சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சாமியப்பன், சிவகாசி யில் நம்மைச் சந்தித்தபோது, “"அசுத்தக் காற்றை மரம் ஈர்த்துக் கொண்டு புதிய காற்றை வெளி விடுது. அந்தக் காற்றில்தான் மனிதர்கள் சுவாசிக்கத் தேவையான ஆக்சிஜன் இருக்கு. மரத்தை பத்தி இப்ப நான் பேசுறேன்னா.. அதுக்கு காரணம் இருக்கு''’என்று பெருமூச்சு விட்டார்.

தூத்துக்குடி மாவட்டம், பேரிலோவன்பட்டியில் ரெஸ் பாலிமர்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வரும் சாமியப்பன், வானம் பார்த்த பூமியாக உள்ள அந்த நிறுவனத் தின் பின்புறத்தில், நூற்றுக்கணக்கான மரங்களை வளர்த்து வருகிறார்.

industralist

Advertisment

கடந்த 8ஆம் தேதி, சாமியப் பனும், மேனேஜர் பால் ஜெயசிங் கும், அந்த நிறுவனத்தின் மெயின் கேட் அருகில் உட்கார்ந்திருந்த போது, திமுதிமுவென்று 10 பேர் அரிவாளுடன் நுழைந்து, அங்கி ருந்த மரங்களை சடசடவென்று வெட்ட ஆரம்பித்தனர். அதிர்ச்சி யான சாமியப்பன் அவர்களைத் தடுத்து விசாரிக்க, "நாங்க ஏ.டி.ஈ.பி.லருந்து வந்தி ருக்கோம். பவர்லைனுக்கு கீழ உள்ள மரக்கொப்புகள வெட்டுறதுக்கு கான்ட் ராக்ட் ஆட்களக் கூட்டிட்டு வந்திருக் கேன்''” என்று கூறியிருக்கிறார். அதற்கு சாமியப்பன் "எங்கட்ட சொல்லியிருந்தா பக்குவமா வெட்டியிருப்போம்ல. 40 அடி உயரத்துக்கு மேல பவர்லைன் போகுது. பத்தடி உயரம்கூட இல்லாத மரத்தைத் தேவையில்லாம எதுக்கு வெட்டுறீங்க?''’என்று ஆதங்கத்தை வெளிப்படுத்த, உடனே மின்வாரிய அதிகாரி "நான் நினைச்சா, உங்க கம்பெனிக்கு பவரே கிடைக்காமப் பண்ண முடியும். அரசுப் பணியைத் தடுத்தீங் கன்னு புகார் செய்யமுடியும்'' என்று மிரட்டியிருக்கிறார்.

மரம் வெட்டியவர்களைத் தடுக்க இயலாமல் சாமியப்பன் கண்கலங்க, அவர்களோ, வெட்டுவதற்கு அவசியமே இல்லாத மரங்களை வெட்டியும், மெஷின் வைத்து அறுக்கவும் செய்திருக்கின்றனர். அந்த நிறுவனத்தின் வேலி கம்பிகளையும், தூண்களையும் சேதப்படுத்தியிருக்கின்றனர்.

இதையடுத்து சாமியப்பன், தனது நிறுவனத்தின் மேலாளர் பால் ஜெயசிங் மூலமாக காவல்துறையில் புகாரளிக்கச் சென்றால், ஏதேதோ சாக்குபோக்கு சொல்லி புகார் மனுவுக்கு ரசீது தராமல் தட்டிக்கழித்தனர். அதுகுறித்து எட்டயபுரம் காவல்நிலையத்தைத் தொடர்புகொண்டு, "மின்வாரிய அதிகாரி அரசு ஊழியர் என்பதால் புகாரை ஏற்க மறுக்கிறதா காவல்நிலையம்?'' என கேள்வியெழுப்பினோம். அதன்பின்னர், 10-ஆம் தேதி புகாருக்கு நான்கு நாட்கள் கழித்து மனு ரசீது தந்துள்ளனர். சாமியப்பன் நம்மிடம் "அடுத்த கட்டமாக, இந்த மனு ரசீது அடிப்படையில் நீதிமன்றத்தையோ, பசுமைத் தீர்ப்பாயத்தையோ நாடுவோம். நாங்கள் உயிருக்குயிராக வளர்த்த மரங்கள் அநியாயமாக வெட்டப் பட்டதற்கு நீதி கிடைக்கும்வரை ஓயமாட்டோம்''’என்றார் உறுதியான குரலில்.