கோவில் கருவறையில் அர்ச்சகர் காமக்களியாட்டம்! வலையில் சிக்கிய பக்தைகள்!

narayanan

க்தர்கள் தாயாக மதிக்கும் ஆண்டாள் குடிகொண்டுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் கருவறையில் நடந்த காமலீலைதான் சமீபத்தில் ரகசியமாக நடந்த கூட்டத்தின் சப்ஜெக்ட். ‘

perumalkovil

""பூணூல் போட்டுக்கிட்டு என்ன வேலை பண்ணிருக்கான்? அவனை சும்மா விடக்கூடாது. ஒரு கையையாச்சும் வெட்டினால்தான் அடுத்து எந்த பொம்பள மேலயும் கைவைக்க மாட்டான்''’என்று ஆவேசம் காட்டியபோது, சொந்தபந்தங்கள், ""இவளுக்கு புருஷன், புள்ளகுட்டின்னு ஒரு குடும்பம் இருக்கு. அவனை ஏதாச்சும் பண்ணிட்டா, இவ அசிங்கப்பட்டு தெருவுல நிற்கணும். தேவையா இது? பிரச்சனைய இத்தோடு விட்ருங்க''’என்று வேகத்தை தணித்துவிட்டனர்.

இந்தக் கசமுசா விவகாரம் வெளியே தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக, பல லட்சங்களை இறைத்திருக்கிறார்கள். ஸ்ரீவில்லிபுத்தூரில் சமூகஆர்வலர் ஒருவர் கொதித்துப்போய்ச் சொன்ன இந்த விவகாரத்தை உறுதி செய்த அரசியல் பிரமுகரான தேரடி மாரியப்பன், ""சாமியை நம்பாதவன்கூட கோவிலை மதிப்பான். வாழ்க்கை, வசதின்னு எல்லாத்தையும் இவங்களுக்கு அள்ளிக் கொடுக்கிற அந்தக் கோவில்லயே தப்பு பண்ணுறத எப்படி பொறுத்துக்க முடியும்?''’என்றார் குமுறலுடன்.

காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் கோவில் கருவறையில் பெண்கள் சிலரோடு உல்லாசமாக இருந்து, அதை தன் செல்போனில் ரகசியமாகப் படம் பிடித்து ரசித

க்தர்கள் தாயாக மதிக்கும் ஆண்டாள் குடிகொண்டுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் கருவறையில் நடந்த காமலீலைதான் சமீபத்தில் ரகசியமாக நடந்த கூட்டத்தின் சப்ஜெக்ட். ‘

perumalkovil

""பூணூல் போட்டுக்கிட்டு என்ன வேலை பண்ணிருக்கான்? அவனை சும்மா விடக்கூடாது. ஒரு கையையாச்சும் வெட்டினால்தான் அடுத்து எந்த பொம்பள மேலயும் கைவைக்க மாட்டான்''’என்று ஆவேசம் காட்டியபோது, சொந்தபந்தங்கள், ""இவளுக்கு புருஷன், புள்ளகுட்டின்னு ஒரு குடும்பம் இருக்கு. அவனை ஏதாச்சும் பண்ணிட்டா, இவ அசிங்கப்பட்டு தெருவுல நிற்கணும். தேவையா இது? பிரச்சனைய இத்தோடு விட்ருங்க''’என்று வேகத்தை தணித்துவிட்டனர்.

இந்தக் கசமுசா விவகாரம் வெளியே தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக, பல லட்சங்களை இறைத்திருக்கிறார்கள். ஸ்ரீவில்லிபுத்தூரில் சமூகஆர்வலர் ஒருவர் கொதித்துப்போய்ச் சொன்ன இந்த விவகாரத்தை உறுதி செய்த அரசியல் பிரமுகரான தேரடி மாரியப்பன், ""சாமியை நம்பாதவன்கூட கோவிலை மதிப்பான். வாழ்க்கை, வசதின்னு எல்லாத்தையும் இவங்களுக்கு அள்ளிக் கொடுக்கிற அந்தக் கோவில்லயே தப்பு பண்ணுறத எப்படி பொறுத்துக்க முடியும்?''’என்றார் குமுறலுடன்.

காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் கோவில் கருவறையில் பெண்கள் சிலரோடு உல்லாசமாக இருந்து, அதை தன் செல்போனில் ரகசியமாகப் படம் பிடித்து ரசித்து வந்த அர்ச்சகர் தேவநாதன், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகே வழக்கில் சிக்கினார். 8 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த வழக்கு இழுத்தடிக்கப்பட்டுவரும் நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூரிலும் கோவில் கருவறையில், தேவநாதன் பாணியிலேயே லீலைகள் புரிந்திருக்கிறார் பத்ரி நாராயணன் என்ற பட்டாச்சாரியார். பக்தியை முன்னிறுத்தி, விஸ்வ ஹிந்து பரிஷத் நடத்திய ராமராஜ்ஜிய ரத யாத்திரை, தமிழகத்தில் கடும் எதிர்ப்பைச் சந்தித்த வேளையில், இந்த விவகாரம் அம்பலமாகிவிடக் கூடாது என்று ரொம்பவே மெனக்கெட்டு வருகிறார்கள். அனைத்தையும் மீறி, கோவில் கருவறை ரகசியங்களுக்குள் நாம் ஊடுருவினோம்.

perumal

பலான வீடியோவில் பத்ரி

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஸ்ரீஆண்டாள் கோவில், வடபத்ரசாயி கோவில், தென் திருப்பதி என்றழைக்கப்படும் திருவண்ணாமலை-ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் ஆகிய மூன்று வைணவ கோவில்கள் உள்ளன. இந்தக் கோவில்களில் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பண்ணையார் பட்டர் குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் பரம்பரை பரம்பரையாக, முறைமை வைத்து, மூலவர் இருக்கும் கருவறையில் தீபாராதனை காட்டி, பூஜைகள் செய்து, பக்தர்களிடம் தட்டுக் காணிக்கை பெற்று வருகின்றனர். இவர்களில் ஒருவர்தான் பட்டாச்சாரியர் பத்ரி நாராயணன்.

narayananஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து 5 கி.மீ. தொலைவில், திருவண்ணாமலையில் உள்ள மலைக்கோவிலான ஸ்ரீநிவாச பெருமாள் கோவிலில், பிரகாரம், உண்டியல் காணிக்கை செலுத்துமிடம், நகை அறை மற்றும் கருவறை ஆகிய 4 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஸ்ரீஆண்டாள் கோவில் உட்பட ஸ்ரீநிவாச பெருமாள் கோவிலிலும் பட்டாச்சாரியராக இருந்து வருகிறார் பத்ரி. இவர்தான், ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் கருவறைக்குள் பெண் பக்தைகளை அழைத்துச் சென்று, பாலியல் உறவில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கிறார்.

ஆண்டாள் கோவில் அருகிலுள்ள பத்ரியின் வீட்டுக்குச் சென்றோம். “"பத்ரி ஊரிலேயே இல்லை'’’ என்றார்கள் எரிச்சலுடன். அவரது கைபேசி எண்ணுக்கு டயல் செய்தோம்; குறுந்தகவல் அனுப்பினோம். ரெஸ்பான்ஸ் இல்லை. ""பத்ரிக்கு எதிரான வீடியோ ஆதாரங்களைக் கையில் வைத்துக்கொண்டு, பணம் பறிக்கும் வேலையில் சிலர் ஈடுபட்டதால், பத்ரி தலைமறைவாகிவிட்டார்'' என்று தகவல் சொன்னார்கள் ஆண்டாள் கோவில் வட்டாரத்தில்.

ஸ்ரீஆண்டாள் கோவில் அலுவலகத்தில் செயல் அலுவலர் நாகராஜனை சந்தித்தோம். ""இது அஃபிசியல் மேட்டர்... வெளியில் சொல்ல முடியாது''’என்று முதலில் தயங்கியவர், பிறகு “""இது வெளியில் தெரிந்தால் கோவிலுக்குத்தான் கெட்டபெயர். யார், யாரோ அவனை மிரட்டி பணம் வாங்கியிருக்கிறார்கள். அதனால்தான், மூன்று நாட்கள்வரை அவன் செய்த குற்றம் வெளியில் தெரியவில்லை. தக்கார் ரவிச்சந்திரன் வரைக்கும் தகவல் போனது. தக்கார் சொன்னதன் பேரில், சி.சி.டி.வி. பதிவுகளை ஆராய்ந்தோம். பத்ரியைக் கூப்பிட்டு சத்தம்போட்டோம். அவனிடம் ‘"கருவறையில் ஒரு பெண்ணிடம்?'’ என்று விசாரித்தபோது "பிரசாதம் கொடுத்தேன்...'’என்று மழுப்பினான். அவனை அடிக்காத குறைதான். மற்றபடி, உடனடியாக நடவடிக்கை எடுத்து வெளியேற்றிவிட்டோம். பத்ரி கோவில் ஊழியரும் கிடையாது; அரசு ஊழியரும் கிடையாது. பூர்வீகமாக முறை வைத்து பூஜை பண்ணுபவர். ஆனாலும், கோவில் கருவறையில் இழிவான செயலில் ஈடுபட்டவரை கோவிலில் வைத்திருக்க முடியாது அல்லவா? அதனால்தான், துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டியதாயிற்று. அவனும் ஊரைவிட்டே ஓடிட்டான்''’என்றார்.

மிரட்டிய பின்னணி

சி.சி.டி.வி. கேமரா இருந்தும், ஸ்ரீநிவாசபெருமாள் கோவிலுக்கு தனியாக வரும் பெண் பக்தைகளை நிதானமாக நோட்டம்விட்டு, கருவறைக்குள் அழைத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தான் பத்ரி. கோவிலுக்கு வரும் மூன்று பெண் பக்தைகளிடம் பத்ரி தொடர்பு வைத்திருந்தது, நட்பு வட்டத்தில் உள்ள ஒருவனுக்குத் தெரிந்துவிட, ""நீ மட்டுமே அனுபவித்தால் எப்படி? கருவறைக்குள் நானும் வருவேன்; உன் வலையில் சிக்கிய பெண்களை எனக்கும் கொடு. இல்லையென்றால், உன்னைக் காட்டிக் கொடுத்துவிடுவேன்''’என்று perumalமிரட்டியிருக்கிறான். பரிகாரம் பண்ணுவதாகச் சொல்லி பக்தர்களிடம் கல்லா கட்டி, செல்வச் செழிப்போடு வாழ்ந்துவருபவன் என்பதால், கை நிறைய பணத்தைக் கொடுத்து நண்பனைச் சரிக்கட்ட முயற்சித்திருக்கிறான் பத்ரி. அவனோ பத்ரியிடம் முரண்டு பிடித்திருக்கிறான். தனது ஆசையை நிறைவேற்றி வைக்கவில்லை என்ற கோபத்தில் ஒருகட்டத்தில்... கருவறையில் பத்ரி ஒரு பெண்ணுடன் இருந்த இரண்டரை மணி நேர சி.சி.டி.வி. ஃபுட்டேஜை கைப்பற்றி, பிளாக்மெயில் செய்திருக்கிறான். இதே ரீதியிலான பிளாக்மெயிலில் வேறு சிலரும் ஈடுபட, விவகாரம் கோவில் நிர்வாகம்வரை போய், விசாரணை நடந்து, பத்ரியை வெளியேற்றிவிட்டனர்.

ஸ்ரீஆண்டாள் கோவில் நிர்வாகமே அந்த சிசிடிவி பதிவை முற்றிலுமாக அழித்து, பத்ரியின் குற்றச்செயலை மறைத்துவிட்ட நிலையில், பாதிக்கப்பட்ட பெண்கள் தரப்பிலிருந்து புகார் எதுவும் வராததால், சட்ட நடவடிக்கை குறித்த அச்சமின்றி, ஜாலியாக எங்கெங்கோ சுற்றித்திரிகிறானாம் பத்ரி.

"தனியாக கோவிலுக்குச் செல்லும் பெண்கள் ஜாக்கிரதை!’ என, தமிழ்நாட்டில் போர்டு வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது' என்று, நம்மிடம் சீரியஸாகப் பேசினார், பத்ரி விவகாரத்தை நன்கறிந்த உள்ளூர் வழக்கறிஞர் ஒருவர்!

-சி.என்.இராமகிருஷ்ணன்

perumalkovil
இதையும் படியுங்கள்
Subscribe