ஹைதராபாத் திராட்சைத் தோட்டத்தை, தீபா தரப்பு கணிசமான விலைக்கு விற்றிருக்கிறது. அதேபோல் சென்னை தி. நகரில் தீபா குடியிருந்த வீடும் விற்கப்பட்டிருக்கிறது. இந்த வீட்டை சசிகலாவே தனது உறவினர் பெயரில் வாங்கிக்கொண்டார் என்கிறார்கள். இந்த விற்பனைகளில் தனக்கான பங்குத் தொகையை தீபா சரியாகத் தரவில்லை என்று குமுறி வெடித்துக்கொண்டு இருக்கிறாராம் அவரின் சகோதரரான தீபக். இந்த கடுப்பில்தான், தீபாவுக்கு எதிராக சசி பக்கம் அதிகமாய் சாய்ந்திருக்கும் தீபக், நான் ஜெ.’விவகாரத்தில் சசிகலாவுக்கு ஆதரவாக சுப்ரீம் கோர்ட்டில் கூட வாக்குமூலம் தருவேன். சசிகலா ஜெ.வுக்குக் கொடுத்த சிகிச்சைகளை அவர் தலை மாட்டிலேயே இருந்து பார்த்தேன் என்று கூட நான் சொல்லுவேன் என்று கூறி, தீபாவை அவர் வெறுப்பேற்றி வருகிறாராம்.''”
"அ.தி.மு.க.வின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் கோவை செல்வராஜ், மாஜி மந்திரிகளைக் கொலைகாரர்கள் என்று குற்றம்சாட்டியிருக்கிறாரே?''”
"ஆமாங்க தலைவரே, அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய கோவை செல்வராஜ், மிகவும் கோபத்துடன், ஜெயலலிதாவைக் கொன்றவர்கள் அப்போது பதவியில் இருந்த 30 அமைச்சர்களும்தான் என்று அதிரடிப் புகாரை எழுப்பினார். இதனால் ஷாக்கான எடப்பாடி, சசிகலா தானே எல்லாவற்றிற்கும் காரணம். அப்படி இருக்க எப்படி நீங்கள் எங்கள் அனைவரையும் கொலைகாரர்கள் என்று சொல்லலாம்?. என்று அவரையே தொடர்புகொண்டு கேட்க, கோவை செல்வராஜோ, கட்சியை நீங்கள் பாழ்படுத்திவிட்டீர்கள். இனி நீங்களும் ஓ.பி.எஸ்.ஸும் சேர்ந்து ஓட்டுக்கேட்டு மக்களிடம் போகமுடியாது. நாடாளுமன்றத் தேர்தலிலும் சட்டமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.க. தோல்வியையே தழுவும் என்று முகத்தில் அடித்தாற்போல் சொன்னாராம்.''”
"நானும் ஒரு தகவலைச் சொல்றேன்... சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கரின் மணி மண்டபத்தில், தமிழக அரசின் சார்பாக அம்பேத்கரின் முழு உருவச்சிலை அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித் திருந்தார். அப்படி அமைக்கப்படும் அம்பேத்கர் சிலைக்கான செலவை விடுதலை சிறுத்தைகள் கட்சி ஏற்றுக்கொள்ளுமென்று கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார். அதையடுத்து, தமிழக அரசின் பொதுப்பணித்துறை சார்பாக அம்பேத்கர் மணி மண்டபத்தை சீரமைக்கும் பணியும், அம்பேத்கரின் 13 அடி உயர முழு வெண்கல சிலை அமைக்கும் பணியும் துரிதமாக நடைபெற்று நிறைவடைந்த நிலையில், அக்டோபர் 27, வியாழனன்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அம்பேத்கரின் முழு உருவச்சிலையைத் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், தி.மு.க. அமைச்சர்களான துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, பொன்முடி, மா.சுப்பிரமணியன், சி.வெ.கணேசன், கயல்விழி, மேயர் பிரியா, வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்..''