ண்பாட்டுக்குப் பெயர் பெற்ற தமிழகத்தின் தலை நகரான சென்னையில், மன்மத மசாஜ் ஸ்பா சென்டர்கள் பெருகிவருவது சமூக ஆர் வலர்களைக் கவலைகொள்ள வைத்திருக்கிறது. எதனால் இப்படியொரு நிலைமை?

சென்னை முழுவதுமாக 2,500-க்கும் மேற்பட்ட ஸ்பா மசாஜ் மையங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த ஸ்பாக்களுக்கு லைசன்ஸ் அனுமதி வழங்கவேண்டும் என்றால் அதற்கு, விபசாரத் தடுப்புப் பிரிவான ஏ.வி.எஸ். தரப்பில் இருந்து என்.ஓ.சி. பெறவேண்டும். அதனைத் தொடர்ந்து மாநகராட்சி மண்டல மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மேலும் விசாரித்து அதில் தகுதி உடையவர்களுக்கு மட்டுமே உரிமம் வழங்குவார்கள். அப்படி வழங்கப்படும் லைசன்ஸ் உரிமம், ஒரு வருடத்திற்கு மட்டுமே செல்லும். வருடந்தோறும் ரினீவல் செய்து ஸ்பாவை நடத்திக்கொள்ளளாம். இவைதான் ஸ்பா நடத்துவதற்கான விதிமுறைகள்.

sd

Advertisment

அதன்படி ஸ்பா மசாஜ் சென்டர் நடத்து வதற்காக லைசன்ஸ் பெறுவதற்கு சென்னை மாநகராட்சியிடம் 215 பேர் விண்ணப்பித்ததில், 108 பேர்களுக்கு மட்டுமே லைசன்ஸ் வழங்கப்பட்டுள் ளது. மீதமுள்ள 87 ஸ்பாவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், 20 ஸ்பாக்களின் பரிசீலனை நிலுவையில் உள்ளது. இவை அனைத்தும் 2022ஆம் ஆண்டிற்கான கணக்கு.

2023ஆம் ஆண்டிற்காகப் புதிதாக விண்ணப் பித்தவர்களின் எண்ணிக்கை 91. அதில் 67 சென்டர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டும், 17 சென்டர்களை நிலுவையில் வைத்தும். மீதமுள்ள 7 சென்டர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ளது மாநகராட்சி.

இந்த அடிப்படையில் பார்த்தால் 115 சென்டர்களுக்கே மாநகராட்சி உரிமம் கொடுத்துள்ள நிலையில்... 2 ஆயிரத்திற்கும் மேலாக ஸ்பாக்கள் எப்படி இயங்குகின்றன. இதில் பெரும்பாலானவை பாலியல் சேவையில் ஈடுபட்டுவருவது அதிரவைக்கும் உண்மையாகும். இதனைத் தடுப்பதற்காக சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் மாநகராட்சி, 21 கூடுதல் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என அறிவித்திருந்தது. அதில் சி.சி.டி.வி. வைத்தல், நிலையம் இயங்கும் போது கதவுகள் மூடிய நிலையில் செயல்படக் கூடாது. மிக முக்கியமாக பாலியல் தொடர்பான சேவைகள் தடை விதிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அனைத்துத் தடைகளையும் மீறி பல மசாஜ் மையங்களில், மன்மத விளையாட்டு களும், முக்கல் முனகல் திருவிழாக்களும் மட்டுமே நடந்துவருகின்றன. அங்கே செல்லும் ஆண்கள் கையிருப்புகளை இழந்துவிட்டுத்தான் திரும்புகிறார்கள்.

dd

Advertisment

குறிப்பாக, சென்னை அண்ணா நகரில் உள்ள ஓ.இசட். பர்புல் ஆர்ச் ஸ்பா முறைகேடாக கிளுகிளு சேவையோடு செயல்பட்டு வருகிறது. இவர்கள் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண்களை டூரிஸ்ட் விசாவில் அழைத்து வந்து, இங்கு மசாஜ் சென்டர்களில் பணிபுரிய வைக்கிறார்கள். டூரிஸ்ட்டாக நம் நாட்டுக்கு வருபவர்கள் பணிபுரிவது சட்டத்திற்குப் புறம்பானது. அதையும் தாண்டி தாய் லாந்து மற்றும் வடமாநிலத்து பெண்கள், மசாஜ் சென்டரில் மசாஜ் செய்ய வருபவர்களிடம் மசாஜ் முடித்து எக்ஸ்ட்ராவாக ஹேண்ட் சேக் 2 ஆயிரம், பாடி டூ பாடி 5 ஆயிரம், முழு நிர்வாண விளையாட்டுக்கு 10 ஆயிரம் என சகல சேவைகளும் ரேட் ஃபிக்ஸ் செய்து அனுப்புவார்களாம். இவர்களின் இந்த சேவை பெசன்ட் நகர், நுங்கம்பாக்கம், மேடவாக்கம் உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வருகிறது. இப்படி இயங்கும் இந்த ஸ்பா, மாநகராட்சியின் லைசன்ஸ் இல்லாமலேயே செயல்பட்டு வருகிறது. புதிதாகவும் மேலும் மூன்று கிளைகளை நிறுவவுள்ளார்களாம். இந்த நிறுவனத்தின் உரிமையாளர் யார் என்று பார்த்தால் வில்லோஸ் ஸ்பாவில் மேனேஜராகப் பணிபுரிந்த ஆன்டோ மெக்லின் என்பவராம். அங்கிருந்து வெளியேறி இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார் என்கிறார்கள்.

வில்லோஸ் ஸ்பாவிலே பணிபுரிந்தவரே இந்த அளவில் இருக்கிறாரே, அந்த வில்லோஸ் எப்படி இருக்கும் என்று பார்த்தால், இதே சாயலில் அச்சு பிசகாமலும், ஒரு படி மேலே சென்று 30 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் தாய்லாந்து பெண்கள் ஒரு இரவு முழுவதும் அவர்களின் கட்டுப்பாட்டில் இருப்பார்களாம். இதுபோன்று செயல்படும் ஸ்பாவுக்கு தி.நகர், அடையார், ஈஞ்சம்பாக்கம் என சில இடங்களில் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இவர்களின்... முகப்பேர், அண்ணாநகர், கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு, திருவான்மியூர், நுங்கம்பாக்கம், ஓ.எம்.ஆர். ஆகிய இடங்களில் நடக்கும் ஸ்பாக்களுக்கு அவர்கள் அனுமதி பெறவில்லை. ஆனாலும் இதுநாள் வரையிலும் இவை கிளுகிளுப்பாக இயங்கி வருகின்றன.

இவற்றில் பணிபுரியும் பணியாளர்களை தாய்லாந்து மற்றும் ரஷ்யா, இந்தோனேசியா வில் உள்ள பாலியல் பகுதியில் இருந்தும் அழைத்து வருவார்களாம். இப்படி பதிவுபெற்ற ஸ்பாக்களிலும் கூட பாலியல் சேவை தாராளமாக வழங்கப்பட்டு வருகிறது..

இப்படி அங்கீகாரம் பெற்றுக்கொண்டு தவறான செயல்களில் ஈடுபட்டுவரும் வில்லோஸ் ஸ்பாவின் உரிமையாளர் யார் என்றால், மசாஜ் சென்டர்களில் காவல்துறை அதிகாரிகள் தலை யிடுவதாகவும், அப்படித் தலையிட மாநக ராட்சிக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும் நீதி மன்றத்துக்குச் சென்று, தனக்கு சாதகமான தீர்ப்பைப் பெற்ற ஹேமா ஜுவாலினி என்பவர்தான். அவர் தான் இப்போது விதிமீறல் ஸ்பாக்களை தைரிய மாக நடத்திக்கொண்டிருக்கிறார் என்கிறார்கள்.

இவர்களைத் தட்டிக் கேட்க வேண்டிய மாநகராட்சி அதிகாரிகளும், ஏ.வி.எஸ். பிரிவு போலீஸ் அதிகாரிகளும், இவர்களின் கட்டுப்பாட் டில் இருப்பதால் ஸ்பா அமோகமாக நடந்துவரு கிறது. இவர்கள் மாநகராட்சி மண்டல அதிகாரி களை அடிக்கடி கவனித்துவிடுகிறார்களாம்.

நம்மிடம் மனம் திறந்து பேசிய ஒரு ஸ்பா நிர்வாகி... "சென்னை முழுவதற்கும் இரண்டாகப் பிரித்து இரண்டு இன்ஸ்பெக்டர்கள்தான் கண்காணிக்க இருக்கிறார்கள். கிழக்கு, மேற்கு பகுதிக்கு இன்ஸ்பெக்டர் பிரபு, வடக்கு, தெற்குக்கு சீனிவாசன். இவர்களுக்கு ஏ.சி.யாக ராஜலட்சுமி இருக்கிறார். இவர்களுக்கு இப்படிப்பட்ட ஸ்பாக்கள், தங்க முட்டையிடும் வாத்துகள். ஒரு ஸ்பா வுக்கு மாதம் 50 ஆயிரம் வீதம் வசூலிக்கிறார்கள். அந்த வகையில் இன்ஸ்பெக்டர் ஒவ்வொருவரும் தலா 1 கோடி ரூபாய்வரை வசூலிக்கிறார்கள். இந்த வசூலை செய்துதருபவர்கள் ஏ.வி.எஸ். ரைட்டர் சசி, செல்லமுத்து ஆகியோர்தான். இன்ஸ்பெக்டர் கள்கூட மாறுவதுண்டு. ஆனால் சசி மாறுவதே இல்லை. ஏழு வருடமாக ஒரே காவல்நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். சென்னையின் ஸ்பா மசாஜ் மையங்கள் பற்றிய முழு விவரமும் தெரிந்தவர் அவர். அதேபோல் ஸ்பாக்களுக்கு ரெய்டு வரப்போகிறார்கள் என்றால், முன்னதாகவே தகவல் கொடுத்துவிடுவார்கள். சம்பாதிப்பதில் பெரும்பாதி, அவர்களுக்கே கொட்டி அழவேண்டி யிருக்கிறது''’என்றார்.

மசாஜ் மையங்களில் நடக்கும் சிவப்புத் தொழில் குறித்து, விபச்சாரத் தடுப்பு பிரிவு ஏ.சி ராஜலட்சுமியிடம் நாம் கேட்டபோது, "அப்படி யெல்லாம் எந்த முறைகேடும் நடக்கவில்லை. குற்றம் நடப்பது தெரியவந்தால், நடவடிக்கை எடுக்கப் படும்''’என்றார் கூலாய். எனினும், மசாஜ் ஸ்பாக்களின் மன்மத சேவை... சென்னையின் நிறத்தை சிவப்பாக்கி வருகிறது.