செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் நகரத்தின் பிரதான ஏரியான நாவல் ஏரி ஆக்கிரமிக்கப் பட்டு, காலப்போக்கில் கைவிடப்பட்ட ஏரியாக மாற்றப்பட்டது. ஏரியின் நீர் வெளியேறும் தாங்கல் எனப்படும் பகுதியில் நீர் தேங்கி நிற்கும் பகுதியும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், அங்கே வாழக்கூடிய மீன்கள், நத்தை, நீர்க்கோழி போன்ற உயிரினங்களும் அழிந்துவருகின்றன. இது தொடர்பாக நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர் சம்பந்தம், "திருப்போரூர் பேருந்து நிலையம், ஒன்றிய அலுவலகம் உள்ளிட்ட பகுதிகள் ஒரு காலத்தில் ஏரியாக இருந்தன. மக்கள் தொகை பெருக்கத்தால் காலப்போக்கில் ஏரி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது,

ff

திருப்போரூர் -நெம்மேலி செல்லும் சாலையையொட்டி, செக் கடித்தாங்கல் உள்ளது. திருப்போரூர் வனப்பகுதிகளில் பெய்யும் மழை நீரானது, நாவல் ஏரியில் நிரம்பி. செக்கடித்தாங்கல் வருவது வழக்கம். நாவல் ஏரி பயன்பாட்டில் இல்லாத தால், செக்கடித்தாங்கலுக்கு ஏரி அந்தஸ்து கிடைத்தது. இது பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டிலுள்ளது. இரண்டு பிரதான மதகுகள் மற்றும் மூன்று நீர்ப்பாசனக் கால்வாய்களைக் கொண்ட இந்த செக்கடித்தாங்கல் ஏரியை நம்பி சுமார் 200 ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், இந்த ஏரியின் கிழக்கே விவசாய நிலங்களும், மேற்கே குடியிருப்புகளும் பெருகப் பெருக ஏரியின் அளவு சுருங்கிக்கொண்டே வருகிறது. அதேபோல், வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவு நீரும், கிழக்கு மாடவீதிகளிலுள்ள வடிகால் வழியாக வரும் கழிவுநீரும் ஏரியில் கலப்பதால், ஏரியின் தன்மை பாதிக்கப்படுவதோடு, நீர்வள ஆதாரமும் குறைகிறது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக ஏரியில் மீன்கள் கொத்துக்கொத்தாக செத்து ஆங்காங்கே மிதக்கின்றன. இதனால் சுற்றுப்புற மக்களுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏரியில் கழிவுகள் காரணமாக ஆக்சிஜன் குறைவு ஏற்பட்டோ, வேதி நச்சுப்பொருட்களாலோ மீன்கள் இறந்திருக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

Advertisment

ஆகவே பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நலன் கருதி, ஏரியில் கழிவுநீர் கலப்பதைத் தடுத்துநிறுத்தி, அழிவின் விளிம்பிலிருக்கும் செக்கடித்தாங்கல் ஏரியையும், அதிலிருக்கும் உயிரினங்களையும் காப்பாற்றிட பொதுமக்கள் முன்வர வேண்டும். மேலும், ஏரியில் செத்து மிதக்கும் மீன்களை அகற்றிடவும், ஏரியில் மண்டியுள்ள புதர்களை அகற்றி, ஏரியைச் சீரமைத்து, கரைகளைப் பலப்படுத்தி, நடைப்பயிற்சி செய்பவர்களுக்கு ஏதுவாக அமைத்துக் கொடுத்து, இருமருங்கிலும் மரக்கன்றுகள் வைத்துப் பரா மரிக்க பொதுப்பணித்துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோள்'' என்றார்.

இந்த ஆக்கிரமிப்பு தொடர்பாக திருப்போரூர் பேரூராட்சி தலைவரான தேவராஜிடம் பேசினோம். "இது சம்பந்தமாக பொதுமக்களிடமிருந்து எங்களுக்கு எந்தப் புகாரும் வரவில்லை. இருந் தாலும் இந்தத் தகவலை வைத்து அதன்மீது நடவடிக்கை எடுப்போம்'' என்றார்.

Advertisment