அந்தனூர் கிராமமே அமானுஷ்ய பீதியில் மூழ்கியிருக்கிறது. அங்கு வீசும் காற்றும் வியர்த்துப்போயிருக்கிறது.
வெளிச்சம் குறையத்தொடங்கினாலே அங் குள்ள மக்கள் திகிலில் மிதக்கத் தொடங்கிவிடு கிறார்கள். அங்கே மாலை 6 மணிக்கு மேல் நடமாட்டம் இருப்பதில்லை. அப்படியே வெளியே செல்ல நேர்கிறவர்கள், இரும்புத் துண்டினைக் கையில் வைத்துக்கொண்டு, கடவுள் பெயரைச் சொல்லியபடியே நடக்கிறார்கள். ஒவ்வொரு வீட்டு வாசலிலும் வேப்பிலைகள் சொருகப்பட்டுள்ளன. இரவு வந்துவிட்டால், வீட்டுக்கு வெளியே விளக்குகளை ஏற்றிவைக்கி றார்கள். பல வீடுகளில் கூரையில் மந்திரித்த எலுமிச்சைப் பழங்களும், வேப்பிலை தாயத்துகளும் தகடுகளும் காட்சியளிக்கின்றன. அந்தனூருக்கு என்ன ஆனது?
பேய்கள் அதிகம் நடமாடுகிறதாம். அதன் காலடி ஓசைகளும் சிரிப்புச் சத்தமும், அலறலும் மாறி மாறிக் கேட்கிறதாம். சில நேரம் பெண்களின் அழுகுரல் கேட்கிறதாம். மல்லிகைப்பூ வாடை திடீர் திடீர் என வீசுகிறதாம். அங்கே ஆளாளுக்கு ஒரு பேய்க் கதையைச் சொல்லி நம்மையே வெடவெடக்க வைத்தார்கள்.
காரணம், இந்த கிராமம் பெங்களுரூ டூ பாண் டிச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் திருவண்ணா மலை மாவட்டம் செங்கம் அருகே இருக்கிறது. இங்கே செல்லும் தேசிய நெடுஞ்சாலை மிகவும் ஆபத்தான சாலை என்கிறார்கள் ஊரார். ஏனெனில், இந்த சாலைப்பகுதியில் கடந்த 6 மாதத்திற்குள் 70க்கும் மேலான விபத்துக்கள் நடந்திருக்கிறதாம். இதில் 40க்கும் மேற்பட்டவர்கள் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துச் செத்திருக்கிறார்களாம். .
குறிப்பாக, கடந்த மாதம் 15ஆம் தேதி நடந்த விபத்தில் 8 பேரும், 23ஆம் தேதி நடந்த விபத்தில் 7 பேரும் மரணமடைந்திருக்கிறார்கள். இரண்டு பெரிய விபத்துக்களையும், மரணங்களையும் பார்த்ததும் அந்தனூர் மக்கள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். விபத்து நடக்கும் இடத்திலிருந்து 50 மீட்டர் தொலைவில் தேசிய நெடுஞ்சாலை ஓரத் தில், அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. அங்கு படிக்கும் மாணவர்களையும் பேய், பிசாசு பற்றிய தகவல்கள் பயமுறுத்தியுள்ளன. இதனால் சில ஆசிரியர்கள் எலுமிச்சம் பழம் வாங்கி வந்து சுற்றிப் போட்டு, பிள்ளைகளுக்கு பாதுகாப்புக் கவசம் செய்கிறார் களாம். இதுபற்றி நம்மிடம் பேசிய அக்கிராமத்தை சேர்ந்த சபிதா... "அடிக்கடி விபத்து நடக்க காரணம் பேய், பிசாசுகள்தான்னு சொல்றாங்க. அதனால் வீட்டை விட்டு வெளியே போகவே பயமாயிருக்கு. அதிலும் இரவில் ஆம்பளைங்கள வெளியில போக வேணாம்னு சொல்லித் தடுக்க றோம். சுடுகாட்டு சாம்பல், மை வாங்கி வந்து வீட்ல வச்சி காத்துக் கருப்பு, பேய், பிசாசு அண்டாமல் இருக்கணும்னு சாமிக்கு படை யல் போடறோம். ஆனாலும் எங்க பயம் போனபாடில்லை'' என்றார் பதட்டமாய்.
அரசுப் பேருந்து நடத்துந ரான மணிகண்டன், "இந்த சாலையில் குறிப்பிட்ட இடத்தில் அடிக்கடி விபத்து நடப்பதால் பேய், பிசாசுன்னு மக்கள் பயப்படறாங்க. அதனால் இரவில் மக்கள் அந்த சாலையில் போகவே அச்சப்பட றாங்க''’என்கிறார் கவலையாய்.
இடதுசாரிக் கட்சியைச் சேர்ந்த குமாரோ, "விபத்தில் யாரா வது உயிர்விட்டால் அந்த இடத் தில், அவர்களின் ஆத்மா சாந்தி யடைய படையல் போடுவது இந்தப்பகுதி மக்களின் வழக்கம். ஆனால் விபத்தில் இறக்குறவங்க பலரும் வெளியூர்க்காரங்க என்ப தால், அவர்கள் குடும்பத்தினர் விளக்கேற்ற வர்றதில்லை. அத னால்தான் பேய்கள் நடமாடறதா இங்கே பலரும் பேசிக்கிறாங்க. என்னைப் பொறுத்தவரை இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை. இந்தப் பகுதியில் எல்லோரும் விவசாயிகள். நிலம் பூராவும் சாலைக்கு எதிர்புறம் இருக்கு. தினமும் 100 மாடுகள் சாலையைக் கடந்து காலையும், மாலையும் போய்வரணும். மாணவர்கள் சாலையைக் கடந்து பள்ளிக்கு வரணும். அதனால் நம்மீது வாகனம் மோதிவிடுமோ என எல்லோரும் பயப்படுகிறார்கள். மக்களுக்கு நம்பிக்கையையும் தைரியத்தையும் தரவேண்டிய அதிகாரிகளே தங்கள் சுயநலத்துக்காக பேய், பிசாசுன்னு வதந்தியை பரப்பறாங்க''’என்கிறார் எரிச்சலாக.
இதுபற்றி நம்மிடம் பேசிய வழக்கறிஞர் நாகராஜ், "கிராம வி.ஏ.ஓ.க்கள் பெரும்பாலானவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கிராமங்களில் இருப்பதில்லை. அதேபோல் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள மருத்துவர்கள் இரவு டூட்டியில் இருப்ப தில்லை. ஊருக்கு அருகே இருக்கும் நகரங்களில் தங்கிக்கொண்டு, பகல் நேரத்தில் முன்கூட்டியே வீட்டுக்குக் கிளம்பிப் போய்விடு கிறார்கள். இதுதான் நிலவரம். இதையேதான் கலசப்பாக்கம் வரும் தாசில்தார்களும் செய்கிறார்கள். இங்கு இடமாற்றத்தில் வருபவர்களின் வீடு திருவண்ணாமலையில் இருக்கிறது. அதனால் இங்கு தங்காமல் வீட்டுக்கு சென்றுவிடுகின்றனர். பொதுமக்கள் கேள்வி கேட்டுவிடக்கூடாது என்றே பேய் நடமாடுகிறது, வீட்டுக்குள் பாம்பு வருகிறது எனச் சொல்லி வைத்துள்ளார்கள். சுடுகாட்டுக்கு பக்கத்திலேயே 10 குடும்பம் வசிக்கிறது. அவர்களின் கண்களுக்கு எந்த பேயும் இதுவரை தெரியவில்லையே அது எப்படி? இதெல்லாம் உயரதிகாரிகளுக்கு தெரிந்தும் கண்டு கொள்வதில்லை. முதலில் அதிகமாக நடக்கும் விபத்துக்களைக் குறைக்க, என்ன வழின்னு அதிகாரிகள் ஆராயணும்''’என்றார் காட்டமாய்.
எனினும், பேய் பீதியில் இருந்து அந்தனூர் கிராம மக்கள் இன்னும் மீளவில்லை. இரவு வந்தாலே ஊருக்குள் பீதி நுழைந்துவிடுகிறது.