ட மாவட்டங்களில் அங்கங்கே ஏற்பட்டு வரும் சாதி ரீதியிலான உரசல்கள், நிலைமையைப் பதட்டமாக்கி வரு கின்றன. இதற்கான பிள்ளையார்சுழிச் சம்பவம் இது.

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்டது காசாங்கோட்டை கிராமம். இங்கு கடந்த மாதம் 24ஆம் தேதி, பட்டியல் இனத் தைச் சேர்ந்த சிறுமி ஒருவருக்கு மஞ்சள் நீராட்டு விழா நடை பெற்றது. அதில் கலந்துகொள் வதற்காக தஞ்சை மாவட்டம் அணைக்குடி கிராமத்தைச் சேர்ந்த புரு ஷோத்தமன் என்பவர், தனது உறவினர் கள் சகிதம் வந்துள்ளார்.

காசாங்கோட்டை மாரியம்மன் கோவிலில் இருந்து சீர்வரிசையுடன் அவர்கள் வெடிவெடித்தபடி, மேள தாளங்களுடன் ஊர்வலமாகப் புறப்பட்டனர்.

ss

Advertisment

அப்போது அதே கிராமத்தில் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த சிலர், "எங்கள் தெருவில் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் ஊர்வலம் செல்கிற வழக்கம் இல்லை. உங்கள் பகுதியில் உள்ள அம்மன் கோவிலில் இருந்து சீர்வரிசையை எடுத்துச் செல்லுங்கள்'’என்று தடுத்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தைச் சிலர் செல்போன் மூலம் வீடியோ எடுத்துள்ளனர். அந்தக் காட்சி கள் ஒருபுறம் எடிட்டிங் மூலம் கூர் சீவப்பட்டு, சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளன.

இந்த நிலையில் தங்களை சாதியைச் சொல்லி எதிர்த்தரப்பினர் திட்டியதாக விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் புரு ஷோத்தமன் புகார் அளிக்க, இன்னும் சிலரும் புகார்களைக் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து இரு தரப்பினரும் காவல் நிலையத்தில் ஆஜரானார்கள். அங்கே, இந்த விவகாரத்தைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்று, இரு தரப்பினருமே பேசி முடித்தனர். இதை யொட்டி, சமாதானம் ஆகிவிட்டதாகப் போலீஸாரிடம் கூறிவிட்டுச் சென்றனர்.

இதற்கிடையே, சமூக வலைத்தளக் காட்சிகள் பரபரப்பாகப் பரவியதைக் கண்ட போலீஸார், உயர் அதிகாரிகள் கேள்வி கேட்டால் என்ன செய்வது என்று எண்ணி, பட்டியல் இனத்தைச் சேர்ந்த காசிராசன் என்பவர் அளித்த புகாரின் பேரில், வன்னியர் தரப்பைச் சேர்ந்த அருண்குமார், வல்லவன், ரவி, கவிதா, ராஜதுரை ஆகிய ஐந்து பேர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கைப் பதிவு செய்தனர்.

Advertisment

இதையறிந்த அந்த ஐவரும் தலைமறைவாக இருந்தபடியே, நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெறுவதற்கான முயற்சிகளில் இருக்க, வழக்கு போட்டவர்களை ஏன் இன்னும் கைது செய்யவில்லை? என்று உயர் அதிகாரிகளிடம் இருந்து பிரஷர் வந்துள்ளது. இதனால் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி தலைமையில், அந்த ஐந்து பேரையும் கைது செய்வதற்காக காசாங்கோட்டைக்கு போலீஸ் டீம் சென்றது.

ss

வழக்கில் சம்பந்தப்பட்ட அருண்குமார் மாமனார் செம்புலிங்கம், ஊருக்கு ஒதுக்குப்புறமான பகுதியில் வசித்து வருகிறார். அங்கு சென்ற போலீஸ் டீம், அருண்குமார் எங்கே என்று கேட்டு தங்கள் பாணியில் மிரட்டி உள்ளனர். அப்போது செம்புலிங்கம் உடல்நிலை சரியில்லாமல் கட்டிலில் படுத்திருக்க, அவர் அருகில் அவரது மனைவி சுதா, மகன் மணி கண்டன் மற்றும் அவரை நலம் விசாரிக்க வந்த உறவுக்காரப் பெண்கள் சிலரும் இருந்துள்ளனர்.

அப்போது நடந்ததாகச் சொல்லப்படும் தாக்குத லில், உடல் நலிவுற்றிருந்த செம்புலிங்கம் மரணமடைய, பிரச்சினை பெரிதாக வெடிக்கத் தொடங்கியது.

அந்தத் தாக்குதல் குறித்து, செம்பு லிங்கத்தின் மனைவி சுதாவே சொல் கிறார்...’’ ""உடல் நலம் சரியில்லாமல் படுத்திருந்த என் கணவர் செம்புலிங்கத்தைப் பார்த்து, "என்ன உன் மருமகனை மறைத்து வைத்து விட்டு நடிக்கிறாயா?' என்று கடும் வார்த்தைகளால் திட்டியபடியே போலீஸ்காரர்கள் பூட்ஸ் காலால் அவரது நெஞ்சில் உதைத்தார்கள். தடுத்த எங்களையும் நெட்டித் தள்ளிவிட்டனர். அங்கு இருந்தவர்களையும் தாக்கி, அருண்குமார் எங்கிருந்தாலும் எங்களிடம் வந்து ஆஜராகவேண்டும், இல்லைன்னா நடக்குறதே வேறன்னு எங்களை மிரட்டி விட்டுப் போனார்கள்''’என்றவர்...

’""அவர்கள் உதைத்ததால் எனது கணவர் சுயநினைவை இழந்தார். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை அரியலூர் அரசுமருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். சிகிச்சைக்குப் பின் வீட்டிற்கு அழைத்து வந்தோம். ஆனால் மறுநாளே அவ ருக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டது.

அரியலூரில் உள்ள கண்மணி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். அங்கிருந்த மருத்துவர்கள் "இவருக்கு நெஞ்சில் ரத்தம் கட்டி உள்ளது. திருச்சிக்கு அழைத்துச் செல்லுங்கள்' என்றனர். உடனடியாக திருச்சி மாருதி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். அங்கு அவரை பரிசோதித்த மருத்து வர்கள், அவர் நெஞ்சில் பலமான அடிபட்டிருப்பதால் (பூட்ஸ் காலால் உதைத்ததால் ) ரத்தம் உறைந்துவிட்டது என்று கூறி சிகிச்சை அளித்தனர். எனினும் என் கணவரைக் காப்பாற்ற முடியவில்லை. போலீசார் அவரை உதைத்ததால்தான், அவர் இறந்தார். இதுக்கு அவங்க பதில் சொல்லியே ஆகணும்''’என்றார் கண்ணீருடன்.

ss

செம்புலிங்கத்தின் உறவினர்களோ ""விக்கிரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி, சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ் ணன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல் மற்றும் 5 போலீசார் செம்புலிங்கத்தின் வீட்டிற்கு வந்தார்கள். செம்புலிங்கத்தை பூட்ஸ் காலால் உதைத்தவர்கள், தடுக்கச் சென்ற எங்களையும் கடுமையாகத் தாக்கினார்கள். எங்கள் அலறல் சத்தம் கேட்டு ஊர் மக்கள் ஓடி வந்தனர். அப்போதும்கூட உங்களையும் அடித்துக் கொன்று விடுவோம்னு மிரட்டிவிட்டுப் போனார்கள். காயம்பட்ட நாங்கள் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் என்பவர் எங்களிடம் வாக்குமூலம் பதிவு செய்வதாக வந்தார். அவரது விருப்பம்போல எதையோ எழுதிக் கொண்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெறக்கூடாது என நெருக்கடி கொடுத்து, எங்களை வீட்டுக்கு அனுப்பச் செய்தார். அதன்பிறகு திருச்சிக்குச் சென்று தனியார் மருத்துவமனையில் மூவரும் சிகிச்சை பெற்று வந்தோம்''’என்றனர் பதட்டம் மாறாமல்.

செம்புலிங்கம் மரணத்திற்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஜெயங்கொண்டம் பா.ம.க. மாநில செயற்குழு உறுப்பினர் பி.எம்.டி. திருமாவளவன், மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் உட்பட ஏராளமான பா.ம.க.வினர் திருச்சி மாருதி மருத்துவமனையை முற்றுகையிட்டனர். அதேபோல், பா.ஜ.க. தரப்பும் அரியலூரில் கண்டன ஆர்ப் பாட்டத்தை நடத்தியது. இதில் கலந்துகொண்ட மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் மற்றும் மாவட்ட தலைவர் அய்யப்பன் உள்ளிட்ட 449 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்துக் கண்டனம் தெரிவித்த பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், ’""மாநில செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு தலைமையில், உண்மை அறியும் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் அறிக்கை கிடைத்ததும் அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்குவோம்'' என்று குறிப்பிட்டார். மேலும், காவல்துறையின் தாக்குதலால் உயிரிழந்த செம்புலிங்கம் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடாகவும் அவரது குடும்பத் தில் ஒருவருக்கு அரசுப் பணியும் வழங்கவேண்டும் என்று பா.ம.க. தரப்பில் அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளனர்.

இரு தரப்பினரும் வாய்த் தகராறு செய்த விவகாரத்தில், இரு தரப்புமே சமாதானமாகிவிட்ட பிறகு, போலீஸே இந்த விவகாரத்தைப் பெரிதாக்கி, கைது நடவடிக்கை எடுக்கப்போவதாகச் சொல்லி, ஒரு உயிரை எடுத்திருக் கிறது. இது சாதிக்கலவரம் அல்ல. ஆனால் சாதிக் கலவரம் வராமல் தடுப்பதாகக் கூறிக்கொண்டே அதற்கான விதையையும் போட முயன்றிருக்கிறது போலீஸ்’’ என்று நடுநிலையாளர்கள் காவல் துறை மீது குற்றச்சாட்டை வைக்கிறார்கள்.

காவல்துறை தரப்போ, ""விசாரணைக்குச் சென்றது உண்மை. நாங்கள் யாரையும் தாக்கவில்லை''’என்று மறுக்கிறது.

இந்த நிலையில், எட்டாம் தேதி உயிரிழந்த செம்புலிங்கம் உடலை வாங்க மறுத்து, அவரது உறவினர் கார்த்திகேயன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில், சி.பி.ஐ., விசாரணை கேட்டு மனுத்தாக்கல் செய்தார். இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதர வாக பா.ம.க. வழக்கறிஞர் பாலு ஆஜரானார். இதை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி சந்திரசேகரன், ""விவசாயி செம்புலிங்கம் உடலை திருச்சி, தஞ்சை, மதுரை ஆகிய மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் இருந்து தலா ஒரு டாக்டரைக் கொண்ட குழு, பிரேத பரிசோதனை செய்யவேண்டும். அதை வீடியோ வாகவும் பதிவு செய்யவேண்டும். அதன் பிறகு அவரது உடலை ஞாயிற்றுக் கிழமை மதியம் 12 மணி அளவில் அவ ரது உறவினர்களிடம் ஒப்படைக்க வேண் டும். சி.பி.ஐ. விசா ரணைக்கு மாற்றக் கோரிய இந்த வழக்கில், தமிழக அரசு நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்கவேண்டும்''’’என உத்தரவிட்டதோடு, வழக்கைத் தள்ளி வைத்திருக்கிறார்.

இந்த நிலையில், 11-ஆம் தேதி மதியம் செம்புலிங்கம் உடல் பிரேத பரிசோதனை முடிக்கப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சொந்த ஊரில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அடக்க நிகழ்ச்சியும் நடந்தது.

வட தமிழகத் தின் நிம்மதியைக் குலைக்கும் சம்பவங் களுக்கு காவல்துறை யினரே பிள்ளையார் சுழி போட்டிருப்பது பதட் டத்தை ஏற்படுத்து கிறது.

அரசுக்கு இது ரெட் அலர்ட்.

_____________

பகிரூட்டும் உரசல்கள்!

இந்த நேரத்தில் வட மாவட்டப் பகுதிகளில், இரு தரப்பினருக்குமான பகீரூட்டும் உரசல்கள் அங்கங்கே ஏற்பட்டு வருகின்றன.

குறிப்பாக, கடந்த இரண்டாம் தேதி கடலூர் மாவட்டம் குள்ளஞ் சாவடி அருகில் உள்ள சுப்பிர மணியபுரம் தேசிய நெடுஞ் சாலை ஓரத்தில், விடுதலைச் சிறுத்தை கட்சியினர் 60 அடி உயரத்தில் புதுக் கம்பம் நட்டு, கட்சிக்கொடியை ஏற்றும் முயற்சியில் இறங்கினர். உடனே பா.ம.க. தரப்பு, இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. இருந்தும் இரவோடு இரவாக அந்தக் கொடிக் கம்பத்தில் சிறுத்தைகள், கொடியேற்றி விட்டனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட, இதையொட்டி கடலூர் கோட்டாட்சியர் கவியரசு தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது பா.ம.க. தரப்பு, அதே பகுதியில் நாங்களும் கொடிக்கம்பம் நடுவோம் என்று தெரிவிக்க, அதிகாரிகள் தரப்போ, நீதிமன்ற உத்தரவுப்படி, தேசிய நெடுஞ்சாலைப் பகுதிகளில் எந்தக் கட்சிக் கொடிக்கம்பமும் இருக்கக்கூடாது. எனவே அங்கே இருக்கும் அனைத்து கொடிக் கம்பங்களும் அகற்றப்படும் என்று தெரிவித்துவிட்டது.

இதே நேரத்தில், துறையூர் கிராமத்தைச் சேர்ந்த பட்டியல் சமூகத் தினரும், முருகன்குடி வன்னியர் சமூகத்தினரும் மோதலில் ஈடுபட, இருதரப்பினர் மீதும் பெண்ணாடம் போலீசார் வழக்குப் போட்டுள்ளனர். இதற்கிடையே, கடலூரைச் சேர்ந்த ராணுவ வீரர் குரு என்பவர், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவை விமர்சனம் செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். இதைப்பார்த்து சூடான, செங்கல் பட்டு மாவட்ட லத்தூர் ஒன்றியத்தைச் சேர்ந்த மணிமாறன் என்பவர், ’"எங்கள் தலைவரை விமர்சனம் செய்த நீ மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் இராணுவத்தில் நீ பாதுகாப்பாக இருக்கலாம். உனது குடும்பம் இங்குதானே இருக்கிறது...'’’என்று மிரட்டல் விடுக்க, அந்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் பரவி, பலத்த அதிர்வலைகளை ஏற் படுத்தியது. இதுபோன்ற உரசல்கள், சாதிக் கலவர அபாயத்தில் வட மாவட்டங்கள் இருப்பதை உணர்த்துகின்றன.