தீபாவை இயக்கும் தினகரன்? போலி ரெய்டு மர்மம்!

Deepa

தானா சேர்ந்த கூட்டம் என்பது போல ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அவரது அண்ணன் மகளான ஜெ.தீபாவின் பின்னால் திடுதிப்பென ஒரு கூட்டம் திரண்டது. தீபாவுக்கும் ஒரு உத்வேகம் ஏற்பட்டது. தொண்டர்களுக்கு ஜெ. பாணியில் தரிசனம் தந்தார். தர்மயுத்தம் நடத்திக் கொண்டிருந்த ஓ.பி.எஸ்.சை சந்தித்து, அவருடன் இணைந்து அரசியல் பணியாற்றப் போவதாக அறிவித்தார்.

பிறகு என்ன நினைத்தாரோ, "எம்.ஜி.ஆர்.-அம்மா-தீபா பேரவை'’என்னும் அமைப்பை ஆரம்பித்தார். மாவட்டம்தோறும் பேரவை நிர்வாகிகளை நியமித்து ஆக்டிவாக களம் இறங்கினார். பேரவைப் பதவிகளுக்காக பல லட்சங்களை தீபாவிடம் வாரி இறைத்தனர் அவர் பின்னால் திரண்ட முன்னாள் நிர்வாகிகள்.

fake-it-raid-deepa-house

ஆரம்பத்தில் தீபாவுக்கு உறுதுணையாக இருந்த கணவர் மாதவன், பேரவை நடவடிக்கைகளில் தீபாவின் தோழர் ஆயில் ராஜாவின் தலையீடு ஆரம்பித்ததும், தீபாவிடமிருந்து விலகி தனி அமைப்பு ஒன்றைத் தொடங்கினார், பிறகு கலைத்தார், மீண்டும் தீபாவுடன் இணைந்தார். இருவரும் இணைந்த கைகள் ஆனபின் ஆர்.கே.நகர் தொகுதியில் தீபா நாமினேஷன் தாக்கல் செய்து, அதுவும் தள்ளுபடியாகும் நிலைக்குப் போனது. இதற்கிடையே, ஆயில் ராஜாவை தனது கட்சியிலிருந்து நீக்கிய தீபா, பிறகு சேர்த்து, மறுபடியும் நீக்கி, அப்புறம் சேர்த்தார்.

deepa

ஒரு வருடத்திற்கு முன் தானா சேர்ந்த கூட்டத்தால் பிரபலமான தீபா இப்போதோ, "தானா சேர்ந்த கூட்டம்'’ சினிமா பாணியில், ஐ.டி. ரெய்டுக்குப் போன அலேக் பேர்வழியால், சர்ச்சைகளிலும் சந்தேகங்களிலும் முழுமையாக சிக்கியுள்ளார்.

கடந்த 10-ஆம் தேதி காலை 6 மணி. சென்னை-தியாகராய நகரில் இருக்கும் தீபாவின் வீட்டிற்குச் செல்கிறான் டிப்டாப் ஆசாமி ஒருவன். அங்கிருந்த காவலாளியிடம், இன்கம்

தானா சேர்ந்த கூட்டம் என்பது போல ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அவரது அண்ணன் மகளான ஜெ.தீபாவின் பின்னால் திடுதிப்பென ஒரு கூட்டம் திரண்டது. தீபாவுக்கும் ஒரு உத்வேகம் ஏற்பட்டது. தொண்டர்களுக்கு ஜெ. பாணியில் தரிசனம் தந்தார். தர்மயுத்தம் நடத்திக் கொண்டிருந்த ஓ.பி.எஸ்.சை சந்தித்து, அவருடன் இணைந்து அரசியல் பணியாற்றப் போவதாக அறிவித்தார்.

பிறகு என்ன நினைத்தாரோ, "எம்.ஜி.ஆர்.-அம்மா-தீபா பேரவை'’என்னும் அமைப்பை ஆரம்பித்தார். மாவட்டம்தோறும் பேரவை நிர்வாகிகளை நியமித்து ஆக்டிவாக களம் இறங்கினார். பேரவைப் பதவிகளுக்காக பல லட்சங்களை தீபாவிடம் வாரி இறைத்தனர் அவர் பின்னால் திரண்ட முன்னாள் நிர்வாகிகள்.

fake-it-raid-deepa-house

ஆரம்பத்தில் தீபாவுக்கு உறுதுணையாக இருந்த கணவர் மாதவன், பேரவை நடவடிக்கைகளில் தீபாவின் தோழர் ஆயில் ராஜாவின் தலையீடு ஆரம்பித்ததும், தீபாவிடமிருந்து விலகி தனி அமைப்பு ஒன்றைத் தொடங்கினார், பிறகு கலைத்தார், மீண்டும் தீபாவுடன் இணைந்தார். இருவரும் இணைந்த கைகள் ஆனபின் ஆர்.கே.நகர் தொகுதியில் தீபா நாமினேஷன் தாக்கல் செய்து, அதுவும் தள்ளுபடியாகும் நிலைக்குப் போனது. இதற்கிடையே, ஆயில் ராஜாவை தனது கட்சியிலிருந்து நீக்கிய தீபா, பிறகு சேர்த்து, மறுபடியும் நீக்கி, அப்புறம் சேர்த்தார்.

deepa

ஒரு வருடத்திற்கு முன் தானா சேர்ந்த கூட்டத்தால் பிரபலமான தீபா இப்போதோ, "தானா சேர்ந்த கூட்டம்'’ சினிமா பாணியில், ஐ.டி. ரெய்டுக்குப் போன அலேக் பேர்வழியால், சர்ச்சைகளிலும் சந்தேகங்களிலும் முழுமையாக சிக்கியுள்ளார்.

கடந்த 10-ஆம் தேதி காலை 6 மணி. சென்னை-தியாகராய நகரில் இருக்கும் தீபாவின் வீட்டிற்குச் செல்கிறான் டிப்டாப் ஆசாமி ஒருவன். அங்கிருந்த காவலாளியிடம், இன்கம்டாக்ஸ் டிபார்ட்மெண்டிலிருந்து ரெய்டுக்கு வந்திருப்பதாக ஐ.டி.கார்டைக் காட்டியபடியே கூறியதும் அந்த ஆசாமியை, அலுவலக அறையில் உட்கார வைத்தார் காவலாளி. “""நீங்க மட்டும்தான் வந்திருக்கீங்க, உங்க டீம் எங்கே?'' எனக் காவலாளி கேட்டதும், ""அவர்கள் 10 மணிக்கு வருவார்கள், அனாவசியமா கேள்வி கேட்கிற வேலையெல்லாம் வச்சுக்காதே'' என ஆசாமி மிரட்டல் தொனியில் பேசியதும் கப்சிப்பாகிவிட்டார் காவலாளி.

அந்த அதிகாலை நேரத்தில் ஆயுர்வேத சிகிச்சைக்கு தீபா சென்றிருந்ததால், தீபாவின் கணவர் மாதவனிடம் விஷயத்தைக் கூறினார் காவலாளி. உடனே அலெர்ட்டான மாதவன், தனது வக்கீல்கள் இருவருக்கு போன் பண்ணியதும், அந்த வக்கீல்களுடன் மேலும் நால்வர் தீபா வீட்டிற்கு வந்துள்ளனர். அந்த அலேக் ஆசாமியிடம் மாதவன் பேசியபோது, ""நான் ஐ.டி. டிபார்ட்மெண்டில் ஏ.சி.யா இருக்கேன். பேரவை போஸ்டிங் போட்டதில் கோடிக்கணக்கில் பணம் வசூல் பண்ணியிருக்கிறார் தீபா. அதுக்கு முறையான கணக்கு காண்பிக்காததால்தான் ரெய்டுக்கு வந்திருக்கேன்'' என தில்லாக பேசியிருக்கிறான்.

இவனின் பேச்சில் சந்தேகப்பட்ட மாதவன், தி.நகர் ஏ.சி., செல்வகுமாருக்கு தகவல் தெரிவித்ததும் அவர் பேட்ரோல் வண்டியிலேயே தீபாவின் வீட்டிற்கு வந்துவிட்டார். அந்த அலேக் ஆசாமி காண்பித்த ஐ.டி.கார்டு, செர்ச் வாரண்ட் இதையெல்லாம், ஏ.சி.செல்வகுமார் பார்த்துக் கொண்டிருந்தபோதே, தீபா வீட்டில் மீடியாக்கள் குவியத் தொடங்கின.

fake-it-raid-deepa-house1

லைவ் கவரேஜ் மும்முரத்தில் இருந்த கேப்பில், சுவர் ஏறிக்குதித்து ஆட்டோவில் தப்பிவிட்டான் அலேக் ஆசாமி. போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம். ""காலை ஐந்தரை மணிக்கு மித்தேஷ்குமார்ங்கிறவனும் அவனுடன் மூணுபேரும் வந்து எங்க ஏ.சியைப் பார்த்தார்கள். ஐ.டி. டிபார்ட்மெண்டின் டெல்லி ஆபீசிலிருந்து வந்திருப்பதாகவும், தீபா வீட்டிற்கு ரெய்டுக்குப் போவதால், பாதுகாப்புக்கு போலீஸ் வரவேண்டும்னு சொன்னான். ஏ.சி.யும் அதை நம்பி போலீசை அனுப்புனாரு. இப்பத்தான் தெரியுது, அவன் பெரிய ஃபிராடுன்னு.

fake-it-raid-deepa-house

தீபாவிடம் நாங்கள் போனில் விசாரித்த போது, முன்னுக்குப் பின் முரணாகவே பேசினார், எதுவுமே திருப்தியாக இல்லை. ஆனால் இந்த விவகாரத்தில் ஏகப்பட்ட வில்லங்கம் இருக்கும்னு தோணுது'' என்பதுடன் முடித்துக் கொண்டனர்.

தீபாவின் நலன் விரும்பும் விசுவாசிகள் சிலர் நம்மிடம் பேசியபோது, ""தீபக்கின் ஃப்ரெண்டான ஆயில் ராஜா, தீபாவுக்கு நம்பிக்கைக்குரிய டிரைவரா வந்ததிலிருந்தே, தீபாவின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிய ஆரம்பிச்சது. ஈ.சி.ஆர்.ராமச்சந்திரன் என்பவர், தன்னுடைய வீட்டை அடிச்சு நொறுக்குனதா, போலீஸில் தீபா கம்ப்ளெய்ண்ட் கொடுத்தார். தீபா வீட்டின் எதிரே இருக்கும் சி.சி.டி.வி.கேமரா ஃபுட் ஏஜ்ஜைப் பார்த்ததும், எல்லாமே ஆயில் ராஜாவின் அக்கப் போர்தான் எனத் தெரிந்து கொண்டது போலீஸ்.

வளசரவாக்கத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரைத் தாக்கிய வழக்கில் ஆயில் ராஜாவை அரெஸ்ட் பண்ணியதும், தி.நகர் போலீஸ் ஸ்டேஷனுக்கே போய் கலாட்டா பண்ணினார் தீபா. அடிக்கடி கணவன் மாதவனுடனும் அரசியல் ரீதியான பனிப்போர் ஓயவில்லை. ஆனாலும் இன்னமும் தீபாவை நம்பி தொண்டர்களும் நிர்வாகிகளும் வருகிறார்கள். பணத்தை செலவு செய்கிறார்கள்.

ramachandranசமீபத்தில் கூட கடலூரில் தீபா பேசிய பொதுக்கூட்டத்திற்கு, எந்த முன்னேற்பாடுகளும் இல்லாத நிலையில் பிரம்மாண்ட கூட்டம் கூடியது. இதையெல்லாம் கணக்குப் போட்டுத்தான் ஏகப்பட்ட லட்சங்களை வசூல் செய்தார்கள். பேரவை போஸ்டிங்கிற்காக பணம் கொடுத்து, பதவி கிடைக்காதவர்கள் பலரும் பணத்தைத் திருப்பிக் கேட்டு தீபாவுக்கு நெருக்கடி தர, தீபாவோ ஆயில்ராஜாவைக் கைகாட்டிவிட்டார். ’"எல்லாத்தையும் வாங்கி உங்ககிட்ட தானே கொடுத்தேன்' என தீபா மீது ஆயில் ராஜா காட்டம் காட்டியிருக்கிறார்.

அந்த ஃபிராடு ஐ.டி.ஆசாமியும், பேரவை போஸ்டிங் வசூல் சம்பந்தமா வந்திருக்கேன்னு சொன்னதையும் கூட்டிக் கழிச்சுப் பார்த்தா, ஆயில் ராஜா போட்ட தனித்திட்டமா, இல்லை, தீபாவும் ஆயில் ராஜாவும் போட்ட கூட்டுக் கொள்ளைத் திட்டமான்னு புரியல'' என ரொம்பவே விளக்கமாகப் பேசினார்கள். அத்துடன், மாதவன் தரப்பிலான திட்டமாகவும் இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீஸ் விசாரிக்குது.

இது ஒருபக்கம் இருக்க, அந்த அலேக் ஐ.டி.ஆசாமி பற்றிய புலன்விசாரணையில் இறங்கிய போது புதுக்கோட்டையைச் சேர்ந்த நமது நண்பர் ஒருவர் நம்மைத் தொடர்பு கொண்டார். ""அவன் பேரு மித்தேஷ்குமார் இல்லை, பிரபாகரன். இதே மாவட்டத்தில் இருக்கும் அரிமளம் அருகிலுள்ள போசம்பட்டிதான் அவனது ஊர். ஆனால் வருமான நிமித்தமாக குடும்பம் வாழுறது விழுப்புரத்தில்தான்.

இவனது குடும்பத்தின் மீது நில அபகரிப்பு வழக்குகள் இருக்கிறது. கோவில் திருவிழாவிற்கு மட்டுமே போசம்பட்டிக்கு வருவார் பிரபாகரனின் அப்பா. தீபா வீட்டில் இருந்து, மர்ம ஆசாமி ஆட்டோவில் தப்பியதாக பேப்பரில் போட்டிருந்தார்கள். அந்த ஆட்டோகூட பள்ளிக்கரணையில் இருக்கும் பிரபாகரனின் கூட்டாளிக்குச் சொந்தமானது. கடந்த ஆறு வருஷமா இதே டெக்னிக் மூலம்தான் நாற்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் ரெய்டுக்குப் போய் லம்ப்பா ஒரு அமவுண்டை தட்டியிருக்கான். இப்பத்தான் இவன் போட்டோவே மாட்டியிருக்கு. எப்ப அவன் பிடிபடுவானோ, அப்ப நிறைய வில்லங்க சமாச்சாரம் அம்பலத்துக்கு வரும். யார் யார் பின்னணியில் உள்ளார்கள் என்பதும் தெரியவரும்'' எனச் சொல்லி அதிர்ச்சியூட்டினார்.

வந்தவன் மித்தேஷ்குமாரா, பிரபாகரனா என்கிற குழப்பம் இருக்க, அதைவிட குழப்பக் கூடாரமாக இருக்கிறது தீபாவின் நடவடிக்கைகள். ஜெ. சாவில் மர்மம் இருப்பதாகச் சொன்னார், சசிகலா மீது குற்றம் சாட்டினார். போயஸ் கார்டன் வீட்டுக்கு உரிமை கோரி உள்ளே போக முயற்சி செய்து, களேபரத்தை ஏற்படுத்தினார். இப்படி சசிகலாவை தீபா தீவிரமாக எதிர்த்துக் கொண்டிருக்க, தீபாவின் கணவர் மாதவனோ, பெசன்ட் நகர் புள்ளியுடன் நெருக்கமாக இருக்கிறார். தீபாவின் தம்பி தீபக்கோ, சசிகலா குடும்பத்தின் பிள்ளையாகவே வலம் வருகிறார்.

அ.தி.மு.க.வின் எந்த அணியிலும் இல்லாத சீனியர் கட்சிக்காரர் ஒருவரோ, மேற்கண்ட விவகாரங்களையெல்லாம் கோர்வையாகக் கூறிவிட்டு, ""மன்னார்குடி வகையறாக்களிலேயே மன்னர் வகையறா யார் என்பதைத் தீர்மானிக்க, இப்போது யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீட்டை, அரசுடைமையாக்குவதில் தீவிரமாக இருக்கிறார் எடப்பாடி. அந்த எடப்பாடிக்கு செக் வைக்கும் விதமாக, போயஸ் கார்டன் வீட்டுக்கு தான்தான் வாரிசுதாரர் என தீபாவுக்கு கொம்பு சீவும் வேலையையும், சசியின் கண்ட்ரோலில் இருக்கும் தீபக்கிற்கு செக் வைக்கும் வேலையையும் கச்சிதமாக செய்து வருகிறார் டி.டி.வி.தினகரன். அதன் எஃபெக்ட்தான், இந்த ஃபோர்ஜரி ரெய்டு. எல்லா உரிமைகளும் பேசும் தீபா ஏன் எதற்காகவும் சட்டரீதியாக போராடுவதில்லை?'' எனக் கேட்கிறார்.

டீல் டிராமா தொடரும்வரை தில்லுமுல்லுகள் அரங்கேறியபடியே இருக்கும் என்கிறார்கள் விவரமறிந்தோர்.

-பரமு, அரவிந்த், நாகேந்திரன்

Deepa dinakaran Fake IT Raid
இதையும் படியுங்கள்
Subscribe