ஜக்கியை தமிழ்நாட்டின் முதலமைச்சராக்கும் கொடூரத் திட்டம்!

ss

பாலியல் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருக்கும் கோவை ஈஷா யோகா மையம் மற்றும் ஈஷா அறக் கட்டளையின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் குறித்த ஆன்மிகவாதிகளின் ஆதங்கத்தை "ஈஷா லிங்கம் -சுடுகாடு! ஆன்மிகவாதிகள் அதிருப்தி!', "ஈஷா எனும் அபாயக் கூடாரம் -எச்சரிக்கும் திருவடிக்குடில் சுவாமிகள்!' ஆகிய தலைப்பு களில் கடந்த இரண்டு இதழ்களில் வெளியிட்டி ருந்தோம். அதன் தொடர்ச்சியாக... ஆன்மிகவாதிகளின் விழிப்புணர்வுக் கருத்துக்கள் இவ்விதழிலும்...

1500 ஆண்டுகளுக்கு முன் கொங்கு நாட்டில் சைவநெறி தழைத்தோங்க ஆதிசைவ திருமடாலயங்கள் தோற்றுவிக்கப்பட்டன. சிவசமய கலாச்சாரம் வளர வேண்டி கம்பனால் சிவசமய பண்டித குருஸ்வாமிகள் என்ற பட்டம் வழங்கப்பட்டு, ஆதிசைவ திருமடாலயமாகத் திகழ்கிறது, சிவகிரி ஆதீனம் -ஸ்ரீலஸ்ரீ சிவ சமய பண்டித குரு ஸ்வாமிகள் திருமடாலயம். சிவகிரி ஆதீனத்தின் 74-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீஸ்ரீ சிவசமய பண்டித குரு சுவாமிகள்

ss

"சைவ சமய நெறியின்படி, ஆன்மிகப் பாதையில் எந்தவித பிரதிபலனும் எதிர்பாராமல், மக்களுக்குத் தொண்டாற்றுவதுதான் சமயத் தலைவர்களின் நற்செயலாக இருக்கமுடியும். அதேபோல், எம்பெருமான் சிவபெருமானைப் போற்றி வணங்க வேண்டும் என்ற உண்மையான நோக்கம் இருந்தால், ஆதிகால நெறிப்படி நடக்க வேண்டும்; வாழவேண்டும். சிவபெருமான் தோற்றுவித்தது நான்கு வேதங்கள், 28 ஆகமங் கள். அடுத்ததாக தேவாரம், திருவாசகம் இவற்றையெல்லாம் சமயநெறி கூறுகிறது. எந்த வேதத்திலும், சுலோகத்திலும் போற்றிப்பாடும் பூஜை பாடல்களிலும் தியான லிங்கம் என்ற சொல்லே இல்லை. தியான லிங்கம் என்ற சொல்லே வியாபாரத்திற்கான வழியை ஏற்படுத் திக் கொடுத்திருக்கிறது. வாழ்வியல் நெறியுடன் எந்தவிதமான அன்பையும் மக்க

பாலியல் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருக்கும் கோவை ஈஷா யோகா மையம் மற்றும் ஈஷா அறக் கட்டளையின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் குறித்த ஆன்மிகவாதிகளின் ஆதங்கத்தை "ஈஷா லிங்கம் -சுடுகாடு! ஆன்மிகவாதிகள் அதிருப்தி!', "ஈஷா எனும் அபாயக் கூடாரம் -எச்சரிக்கும் திருவடிக்குடில் சுவாமிகள்!' ஆகிய தலைப்பு களில் கடந்த இரண்டு இதழ்களில் வெளியிட்டி ருந்தோம். அதன் தொடர்ச்சியாக... ஆன்மிகவாதிகளின் விழிப்புணர்வுக் கருத்துக்கள் இவ்விதழிலும்...

1500 ஆண்டுகளுக்கு முன் கொங்கு நாட்டில் சைவநெறி தழைத்தோங்க ஆதிசைவ திருமடாலயங்கள் தோற்றுவிக்கப்பட்டன. சிவசமய கலாச்சாரம் வளர வேண்டி கம்பனால் சிவசமய பண்டித குருஸ்வாமிகள் என்ற பட்டம் வழங்கப்பட்டு, ஆதிசைவ திருமடாலயமாகத் திகழ்கிறது, சிவகிரி ஆதீனம் -ஸ்ரீலஸ்ரீ சிவ சமய பண்டித குரு ஸ்வாமிகள் திருமடாலயம். சிவகிரி ஆதீனத்தின் 74-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீஸ்ரீ சிவசமய பண்டித குரு சுவாமிகள்

ss

"சைவ சமய நெறியின்படி, ஆன்மிகப் பாதையில் எந்தவித பிரதிபலனும் எதிர்பாராமல், மக்களுக்குத் தொண்டாற்றுவதுதான் சமயத் தலைவர்களின் நற்செயலாக இருக்கமுடியும். அதேபோல், எம்பெருமான் சிவபெருமானைப் போற்றி வணங்க வேண்டும் என்ற உண்மையான நோக்கம் இருந்தால், ஆதிகால நெறிப்படி நடக்க வேண்டும்; வாழவேண்டும். சிவபெருமான் தோற்றுவித்தது நான்கு வேதங்கள், 28 ஆகமங் கள். அடுத்ததாக தேவாரம், திருவாசகம் இவற்றையெல்லாம் சமயநெறி கூறுகிறது. எந்த வேதத்திலும், சுலோகத்திலும் போற்றிப்பாடும் பூஜை பாடல்களிலும் தியான லிங்கம் என்ற சொல்லே இல்லை. தியான லிங்கம் என்ற சொல்லே வியாபாரத்திற்கான வழியை ஏற்படுத் திக் கொடுத்திருக்கிறது. வாழ்வியல் நெறியுடன் எந்தவிதமான அன்பையும் மக்களிடம் செலுத்த லாம். ஆனால், அது வணிகரீதியாக இருக்கக் கூடாது. ஈஷா யோகா மையம் முழுமையான வணிகம் செய்கிறது. அது கார்ப்பரேட் கம்பெனியாகவே இருக்கிறது.

தியான லிங்க வழிபாடு மட்டுமல்ல.. உயிரற்ற உடல்களை எரியூட்டுவது ஆன்மிகம் சார்ந்த, கடவுளை வணங்கக்கூடிய இடத்தில் எங்குமே நடப்பதில்லை; நடத்துவதும் கூடாது. அதே போல், சமயநெறியைச் சொல்லி, ஆன்மிக ரீதியாக உடல் ஆரோக்கியம் என்றெல்லாம் பிரச்சாரம் செய்து, அதற்கென ஒரு அமைப்பு வைத்து, அந்த அமைப்பு சுடுகாடு நடத்துவது சமயநெறிகளுக்கு முற்றிலும் விரோதமானது; ஏற்புடையது அல்ல. மக்களுக்கு நல்ல பண்புகளை, நல்ல குணத்தை வளர்க்கக்கூடிய, நல்வாழ்க்கையைக் கொடுக்கவேண்டிய, ஏற்படுத்தித் தரவேண்டிய ஆன்மிகத்தை, அரசியலாகவும் வணிகமாகவும் கொண்டுசெல்வதை, எக்காரணம் கொண்டும் ஏற்கமுடியாது. மக்களும் ஏற்கக்கூடாது''’ என்றார் உறுதியான குரலில்.

ss

பாண்டிய மன்னர்களுக்கு செங்கோல் வழங்கக் கூடிய உரிமையைப் பெற்றிருந்ததால், செங்கோல் ஆதினம் எனப் பெயர் பெற்ற இவ்வாதீனம் பழமை யானது. இதன் 103வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சார்ய சுவாமி களின் சைவ சித்தாந்த ரத்தினம் வள்ளிநாயகம், "சிவன் ஒருவனே பல இடங்களில் பல பெயர் களில் இருக்கிறான். சிவன் இல்லாத இடம் இல்லை என்பதால், இதைக் கணக்கில் வைத்து, பிறந்த குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதுபோல் லிங்கத் துக்குப் பெயர் சூட்டு கிறார்கள் ஒவ்வொரு வரும் வெவ்வேறு முறை யைக் கடைப்பிடித்து சிவலிங்க வழிபாடு நடத்துவது ஆகம விதிகளுக்கு எதிரானது. உருவம் என்றால் நிலையான உருவம் கொண்டது. அருவம் என்றால் உருவம் இல்லாதது. இந்த இரண்டுமாய், அருவுருவமாய் இருப்பவர் தான் சிவன். ஆனால், தியான லிங்கம் என்று கவர்ச்சியாகப் பெயர் வைத்தால், மக்களை ஈர்க்கமுடியும் என்று தங்களின் வசதி வாய்ப்புக்காகப் புதுப் பெயர் சூட்டியிருக்கிறார்கள். அதற்கு லிங்கத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இதற்கெல் லாம் ஏதாவது ஒரு காரணமும் சொல்வார்கள். கடவுளுக் கும் இதற்கும் கொஞ்சம்கூட சம்பந்தம் இருக்காது. இறைவனை வழிபடுவதற்கு பல வழிகள் உண்டு. அதற்காக, கல்லை விட்டு எறிந்து வழிபடக்கூடாது''’ என்றார் அழுத்தத்துடன்.

தெய்வத் தமிழ்ப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் மூலம் அவ்வமைப்பைச் சேர்ந்தவர் கள் நம்மிடம் பேசினார்கள்.

"மூன்று ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டுக் கோவில்களுக்குள் புகுந்து ஆர்ப்பாட்டத்தை நடத்தத் தூண்டிவிட்டார் ஜக்கி. அந்த அளவுக்கு அவருக்குத் துணிவு வந்துவிட்டது. இந்து சமய அறநிலையத்துறை உருவாகி 64 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதைக் கலைத்துவிட்டு, பக்தர்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்கிறார். கார்ப்பரேட் ஆளான ஜக்கி வாசுதேவ், வர்ணாசிரமத்தைத் தூக்கிப் பிடிக்கின்றவர்களால், தமிழர்களின் பண்பாட்டு அடை யாளம் உள்ள கோவில்களைக் கைப்பற்றவேண்டும் என்ற சூழ்ச்சித் திட்டத்தை ஈஷா மூலம் நடத்தினார். இந்து அறநிலை யத்துறையைக் கலைக்கவேண்டும் என்று ஜக்கி முன்மொழிகிறார், அதை காஞ்சி சங்கராச்சாரியார் வழிமொழிகிறார் என்றால், உத்தரப்பிரதேச யோகி ஆதித்யநாத் போல, தமிழ்நாட்டில் தன்னை ஜக்கி வடிவமைத்துக் கொள்ளத் துடிக்கிறார் என்றுதான் தோன்று கிறது.

பாரதிய ஜனதா கட்சி, அந்த வாய்ப்பை அவருக்கு வழங்கி யிருக்கிறதோ என்ற சந்தேகம், சைவ சமயத்தவரான எங்களைப் போன்றவர்கள் மனதில் எழு கிறது. இப்படி கொல்லைப்புறம் வழியாக பா.ஜ.க. ஆதரவுடன் முதலமைச்சராக வேண்டும் என்ற கொடூர திட்டமும் ஜக்கி வாசுதேவுக்கு இருக்கிறது''’என்றனர்.

சிவக்கொழுந்து தேசிகர் என்னும் சிவாக்கிர யோகியால் தோற்றுவிக்கப்பட்ட சூரியனார் கோவில் ஆதீனம் உள்ளிட்ட மூன்று ஆதீனங்கள், ஜக்கி வாசுதேவ் குறித்த கருத்துகளை நம்மிடம் பகிர்ந்தனர்.

ss

ஜக்கி உருவாக்கி நடத்திவரும் பீடமாகட்டும், தியானக் கூடமாகட்டும், எல்லாமே தமிழர் பண்பாட்டுக்கு முரணானது. தமிழ்நாட்டில் எத்தனையோ வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆலயங்களும், ஆச்சரிய மிக்க சிற்பங்களும் வடிவமைக்கப் பட்டு, அவை ஆன்மிகமாகவும் கலையாகவும் பார்க்கப்பட்டு வருகிறது. தியான லிங்கம் என்ற பெயரில் ஜக்கி ஒரு லிங்கம் அமைத் திருக்கிறார். அங்கு நந்தி இருக்கிறது. சிவ ஆகம நெறிப்படி எழுப்பாமல், அதனைக் கோவில் என்கிறார். அதுபோலவே ஆதியோகி என்ற பெயரில் ஒரு சிலையை அமைத் திருக்கிறார். அது சிவன் வடிவமாகவோ, உருவமாகவோ இல்லை. ஏதோ ஒரு தலைவரின் சிலையைப் போல உருவாக்கிய அச்சிலையை, பிரதமர் மோடி திறந்துவைக்கிறார். இதிலிருந்தே ஜக்கியின் நோக்கம் எங்கிருந்து கிளம்பியது என்பதைப் புரிந்து கொள்ளமுடியும். அந்தச் சிலை ஜக்கி யின் உருவம் போலவே இருக்கிறது. எல்லாமே கார்ப்பரேட் ரேஞ்சில் தான். வருங்காலத்தில் தமிழர் நாகரிகத்தைக் குழி தோண்டிப் புதைக்கும் வகையில்தான், அச்சிலை அமைந்திருக்கிறது. ஈஷா மையத்தை அமைப்பதற்கு, உலகம் தோன்றிய காலத்திலிருந்து உள்ள காட்டை அழித்து, அங்கிருந்த கால்நடைகளை, வனவிலங்குகளை அழித்து, மலைவாழ் மக்களின் இடங்களைப் பறித்து, பீடங்களை, கட்டிடங்களை உருவாக்கி யிருப்பதாகவே தெரிகிறது.

இதுகுறித்து, கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை அனுப்பியது. அந்த ஆட்சி யாளர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத் திருந்தால், முளையிலேயே கிள்ளியிருக்க முடியும். அது நடந்திருந்தால், இவ்வளவு பெரிய குற்றங்கள் நடக்கும் அளவுக்குப் போயிருக்காது. நீதிமன்றம் தலையிடும் நிலையும் வந்திருக்காது. தி.மு.க. அரசு இதனைக் கவனத்தில்கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுகுறித்து விரைவில் ஒரு முடிவெடுத்து, அறிக்கை வெளியிட விருக்கிறோம்''’என்றனர். ஜக்கியின் போலி ஆன்மிக சாம்ராஜ்ஜியத்துக்கு ஆன்மிக வாதிகள் விரைவில் ஒரு முடிவு கட்டிவிடுவார்கள்போல் தெரிகிறது.

-ராம்கி, ஜீவாதங்கவேல், செல்வகுமார், மணிகண்டன்

______________

ஜக்கியின் நேர்த்தியான நடிப்பு!

ஒவ்வொரு ஆண்டும் சிவராத்திரியின்போது பார்வையாளர்கள் மத்தியில் ஜக்கி ஆடும் ரேம்ப் டான்ஸ், உணர்ச்சி பொங்கும் நடனம் என்று ஈஷா யோகா மையத்தினரால் வர்ணிக்கப்படுகிறது. ஆடும்போது ஜக்கி வைப்பது சின்னச் சின்ன ஸ்டெப்ஸ் என்றாலும் மற்றவர்களி லிருந்து மிகவும் மாறுபட்டதாகவும், மிதமான உணர்வுகளு டன் அரைக்கண்களை மூடிய நிலையில் இருக்கும் பார்வை யாளர்களை ஈர்க்கக்கூடியதாகவும் இருக்கும். இதெல்லாம் இசையின் போக்கில் ஜக்கி ஆடுவதுபோல் பார்வையாளர் களுக்குத் தெரியும். உண்மை அதுவல்ல. அந்த சின்னச் சின்ன ஸ்டெப்ஸ்களுக்கு பெரிய அளவில் வெளிநாட்டி னரால் ஜக்கி வாசுதேவ் முன்கூட்டியே பயிற்சி பெற்றிருப் பார். பேட்டியின்போதோ, முக்கியமானவர்களைச் சந்திக்கும்போதோ, ஜக்கியின் கண்ணசைவுகள், அவர் பார்க்கும் விதம் எதிரில் உள்ளவர்களுக்கு ஒருவித ஈர்ப்பை ஏற்படுத்திவிடும். இதற்கும்கூட, கேரள கலை விற்பன்னர் ஒருவரிடம் ஜக்கி பிரத்யேக பயிற்சி பெற்றிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

ஆக, ஜக்கியின் ஒவ்வொரு அசைவும், ஆன்மிகப் பேச்சும், திட்டமிடலுடன் நடத்தப்படும், நேர்த்தியான நடிப்பினை வெளிப்படுத்தும் நாடகமாகவே இருக்கிறது.

nkn301124
இதையும் படியுங்கள்
Subscribe