ராங்கால் : குற்றவாளிகள் தப்பமுடியாது! -ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு ஆறுதல் சொன்ன ஸ்டாலின்! செல்வப்பெருந்தகை ரெக்கார்டுகளை தூசு தட்டும் டெல்லி! -கொளுத்திப் போட்ட பாஜக நிர்வாகி!

ff

"ஹலோ தலைவரே, தமிழ்நாட்டில் எதிர்பாராமல் அரங்கேறிய சில விரும்பத் தகாத சம்பவங்களை, தி.மு.க. அரசு சரியாக மேனேஜ் செய்திருக்குன்னு பொதுமக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடறாங்க.''”

"ஆமாம்பா, ஆம்ஸ்ட்ராங் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல முதல்வர் ஸ்டாலின், அவர் வீட்டிற்கே நேரில் சென்றிருக் கிறாரே?''”

rr

"உண்மைதாங்க தலைவரே, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலையால் அவரது வடசென்னை பகுதியே பதட்டத்தில் இருந்தது. அந்த நிலையிலும் அவரது இல்லத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று, அவர் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்திய தோடு, அவர் மனைவி பொற்கொடியிடம் ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவிச் சிருக்கார். அப்போது கதறியழுத பொற்கொடி யிடம், "அழாதீங்க குற்றவாளிகள் எவரும் தப்பமுடியாது. பாரபட்சமின்றி கடுமையாக நடவடிக்கை எடுக்கச் சொல்லி உத்தரவிட்டிருக் கேன்' என்றாராம் ஸ்டாலின். சட்டம் ஒழுங்கு பற்றி உயரதிகாரிகளுடன் கோட்டையில் நடக்க இருந்த ஆலோசனைக் கூட்டத்தைக் கூட ஒத்திவைத்துவிட்டு, அவர் ஆம்ஸ்ட்ராங் வீட்டிற்குச் சென்றிருக்கிறார். ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலை விவகாரத்தில் தி.மு.க. தரப்பு மீது புழுதி வாரித் தூற்றிய பலரும், முதல்வரின் விசிட்டால் கப்சிப் ஆகிவிட்டார்களாம்.''”

"அந்தப் படுகொலை விவகாரத்தில், பா.ஜ.க.வின் மாநில நிர்வாகி, காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை வம்புக்கு இழுத்திருந் தாரே?''”

"ஆமாங்க தலைவரே, ஆம்ஸ்ட்ராங்கிற்கு அஞ்சலி செலுத்தச் சென்ற அந்த மாநில பா.ஜ.க. நிர்வாகி, ‘காங்கிரஸ் செல்வப்பெருந்தகை குற்றப்பின்னணி உள்ளவர்னு விமர்சித்தார். இதற்கு பதிலடி கொடுத்த செல்வப்பெருந்தகை, "துக்கவீட்டில் என்ன பேசவேண்டும் என்றுகூட அந்த நபருக்குத் தெரியவில்லை. குற்றப்பின்னணி உள்ள நூற்றுக்கணக்கானோருக்கு பா.ஜ.க.வில் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த நபர் வேலை பார்த்த கர்நாடகாவில் கல்புர்கி, கௌரி லங்கேஷ் உள்ளிட்ட எழுத்தாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அது குறித்து கர்நாடக அரசிடம் அறிக்கை கேட்கவிருக் கிறோம் என்றெல்லாம் பதிலடி கொடுத்தார். மேலும், அந்த பா.ஜ.க. ப

"ஹலோ தலைவரே, தமிழ்நாட்டில் எதிர்பாராமல் அரங்கேறிய சில விரும்பத் தகாத சம்பவங்களை, தி.மு.க. அரசு சரியாக மேனேஜ் செய்திருக்குன்னு பொதுமக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடறாங்க.''”

"ஆமாம்பா, ஆம்ஸ்ட்ராங் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல முதல்வர் ஸ்டாலின், அவர் வீட்டிற்கே நேரில் சென்றிருக் கிறாரே?''”

rr

"உண்மைதாங்க தலைவரே, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலையால் அவரது வடசென்னை பகுதியே பதட்டத்தில் இருந்தது. அந்த நிலையிலும் அவரது இல்லத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று, அவர் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்திய தோடு, அவர் மனைவி பொற்கொடியிடம் ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவிச் சிருக்கார். அப்போது கதறியழுத பொற்கொடி யிடம், "அழாதீங்க குற்றவாளிகள் எவரும் தப்பமுடியாது. பாரபட்சமின்றி கடுமையாக நடவடிக்கை எடுக்கச் சொல்லி உத்தரவிட்டிருக் கேன்' என்றாராம் ஸ்டாலின். சட்டம் ஒழுங்கு பற்றி உயரதிகாரிகளுடன் கோட்டையில் நடக்க இருந்த ஆலோசனைக் கூட்டத்தைக் கூட ஒத்திவைத்துவிட்டு, அவர் ஆம்ஸ்ட்ராங் வீட்டிற்குச் சென்றிருக்கிறார். ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலை விவகாரத்தில் தி.மு.க. தரப்பு மீது புழுதி வாரித் தூற்றிய பலரும், முதல்வரின் விசிட்டால் கப்சிப் ஆகிவிட்டார்களாம்.''”

"அந்தப் படுகொலை விவகாரத்தில், பா.ஜ.க.வின் மாநில நிர்வாகி, காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை வம்புக்கு இழுத்திருந் தாரே?''”

"ஆமாங்க தலைவரே, ஆம்ஸ்ட்ராங்கிற்கு அஞ்சலி செலுத்தச் சென்ற அந்த மாநில பா.ஜ.க. நிர்வாகி, ‘காங்கிரஸ் செல்வப்பெருந்தகை குற்றப்பின்னணி உள்ளவர்னு விமர்சித்தார். இதற்கு பதிலடி கொடுத்த செல்வப்பெருந்தகை, "துக்கவீட்டில் என்ன பேசவேண்டும் என்றுகூட அந்த நபருக்குத் தெரியவில்லை. குற்றப்பின்னணி உள்ள நூற்றுக்கணக்கானோருக்கு பா.ஜ.க.வில் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த நபர் வேலை பார்த்த கர்நாடகாவில் கல்புர்கி, கௌரி லங்கேஷ் உள்ளிட்ட எழுத்தாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அது குறித்து கர்நாடக அரசிடம் அறிக்கை கேட்கவிருக் கிறோம் என்றெல்லாம் பதிலடி கொடுத்தார். மேலும், அந்த பா.ஜ.க. பேர்வழி மீது வழக்கு தொடரப்படும் என்றும் தெரிவித்தார்.''”

"ஆமாப்பா.. நானும் பார்த்தேன்.''”

"இதனால் ஆவேசமான அந்த பா.ஜ.க. நிர்வாகி, செல்வப்பெருந்தகை மீது என்னென்ன வழக்குகள் இருந்ததுன்னு ஒரு பெரிய க்ரைம் பட்டியலையே ரிலீஸ் செய்திருக்கிறார். இது ஒட்டுமொத்த காங்கிரஸ் தரப்பையும் அப்செட் ஆக்கியிருக்கு. இந்த நிலையில், அந்த பா.ஜ.க. நிர்வாகி மீது, சென்னை போலீஸ் கமிஷனர் அருணை சந்தித்து நீண்ட புகாரைக் கொடுக்க இருக்கிறார் செல்வப்பெருந்தகை. அதில் அந்த பா.ஜ.க. நிர்வாகி பற்றிய பல வில்லங்க விவகாரங்கள் இருக்குமாம். அதோடு அந்த பா.ஜ.க. நிர்வாகியை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யவேண்டும் என்றும் அந்தப் புகாரில் கோரிக்கை வைக்கவிருக்கிறாராம் செல்வப்பெருந்தகை. இந்த புகார் மனு மீது, எஃப்.ஐ.ஆர். போடப்பட்டால் பா.ஜ.க. -காங்கிரஸ் கட்சிகளிடையே பூகம்பம் வெடிக்கும்னு இருதரப்பிலும் சொல்லப் படுகிறது.''”

ff

"செல்வப்பெருந்தகை தரப்பின் இந்தப் புகாரை ஒரு ஸ்பெஷல் டீம் தயாரிக்குதுன்னு சொல்றாங்களே!''”

"தனக்கு எதிராக பா.ஜ.க. வரிந்து கட்டும் இப்படிப்பட்ட சூழலில், தமிழக பா.ஜ.க.வின் அந்த நிர்வாகிக்கு எதிராகத் தயாரிக்கும் புகார், ரொம்பவும் பவர்ஃபுல்லாக இருக்கவேண்டும் என்று நினைத்த செல்வப்பெருந்தகை, அண்மையில் காங்கிரஸுக்குத் தன்னால் அழைத்து வரப்பட்டிருக்கும் ஓய்வு பெற்ற நீதிபதியையும், காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர் பிரிவுத் தலைவரையும் இந்த வேலையில் ஈடுபடுத்தியிருக்காராம். இந்த இருவரும் இணைந்துதான் பா.ஜ.க.வின் அந்த நிர்வாகிக்கு எதிரான புகார் மனுவை, அழுத்தமாகத் தயாரிக்கிறார்கள். மேலும், பா.ஜ.க. தரப்பு, தனக்கு எதிராக ஏதேனும் சட்ட நடவடிக்கை எடுத்தால் அதனை எப்படி எதிர்கொள்வது? எந்த மாதிரி ரியாக்சனைக் காட்டுவது? என்பது குறித்தும் இந்த இருவரிடமும் செல்வப் பெருந்தகை ஆலோசித்தாராம். இந்த நிலையில், அந்த வழக்கறிஞர் பிரிவுத் தலைவருக்கு, அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் பதவியை வாங்கித் தருவதாக, செல்வப்பெருந்தகை உறுதி கொடுத்திருக்கிறாராம்.''”

"அதேசமயம் செல்வப்பெருந்தகைக்கு எதிரான புகார்களை ஒன்றிய அரசின் உள் துறையும் கையில் எடுக்குதுன்னு சொல்றாங் களே?''”

"அதுவும் உண்மைதாங்க தலைவரே, செல்வப்பெருந்தகைக்கு எதிராக கடந்த காலங்களில் பதியப்பட்ட வழக்குகளின் நிலை குறித்தெல்லாம், அந்த மாநில பா.ஜ.க. நிர்வாகி, முழுமையாகத் தகவல்களைத் திரட்டியிருக் கிறாராம். இவற்றை எல்லாம் ஒரு பெரிய ரிப்போர்ட்டாகத் தயாரித்து, அதற்கான ஆவணங்களையும் இணைத்து, அவர் ஒன்றிய உள்துறைக்கு அனுப்பி வைத்திருக்கிறார் என்கிறார்கள். இதைத்தான் இப்போது ஒன்றிய அரசின் உள்துறை கையில் எடுக்குதாம். குறிப்பாக ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்கு பற்றியும் மாநில நிர்வாகி அடிக் கோடிட்டு அனுப்பியதால், அதையும் ஆழ்ந்து ஆராய்கிறார்களாம். அது மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கு செல்வப்பெருந்தகை அடிக்கடி செல்வது ஏன்? அதிலும் லண்டனுக்கு அவர் அடிக்கடி பறப்பது எதனால்? வெளிநாடு களில் அவர் செய்துவரும் பிசினஸ்கள் என்ன மாதிரியானது? என்பது குறித்த விபரங்களையும் சேகரிக்கிறதாம் ஒன்றிய உள்துறை.''”

"தமிழக பா.ஜ.க. தலைவர் பொறுப்பை ஏற்க, அக்கட்சியில் இருக்கும் சீனியர்கள் பலரும் தயங்குகிறார்களாமே?''”

"ஆமாங்க தலைவரே, இப்ப இருக்கும் மாநில பா.ஜ.க. நிர்வாகி, இங்கு தனக்கு எதிரான விவகாரங்கள் விசுவரூபம் எடுப்பதால், 6 மாத காலம் லண்டனில் தங்கவிருக்கிறார். அதனால் காலியாகும் தமிழக பா.ஜ.க.வின் தலைவர் பொறுப்பில் அடுத்து யார் உட்காரப் போகிறார்கள்? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. இந்த நிலையில் பா.ஜ.க.வின் மாநிலப் பொறுப்பை ஏற்க, அக்கட்சியின் சீனியர்கள் பலரும் தயங்குகிறார்களாம். காரணம், அந்தப் பொறுப்பில் இருக்கும் நிர்வாகி, தன் தெனாவெட்டுப் போக்கால் கட்சியின் எதிர்காலத்தை ஜீரோ பாயிண்டில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். அதனால், தலைவர் பொறுப்பு எங்களுக்கு வேண்டவே வேண்டாம் என்றபடி பலரும் ஓட்டம் பிடிக்கிறார்களாம்.''”

"என்னப்பா, அந்தக் கட்சிக்கு வந்த சோதனை?''”

"ஆமாங்க தலைவரே, மற்ற கட்சிகளில் பதவி என்றால் போட்டியும் முட்டல், மோதலும் அதிகரிக்கும் நேரத்தில், பா.ஜ.க.வுக்கு மட்டும் இப்படி ஒரு நிலை ஏற்பட்டிருக்கு. இந்த சூழலில் ஒன்றிய உளவுத்துறை அமைச்சரான அமித்ஷா, நயினார் நாகேந்திரனைத் தொடர்புகொண்டு, கட்சியின் தமிழகப் பொறுப்பை ஏற்கிறீர் களா? என்று கேட்டிருக்கிறார். அதற்கு நயினாரோ, ’"ஐயோ என்னை விட்டுவிடுங்கள். என் வயது ஓடியாடி வேலை செய்யத் தடையாக இருக்கிறது'’ என்று மறுத்துவிட் டாராம். மேலும் "என் னைப் பண்ணையார் என்று அழைக்கிறார் கள். ஆனால் என்னி டம் சொல்லிக் கொள் ளும்படி சொத்துக்கள் இல்லை' என்றும் ஆதங்கப்பட்டாராம். அதற்குக் காரணம், இந்த நாடாளுமன்றத் தேர்தலுக்காக அவர் 200 "சி'’வரை செலவு செய் திருக்கிறாராம். அது அவரது பொருளாதாரத்தை அதிகம் பாதித்திருக்கிறதாம். ஆனால் கட்சியின் சீனியர்கள் சிலரோ, நயினார் தி.மு.க.வுக்குச் செல்ல ஆசைப்படுகிறார் என்கிறார்கள்.''”

ff

"சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்க்கும் முயற்சி நடந்துகொண்டே இருக்கிறதே?''”

"ஆமாங்க தலைவரே, சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்க்கவேண்டும் என்கிற பஞ்சாயத்து அங்கே வேலுமணி உள்ளிட்ட சிலரால் விறுவிறுப்பாக நடந்துகொண்டி ருக்கிறது. சசிகலாவோ பழையபடி தனது சகோதரர் திவாகரனின் ரிமோட்டுக்குள் வந்திருக்கிறாராம். அவரும் எப்படியாவது சசிகலாவை அ.தி.மு.க.வுக்குள் ஒரு பவர்ஃபுல் பதவியில் அமரவைத்துவிடவேண்டும் என்று துடிக்கிறாராம். அ.தி.மு.க.வோடு தங்கள் உறவைப் புதுப்பித்துவரும் பா.ஜ.க. மேலிடமும் சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்த்துக் கொண்டு, அவரை கட்சியின் அவைத் தலைவராக உட்கார வையுங்கள் என்று எடப்பாடியிடம் கேட்டுக்கொண்டிருக் கிறதாம். ஆனால் அதை எடப்பாடி ஏற்கமறுத்து வருகிறாராம். 19ஆம் தேதிவரை மாவட்ட ரீதியான தேர்தல் தொடர்பான ஆய்வுக் கூட்டங்களை நடத்திவரும் எடப்பாடி, சசி விவகாரத்தில் அதிக கவனமாக இருக்கிறா ராம். சசிகலாவை வெறுக்கும் தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட வர்கள் மட்டும்தான், எடப்பாடியின் சசி குறித்த கருத்தை தீவிரமாக ஆதரிக் கிறார்களாம்.''”

"காவல்துறையில் அதிரடி மாற்றங்கள் நடந்திருக்குதே?''”

"உண்மைதாங்க தலைவரே, அண்மை யில் தமிழகம் கண்ட அதிர்ச்சி சம்பவங்களுக்குப் பிறகு, காவல்துறையின் சில முக்கிய அதிகாரிகள் மாற்றப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக, கடலோரக் காவல்படையில் இருந்த சஞ்சீவ் மிட்டல், டி.ஜி.பி.யின் பரிந்துரையில் சைபர் க்ரைம் பிரிவிற்கு மாற்றப்பட்டிருக்கிறார். அதேநேரம் தாம்பரம் கமிஷனரான அமல்ராஜ், தவறான ஒரு பா.ஜ.க. நபருடன் ஒட்டி உறவாடியதால் , அவரை மதுவிலக்குத் துறைக்கு மாற்றிவிட்டு, ஆருத்ரா விவகாரத்தை மிகவும் நேர்மையாகக் கையாண்ட அபின்தினேஷ் மோடக்கை தாம்பரம் கமிஷனராக உட்கார வைத்திருக்கிறார்கள்.''”

"சரிப்பா''”

"கறார் அதிகாரியான அஸ்ராகார்க்கை வடக்கு மண்டல ஐ.ஜி.யாக மாற்றியது மட்டும் சற்று சுணக்க நிலையாகக் கருதப்படுகிறது. வடசென்னை கமிஷனராக இருந்த அவருக்கு பதில் மதுரையில் இருந்த நரேந்திர நாயரைக் கொண்டுவந்து அமர்த்தியிருக்கிறார்கள். எப்போதும் பதட்டமாகவே இருக்கும் வடசென்னையை இவர் எப்படி மேனேஜ் செய்வார்? என்ற கேள்வியை சிலர் எழுப்புகின்றனர். சட்டம் ஒழுங்கு குறித்து முதல்வர் கறாராக உத்தரவிட்டிருப்பதால் சில அதிரடிகளுக்கு காவல்துறை தயாராகி வருகிறதாம். அதேபோல் சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையராக மகேஷ் குமார் அகர்வால் நியமிக்கப்படுகிறார். தமிழக சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டி ருக்கும் டேவிட்சன் தேவாசிர்வாதத்தின் ஒப்புதலின் பேரிலேயே இந்த மாற்றங்கள் நடந்திருக்கின்றன என்கிறார்கள். சட்டம் ஒழுங்கை சரியாக இழுத்துப் பிடியுங்கள் என்று உத்தரவிட்ட முதல்வரால், காவல்துறை சில அதிரடி ஆக்ஷன்களுக்கும் தயாராகிவரு கிறதாம்.''”

"நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். வருகிற 22ஆம் தேதி அமெரிக்கா செல்லத் திட்டமிட்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின், அங்கு ஒன்றரை மாதங்கள் வரை தங்கியிருக்கலாமா? அல்லது 25 நாட்களுக்குள் திரும்பிவிடலாமா? என்று ஆலோசித்து வருகிறாராம். வெளிநாடு செல்வதற்கு முன்பே, அமைச்சரவை மாற்றத் தை நடத்திவிடலாம் என்கிற அதிரடி முடிவிற்கு அவர் வந்திருக்கிறாராம். திருப்தி யாக செயல்படாததோடு புகார்களைச் சம்பாதித்திருக்கும் சில அமைச்சர்களைப் பதவியில் இருந்து தூக்கவும் அவர் முடிவெடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள். முதல்வரின் ஹிட் லிஸ்ட்டில் வந்துவிடக் கூடாது என்று அமைச்சர்கள் பலரும் பரிதவிக்கிறார்களாம்.''’

rr

nkn130724
இதையும் படியுங்கள்
Subscribe