Skip to main content

பா.ஜ.க. முதலாளிக்காக வஞ்சிக்கப்படும் வணிகர்கள் -மெட்ரோ திட்ட குளறுபடி!

Published on 07/04/2018 | Edited on 08/04/2018
எந்த ஊரிலும் வாய்க்கால்கள் நேராகப் பயணிப்பதில்லை. வலியவர்களின் வயல்கள் குறுக்கிட்டால் வாய்க்கால்களின் பாதை திசைமாறிவிடும். இதைத்தான், அந்தக் காலத்தில் "வல்லான் வகுத்ததே வாய்க்கால்' என்றார்கள். அதைப்போலவே ""கார்ப்பரேட் முதலாளி வகுப்பதே சென்னை மெட்ரோ வழித்தடம்'' என்ற புதுமொழியை உருவாக... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

மெட்ரோ ரயில் பணிகள்; சென்னையில் போக்குவரத்து மாற்றம்

Published on 28/01/2024 | Edited on 28/01/2024
Metro Rail Works Traffic change in Chennai

சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக ஆயிரம் விளக்கு பகுதியில் ஒயிட்ஸ் சாலையில் ஒரு வாரத்திற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “சென்னை ஒயிட்ஸ் சாலையில் உள்ள ஆயிரம் விளக்கு பகுதிகளில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தினரால் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளைக் கருத்தில் கொண்டு, போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினரால் இன்று (28.01.2024) முதல் ஒரு வார காலத்திற்கு போக்குவரத்து மாற்றங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி பட்டுலாஸ் சாலை ஒயிட்ஸ் சாலை சந்திப்பிலிருந்து ஒயிட்ஸ் சாலை x திரு.வி.க. சந்திப்பு வரை வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.

ராயப்பேட்டை மணிக்கூண்டில் இருந்து அண்ணாசாலை நோக்கி ஒயிட்ஸ் சாலையில் வரும் வாகனங்கள் பட்டுலாஸ் சாலை ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் திரும்பி தங்களது இலக்கை அடையலாம். அண்ணாசாலையிலிருந்து ஸ்மித் சாலையில் வரும் வாகனங்கள் ஸ்மித் ரோடு x ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்ப தடை விதிக்கப்பட்டுள்ளது. அண்ணாசாலையில் இருந்து வரும் வாகனங்கள் ஒயிட்ஸ் சாலை X திரு.வி.க. சந்திப்பில் இருந்து பட்டுலாஸ் சாலை ஒயிட்ஸ் சாலை சந்திப்பு வரை வழக்கம் போல் இயக்கப்பட்டு ராயப்பேட்டை மணிக்கூண்டிற்கு சென்றடையும். எனவே வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

சேலம், திருச்சியில் மெட்ரோ ரயில்; சாத்தியக்கூறு அறிக்கை சமர்ப்பிப்பு

Published on 31/08/2023 | Edited on 31/08/2023

 

Metro trains in Salem Trichy Feasibility Report Submission

 

சேலம், திருச்சி, ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை தொடங்குவது குறித்த சாத்தியக்கூறு அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

 

மதுரை, கோவையைத் தொடர்ந்து சேலம் திருச்சியில் மெட்ரோ வழித்தடங்கள் அமைப்பதற்கான ஆய்வுகள் நடந்து வந்தன. மேலும் மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்கான சாத்தியக்கூறு ஆய்வறிக்கை பணிகள் முடிந்துள்ள நிலையில் மெட்ரோ நிறுவனம் சாத்தியக்கூறு அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளது.

 

அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வறிக்கையில், திருச்சியில் 26 கி.மீக்கு தொலைவிற்கு ஒரு கட்டமாகவும், 19 கி.மீக்கு ஒரு கட்டமாகவும் என 45 கி.மீ தூரத்திற்கு இரு கட்டங்களாக வழித்தடம் அமைக்க சாத்தியக்கூறு இருப்பதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலியைப் பொறுத்தவரை மெட்ரோ ரயில் வழித்தடத்திற்கான வாய்ப்பு இல்லை என ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயம் திருநெல்வேலியில் லைட் மெட்ரோ மட்டுமே அமைக்க முடியும் என அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த ஆய்வறிக்கை அரசின் பரிசீலனைக்குப் பிறகு விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான அனுமதியை அரசு வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்குவதற்கு ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.