"ஹலோ தலைவரே, தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ.வின் இயக்குநர் தினகர் குப்தாவின் தமிழக வருகை, முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப் படுது.''”

"ஆமாம்பா, சென்னைக்கு திடீர்னு வந்த தினகர் குப்தா, தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபுவையும் கவர்னர் ஆர்.என்.ரவியையும் சந்திச்சிருக்காரே?''”

ra

Advertisment

"உண்மைதாங்க தலைவரே, கோவை கார் சிலிண்டர் குண்டுவெடிப்புக்குப் பிறகு, என்.ஐ.ஏ.வின் தமிழகத்தின் மீதான பார்வை மாறி இருக்கிறதாம். அண்மைக்காலமாக, தமிழகம் மற்றும் கர்நாடகாவில் என்.ஐ.ஏ. நடத்திய சோதனையில் பல அதிர்ச்சித் தகவல்களும் அதுதொடர்பான ஆதாரங்களும் கிடைத்திருக்கிறதாம். குறிப்பாக, தமிழகத்தில் மீண்டும் சில அசம்பாவிதங்கள் நடக்கலாம் என்கிற பகீர் தகவல் அவர்களுக்குக் கிடைக்க, அது தொடர்பாகத்தான் தினகர் குப்தா, ஆளுநரிடமும் டி.ஜி.பி.யிடமும் விவாதிச்சாராம். அப்படி எதுவும் இங்கே விபரீத சம்பவங்கள் அரங்கேறிவிடாதபடி எச்சரிக்கை நடவடிக்கை களைத் துரிதப்படுத்தணும் என்றும் அவர் கேட்டுக் கொண்டாராம்.''”

"இலங்கைக்கு போதைப் பொருட்கள் தமிழகத்திலிருந்து கடத்தப்படுவது குறித்தும் அவர்கள் அப்போது உரையாடி இருக்கிறார் களே?''”

ff

Advertisment

"இங்கிருந்து இலங்கைக்கு சட்டவிரோதக் கடத்தல்கள் நடந்துவருவதாக புகார்கள் வலுத்து வருகின்றன. அதனால் இது பற்றியும் என்.ஐ.ஏ. இயக்குநர் கவர்னரிடமும் டி.ஜி.பி.யிடமும் விவாதித்ததோடு, தங்களுக்குக் கிடைத்த தகவல்களையும் அவர்களிடம் விவரித்தாராம். அதோடு அவர், தமிழகத்தின் கடலோரப் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் விளக்கி இருக்கிறார். அதேபோல் 28-ந் தேதி இரவு இலங்கைக்குக் கடத்திச் செல்லப்பட இருந்த 394 கிலோ வெள்ளை நிறப் பவுடரைக் கடலோரக் காவல்துறை பிடித்தது பற்றியும் கேட்டிருக்கிறார். அது போதைப் பொருளாக இருக்கலாம் என்று சந்தேகப்பட்ட நிலையில், அது விவசாய உரம் என்று கண்டறியப்பட்டிருக்கிறது. இது குறித்த தகவலையும் தினகர் குப்தா கேட்டறிந்தாராம். இவர்களுடனான சந்திப்பை முடித்துக்கொண்டு டெல்லிக்கு பறந்திருக்கிறார் குப்தா. இந்த நிலையில் தான், ஐ.பி.எஸ். அதிகாரிகள் 9 பேரை இடமாற்றம் செய்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.''”

"இப்ப ஓய்வுபெறும் ஒரு காவல்துறை அதிகாரியை விட்டுவிட தமிழக அரசுக்கு மனசில்லையாமே?''

"ஆமாங்க தலைவரே... சட்டம்-ஒழுங்கு ஏ.டி.ஜி.யாக இருந்த தாமரைக்கண்ணன் நவம்பரோட ஓய்வு பெற்றுட்டாரு. அவர்மேல நல்லவிதமான அபிப்பிராயம் இருக்கிறதால, அவருக்கு வேற ஒரு முக்கிய பொறுப்பு குடுத்து, கூடவே வச்சுக்கப் பார்க்கிறாங்களாம்.''

"சரிப்பா, கோட்டையில் இருக்கும் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி பற்றி புகார்கள் சிறகடிக்கிதே?”

ff

"தமிழக அரசின் நில நிர்வாகத்துறையின் ஆணையராக இருக்கும் நாகராஜன் ஐ.ஏ.எஸ். சட்டவிதிகளுக்குப் புறம்பாக, தனது சுய லாபங்களுக்காக, தவறான விசயங்களுக்கு அரசாணை போட வைக்கிறார்னு, அவர் மீது புகார்கள் கிளம்புது. உதாரணமாக, தஞ்சையிலுள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகம், அரசுக்குச் சொந்தமான சுமார் 34 ஏக்கர் நிலத்தை, சட்டத்திற்கு புறம்பாக ஆக்கிர மித்து வைத்திருக்கிறது. இதற்கு மாற்றாக புதுக்கோட்டை மாவட்டத்தில் வேறு நிலம் தருவதாக அந்தப் பல்கலைக்கழக நிர்வாகம் சொன்னதை அரசு நிராகரித்துவிட்டது. அதோட சாஸ்த்ராவுக்கு எதிராக உயர்நீதி மன்றத்திலும் அரசு ஒரு வழக்கைத் தாக்கல் செய்தது. உயர்நீதிமன்றமும் அரசு எடுத்த முடிவே சரின்னு சொல்லிடிச்சி.''”

"பிறகு?''”

"ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தில் சாஸ்தாவின் கட்டிடங்கள் இருப்பதால், அந்தக் கல்வி நிறுவனத்தையே அரசுடைமை ஆக்கணும்னு அரசின் உயர்கல்வித் துறைக்கு, கல்வியாளர்கள் கோரிக்கை வச்சாங்க. இந்த நிலையில், அரசு நிலத் துக்கு மாற்றாக, கல்வி நிறுவனங்கள் கொடுக்கும் நிலத்தை ஏற்கலாம்னு, சாஸ்த்ராவுக்கு சாதகமாக திடீர்னு ஒரு அர சாணை பிறப்பிக்கப் பட்டிருக்கு. விதி களுக்குப் பொருந் தாத இந்த அர சாணை பிறப் பிக்கப்படுவதற் குக் காரணமாக இருந்தவர்னு நாகராஜ் ஐ.ஏ.எஸ்.ஸையே எல்லோரும் சுட்டிக் காட்டறாங்க. இதன் மூலம் நாகராஜ், தனிப் பட்ட முறையில் லாபம், அடைந்திருப்பதாகவும் கோட்டை வட்டாரம் சொல்லுது. இவருக்கு அனுசரணையாக இருக் கும் அதிகாரிகளும் கண் காணிப்பு வளையத்துக்கு வந்திருக்காங்களாம்.''”

"சசிகலாவுக்கும் தினகரனுக்கும் இடையிலான மோதல் இப்போது உச்சத்தை எட்டி இருக்கிறதே?''”

sasi

"சசிகலா தினகரனோடு பேசியே பல மாதங்கள் ஆகிறது என்கிறார்கள். குடும்ப நிகழ்ச்சிகளில் கூட அவரைச் சந்தித்துவிடக் கூடாது என்று அவர் கவனமாக இருக்கிறா ராம். அதேபோல் ஜெயா டி.வி.யில் தினகரன் மற்றும் அவருடைய அ.ம.மு.க. தொடர் பான எந்தத் தகவலும் வரக்கூடாது என்று கறார் உத்தரவைப் போட்டிருக்கிறாராம் சசிகலா. ஆனாலும் சளைக்காத தினகரன், வைகுண்டராஜன் தரப்பின் நியூஸ் செவன் சேனலில், தனது செய்திகள் அனைத்தும் வரும்படி பார்த்துக்கொள்கிறாராம். தினகரன் இனி என் முகத்திலேயே விழிக்கக்கூடாது என்று சசிகலா சொல்லி வரும் அளவிற்கு, தினகரன் மீது அவருக்கு என்ன கோபம் என்று கேட்டால், எல்லாம் சொத்து பத்து படுத்துகிற பாடுதான் என்கிறார்கள் மன்னார்குடித் தரப்பினர்.''”

"விபரமா சொல்லுப்பா?''”

"சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி உள்ளே இருந்த போது, தினகரனின் பி.ஏ.வாக இருந்த ஜனா என்பவர், ஆயிரம் ’சி’லிக்கும் அதிக மான சொத்துக்களை வாங்கிக் குவித்துவிட்டாராம். இதன் பின்னனியில் தினகரன் இருப்பதை அறிந்து, அப்போதில் இருந்தே தினகரனுடன் உரசலில் இருந்த சசிகலா, தினகரனின் சாமர்த்தியத்தை உணர்ந்து ஏகத்துக்கும் கோபமாகிவிட்டாராம். அதுதான் இந்த அளவிற்கு இருவருக்கும் இடையிலான உரசலாக மாறிவிட்டதாம். விட்டால் வெட்டுக்குத்து நடக்கும் அளவிற்கு இருதரப்பிற்கும் இடையிலான உரசல், நெருப்பாய்க் கனன்று கொண்டு இருக்கிறதாம்.''”

"நிதி மோசடியில் பா.ஜ.க. புள்ளி ஒருவர் கைதாகிறாராமே...?''

"பா.ஜ.க. அண்ணாமலைக்கு நெருக்கமான அந்த நபர், நிதி மோசடி விவகாரங்களில் சிக்கி, விரைவில் கைதாகும் நிலையில் இருக் கிறாராம். இதில் அரண்டுபோயிருக்கும் அந்த நபர், மேலிடங்களுடன் அண்டர் டீலிங் வைத்திருக்கும் லண்டன் கணபதி, லண்டன் சுதாகர் ஆகியோரைச் சந்திக்கத் தூதுவிட்டு, அவர்களுக்காக ஒரு நாள் முழுதும் சென்னை தி. நகரில் உள்ள ஆந்திர கிளப்பில் காத்திருந்தாராம். இருந்தும் அவருக்கு எதிர்த்தரப்பில் இருந்து க்ரீன் சிக்னல் கிடைக் காததால், அவர் அப்செட் டோடு கிளம்பினாராம். அவர் விரைவில் கைது நடவடிக் கைக்கு ஆளாகலாம் என்கிற டாக், இப்ப raபா.ஜ.க.விலேயே அடிபடுது.''’

"நானும் ஒரு தகவலைப் பகிர்ந்துக்கிறேன். அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் உடல்நலம் பாதிக்கப்பட்டு அப்பல் லோவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் தீவிர கண்காணிப்பில் உள்ளார் என சமூக வலைத்தளங்களில் ஏதோ எக்ஸ்குளூஸிவ் செய்தியைக் கண்டுபிடித்தது போல சிலர் பெருசா செய்தியை போட்டார்கள். இவருடைய மருமகன் அப்பல்லோவில் பெரிய மருத்துவர். அவர்மூலமா தன் உடலை அடிக்கடி அப்பல்லோவில் செக்-அப் செய்துகொள்வார். அதுபோன்று அப்பல்லோவில் சீனியர் மருத்துவரான செங்கோட்டுவேலிடம் சிகிச்சை பெற்றுக்கொள்வார். இரண்டு மாதத்திற்கு முன்பே பரிசோதனைக்குச் செல்லவேண்டிய அமைச்சர், நேற்றுதான் (30-11-2022 புதன்) வழக்கமான உடல் பரிசோதனைக்காக அப்பல்லோவில் அட்மிட்டாகியுள்ளார். ஜெ. அப்பல்லோவில் அட்மிட்டாகியிருந்தபோது பண்ணாத உளவு வேலையை ஜெ. இறந்த பின், கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல போலீஸ் ஐ.எஸ்.ஸிலிருந்து ஒருவரை தினமும் கண்காணிப்பதற்காக அமர்ந்தியிருந் தனர். அவர்மூலம் அமைச்சரின் உடல்நிலை பற்றிய செய்தி பரப்பப்பட்டு... வதந்தியானது. அதேபோல சமூக வலைத்தள செய்தி ஒன்றில், "யார் இந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர்?' என பெரிய அளவில் செய்தி வெளியிட்டு, பரபரப்பை உண்டாக்கினர். ஆனால் அவர் நல்ல முறையில் சிகிச்சை முடிந்து வியாழன் மாலை நலமுடன் வீடு திரும்பி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.''