வேலூர் மாவட்ட ஊராட்சிக்குழு அலுவல கத்தில், மாவட்ட கல்வி நிலைக்குழு, போக்குவரத்து நிலைக்குழு கவுன்சிலர்கள் கூட்டம் ஏப்ரல் 8-ஆம் தேதி மாவட்ட ஊராட்சிக்குழு பெருந்தலைவர் பாபு தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், வேலூர் மாவட்டத்திலுள்ள கிராமப் பள்ளிகள் குறித்தும், கிராமங்களுக்கு அரசுப் பேருந்துகள் வராதது குறித்தும், கவுன்சிலர்கள் தங்களது அதிருப்தியை அதிகாரிகளுக்கு எதிராக வெளிப்படுத்தியுள்ளார்கள்.

cc

மாவட்டக்குழுக் கூட்டத்தில் நடந்தது குறித்து, தி.மு.க. மாவட்ட கவுன்சிலர் ஆனந்தியின் கணவரும், தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான முருகானந்தத்திடம் கேட்டபோது, "வேலூர் மாவட்டம் கல்வியில் மிகவும் பின்தங்கிய மாவட் டம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தாக்கத்தால் மக்களின் வாழ்க்கைத்தரம் மாறியுள் ளது. நடப்பு கல்வியாண்டில் அதிகமான பிள்ளை கள் அரசுப் பள்ளியில் சேர்ந்துள்ளார்கள். இதனை கவனத்தில் கொண்டே கல்வித்துறைக்கென 36 ஆயிரம் கோடி ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது. தற்போது கிராமப்புறப் பள்ளிகளில் போதிய ஆசிரியர்களே இல்லை. பொதுத்தேர்வு நடைபெற இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் ஆசிரியர் இல்லாத பள்ளிகளில் எப்படி தேர்வு எழுதுவார்கள்? அதேபோல் கிராமப்புறங்களுக்கான அரசு பேருந்து களை பல ரூட்களில் போக்குவரத்து கழகம் நிறுத்தி விட்டது. அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம், காட்பாடி தொகுதிகள் கிராமங்கள் நிறைந்தது. பேருந்துகள் இல்லாமல் பெரும் சிரமத்தைச் சந்திப்பதால் அதி காரிகளிடம் காரணம் கேட்டால், நட்டத்துக்கு பேருந்துகளை இயக்க முடியாது என்கிறார்கள். இதுகுறித்து கூட்டத்தில் பேசப்பட்டது'' என்றார்.

மாவட்ட ஊராட்சிக்குழு பெருந் தலைவர் பாபு, "ஆசிரியர் பணியிட மாறுதலால் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. கிராமப்புறங்களில் இருந்து நகர்ப்பகுதிக்கு நிறைய பிள்ளைகள் படிக்க வருகிறார்கள், அவர்கள் பள்ளிக்கு வரும் நேரம், வீட்டுக்கு செல் லும் நேரத்தை கணக்கிட்டு பேருந்து களை இயக்கவேண்டு'' என்றார். இதுகுறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல்பாண்டியனிடம் கேட்டபோது, "கவுன்சில் கூட்டத்தில் பேசிய விவரங்கள் என் கவனத்துக்கு வந்தவுடன் குறைகளை நிவர்த்தி செய்துதருகிறேன். மக்களின் குறைகளைத் தீர்க்கவே நாங்கள் இருக்கிறோம்'' என்றார்.

பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என வேலூர் மாவட்டத்திலுள்ள ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் பலரும் குற்றம்சாட்டு கின்றனர். ஆசிரியர் சங்கங்களின் வேண்டுகோளுக் கிணங்க பொது மாறுதலை தேர்வு சமயத்தில் நடத்தி ஆசிரியர்களுக்கு நல்லது செய்த அரசு, மாணவர்களுக்கு தீங்கிழைத்துவிட்டது என முகநூலில் விமர்சித்துள்ளார் கவிஞரும், கள்ளக் குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த மேல்நிலைப்பள்ளி ஆசிரியருமான ஸ்டாலின். கல்வியில் பின்தங்கியுள்ள வட மாவட்டங்களை முன்னேற்ற முதல்வர் ஸ்டாலின் தனிக்கவனம் எடுக்கவேண்டும் என்கிற குரல்கள் கல்வியாளர்களிடமிருந்து வெளிப்படு கின்றன.

Advertisment