திக வட்டிக்கு கடன் வாங்கி திரும்பச் செலுத்த முடியாமல் கடன் சுமையால் வங்கதேசப் பெண்கள் சிரமப்படுவதைப் பார்த்து, அவர்களின் முன்னேற்றத்துக்காக சிறிய அளவிலான கடன்களைக் குறைந்த வட்டிக்கு வழங்கி, தொழில் தொடங்கச்செய்து, அவர்களும் நன்முறையில் கடனைத் திரும்பச்செலுத்தி, அதன்மூலம் அவர்களின் வாழ்க்கைத்தரம் உயரக் காரணமாக இருந்தவருக்கும், அவரது கிராமீன் என்ற வங்கிக்கும் 2006ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அதே நபர் தற்போது அவரது சொந்த நாட்டுக்கே தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர்தான் முகம்மது யூனுஸ்.

bb

முகமது யூனுஸ், வங்கதேசத்தில் பிறந்து வளர்ந்து, டாக்கா பல்கலைக்கழகத்தில் பொருளியலில் முதுகலைப் பட்டம் பெற்ற கையோடு, அமெரிக்காவின் வாண்டர்பில்ட் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்று, அங்கேயே பொருளியல் துறைப் பேராசிரிய ராகப் பணியாற்றினார். அச்சூழ லில் தான் தனது தாய்நாட்டுக்காக தனது பொருளியல் துறை அறிவாற்றலைப் பயன்படுத்தி, வங்க தேச கிராமப்புற ஏழை மக்களின் வாழ்க்கை மேம்பட உதவினார். அதற்காகத்தான் நோபல் பரிசையும் பெற்றார். பிரான்ஸ் நாட்டில் சிகிச்சையில் இருந்து வந்தார்.

வங்கதேசத்தில் சுதந்திரப்போராட்ட வீரர்களின் வாரிசுகள், சிறுபான்மையினர், பின் தங்கிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், பெண்களுக்கான இட ஒதுக்கீட்டுக்கு எதிராகவும், ஷேக் ஹசீனாவின் சர்வாதிகாரத் தன்மை கொண்ட அரசுக்கு எதிராகவும், நடந்த மாணவர்கள் போராட்டத்தால் எழுந்த வன்முறையில் நாடெங்கும் பற்றியெரிய, அதன் உச்சமாக, பிரதமர் அலுவலகமே சூறையாடப்பட்டது.

Advertisment

பிரதமர் ஷேக் ஹசீனா, நாட்டை விட்டே தப்பியோடி இந்தியாவில் தஞ்சமடைந்தார். வங்க தேச வன்முறையில் 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட நிலையில், வன்முறையைக் கட்டுக்குள் கொண்டுவர, வங்கதேச ராணுவ தலைமைத் தளபதி வாக்கர் உஸ் ஜமான் பொறுப்பைக் கையிலெடுத்து ராணுவ ஆட்சியைக் கொண்டுவந்தார். அடுத்ததாக, எதிர்க்கட்சிகள், மாணவர் அமைப்புகளின் பிரதிநிதிகளோடு ஆலோசனை நடத்தினார் ராணுவ தளபதி. அப்போது, நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகமது யூனுஸ் தலைமையில் புதிய அரசு அமைக்கப்பட வேண்டுமென்று அனைவரும் ஒருமித்து கருத்து தெரிவித்தனர். பாரீஸில் சிகிச்சையிலிருந்த முகமது யூனுஸ், ராணுவ தளபதியின் அழைப்பை ஏற்று டாக்கா திரும்பினார்.

வந்ததுமே முதல் அறிவிப்பிலேயே நாட்டின் வன்முறையைக் கட்டுப்படுத்தும் நோக்கோடு, "வன்முறை யாளர்கள் வன்முறையைக் கைவிட்டு அமைதி வழிக்கு திரும்ப வேண்டும். அனைத்து சமூக மக்களுக்குமான பாதுகாப்பை வழங்குவதே எனது முதல் கடமை. இதைச் செய்யாவிட்டால் நான் தாய்நாட்டுக்கு வந்ததே அர்த்தமில்லாததாகும்'' எனக் கூறினார். இஸ்லாமிய நாடான வங்கதேசத்தில், இந்துக்கள் 8% என்ற அளவில் வசித்துவருகிறார்கள். இந்துக்களில் பெரும்பான்மையினர், ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் ஆதரவாளர்களாக இருந்தனர். எனவே ஷேக் ஹசீனா அரசுக்கு எதிரான வன்முறையில் இறங்கியவர்கள், இந்துக்களின் வீடுகள், தொழில் நிறுவனங்கள், கோவில்களின் மீதும் குறிவைத்து தாக்குதல் நடத்தினர். அதையடுத்து, அரசியல் ரீதியாக வங்க தேசத்திலுள்ள இந்துக்களுக்கு உரிய பாது காப்பை வழங்குவதற்கான நடவடிக்கையில் இந்தியா இறங்கியது.

"அனைத்து குடிமக்களின் நல்வாழ்வை உறுதி செய்வது ஒவ்வொரு அரசாங்கத்தின் பொறுப்பாகும்'' என்று இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்திருந்தார். வங்க தேசத்திலிருந்து இந்தியாவுக்கு தப்பிவருவதற்காக இந்துக்களில் பலர் முயற்சித்த நிலையில், அவர்களுக்கு வங்கதேசத்திலேயே உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று வங்கதேசத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Advertisment

வடமேற்கு வங்கதேசத்தை சேர்ந்த ஓர் அதிகாரி கூறுகையில், "கலவரத்தில் இந்துக்களில் சிலரது வீடுகள் சூறையாடப்பட்டதால் ஏற்பட்ட பயத்தில் ஐநூறுக்கும் மேற்பட்ட இந்தியர்கள் இந்தியாவுக்கு திரும்ப முயற்சி செய்தனர். நாங்கள் அவர்களுக்கு பாதுகாப்பளிப்போமென்று உறுதியளித்த பின்னர் வீடுகளுக்கு திரும்பினர்'' என்றவர், அவர்களின் வீடுகளுக்கு பாதுகாப்புக் காவலர்களை நியமித்ததோடு, ரோந்து போலீசாரையும் நியமித்திருப்பதாகக் குறிப்பிட்டார். புதிய இடைக்கால அரசு பதவியேற்ற பின்னர் வன்முறை கட்டுக்குள் கொண்டுவரப்படுமென்றும், சிறுபான்மை சமூகத்தினரின் பாதுகாப்பு வங்கதேசத்தில் உறுதி செய்யப்படுமென்றும் நம்பப்படுகிறது. இடைக்கால அரசு அதற்கான நல்ல தொடக்கமாக அமையட்டும்.