சொந்தங்கள் கொள்ளையடிப்பதற்காக எடப்பாடி போட்ட புது ரோடு!

eps-son

கோட்டை வாசலில் தங்களைத் தடுப்பதற்காகவே காத்திருந்த போலீஸையும் மீறி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களான வெற்றிவேலும் தங்க தமிழ்ச்செல்வனும், முதல்வர் எடப்பாடி மீது சரமாரியாக ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறிவிட்டுச் சென்றது பரபரப்பை உண்டாக்கியது. இதனால், அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாக இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்திருக்கிறது கோட்டை போலீஸ். அவர்களை கைது செய்ய 7 தனிப்படைகள் அமைக்கப்பட, இருவரும் முன்ஜாமீன் கோரி நீதிமன்றம் நாடினர்.

வெற்றிவேலிடம் நாம் பேசியபோது, ""முதல்வராக உள்ள எடப்பாடி பழனிச்சாமியிடம்தான் நெடுஞ்சாலைத்துறை இருக்கிறது. சாலை மேம்பாட்டு பணிகளுக்காக விடப்படும் டெண்டர்கள் முழுவதும் எடப்பாடியின் உறவினர்களுக்கே கொடுக்கப்படுகிறது. 2016-17 நிதியாண்டில் சாலை மேம்பாடு மற்றும் epsபராமரிப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ள 4,100 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தில் சுமார் 1,500 கோடி ரூபாய் அளவில் ஊழல்கள் நடந்துள்ளன. இந்த 1,500 கோடியும் நெருங்கிய உறவினர்கள் மூலம் எடப்பாடியின் பாக்கெட்டுகளுக்கு சென்றுள்ளன. இதனை அம்பலப்படுத்திய எங்களை கைது செய்யத் துடிக்கின்றனர். சட்டப்படி எதிர்கொள்வோம்'' என்றவர், சாலை மேம்பாட்டு பணிகளையும் பட்டியலிட்டார்.

வெற்றிவேலின் ஊழல் குற்றச்சாட்டுகளுடன் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் நாம் விசாரித்தோம். ""தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டத்தை உலக வங்கி கடனுதவியுடன் செயல்படுத்தி வருகிறது தமிழக அரசு. ஏற்கெனவே, 2009-10 நிதியாண்டில் பேஸ்-1 திட்டத்தை நிறைவு செய்திருந்தார்கள். பேஸ்-2 திட்டம் 2013-14 நிதி ஆண்டில் துவக்கப்பட்டு 2016-17-ல் இதற்கான நிதி ஒதுக்கீ

கோட்டை வாசலில் தங்களைத் தடுப்பதற்காகவே காத்திருந்த போலீஸையும் மீறி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களான வெற்றிவேலும் தங்க தமிழ்ச்செல்வனும், முதல்வர் எடப்பாடி மீது சரமாரியாக ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறிவிட்டுச் சென்றது பரபரப்பை உண்டாக்கியது. இதனால், அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாக இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்திருக்கிறது கோட்டை போலீஸ். அவர்களை கைது செய்ய 7 தனிப்படைகள் அமைக்கப்பட, இருவரும் முன்ஜாமீன் கோரி நீதிமன்றம் நாடினர்.

வெற்றிவேலிடம் நாம் பேசியபோது, ""முதல்வராக உள்ள எடப்பாடி பழனிச்சாமியிடம்தான் நெடுஞ்சாலைத்துறை இருக்கிறது. சாலை மேம்பாட்டு பணிகளுக்காக விடப்படும் டெண்டர்கள் முழுவதும் எடப்பாடியின் உறவினர்களுக்கே கொடுக்கப்படுகிறது. 2016-17 நிதியாண்டில் சாலை மேம்பாடு மற்றும் epsபராமரிப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ள 4,100 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தில் சுமார் 1,500 கோடி ரூபாய் அளவில் ஊழல்கள் நடந்துள்ளன. இந்த 1,500 கோடியும் நெருங்கிய உறவினர்கள் மூலம் எடப்பாடியின் பாக்கெட்டுகளுக்கு சென்றுள்ளன. இதனை அம்பலப்படுத்திய எங்களை கைது செய்யத் துடிக்கின்றனர். சட்டப்படி எதிர்கொள்வோம்'' என்றவர், சாலை மேம்பாட்டு பணிகளையும் பட்டியலிட்டார்.

வெற்றிவேலின் ஊழல் குற்றச்சாட்டுகளுடன் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் நாம் விசாரித்தோம். ""தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டத்தை உலக வங்கி கடனுதவியுடன் செயல்படுத்தி வருகிறது தமிழக அரசு. ஏற்கெனவே, 2009-10 நிதியாண்டில் பேஸ்-1 திட்டத்தை நிறைவு செய்திருந்தார்கள். பேஸ்-2 திட்டம் 2013-14 நிதி ஆண்டில் துவக்கப்பட்டு 2016-17-ல் இதற்கான நிதி ஒதுக்கீடு செய்து திட்டத்தை செயல்படத் துவக்கியுள்ளனர். சாலை மேம்பாடு மற்றும் பராமரிப்புக்கான இத்திட்டத்தின் மொத்த மதிப்பு 5,171 கோடி ரூபாய்.

eps-son

இதற்கான திட்ட அறிக்கையை மத்திய அரசின் ஒப்புதலுடன் உலக வங்கியிடம் சமர்ப்பித்து கடன் கேட்டது தமிழக அரசு. இதனை ஆராய்ந்த உலக வங்கி 1800 கோடி ரூபாய் தர சம்மதித்து நிதியை ஒதுக்கீடு செய்துவிட்டது. மீதியுள்ள 3,200 கோடிக்கும் பல நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்கியுள்ளது தமிழக அரசு. வெறும் 10 சாலைகளின் மேம்பாட்டுக்காக மட்டுமே இந்த 5000 கோடி ரூபாய்.

இந்த சாலைப் பணிகளும் இ.பி.சி.(இன்ஜினியரிங் பெர்குயூர்மென்ட் கன்ஸ்ட்ரக்சன்) மற்றும் பி.பி.பி.(பப்ளிக் பிரைவேட் பார்ட்னர்ஷிப்) என இரு வழிகளில் காண்ட்ராக்ட் விடப்பட்டுள்ளது. பொதுவாக, சாலை மேம்பாட்டுத் திட்டங்களின் மதிப்பை முடிவு செய்வதும் திட்டத்தை மேற்பார்வையிடுவதும் நெடுஞ்சாலைதுறை வசம் இருக்கும். பணிகளை செய்வது மட்டும்தான் காண்ட்ராக்டர்களின் வேலை. ஆனால், இ.பி.சி. முறையில் திட்டத்தின் மதிப்பை (எஸ்டிமேட்) காண்ட்ராக்டரே போடுவார். மேற்பார்வையிடுவதற்கு இன்னொரு காண்ட்ராக்டர் வந்துவிடுவார். ஒட்டுமொத்த முதலீட்டையும் அரசு கடன்வாங்கிப் போடுகிறபோது திட்டத்தை மதிப்பீடு செய்வது, பணிகளை செய்வது, மேற்பார்வையிடுவது எல்லாமே காண்ட்ராக்டர்தான் எனில் முதலீடு செய்யும் அரசுக்கோ நெடுஞ்சாலைத்துறைக்கோ என்னதான் வேலை? காண்ட்ராக்டர்களே எஜமானர்களாக இருந்தால் திட்டம் தரமாக இருக்குமா? இ.பி.சி. முறையில் வெறும் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டத்திற்கு 50 லட்சம் மதிப்பீடு போட முடியும். யாரும் கேள்வி கேட்க முடியாது.

அடுத்து, பி.பி.பி. முறைங்கிறது, காண்ட்ராக்டர் முதலீடு செய்வார். சாலைகளைக் கண்டறிந்து கொடுப்பதும் அதனை அகலப்படுத்த தேவையான நிலத்தைக் கொடுப்பதும் அரசு சாலைகளை மேம்படுத்தி அந்த சாலைகளில் டோல் ப்ளாஸா அமைத்து குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு வாகன ஓட்டி களிடமிருந்து காண்ட்ராக்டர்கள் லாபம் சம்பாதித்துக்கொள்ள வேண்டும். இதுதான் பி.பி.பி. முறை.

இந்த இரண்டு வழிமுறைகளில் இ.பி.சி.திட்டத்திற்காக காஞ்சிபுரம்-வந்தவாசி, செங்கல்பட்டு-காஞ்சிபுரம், அரக்கோணம்-திருத்தணி, ஆற்காடு-விழுப்புரம், கடலூர்-சித்தூர், விருத்தாசலம்-பரங்கிப்பேட்டை, ஓமலூர்-சங்ககிரி, திருச்செங்கோடு-பரமத்தி, மல்லியகரை-ராசிபுரம், திருச்செங்கோடு - ஈரோடு, மோகனூர்-நாமக்கல் என இப்படி 427 கிலோமீட்டர் சாலைகளை மேம்படுத்த 2,414 கோடி ஒதுக்கப்பட்டது. திட்டமதிப்புகளை காண்ட்ராக்டர்களே போட்டதால் இதில் 50 சதவீதம் கூடுதல் மதிப்புதான். அந்த வகையில் சுமார் 1200 கோடி, போக வேண்டியவர்களுக்குப் போய்ச்சேர்ந்துவிடும். தவிர, மீதியுள்ள சுமார் 1200 கோடி ரூபாயில் 20 சதவீத கமிசன் என 240 கோடி ரூபாய் தனி.

அதேபோல, முதலீடுகளை காண்ட்ராக்டர்களே போட்டுக்கொள்ளும் பி.பி.பி.முறையில் கோபி-ஈரோடு, ஒட்டன்சத்திரம்-தாராபுரம்-திருப்பூர், நெல்லை-தென்காசி ஆகிய 3 வழித்தடங்களை மேம்படுத்தி டோல் பிளாஸா அமைத்துக்கொள்வது. இந்த 3 திட்டங்களுக்கும் அரசுக்காகும் செலவுகளுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் தொகை 1,541 கோடி. இதில் எப்படி ஊழல் நடக்கிறது?

vetri-tamilselvan

உதாரணத்திற்கு, ஒட்டன்சத்திரம் - தாராபுரம் டோல் பிளாஸாவை அமைக்க 2 வருடமும், அதன்பிறகு 8 வருசம் பொதுமக்களிடமிருந்து பணம் வசூலித்துக்கொள்ளவும் காலம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. முதலீடு செய்யும் காண்ட்ராக்டர்களோ, 8 வருசத்தில் சம்பாதிக்க முடியாது, எங்களுக்கு நட்டம் ஏற்படும் என சொல்ல, அதற்கு ஒரு வழியை சொல்கிறது அரசு. அதாவது, இந்த சாலையை மேம்படுத்தி டோல் பிளாஸா அமைக்க உங்களின் எஸ்டிமேட் மதிப்பு 713 கோடி ரூபாய். அதில் 314 கோடியே 85 லட்சத்தை அரசு தந்துவிடும். அதாவது காண்ட்ராக்டர்கள் நட்டமடையக்கூடாதுங்கிறதுக்காக நிதி சப்போர்ட். அடுத்து, 6 மாதத்திற்கு ஒருமுறை 75 கோடி என 8 வருடத்துக்கு 1200 கோடி அரசே தந்து உதவும் (1220 + 314.85 = 1,534 கோடி) என உறுதிமொழி தந்து திட்டத்தை செயல்படுத்துகிறார் முதல்வர் எடப்பாடி.

காண்ட்ராக்டர் முதலீடு போடும் திட்டமென்கிற நிலையில் எஸ்டிமேட் மதிப்பை விட இரண்டு மடங்கு தொகையை அரசாங்கமே காண்ட்ராக்டர்களுக்கு தருவது போல ஒப்பந்தம் போட்டுள்ளனர். எல்லாம் முடிந்து மக்களிடமிருந்தும் சாலையை பயன்படுத்த கட்டணமும் வசூலித்துக்கொள்ளலாம். இப்படி பி.பி.பி. முறையில் செயல்படுத்தப்படும் 3 வழித்தட சாலை மேம்பாட்டிற்கும் இதே அளவுகோலில் ஒப்பந்தம் போட்டுள்ளனர். இவை தவிர நிலம் எடுத்தல், சாலை பாதுகாப்பு, கன்சல்ட்டிங் சேவை உள்ளிட்ட 6 வகையான சேவைகளுக்கென 1,257 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆக, இந்த இரண்டு வகையான திட்டத்தின் மொத்த மதிப்பு 5,171 கோடி. இதில் கிட்டத்தட்ட 3,000 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது'' என விரிவாக சுட்டிக்காட்டுகிறார்கள்.

ramalignam

மேலும் நாம் விசாரித்தபோது, “உலக வங்கிக் கடன் உதவியுடன் செயல்படுத்தப்படும் மேற்கண்ட 5000 கோடி திட்டத்தின் காண்ட்ராக்ட்டுகளை எடப்பாடி மகன் மிதுனின் சகலையான சந்திரஹாசனின் தந்தை ராமலிங்கத்தின் (கடந்த 2016-ல் சி.பி.ஐ. ரெய்டுக்கு ஆளானவர்) நிறுவனம், மிதுனின் மாமனார் சுப்ரமணியத்தின் வெங்கடாசலபதி அண்ட் கோ மற்றும் எடப்பாடிக்கு நெருக்கமான மதுரை நாகராஜின் எஸ்.பி.கே. அண்ட் கோ, சேகர்ரெட்டி-நாகராஜ்-சுப்ரமணியம் மூவரும் இயக்குநர்களாக உள்ள பாலாஜி டோல்வேஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுக்கு மட்டுமே தரப்பட்டுள்ளது. வேறு யாருக்கும் கிடைக்காத அளவுக்கு துறையின் உயரதிகாரிகளான ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் பார்த்துக்கொள்கின்றனர்.

ஆக, திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட தொகை 5000 கோடியில் பெருந்தொகை கடனாக வாங்கப்பட்டவை. எடப்பாடி ஆட்சி போய் வேறு யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் இந்த கடனை அடைத்துத்தான் ஆக வேண்டும். தனது சொந்தங்கள் கொள்ளையடிப்பதற்காகவே கடன் வாங்கி புது ரோடு போட்டிருக்கிறது எடப்பாடி அரசு. நிதி நெருக்கடியில் அரசு தத்தளிக்கும்போது கடன் வாங்கி உருப்படியில்லாத சாலை மேம்பாட்டு திட்டங்களை கொண்டு வருவது ஊழல்களுக்கு மட்டுமே பயன்படுகிறது'' என்றும் விவரித்தனர் நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள்.

காஞ்சிபுரத்தில் நடந்த ஜெயலலிதா பிறந்தநாள் விழா கூட்டத்தில் இந்த ஊழல் குறித்து பேசிய முதல்வரும் துறையின் அமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி, ’அனைத்து டெண்டர்களும் முறையாக ஆன்லைன் மூலம் தகுதியானவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆன்லைன் என்பதால் யார் வேண்டுமானாலும் டெண்டர் எடுக்கலாம். அதனால், இதில் எந்த ஊழலும் நடக்கவில்லை. அப்படி கூறுபவர்கள் வியாபாரிகள்'' என்றார்.

மேலும் இதுகுறித்து துறையின் திட்ட இயக்குநர் அருண் தம்புராஜின் கருத்தறிய தொடர்புகொண்டபோது அவரது எண் தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்தது.

-இரா.இளையசெல்வன்

eps EPS Son Thangatamilselvan Vetrivel
இதையும் படியுங்கள்
Subscribe