கோவில் கருவறையில் அர்ச்சகர் காமக்களியாட்டம்!’என்னும் தலைப்பில், கடந்த மார்ச் 27-29 இதழில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவில் பட்டாச்சாரியார் பத்ரி நாராயணன், திருவண்ணாமலை ஸ்ரீநிவாச பெருமாள் கோவிலில் நடத்திவந்த இழிவான செயலை அம்பலப்படுத்தி செய்தி வெளியிட்டிருந்தோம். பக்தர்கள் கூடுதல் தகவல்களைத் தந்தனர்.
கோவில் கருவறையில் அர்ச்சகர் காமக்களியாட்டம்!’என்னும் தலைப்பில், கடந்த மார்ச் 27-29 இதழில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவில் பட்டாச்சாரியார் பத்ரி நாராயணன், திருவண்ணாமலை ஸ்ரீநிவாச பெருமாள் கோவிலில் நடத்திவந்த இழிவான செயலை அம்பலப்படுத்தி செய்தி வெளியிட்டிருந்தோம். பக்தர்கள் கூடுதல் தகவல்களைத் தந்தனர்.
""அரசு ஊழியரான வெள்ளத்துரை, திருவண்ணாமலை கோவிலின் வாட்ச்மேன். அர்ச்சனை டிக்கட் கொடுப்பதிலிருந்து, உண்டியலைப் பாதுகாப்பதுவரை, எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வார். திருவண்ணாமலை ஏரியாவில் மணல் திருடும் டிராக்டர்காரர்களைப் பிடித்துக் கொடுத்தெல்லாம் நல்ல பெயர் வாங்கியிருக்கிறார். பத்ரியின் வலையில் வீழ்ந்த பெண்களில் ஒருத்தி, வெள்ளத்துரையின் நண்பரின் மனைவி. அதனால், ஆவேசம் கொண்டு பத்ரியை எச்சரித்தார். வெள்ளத்துரையின் வாயைக் கட்டிப்போட நினைத்த பத்ரி, தான் அணிந்திருந்த 10 பவுன் தங்கச் செயினைக் கழற்றிக் கொடுத்தான். வெள்ளத்துரை வாங்கவில்லை. “பத்ரியின் லீலைகள் நின்றபாடில்லை. அப்போதுதான், சி.சி.டி.வி. சர்வீஸுக்காக கோவிலுக்கு வந்த நபர், டி.வி.யில் ஃபுட்டேஜுகளை சரி பார்த்தபோது,
ஒவ்வொருநாளும், வெவ்வேறு பெண்களுடன் பத்ரி சல்லாபத்தில் ஈடுபட்டதைப் பார்த்திருக்கிறார். சி.சி.டி.வி. நபரின் ஒத்துழைப்போடு, ஃபுட்டேஜ் வெள்ளத்துரையின் கைக்கு வந்தது. அவர் மூலம்தான் கோவில் நிர்வாகத்துக்கு அந்த ஃபுட்டேஜ் கிடைத்தது''’என்றனர்.
ஸ்ரீஆண்டாள் கோவில் நிர்வாகத் தரப்போ, ""வெள்ளத்துரை மீதும் போலீசில் புகார்கள் உண்டு. அவர்தான் சங்கரன்கோவிலில் ஒரு டுபாக்கூர் பேர்வழியிடம் பத்ரி சம்பந்தப்பட்ட ஃபுட்டேஜைத் தர, டுபாக்கூரோ பிளாக்மெயில் மூலம், ஒவ்வொரு நாளும் பத்ரிக்கு பதற்றத்தை உண்டுபண்ணி, தொடர்ந்து பணம் பறிக்கப்பட்டுள்ளது'' என்கிறது.