மர்ம மாளிகை என்றால் ஒரு காலத்தில் எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டத்தைச் சொன்னார்கள். அப்புறம், ஜெ. வசித்த போயஸ் கார்டனை சொன்னார்கள். இப்போது மர்ம வீடு என்றால் ஜெ.வின் அண்ணன் மகள் தீபா வசிக்கும் தி.நகர் வீடு என சொல்கிறார்கள் தமிழக காவல்துறையைச் சேர்ந்தவர்கள்.
"என்னைச் சுற்றி சதிவலை பின்னப்படுகிறது' என வாரத்துக்கொருமுறை தீபாவிடமிருந்து அறிக்கை வருவது வாடிக்கையாக இருந்த நிலையில், வாரம் ஒருமுறை சதித்திட்டத்துடன் கூடிய செயல்கள் அவரது தி.நகர் வீட்டில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
தீபாவுக்கு வேண்டியவரான ஆயில்ராஜா என்பவர் தீபா வீட்டின்மேல் தாக்குதல் நடத்திவிட்டு வேறு யாரோ தாக்குதல் நடத்தியதாக தீபா மூலம் போலீசில் புகார் கொடுக்க வைத்தார். பக்கத்து வீட்டு சி.சி.டி.வி. மூலம் அது பொய்ப்புகார் என போலீஸ் நிரூபித்தது. சென்ற வாரம் மித்தேஷ்குமார் என்ற பெயரில் வருமான வரித்துறையிலிருந்து வருவதாக ஒரு நபர் தீபா வீட்டுக்கு வந்தார். அங்கிருந்து தப்பி ஓடினார். அதன்பிறகு அவர் போலீசில் சரணடைந்தார். போலீசில் அவர் சரணடைவதற்கு முன்பே "தீபாவின் கணவர் மாதவன் சொல்லித்தான் நான் வருமானவரித்துறை அதிகாரியாக நடித்தேன்' என்கிற ஒரு வீடியோ வாக்குமூலம் தொலைக்காட்சிகளில் லைவ் ஆக வெளியானது.
அதுபற்றி கருத்து கேட்க தீபாவையும், மாதவனையும் பத்திரிகையாளர்கள் தொடர்பு கொண்டார்கள். அவர்கள் பதில் தரவில்லை. பின்னர் மாதவனை குற்றம் சாட்டிய போலி அதிகாரியே அதை மறைப்பதற்குள், தீபாவின் நெருங்கிய நண்பரான ஆயில்ராஜா மேல் சந்தேகம் படரத் தொடங்க
மர்ம மாளிகை என்றால் ஒரு காலத்தில் எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டத்தைச் சொன்னார்கள். அப்புறம், ஜெ. வசித்த போயஸ் கார்டனை சொன்னார்கள். இப்போது மர்ம வீடு என்றால் ஜெ.வின் அண்ணன் மகள் தீபா வசிக்கும் தி.நகர் வீடு என சொல்கிறார்கள் தமிழக காவல்துறையைச் சேர்ந்தவர்கள்.
"என்னைச் சுற்றி சதிவலை பின்னப்படுகிறது' என வாரத்துக்கொருமுறை தீபாவிடமிருந்து அறிக்கை வருவது வாடிக்கையாக இருந்த நிலையில், வாரம் ஒருமுறை சதித்திட்டத்துடன் கூடிய செயல்கள் அவரது தி.நகர் வீட்டில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
தீபாவுக்கு வேண்டியவரான ஆயில்ராஜா என்பவர் தீபா வீட்டின்மேல் தாக்குதல் நடத்திவிட்டு வேறு யாரோ தாக்குதல் நடத்தியதாக தீபா மூலம் போலீசில் புகார் கொடுக்க வைத்தார். பக்கத்து வீட்டு சி.சி.டி.வி. மூலம் அது பொய்ப்புகார் என போலீஸ் நிரூபித்தது. சென்ற வாரம் மித்தேஷ்குமார் என்ற பெயரில் வருமான வரித்துறையிலிருந்து வருவதாக ஒரு நபர் தீபா வீட்டுக்கு வந்தார். அங்கிருந்து தப்பி ஓடினார். அதன்பிறகு அவர் போலீசில் சரணடைந்தார். போலீசில் அவர் சரணடைவதற்கு முன்பே "தீபாவின் கணவர் மாதவன் சொல்லித்தான் நான் வருமானவரித்துறை அதிகாரியாக நடித்தேன்' என்கிற ஒரு வீடியோ வாக்குமூலம் தொலைக்காட்சிகளில் லைவ் ஆக வெளியானது.
அதுபற்றி கருத்து கேட்க தீபாவையும், மாதவனையும் பத்திரிகையாளர்கள் தொடர்பு கொண்டார்கள். அவர்கள் பதில் தரவில்லை. பின்னர் மாதவனை குற்றம் சாட்டிய போலி அதிகாரியே அதை மறைப்பதற்குள், தீபாவின் நெருங்கிய நண்பரான ஆயில்ராஜா மேல் சந்தேகம் படரத் தொடங்கியுள்ளது என்கிறார்கள் காவல்துறையை சேர்ந்தவர்கள்.
தீபாவுக்கு நெருக்கமான வட்டாரங்களில் விசாரித்தோம். ""எல்லாவற்றிற்கும் காரணம் பணம்தான்'' என்கிறார்கள். ""தீபாவும் தீபாவின் தம்பி தீபக்கும் ஜெ.வின் மரணம் வரை சசிகலா குடும்பத்திற்கு நெருக்கமாக இருந்தார்கள். அதிலும் குறிப்பாக சசிகலாவின் கணவருக்கு மிக நெருக்கமாக தீபக் இருந்தார். ஜெ. இறந்தவுடன் ஜெ.வின் சாவில் மர்மம் இருக்கிறதா? என பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு "அப்படி எதுவும் இல்லை' என்றார் தீபா. ஜெ.வுக்கு இறுதி காரியம் செய்த தீபக்கும் அதே பதிலை வேறு மாதிரியாக சொன்னார். அவர்கள் இருவரும் இப்படி சொன்னதற்கு ஒரு காரணம் இருக்கிறது'' என்றவர்கள் அதையும் விளக்கினார்கள்.
""நீங்கள் எந்த சூழ்நிலையிலும் ஜெ.வின் நேரடி அரசியல் வாரிசு என களத்திற்கு வரக்கூடாது என ஒரே செட்டில்மெண்ட் ஆக ஆளுக்கு 25 "சி' என 50 "சி' சசிகலா வகையறாக்களால் அளிக்கப்பட்டது. அதற்குப் பிறகுதான் தீபாவுக்கும் தீபக்கிற்கும் அரசியல் ஆசை துளிர்த்தது. அரசியல் இயக்கம் என தீபா அடிக்கடி பேட்டி அளித்தார். அது அரசுக்கு எதிராக போகப் போகிறது என எடப்பாடி தரப்பிலிருந்து 10 "சி' தீபாவுக்கு தரப்பட்டது. ஓ.பி.எஸ். டீமின் தர்மயுத்தம் உச்சகட்டமாக இருந்தபோது ஓ.பி.எஸ்.சை தீபா சந்தித்தார். ஜெ.வின் சாவில் மர்மம் இருக்கிறது என வாய்திறந்தார். அந்த சந்திப்புக்காக மாஃபா பாண்டியராஜன் வழியாக ஓ.பி.எஸ். 2 "சி' கொடுத்தார்.
தீபா தமிழகத்தில் எங்கு போனாலும் மக்கள் ஆதரவு இருக்கிறது என அவரது இயக்கத்தை சேர்ந்தவர்கள் கோடிக்கணக்கில் பணம் கொடுக்க முன்வந்தார்கள். அப்படி முன்வந்த ராமச்சந்திரன் என்பவரிடம் ஒரு கோடி ரூபாய் வாங்கினார் தீபா. ஸ்ரீபெரும்புதூர் பிரமுகரிடம் கார் ஒன்றை பரிசாக வாங்கினார் தீபா. இப்படி தனது ஆதரவாளர்களிடம் மட்டும் 15 "சி' வரை பணம் மற்றும் பொருட்களாக வாங்கி சேகரித்துள்ளார் தீபா.
இந்த பணத்தில் 5 "சி'யை மாதவனும் ஆயில்ராஜாவும் ஆட்டையை போட்டிருக்கிறார்கள். அதுபோக தீபாவிடம் இப்பொழுது 43 "சி' கேஷாக மட்டும் இருக்கிறது. இந்த பணத்தை யார் அடைவது என்பதில் மாதவனுக்கும் ஆயில்ராஜாவுக்கும் இடையே கயிறு இழுப்பு போட்டி மாதிரி ஒரு போட்டி நடக்கிறது. இதுதான் தீபா வீட்டைச் சுற்றி மர்மமான சம்பவங்கள் நடப்பதற்குக் காரணம்'' என்கிறார்கள் தீபாவுக்கு நெருக்கமானவர்கள்.
""இந்த பணம் தொடர்பாக தீபாவிடம் பணம் கொடுத்து ஏமாந்ததாக ராமச்சந்திரன் என்பவர் போலீசில் புகார் கொடுத்திருக்கிறார். அது மட்டுமல்ல இந்த பணம் தொடர்பாக மாதவன், தீபா, ஆயில்ராஜா ஆகிய மூவருக்கும் இடையே முக்கோண மோதல் நிலவி வருகிறது. பணமோதல் அதிகரிக்கும்போது ஒருமுறை மாதவனை தனது பேரவையில் இருந்து தீபா நீக்கினார். மோதல் முடிந்தபிறகு மாதவனை சேர்த்துக் கொண்டார். அதேபோல் ஆயில்ராஜாவும் வெளியேற்றப்பட்டார். அவரும் மறுபடியும் இணைத்துக் கொள்ளப்பட்டார். தீபாவை பொறுத்தவரை அவர் சுறுசுறுப்பான ஆள் இல்லை. ஆசை அதிகம். ஜெ.வைப் போலவே யாரையும் நம்பாதவர். அதனால்தான் அவரை சுற்றிய மர்மம் தொடர்கிறது'' என்கிறார்கள் அவரை நன்கு தெரிந்தவர்கள்.
லேட்டஸ்ட்டாக நடந்த வருமானவரித்துறை சோதனை நாடகத்தை நடத்திய பிரபாகரன் என்பவர் போலியாக வைத்திருந்த மித்தேஷ்குமார் என்கிற வருமானவரித்துறை ஐ.டி.யும் அவர் கொண்டு வந்த சோதனை சான்றிதழும் இணையதளத்தில் பிரபலமானது. வருமானவரித்துறை அதிகாரியாக மித்தேஷ்குமார் என்கிற இதே பெயரில் இதே சோதனை சான்றிதழுடன் ஒருவரை டெல்லியில் காவல்துறை கைது செய்திருக்கிறது. பிரபாகரனுக்கு இந்த ஐ.டி. கார்டை பிரிண்ட் செய்து கொடுத்ததாக பாண்டிச்சேரியை சேர்ந்த அனந்தவேலு என்பவரையும் வருமான வரி மோசடியை விசாரிக்கும் தி.நகர் உதவி கமிஷனர் செல்வன் கைது செய்திருக்கிறார்.
ஆனால் போலி அதிகாரியாக வந்த பிரபாகரன் தீபாவிடம் ""உங்களிடம் கணக்கில் வராத பணம் கோடிக்கணக்கில் இருக்கிறது. வாங்க செட்டில்மெண்ட் பேசலாம்'' என அழைத்துள்ளார். பிரபாகரன் ஒரு திருடன். அவனுக்கு வருமானவரித்துறை அதிகாரி என நடிப்பதுதான் தொழில் என்றாலும் அவனுக்கு தீபாவிடம் கணக்கில் காட்டப்படாத பணம் இருக்கிறது என யார் சொன்னார்கள் என்கிற சந்தேகம் போலீசுக்கு எழுந்திருக்கிறது. பண விவரத்தை போலி ரெய்டு ஆசாமியிடம் சொன்னது மாதவனா என அவரது போனை ஆராய்ந்தபோது, அவர் இல்லை என தெரிய வந்திருக்கிறது. ஆயில்ராஜாவின் வேலையா? என கண்டறிய பிரபாகரனை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க காத்திருக்கிறது காவல்துறை. இதற்கிடையே தீபாவிடம் உள்ள கணக்கில் வராத பணத்தை குறிவைத்து நிஜமான வருமானவரித்துறையினர் வரப் போகிறார்கள் என பயந்து காஞ்சிபுரம் போய் ஜெயேந்திரரையும் விஜயேந்திரரையும் ரகசியமாக சந்தித்து விட்டு வந்திருக்கிறார் தீபா.
-தாமோதரன் பிரகாஷ்
மரணம் என்று வெளியான தகவல், "தற்கொலை' என பரபரப்பாக... முன்னாள் எம்.எல்.ஏ. ஜான் ஜேக்கப் இறப்பு சர்ச்சையானது.
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி யில் 2006 மற்றும் 2011-ம் ஆண்டு களில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு வென்றவர் ஜான் ஜேக்கப். த.மா.கா. குமரி மேற்கு மாவட்டத் தலைவராக இருந்து வந்தார். கடந்த ஒரு மாதமாக கட்சியினரிடம் எந்தத் தொடர்பும் இன்றி பாலப்பள்ளம் படுவூரில் உள்ள தமது வீட்டில் முடங்கிக் கிடந்தார். 13.02.18 அன்று அவசர அவசரமாக நெய்யூர் சி.எஸ்.ஐ. மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர், காப்பாற்ற முடிய வில்லை. ""தென்னைக்கு வைக்கும் விஷ மாத்திரையைச் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்'' என மருத்துவமனை வட்டாரம் போலீசாரிடம் கூறியதாகத் தெரி கிறது. விலை உயர்ந்த மரங்களை வாங்கி விற்பனை செய்து வந்த ஜான் ஜேக்கப்பிற்கு கருங்கல்லிலும் திருவனந்தபுரத்திலும் சா மில்கள் உள்ளன. சா மில்களை சகோ தரரிடம் ஒப்படைத்திருந்தார். பலகோடி கடனாகிவிட்டது. கட்சிப் பணிகளில் கவனம் செலுத்தாத தால் தலைமைப் பதவியை ராஜி னாமா செய்யுமாறு வற்புறுத்திய தாம் த.மாகா. தலைமை. திருமணமான தன் மகள் வெர்ஜின் ரோசின் பிறந்த வீட்டிலேயே ஒரு வருடமாக இருந்ததாலும் ஜான் ஜேக்கப்புக்கு மன உளைச்சல். இப்படிப் பல பிரச்சினைகள் வாட்டியதால், தற்கொலை முடிவை எடுத்திருப்பார் என்கிறார்கள். ""என் அப்பாவின் மரணம் குறித்து விசாரிக்க வேண்டும்'' என புகார் கொடுத்திருக்கிறார் ஜேக்கப்பின் மகன் டாக்டர் நிதின் சைமன். -மணிகண்டன் |