ஊட்டி யின் பென்னட் மார்க்கெட் பகுதியை சேர்ந்த இம் ரானின் மனைவி ஆஷிகா பர்வீன் வலிப்பு நோயால் இறந்துவிட்டார் என ஊட்டி மேற்கு காவல் நிலையம் வழக்கைப் பதிவு செய்திருந்தது. இந் நிலையில், சயனைடு விஷத்தினாலே இறந்து விட்டாரென ரசாயன அறிக்கை வெளியானது அதிர்ச்சியளித்துள்ளது.
இதுகுறித்து, "இறந்த ஆஷிகா பர்வீன் என்பவருக்கும், அவரது கண வர் இம்ரான்கானுக் கும் கடந்த 2021ஆம் வருடம் திருமணம் நடந்து. அவர்களுக்கு இரண்டு வயதில் ஓர் ஆண் குழந்தை உள்ளது. கடந்த 23-06-2024 அன்று ஆஷிகா பர்வீனின் மாமியாரான யாஸ்பின், ஆஷிகாவின் அம்மா விற்கு போன்செய்து, "ஆஷிகா பர்வீன் வலிப்பு வந்து கீழே விழுந்ததால் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்' எனக் கூறியதின்பேரில், அம்மா நிலோபர் நிஷா மருத் துவமனைக்கு சென்றுள் ளார். அங்கோ, அவரது மகள் இறந்துவிட்ட தாகத் தெரிவித்தனர். கடந்த 20-08-2024 அன்று இவ்வழக்கில் இரசாயன பரி சோதனை அறிக்கை பெறப்பட்டதில், ஆஷிகா பர்வீனின் இறப்புக்கா
ஊட்டி யின் பென்னட் மார்க்கெட் பகுதியை சேர்ந்த இம் ரானின் மனைவி ஆஷிகா பர்வீன் வலிப்பு நோயால் இறந்துவிட்டார் என ஊட்டி மேற்கு காவல் நிலையம் வழக்கைப் பதிவு செய்திருந்தது. இந் நிலையில், சயனைடு விஷத்தினாலே இறந்து விட்டாரென ரசாயன அறிக்கை வெளியானது அதிர்ச்சியளித்துள்ளது.
இதுகுறித்து, "இறந்த ஆஷிகா பர்வீன் என்பவருக்கும், அவரது கண வர் இம்ரான்கானுக் கும் கடந்த 2021ஆம் வருடம் திருமணம் நடந்து. அவர்களுக்கு இரண்டு வயதில் ஓர் ஆண் குழந்தை உள்ளது. கடந்த 23-06-2024 அன்று ஆஷிகா பர்வீனின் மாமியாரான யாஸ்பின், ஆஷிகாவின் அம்மா விற்கு போன்செய்து, "ஆஷிகா பர்வீன் வலிப்பு வந்து கீழே விழுந்ததால் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்' எனக் கூறியதின்பேரில், அம்மா நிலோபர் நிஷா மருத் துவமனைக்கு சென்றுள் ளார். அங்கோ, அவரது மகள் இறந்துவிட்ட தாகத் தெரிவித்தனர். கடந்த 20-08-2024 அன்று இவ்வழக்கில் இரசாயன பரி சோதனை அறிக்கை பெறப்பட்டதில், ஆஷிகா பர்வீனின் இறப்புக்கான காரணம் சயனைடுதான் என்று தெரிவிக்கப்பட்டி ருந்தது. பின்பு இது சம்பந்தமாக 31-08-2024 அன்று ஆஷிகா பர்வீனின் கணவர் இம்ரான்கான், மாமியார் யாஸ்பின், கணவரின் தம்பி முத்தாஹிர் மற்றும் மாமியாரின் கள்ளக்காதலன் காலிப் ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், யாஸ்பின் மற்றும் காலிப்பிற்கு இருந்த கள்ளத்தொடர்பை ஆஷிகா பர்வீன் தெரிந்துகொண்ட தால், இதனை மற்றவர்களிடமும் சொல்லிவிடக்கூடும் என்பதால், ஆஷிகா பர்வீனை காபியில் சயனைடு விஷம் கலந்து கொன்றுவிட்டதாக ஒப்புதல் வாக்குமூலம்அளித்தனர்.
எனவே இவ் வழக்கானது, கொலை வழக்காக மாற்றப்பட்டு எதிரிகள் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்' என விவரிக்கிறது நீலகிரி மாவட்ட காவல்துறை,"20ம் தேதி அறிக் கை வந்துவிட்டது. என் மகள் வலிப்பு நோயால் சாகவில்லை. காபியில் சயனைடு கொடுத்துதான் கொல்லப் பட்டிருக்கிறாள். காவல்துறை என்ன செய்கிறது? குற்ற வாளியை தப்பவிடுகிறதா?' என்கின்ற கேள்விகளுடன் கொலை செய்யப்பட்ட இளம் பெண்ணின் உற வினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஊட்டி மேற்கு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட... அவர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சியினரும் திரண்டனர். வேறு வழியில்லாமல் ஏ.டி.எஸ்.பி. சவுந்தரராஜன், டி.எஸ்.பி. யசோதா தலைமையி லான போலீஸார், உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து, சம்பந்தப்பட்டவர்களை கைதுசெய்து "சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என்று உறுதியளிக்க, பொதுமக்கள் கலைந்து சென்றனர். மக்களிடம் கூறிய வாக்குறுதியின் அடிப்படையில் உடனடியாக கொலை வழக்காக பதிவு செய்து கொலை யாளிகளை கைது செய்தது ஊட்டி மேற்கு போலீஸ்.
"என்னுடைய பெண்ணும் அவனும் காதலித்து வந்தனர். இரு வீட்டார் சம்மதத்துடன் தான் திருமணம் செய்து வைத்தோம். இம்ரான் துவக்கத்தில் ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்த நிலையில், அவனின் நிரந்தர வருமானத்திற் காக ஜவுளிக்கடை வைக்க ரூ.20 லட்சம் கொடுத் தோம். அதனை வைத்து மெதுவாக வளர்ந்தனர். மாமனாரைப் பொறுத்தவரை அவர் அப்பாவி. மாமியாரான யாஸ்பினுக்கும், என் மகளுக்கும் அவ்வப்போது தகராறு வரும். "சாதாரண மாமியார், மருமகள் சண்டைதானே, அட்ஜஸ்ட் செய்து போம்மா' என நாங்கள் தான் அட்வைஸ் செய்தோம். இடையில் கொழுந்தனின் போதை டார்ச்சர் வேறு. இந்த நிலையில் தான் வீட்டிற்குள் மாமியாரின் கள்ளக்காதலன் வந்திருக்கிறான். மகளின் கொழுந்தனை கண்டித்து வைப்பதாக வீட்டிற்குள் வந்தவன், மாமியார் யாஸ்பினுடன் நெருக்கமாயிருக்கிறான். இவர்களின் அன்னி யோன்யமான நெருக்கத்தை ஆஷிகா பார்த்திருக் கிறாள். நேரடியாக கண்டித்திருக்கிறாள். இது தொடர்பாக அவளது கணவனிடமும் தெரிவித் திருக்கிறாள். ஆனால் பயனில்லை. திடீரென ஒரு நாள், "உங்க பொண்ணு வலிப்பு வந்து மயக்கமாகி விழுந்துவிட்டாள்' என போன் செய்தார் மாமியார் யாஸ்பின். ஆனால் இறந்த பிறகே மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறாள். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் செய்தோம். கண்டுகொள்ளவில்லை. ரசாயன அறிக்கை வந்தும்கூட கைது செய்யவில்லை. அதனால்தான் இந்த மறியலே'' என்கிறார் கொலையுண்ட ஆஷிகா பர்வீனின் தாயார் நிலோபர் நிஷா.
போலீஸ் அதிகாரி ஒருவரோ, "இது முழுக்க முழுக்க கள்ளக்காதல் கொலையே. அதுபோக ரூ.20 லட்சம் வரதட்சணை வாங்கி வருமாறு ஆஷிகா பர்வீனை கொடுமைப்படுத்தியதாகவும் கூறப் படுகிறது. சம்பவத்தன்று கள்ளக்காதலன் காலிப்பும், மாமியார் யாஸ்பினும் தனிமையில் இருந்ததை நேரில் பார்த்த நிலையில், அறைந்திருக்கிறான் கள்ளக்காதலன் காலிப். ஆஷிகா மயங்கி விழுந்து எழவில்லை என்பதால், ஊட்டி மெயின் பஜார் பகுதியிலுள்ள ஒரு நகைப்பட்டறை ஒன்றில் சயனைடு வாங்கி காபியில் கொடுத்து கொன்றி ருக்கின்றார் வில்லங்க மாமியார். இது அவரது கணவன் இம்ரானுக்கு தெரிந்தும் மறைத்திருக்கிறார் என்பதால் அவரும் வழக்கில் சேர்க்கப்பட்டி ருக்கிறார். சாதாரண மனிதனுக்கு சயனைடு கிடைத்தது எப்படி? என்பது தான் தலையாய கேள்வி'' என்கிறார் அவர்.
ஒரு கள்ளக்காதல், இளம்பெண்ணின் உயிரையே முடித்திருக்கிறது!
-நா.ஆதித்யா
படங்கள் : விவேக்