கொரோனா சூழல்களால் இந்தியாவுக்கு பதில் ஐக்கிய அரபு எமிரேட்டில் ஐ.பி.எல். போட்டிகள் நடைபெறுகின்றன. வருகிற செப்டம்பர் 19ஆம் தேதி மும்பை அணியும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதும் போட்டிகள் நடைபெற உள்ளன. ஆனால் இப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதுமா என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளன.
இந்த ஐ.பி.எல். போட்டிகளுக்காக துபாய்க்கு பிளைட் ஏறும் முன்பே, தோனியும் அவரையடுத்து சுரேஷ் ரெய்னாவும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முடிவை அறிவித்து அதிர்ச்சி தந்தனர். இருவரும் "சென்னை சூப்பர்கிங்ஸ்' ஆட்டக்காரர்கள். இனி ஐ.பி.எல் மட்டும்தான் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், அதிலும் குழப்பம் சூழ்ந்துள்ளது.
துபாயில் 22ஆம் தேதி பயிற்சி தொடங்குவதாக திட்டம். இந்தியாவில் இருந்து கிளம்பி அமீரகத்துக்கு வ
கொரோனா சூழல்களால் இந்தியாவுக்கு பதில் ஐக்கிய அரபு எமிரேட்டில் ஐ.பி.எல். போட்டிகள் நடைபெறுகின்றன. வருகிற செப்டம்பர் 19ஆம் தேதி மும்பை அணியும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதும் போட்டிகள் நடைபெற உள்ளன. ஆனால் இப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதுமா என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளன.
இந்த ஐ.பி.எல். போட்டிகளுக்காக துபாய்க்கு பிளைட் ஏறும் முன்பே, தோனியும் அவரையடுத்து சுரேஷ் ரெய்னாவும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முடிவை அறிவித்து அதிர்ச்சி தந்தனர். இருவரும் "சென்னை சூப்பர்கிங்ஸ்' ஆட்டக்காரர்கள். இனி ஐ.பி.எல் மட்டும்தான் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், அதிலும் குழப்பம் சூழ்ந்துள்ளது.
துபாயில் 22ஆம் தேதி பயிற்சி தொடங்குவதாக திட்டம். இந்தியாவில் இருந்து கிளம்பி அமீரகத்துக்கு வந்த ஐ.பி.எல்.லின் அனைத்து அணிகளின் விளையாட்டு வீரர்கள் ஒவ்வொருவருக்கும் மூன்று முறை கொரோனா டெஸ்டுகள் எடுக்கப்பட்டன. அந்த சோதனைகளில் இந்த போட்டிகளை ஒளிபரப்பும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் கேமரா மேன்களில் இருவருக்கும், ராஜஸ்தான் ராயல் அணியைச் சேர்ந்த ஒரு அலுவலருக்கும் கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த 13 பேருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது.
துபாய்க்கு செல்வதற்கு முன்பே சென்னையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கம் விளையாட்டு மைதானத்தில் பயிற்சி பெறவும், நட்சத்திர விடுதிகளில் தங்கவும் எடப்பாடி அரசு மூலம் ஸ்பெஷல் பர்மிஷன் வாங்கியிருந்தார் அந்த அணியின் உரிமையாளரான இந்தியா சிமெண்ட் சீனிவாசன். கொரோனா காலத்தில் வெளியாட்கள் யாருடனும் தொடர்பு கொள்ளக்கூடாது என்கிற விதிகள் சென்னையில் இருந்தபோதே, அதனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்தவர்கள் காற்றில் பறக்கவிட்டனர். நள்ளிரவு பார்ட்டிகள், நடனப் பெண்களின் ஒத்திகைகள் என தூள் கிளப்பிய சென்னை அணியினர், துபாயிலும் அட்டகாசம் செய்தனர். அதன் விளைவாக 13 பேருக்கு கொரோனா வந்தது. அதில் அணியின் முதுகெலும்பு என கருதப்படும் தீபக் சகர் என்கிற வேகப்பந்து வீச்சாளரும் அடக்கம். துபாயில் கொரோனா வந்தவர்களை 30 நாட்கள் தனிமைப் படுத்துவார்கள். அப்படி சென்னை சூப்பர் கிங்ஸ் ஸில் மொத்தம் 13 பேர் தனிமைப்படுத்தப்பட் டார்கள். இதை கேள்விப்பட்ட ஹர்பஜன்சிங், நான் துபாய்க்கு போக மாட்டேன் என அறிவித்து விட்டார்.
இந்நிலையில் முக்கியமான வீரரான சுரேஷ் ரெய்னாவின் நெருங்கிய உறவினர்கள் பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் அடையாளம் தெரியாத கும்பலால் வெட்டிக்கொல்லப்பட்டார்கள். உடனே, நான் இந்தியாவுக்கு திரும்புகிறேன் என சுரேஷ் ரெய்னா புறப்பட்டுவிட்டார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவரான தோனிக்கும் சுரேஷ் ரெய்னாவுக்கும் ஓட்டல் அறையில் அடிதடி தகராறு என்றும், அதனால்தான் ரெய்னா புறப்பட்டுவிட்டார் என செய்திகள் பறந்தது. இதனால் ஒட்டுமொத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் நிலைகுலைந்து போனது. இந்தியா வந்த சுரேஷ் ரெய்னா, ""நான் இந்தியா வுக்கு திரும்பி வந்ததால் என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். நான் மறுபடியும் துபாய்க்கு சென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடுவேன். மகேந்திர சிங் தோனியுடன் எனக்கு தகராறெல்லாம் இல்லை'' என அறிவித்தார்.
ஐ.பி.எல். போட்டியில் கலந்து கொள்ளும் 9 அணிகளில் வேறு எந்த அணியைப் பற்றியும் சென்னை அணி போல சின்னாபின்னமான செய்திகள் வரவில்லை. இதன் காரணம் என்னவென விசாரித்தபோது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான் வயதானவர்களை ஓய்வு பெற்றவர்களை கொண்டிருக்கக்கூடிய அணி. அந்த அணி வீரர்கள் பலருக்கு இந்த ஐ.பி.எல். தொடர்தான் கடைசி தொடர். அதனால் அவர்கள் எல்லை மீறிய மது, மாது போன்ற சேட்டைகளில் ஈடுபடுகிறார்கள். கொரோனா காலத்தில் கடுமையான கண்டிப்பு களை காட்டும் துபாய் நிர்வாகம் சுரேஷ் ரெய்னாவை ஒரு மாது விஷயத்தில் வெளிப்படை யாகவே கண்டித்தது. அவரை வெளியேறவும் உத்தரவிட்டது. சொந்தக்காரர் கொல்லப்பட்ட சம்பவத்தை சாக்காக வைத்து இந்தியாவுக்கு வந்த சுரேஷ் ரெய்னா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்தை பற்றிய ரகசியங்களை வெளியிடுவேன் என மிரட்டினார். பயந்துபோன சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகம் ரெய்னாவை மறுபடியும் அழைத்துக்கொள்ளலாம் என துபாய் நிர்வாகத்திடம் போராடி அனுமதி பெற்றது. அந்த அனுமதி கிடைத்தவுடன் ரெய்னா மறுபடியும் களம் காணப்போவதாக அறிவித்திருக்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது மோசமான நடவடிக்கைகளால் ஒட்டுமொத்த தமிழ் நாட்டையே அசிங்கப்படுத்துகிறது என வருத்தப்படுகிறார்கள் உண்மையான கிரிக்கெட் ஆர்வலர்கள்.
-தாமோதரன் பிரகாஷ்