பெண்களுக்கு எதிரான குற்றங்கள்! -விருதுநகர் மாவட்ட வில்லங்கம்!

vv

தென் மாவட்டங்களில், விருதுநகர் மாவட்டத்தில்தான் அதிக அளவில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறுகிறதோ என்ற சந்தேகம் வரலாம். உண்மை அதுவல்ல. விருதுநகர் மாவட்டத்தில்தான் அதிகப்படியான வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்திருக்கிறது. கல்வியில் எப்படி இந்த மாவட்டம் முதலிடம் வகிக்கிறதோ, அதுபோல பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறைந்த அளவில் நடக்கும் மாவட்டம் என்ற பெருமை இந்த மாவட்டத்துக்கு விரைவிலேயே கிடைக்கும் என்பது காவல்துறையின் நம்பிக்கையாக உள்ளது.”

விருதுநகர் மாவட்ட காவல்துறையும், வேர்ல்ட் விஷன் இந்தியாவும் இணைந்து நடத்திய விழிப்புணர்வு பிரச்சாரத்தின்போது, விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மனோகர், இதனை வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். ஏன் தெரியுமா?

vv

பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள், நிறுவனங்களில் பணிபுரி

தென் மாவட்டங்களில், விருதுநகர் மாவட்டத்தில்தான் அதிக அளவில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறுகிறதோ என்ற சந்தேகம் வரலாம். உண்மை அதுவல்ல. விருதுநகர் மாவட்டத்தில்தான் அதிகப்படியான வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்திருக்கிறது. கல்வியில் எப்படி இந்த மாவட்டம் முதலிடம் வகிக்கிறதோ, அதுபோல பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறைந்த அளவில் நடக்கும் மாவட்டம் என்ற பெருமை இந்த மாவட்டத்துக்கு விரைவிலேயே கிடைக்கும் என்பது காவல்துறையின் நம்பிக்கையாக உள்ளது.”

விருதுநகர் மாவட்ட காவல்துறையும், வேர்ல்ட் விஷன் இந்தியாவும் இணைந்து நடத்திய விழிப்புணர்வு பிரச்சாரத்தின்போது, விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மனோகர், இதனை வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். ஏன் தெரியுமா?

vv

பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள், நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள், குடும்பப் பெண்கள் காணாமல்போய்விட்டதாக, விருதுநகர் மாவட்ட காவல்நிலையங்களுக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. ஒவ்வொரு தாலுகாவிலும் பெண்கள் மாயமாவது தொடர்ந்தபடியே இருப்பதால்தான், விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு விருதுநகர் மாவட்ட காவல்துறை தள்ளப் பட்டுள்ளது.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில செயலாளர் லட்சுமியை சந்தித்தோம்.

"பள்ளிக்கூடத்துல படிக்கும்போது 14 வயசுலயே காதல் வந்திருது. பெண் குழந்தைகள், பெத்தவங்களாலோ, வீட்ல உள்ளவங்களாலோ கவனிக்கப்படணும். இன்னைக்கு என்ன சொல்லிக் கொடுத்தாங்க? நீ ஸ்கூலுக்குப் போகும்போது என்ன பார்த்த? என்ன பண்ணுன? அப்படிங்கிற மாதிரி பேசணும். அது வீடுகள்ல ரொம்ப குறைவா இருக்கு. காரணம், இன்னைக்கு இருக்கிற பொருளாதார கஷ்டத்துல, எல்லாரும் வேலைக்குப்போனாத்தான் குடும்பம் நடத்தமுடியும். இந்தமாதிரி வீட்டுச் சூழ்நிலை இருக்கிறதுனாலதான், காதலுக்கு பெண் குழந்தைகள் பலி யாக்கப்படறாங்க.

பெண் குழந்தைகளும், ஆண் குழந்தைகளும் தனியா இருக்கும் போது ஆராய்ச்சி பண்ண ஆரம் பிச்சிடறாங்க. இது என்ன செய்யும்? இத பண்ணுனா என்ன? இந்தமாதிரி போயிடறாங்க. வரக்கூடாத வயசுல பெண் குழந்தைகளுக்கு காதல் வந்துச்சுன்னா, ஒரு பாதிப்பு வந்துட்டா, பெற்றோர் அவங்ககிட்ட கோபப்படாம, என்ன நடந்துச்சுன்னு பொறுமையா பேசணும். அவன் எப்படி உனக்கு பொருத்தமானவனா இருப்பான்? பொருளாதார கஷ்டம் இல்லாம, காலம் முழுக்க உன்னை வச்சு அவனால வாழமுடியுமா? இதையெல்லாம், அவங்களுக்கு புரியிற மாதிரி கேட்கணும்.

vv

மகளிர் காவல்நிலையங்கள்ல சொல்லக்கூடிய கருத்து என்னன்னா, சிவகாசி மாதிரியான பட்டாசுத் தொழில்ல ஈடுபடக்கூடிய பகுதிகள்ல, காதல்ங்கிற பேர்ல கர்ப்பமாக்கிட்டு, அப்புறம், என் ஜாதிக்காரங்க நம்ம கல்யாணத்துக்கு சம்மதிக்கமாட் டாங்கன்னு சொல்லி, பெண்களை கைவிடறாங்க. ராஜபாளையம் போன்ற பகுதிகள்ல மில்களில் வேலை பார்க்கும் பெண்கள் அதிகமா இருக்காங்க. அங்கேயும்கூட, விசாரணை கமிட் டிங்கிறது பெயரளவுலதான் இருக்கு. இதுகுறித்து கலெக்டர்கிட்ட நாங்க பதிவு பண்ணிருக்கோம். கலெக்டர் ஆபீஸ்ல இருக்கக்கூடிய கமிட்டிகள்ல நாங்களும் மெம்பரா இருக்கணும்னு மனு கொடுத்திருக்கோம். ஆனா.. ஒரு ரெஸ்பான்ஸும் இல்ல.

பெண் குழந்தைகளையும், பெண்களையும் பாதுகாக்குறதுல அரசாங்கத்தோட பங்களிப்பு நெறய இருக்கு. தமிழக அரசாங்கம் பாடத்திட்டங்கள்ல மாற்றம் கொண்டுவந்தாலும், ஆண்-பெண் சம்பந்தப்பட்ட விழிப்புணர்வுக் கல்வியையும் புகுத்தவேண்டும்.

காவல்துறை உயரதிகாரி ஒருவர் நம்மிடம், "பொம்பள புள்ளைங்க எதுக்கு எவனயோ நம்பி வீட்டைவிட்டு ஓடணும்? அந்த வீட்ல இருக்கிற நெருக்கடியான சூழல்ல இருந்து தப்பிச்சா போதும்கிற மைன்ட்-செட்டுக்கு அவங்க வந்துடறாங்க. வீட்டைவிட்டுப் போனபிறகு என்னென்ன கஷ்டப்படப் போறோம்கிற சிந்தனை, அந்த நேரத்துல அவங்களுக்கு வர்றது இல்ல. வறுமையும், பெத்தவங்க தர்ற நெருக்கடியும் தாங்கமுடியாத அளவுக்கு இருக்கும்போது, உண்மையான காதலோ, பொய்யான காதலோ அவங்க மனசுக்கு, அந்த நேரத்துல இதமா இருக்கு. கூடவே, முன்பின் யோசிக்காத, அந்த வயசுக்கே உரிய துணிச்சலும் வந்திருது. உனக்கு என்னைக்காட்டிலும் நல்லவன் கிடைக்கமாட் டான்ங்கிற நம்பிக்கையை ஒருத்தன் ஏற்படுத்தும்போது, அது உண்மையா, பொய்யான்னு தெரியாம, காதல் போதைல சிக்கி சீரழிஞ்சிடறாங்க. ஆண்கள் என்னதான் காதல் வலை விரிச்சாலும், அதுல விழக்கூடாதுங்கிற தெளிவும் ரொம்ப பெண்களுக்கு இருக்கு. வெகுசில பெண்கள்தான், அப்படியொரு புரிதல் இல்லாம வாழ்க்கைய தொலைச்சிடறாங்க''’என்றார்.

தனக்கான துணையைத் தேர்ந்தெடுப்பதில் அவசரமும் தடுமாற்றமும் இல்லாத சூழலை, ஒவ்வொரு பெண்ணுக்கும் ஏற்படுத்தித்தர வேண்டியது, இச்சமூகத்தின் கடமையாகும்.

nkn070123
இதையும் படியுங்கள்
Subscribe