Skip to main content

அமைச்சரின் பினாமியால் ஆபத்து! தற்கொலை முயற்சியில் ஷகிலா?

Published on 23/03/2018 | Edited on 24/03/2018
பத்திரிகையாளர் சந்திப்பில், தனக்கு மனஉளைச்சல் ஏற்படுத்தியவர்களைப் பட்டியலிட்டு, பாட்டில் ஒன்றைக் கையில் எடுத்து, "விஷம்' எனச்சொல்லிக் குடித்துவிட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு ஆட்டோவில் விரைந்தார் ஷகிலா. "அது ஒன்றும் விஷம் இல்லை; தூக்க மாத்திரைக் கரைசல்தான்; உயிருக்கு ஆபத்து இல்லை'’ என... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

நடிகை ஷகிலா மீது தாக்குதல்!

Published on 20/01/2024 | Edited on 20/01/2024
actress Shakila issue

நடிகை ஷகிலா மீது அவரது வளர்ப்பு மகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் உள்ள கோடம்பாக்கம் யுனைடெட் இந்தியா காலனியில் நடிகை ஷகிலா வசித்து வருகிறார். இந்த சூழலில் நடிகை ஷகிலாவுக்கும், அவரது வளர்ப்பு மகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஷகிலாவின் வளர்ப்பு மகள் சீத்தல், ஷகிலாவை அடித்து கீழே தள்ளிவிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவம் குறித்து நடிகை ஷகிலா தனது தோழி நர்மதாவுக்கு தகவல் அளித்துள்ளார். இதையடுத்து வழக்கறிஞர் சவுந்தர்யாவுடன் நர்மதா சென்றுள்ளார்.

நடிகை ஷகிலாவின் வளர்ப்பு மகள் சீத்தலை செல்போனில் அழைத்து சமாதானப்படுத்தி வைப்பதாக வழக்கறிஞர் சவுந்தர்யா அழைத்துள்ளார். இந்த பேச்சுவார்த்தையின் போது நடிகை ஷகிலா, வழக்கறிஞர் சவுந்தர்யா மீது அவரது வளர்ப்பு மகள் சீத்தல், சீத்தலின் தாய் சசி (வயது 45), சகோதரி ஜமீலா (வயது 22) ஆகியோர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் காயமடைந்த வழக்கறிஞர் சவுந்தர்யா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் சமாதானப்படுத்த சென்ற ஷகிலாவின் வழக்கறிஞர் சௌந்தர்யா மீது தாக்குதல் என காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

Next Story

வெளியானது சகிலாவின் புது படம்! 

Published on 22/07/2020 | Edited on 22/07/2020

 

shakila


மலையாளம் மற்றும் தமிழ்ப் படங்களில் காமெடி கதாபாத்திரங்கள் மற்றும் பி கிரேட் படங்களில் நடித்து பிரபலமானவர், நடிகை சகிலா. தற்போது இவர் தயாரிப்பில் அடல்ட் காமெடி படம் ஒன்று தனி இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

 

'லேடிஸ் நாட் அலவுட்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ஒருவர் பார்க்க ரூ.50 செலுத்த வேண்டும் என்று படக்குழு அறிவித்துள்ளது. சாய் ராம் தசரி என்பவர் இயக்கியுள்ள இப்படம் கடந்த வருடமே வெளியாக வேண்டியது. ஆனால், இப்படத்தைப் பார்த்த தணிக்கை குழு இப்படத்திற்கு எந்த மதிப்பும் தரவில்லை. இதனால் டெல்லியிலுள்ள தணிக்கை தீர்ப்பாயம் வரை இயக்குனர் சென்று இதற்குச் சான்றிதழ் வாங்க போராடிக் கொண்டிருந்தார். கரோனா அச்சுறுத்தலால் 100 நாட்களுக்கும் மேலாக திரையரங்குகள் திறக்கப்படவில்லை என்பதால், இந்தப் படத்திற்காக தனி இணையத்தளத்தை உருவாக்கி வெளியிட்டுள்ளனர்.

 

தெலுங்கில் இதுபோல வெளியிடப்படும் முதல் படம் இதுவாகும். மேலும், இந்தப் படத்தைக் கண்டிப்பாக பெண்கள் பார்க்க வேண்டாம் என்று சகிலா வேண்டுகோள் வைத்துள்ளார். கடந்த ஜூலை 20ஆம் தேதி இப்படம் ரிலீஸாகியுள்ளது.