கொரோனா பரவலால் நாடு முழுக்க ஏற்படும் உயிரிழப்புகள் ஒருபுறமென்றால், இந்த கொரோனாவால், தங்கள் பாசத்துக்குரிய உறவின் பிரிவாலும், லாக்டவுனால் ஏற்பட்ட தொழில் நஷ்டத்தாலும் மனமுடைந்து குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ளும் சோகமும் ஆங்காங்கே தொடர்கிறது.

ஈரோடு திண்டல், லட்சுமி கார்டன் பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர் பார்த்தசாரதிக்கு ஹரிஹரன், நித்தியா, ரம்யா என மூன்று பிள்ளைகள் உள்ளனர். மூத்த மகள் நித்யாவுக்கு சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரோடு 15 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகியது. பாஸ்கர் சென்னையி லுள்ள டிபார்ட்மென்ட் ஸ்டோரில் மேலாளரா கப் பணிபுரிந்து வந்தார். அவர்களுக்கு 11 வயதில் மகதி என்ற மகளும், 6 வயதில் யாதவ் கிருஷ்ணன் என்ற மகனும் உள்ளனர். மகதி 6-ம் வகுப்பும், யாதவ் கிருஷ்ணன் 1-ம் வகுப்பும் படிக்கிறார்கள்.

corona

மகிழ்ச்சிகரமாகச் சென்ற இவர்களது குடும்பத்தில் கொரோனா வைரஸ் என்ற கொடுங்கோலன் புகுந்தான். சென்ற மாதம் 2-ம் தேதி, பாஸ்கருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதையடுத்து சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி கடந்த 9-ம் தேதி பாஸ்கர் உயிரிழந்தார். அன்புக்கணவ ரின் திடீர் மரணத்தைத் தாங்க முடியாமல் தனி மரமான நித்யா, ஆறுதலுக்காக தனது பிள்ளை களுடன், ஈரோடு திண்டலில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு வந்தார். அங்கும் கணவரின் இழப்பு தொடர்ந்து அவரை வாட்டிவந்த நிலையில், தற்கொலை செய்துகொள்ளும் விபரீத முடிவுக்கு வந்தார்.

Advertisment

24-ம் தேதி மதியம், உணவில் விஷ மாத்திரையைக் கலந்து, தனது செல்வங்களான மகள் மகதிக்கும், மகன் யாதவ் கிருஷ்ணனுக்கும் கொடுத்ததோடு தானும் அதே உணவை உண்டார். பின்னர், வீட்டிலுள்ள படுக்கையறையில் குழந்தை களோடு உறங்கச்சென்றவர், வெகுநேரமாகியும் கதவைத் திறக்காததால் நித்யாவின் தந்தை பார்த்தசாரதி, கதவைத் தட்டிப்பார்த்துவிட்டு, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்துக் கொண்டு பார்க்க, மூவரும் மயங்கிக்கிடந்தனர். உடனடியாக மூவரையும் மீட்டு, ஈரோட்டி லுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளித்தும் சிகிச்சை பலனின்றி மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மூவர் உடலையும் பார்த்து பெற்றோர், உறவினர்கள் கதறியழுதது, காண்போர் அனைவரையும் கலங்கடித்துவிட்டது.

அடுத்ததொரு துயர சம்பவம்: தூத்துக் குடி மாவட்டம் நாசரேத் அருகிலுள்ள கடையனோடையில் வசித்துவருபவர் லிங்கதுரை. அவருக்கு ஜெயலட்சுமி (வயது 52) என்ற மனைவியும், அசோக் என்ற மகனும் உள்ளனர். மகன் அசோக்கிற்கு திரு மணம் நிச்சயிக்கப்பட்டதால் திருமண வேலைகளில் சந்தோசமாக ஈடுபட்டுக்கொண் டிருந்த நேரத்தில், மகன் அசோக் கொரோ னாவால் பாதிக்கப்பட்டார்.

இதைக் கேள்விப்பட்டதி லிருந்தே, மகனின் திருமணத் துக்கு பாதிப்பு வந்துவிடுமோ என்ற அச்சத்தில், தாய் ஜெயலட்சுமிக்கு மனநல பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அதன் காரணமாக, 24-ம் தேதி அதிகாலையில் அனைவரும் உறக்கத்திலிருந்த நேரத்தில், சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண் டார். அதிர்ச்சியடைந்த லிங்க துரை, நாசரேத் போலீசில் தகவலளிக்க, போலீசார் விரைந்துவந்து ஜெயலட்சுமியின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து நாசரேத் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார். திருமணத்துக்கு தயாராகிக்கொண்டிருந்த குடும்பம், தற்போது தாயின் தற்கொலையால் பரிதவித்து நிற்கிறது.

Advertisment

cc

கொரோனா லாக்டவுனால் ஏற்பட்ட துயரம், சென்னை மந்தைவெளி ஏ.எம்.கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் லோக நாதன் (வயது 55). பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில், பால் விநியோ கம் மற்றும் மாதாந்திர சீட்டும் நடத்தி வந்துள்ளார். இவரது மனைவி சாந்தி (49). திருமண மாகி 25 ஆண்டுகளான இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. சாம் என்ற செல்ல நாயை தங்கள் குழந்தைபோல வளர்த்துவந்தனர். கொரோனா லாக் டவுன் காரணமாக கடந்த ஓராண்டு காலமாகவே இவரது தொழில் பெரிதும் பாதிப்படைந்துள்ளது. சீட்டு எடுத்தவர்களுக்கு பணம் கொடுப்பதற்கும் முடியாமல் திண்டாடியவர், அதற்காக பலரிடமும் கடன்மேல் கடன் வாங்கி, வாங்கிய கடனையும் வட்டியையும் முறையாகத் திருப்பிச்செலுத்த முடியாமல் திணறியிருக்கிறார். கடன் வாங்கியவர்கள் வீடு தேடிவர... அவமானமாக உணர்ந்த கணவனும் மனைவியும், தங்கள் செல்ல நாயோடு இணைந்து தற்கொலை செய்யும் முடிவுக்கு வந்துள்ளனர். அதற்காக, மூச்சுவிட முடியாதபடி நாயின் தலையை பிளாஸ்டிக் பையால் இறுக்கமாக மூடிவிட்டு, இருவரும் ஒன்றுபோல தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர்.

பிளாஸ்டிக் பையை கடித்துக் கிழித்த நாய், இரவெல்லாம் கத்திக் கொண்டேயிருக்க, அக்கம்பக்கத்தவர்கள் லோகநாதனின் வீட் டுக் கதவை தட்டித் தட்டிப் பார்த்தனர். வெகுநேரமாகியும் திறக்காததால் அபி ராமபுரம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். விரைந்துவந்த போலீசார், கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்ததில், கணவன் -மனைவி இருவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதைப் பார்த்து அதிர்ச்சியடைந் தனர். இருவரின் உடல்களையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். கொரோனா நோயால் ஏற்படும் உயிரிழப்பு மற்றும் தொழில் நஷ்டத்தால் பாதிக்கப்படுவோருக்கு மனநல ஆலோசனைகள் தேவையிருப்பதையே இந்த தற்கொலைகள் வெளிப்படுத்துகின்றன. இதனை அரசாங்கத்தோடு இணைந்து சமூகநல அமைப்புகளும் முன்னெடுத்தால் இத்தகைய தற்கொலைத் துயரங்களைத் தவிர்க்கலாம்.

-ஜீவாதங்கவேல், தெ.சு.கவுதமன்