ஜூலை 4-ஆம் தேதி மதுரை கப்பலூர் கிராம மக்களும், அருகிலிருக்கும் சிட்கோ தொழிற்பேட்டையைச் சேர்ந்தவர்களும் அங்கிருக்கும் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு, சுங்கச்சாவடியின் முன்வந்து போராடினர். “"மிரட்டாதே மிரட்டாதே கிராம மக்களை மிரட்டாதே! காட்டாதே காட்டாதே பொய்க் கணக்கு காட்டாதே! நிதின் கட்கரியின் பினாமி கியூப் நிறுவனமே வெளியேறு!''’என்று கப்பலூர் மக்கள் கோஷமிட்டனர். சிறிது நேரத்தில் அங்கிருக்கும் சுங்கச்சாவடியைச் சேர்ந்த அடியாட்கள் மற்றும் போலீஸார் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தினர்
அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் 200-க்கும் மேற்பட்ட கிராம மக்களுடன் மறியல் செய்ய, போலீஸார் தடுத்தனர். உடனே, கட்டண வசூலுக்கு எதிராக அங்கே உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தார். அவரையும், அவருடன் போராடியவர்களையும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் கைது செய்தார்.
சுங்கச்சாவடியைச் சுற்றியுள்ள கிராம மக்களின் ஒருங்கிணைப்புத் தலைவரும் கப்பலூர் கிராம பஞ்சாயத்து தலைவருமான கண்ணனிடம், "என்னதான் பிரச்சனை'' என விசாரித்தோம்.
"கப்பலூர் பகுதியில் சுங்கச்சாவடி அமைக்கும் போதே எதிர்ப்பு தெரிவித்தோம். சுங்கச்சாவடி ஒப்பந்தக்காரர்கள் உள்ளூர் மக்களுக்கு கட்டண சலுகைகள் அளிக்கப்படும் என கூறினர். இதுவரை எந்தவித கட்டண விலக்கும் அளிக்கவில்லை. ஒவ்வொரு முறை போராட்டம் நடத்தும்போதும் கட்டண விலக்கு அளிக்கப்போவதாக அதிகாரிகள் உறுதியளிக்கின்றனர். ஆனால் அது தீர்வு கிடைக்காத தொடர்கதையாக மாறிவருகிறது.
தற்போது திடீரென 100-க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகளுக்கு சுங்கக் கட்டணமாக 1 லட்சத்திலிருந்து 10 லட்சம்வரை சுங்கக் கட்டண பாக்கி உள்ளது என்று கியூப் நிறுவனத்திடமிருந்து நோட்டீஸ் வந்ததால் கிராம மக்கள் அதிர்ச்சி யடைந்தோம். விவசாயத்திற்குப் பயன்படுத்தும் டிராக்டர்கள், வாகனங்களுக்கு சுங்கச்சாவடி அபராதக் கட்டணமாக 1 லட்சத்து இருபதாயிரத்தி லிருந்து 10 லட்சம்வரை 7 நாட்களுக்குள் செலுத்தவேண்டும் என்றும், தவறினால் தேசிய நெடுஞ்சாலை விதியின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் 100 நபர்களுக்கு மேல் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலை கார்ப்பரேஷன் விதிப்படி, கிராம எல்லையிலிருந்து 5 கிலோமீட்ட ருக்குள் சுங்கச்சாவடி இருந்தால் அந்த கிராமப் பஞ்சாயத்திற்கு வரி கட்டவேண்டும். அந்த நக ராட்சியில் அனுமதி வாங்கவேண்டும். சுங்கச் சாவடிக்கு மிக அருகிலிருக்கும் எங்கள் கப்பலூர் கிராமப் பஞ்சாயத்திற்கு இவர்கள் வரியும் கட்டவில்லை… திருமங்கலம் நகராட்சியில் அனுமதியும் வாங்கவில்லை. ஒன்றிய அரசு இதற்கு சரியான தீர்வளிக்க வேண்டும்''’என்றார்.
திருமங்கலம் கப்பலூர் சிட்கோ தொழிற் பேட்டை ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் ரகுநாதராஜா நம்மிடம், ”"இந்த கப்பலூர் சுங்கச் சாவடியின் இரு பக்கமும் 48 கிலோமீட்டரில் கொடைரோடு சுங்கச்சாவடியும் 52 கிலோமீட்ட ரில் கிழக்கே சிட்டம்பட்டி சுங்கச்சாவடியும் உள்ளன. இந்த நான்குவழிச் சாலை அருகே சர்வீஸ் ரோடு காலம்காலமாக இருக்கிறது. அதில்தான் நாங்களும் அரசுப் போக்குவரத்து பேருந்துகளும் போய்வருகிறோம். 10 வருடங்களுக்கு முன் அன்றைய கலெக்டர் அன்சுல்மிஸ்ரா தலைமையில், ஒன்றிய அரசின் தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், அதன் ஒப்பந்தக்காரர்கள் அடங்கிய சிறப்புக் கூட்டம் கூடி, பொதுமக்களிடம் கருத்துக் கேட்டு சுங்கச்சாவடியை சுற்றியிருக்கும் வாகனங் களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்ற விதியை சுட்டிக்காட்டி தடைபோட்டார்.
சிறிதுகாலம் ஒழுங்காகச் சென்றது. அடுத்தடுத்து வந்த ஒப்பந்தக்காரர்கள் சுங்கச் சாவடிக்கு அருகிலிருக்கும் வாகனங்களை மட்டும் அனு மதித்துவிட்டு மற்ற கிராமங் களுக்கு கட்டணம் வசூலித்தனர்.
இது அவ்வப்போது பிரச்சனையாகி மக்கள் போராட்டம் செய்துகொண்டி ருந்தனர். இந்த சுங்கச்சாவடி யின் வாயிலிலேயே ஸ்ரீகிருஷ்ணா பிளவர் மில் இருப்பதால் மில்லுக்கு எந்த வண்டியும் வரமுடியவில்லை. இதனால் பெரிதும் பாதிக்கப் பட்ட அவர்கள் உயர்நீதிமன் றத்திற்கு சென்று தடை உத்தரவு வாங்கினர். தற்போது இதன் ஒப்பந்தக் காரர்கள் மேல்முறையீடு செய்தனர். உயர்நீதிமன்றம் மூன்று வழக்கறிஞர்கள் அடங்கிய ஆய்வுக் குழு அமைத்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு போட்டனர். ஆனால் அந்த ஆய்வுக்குழு உத்தரவு சமர்ப்பிக்க மீண்டும் தடை வாங்கியுள்ளது சுங்கச்சாவடியை எடுத்திருக்கும் நிறுவனம்.
கடந்த வாரம் தமிழக அரசுப் பேருந்தை நிறுத்தி சுங்கக்கட்டணம் கேட்க, பேருந்து ஓட்டுநர்களிடம் சுங்கச்சாவடியில் இருந்தவர்கள் தகராறில் ஈடுபட, அது பெரும் பிரச்சனையாகி போலீஸார் வந்து சமாதானம் செய்து அரசுப் பேருந்துகளை அனுப்பிவைத்தனர்.
அதே நாளில் மதுரை மாவட்ட அரசுப் பேருந்து போக்குவரத்துக் கழக இயக்குநருக்கு ரூ.23 கோடிவரை சுங்கக் கட்டண பாக்கி உள்ளது. அதை உடனே செலுத்தும்படி நோட்டீஸ் வர, அதற்கு ஒன்றிய அரசின் தேசிய நெடுஞ்சாலை அமைப் பான நகாய்க்கும் அதன் ஒப்பந்த நிறுவனமான கியூப்” நிறுவனத்திற்கும் தமிழக அரசுப் போக்கு வரத்து கழகம் சார்பில், ”"இது அரசு போக்குவரத்து கழகம். நாங்கள் திருமங்கலம் வழியாகச் செல்லும் சர்வீஸ் ரோட்டில்தான் செல்கிறோம். அதனால் எந்தவித சுங்கக் கட்டணமும் கட்டத் தேவை யில்லை' என்று பதில் கொடுத்தனர். மதுரை மாவட்ட ஆட்சியரிடம் ஒன்றிய தேசிய நெடுஞ் சாலை நகாய்” சட்ட விதிகளின்படி கட்டாயம் கட்டணம் செலுத்தித்தான் ஆகவேண்டுமென புகார் கொடுத்துள்ளனர்.
தென்காசி காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கட்ரமணா "நீதிமன்றத்தில், இது சட்டத்திற்குப் புறம்பாக இயங்குகிறது. இதேபோல் தமிழகத்தில் ஏராளமான சுங்கச்சாவடிகள் இயங்குகின்றன. அவற்றை அகற்றவேண்டும்' என்று வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது''’என்றார்
சுங்கச்சாவடியை குத்தகைக்கு எடுத்த கியூப் நிறுவனத்தின் மேலாளர் ரவிபாபுவோ, “"இந்த சுங்கச் சாவடியை புதிதாக 30 வருடங்களுக்கு குத்தகைக்கு எடுத்துள்ளோம். தற்போதைய விதியின்படி நோட்டீஸ் அனுப்பப்பட்ட கிராம மக்கள் அனைவரும் அபராதம் கட்டித்தான் ஆகவேண்டும். இது தேசிய நெடுஞ் சாலை அமைப்பின் விதிகளின் படிதான் செயல்படு கிறது. என்னால் ஒன்றும் செய்யமுடியாது. இந்த சுங்கச் சாவடியை சேர்த்து 4 சுங்கச்சாவடிகள் இயங்குகின் றன. வேறு எதுவும் என்னிடம் கேட்காதீர்கள்'' என்றார்.
வழக்கறிஞர் ஸ்டாலின், ”"இந்த கியூப் நிறுவனம் ஒப்பந்தம் எடுத்திருக்கும் சிட்டம்பட்டிக்கு அருகில் தான் நான் வசிக்கிறேன். இந்த இரண்டு டோல் கேட்டிற்கும் தூரம் வெறும் 52 கி.மீ.தான். இதைக் கடந்து தினமும் சென்றுவருகிறேன். தினமும் இவர்களுக்கு கப்பம் கட்டித்தான் செல்கிறேன். இங்கு வசூலாகும் தொகை முழுவதுமாக வங்கிக்குப் போவதில்லை. பாதி கணக்குதான் காட்டுகிறார்கள். பெரும்பாலும் ஒன்றிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் அமைச்சர்களின் பினாமிகள்தான் இதை ஏலத்தில் எடுத்து நடத்து கிறார்கள்.’ “இந்தியாவில் மொத்தம் 460-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் உள்ளன. அந்தந்த மாநிலங்களின் தேசிய நெடுஞ்சாலைகளின் தூரத்தைப் பொறுத்தே சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு வசூலிக்கப்படுகின்றன. தமிழகத்தில் 52 சுங்கச்சாவடிகள் உள்ளன. கேரளாவுடன் ஒப்பிட்டால் தமிழகத்தில் 9 சுங்கச்சாவடிகள் மட்டுமே இருக்கவேண்டும். மகாராஷ்டிராவுடன் ஒப்பிட்டால் 15 சுங்கச்சாவடிகள்தான் இருக்கவேண்டும்.
தேசிய அளவில் மொத்தமுள்ள 1,51,019 கி.மீ. நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 29,666 கி.மீ. நீள சாலைகளுக்கு, அதாவது 19.64% சாலைகளுக்கு மட்டுமே சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் 96.43% தேசிய நெடுஞ்சாலைகளுக்குக் கட்டணம் வசூலிப்பது எந்த வகையில் நியாயம்?”
“உதயகுமார் அமைச்சராக இருந்தபோது இதே கோரிக்கையை பலமுறை அவரிடம் வைத்துவிட்டார்கள். அப்போது என்ன செய் தார்? முதல்வர் ஸ்டாலின் கூறியதுபோல், கடந்த 12 வருடங்களாக இந்த சுங்கச்சாவடிகள் எவ்வ ளவு வசூல் செய்திருக்கின்றன என்ற உண்மை யான கணக்கை தணிக்கை செய்து தேசிய நெடுஞ் சாலை செலவிட்டதைவிட அதிகமான தொகை யை வசூல்செய்திருந்தால், அந்த சுங்கச் சாவடி கள் அனைத்தையும் அப்புறப்படுத்த வேண்டும்''’ என்கிறார் வழக்கறிஞர் ஸ்டாலின் சூடாக.
சமீபத்தில் நொய்டாவில் சுங்கச்சாவடி, பொதுமக்களின் தொடர் நீதிமன்ற போராட் டத்தினால் இழுத்து மூடப்பட்டது. அதற்கு முக்கிய காரணம் அவர்கள் முதலீடு செய்த பணத்தைவிட பல மடங்கு சம்பாதித்துவிட்டார்கள் என்று நிரூபிக்கப்பட்டதுதான்.
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது 60,000 கோடி மதிப்பில் கொண்டுவந்த தங்க நாற்கரச் சாலை விரிவடைந்து, இந்தியாவில் 430-க்கு மேற்பட்ட சுங்கச்சாவடிகளாக மாறியுள்ளன. 2017-ல் இதுவரை ரூ.85,000 கோடி வசூலானதாக ஒன்றிய அரசு கணக்குக் காட்டியது உண்மையான கணக்கு வெளிவந்தால் ஒன்றிய அமைச்சர்களின் பினாமி நிறுவனங்களின் மூலம் வசூல் செய்த பணத்தின் மதிப்பு பெரும் அதிர்வலை களை ஏற்படுத்தும் என்பது நிச்சயம் என்கிறார்கள் சுங்கச்சாவடி விவகாரங்களை உற்றுக் கவனித்து வருபவர்கள்.