மூவர்ணக் கொடியால் மூடப்பட்ட ஸ்ரீதேவி மர்மங்கள்!

sridevi

திரையுலக கனவு தேவதையான நடிகை ஸ்ரீதேவி துபாய் நட்சத்திர ஓட்டலில் மதுவால் இறந்தாரா, பாத்-டப்பில் மூழ்கியதால் இறந்தாரா, கார்டியாக் அரெஸ்ட் காரணமா என்ற மர்மக் கேள்விகள் அவரை ரசித்த பாமரர்கள் மனதில் விடை தெரியாமல் அலை மோதுகின்றன.

கூராய்வு முடிந்தபிறகும் துபாயிலிருந்து ஸ்ரீதேவி உடல் இந்தியாவிற்கு வருவதில் ஏற்பட்ட தாமதமும் இந்த சந்தேகங்களை அதிகப்படுத்தியது. நீண்ட விசாரணையின் இறுதியில், பிப்ரவரி 27-ஆம் தேதி ஸ்ரீதேவியின் உடலை இந்தியா அனுப்பிவைக்க துபாய் காவல்துறை அனுமதியளித்தது. அன்றிரவே அனில் அம்பானியின் தனிவிமானம் மூலம் ஸ்ரீதேவி உடல் மும்பை -அந்தேரியிலுள்ள போனிகபூரின் வீட்டுக்கு வந்துசேர்ந்தது.

sridevi

மறுநாள் பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக செலிபிரேஷன் ஸ்போர்ட்ஸ் கிளப்புக்கு கொண்டுவரப்பட்ட கண்ணாடிப் பேழையில், பொன்னிற விளிம்புடன் கூடிய, சிவப்புநிற காஞ்சிபுரம் பட்டுச்சேலையில் அலங்கரிக்கப்பட்டு அஞ்சலிக்கு வைக்கப்பட்டார் ஸ்ரீதேவி. அவர் உடல் மீது மூவர்ண தேசியக் கொடியைப் போர்த்தி, முழு அரசு மரியாதை செலுத்தியது மகாராஷ்ட்ர அரசு. மாலையில் அவரது உடல் தகனம் செய்யப்பட, திரையுலகின் ஒரு சகாப்தம் நிறைவடைந்தது.

ஸ்ரீதே

திரையுலக கனவு தேவதையான நடிகை ஸ்ரீதேவி துபாய் நட்சத்திர ஓட்டலில் மதுவால் இறந்தாரா, பாத்-டப்பில் மூழ்கியதால் இறந்தாரா, கார்டியாக் அரெஸ்ட் காரணமா என்ற மர்மக் கேள்விகள் அவரை ரசித்த பாமரர்கள் மனதில் விடை தெரியாமல் அலை மோதுகின்றன.

கூராய்வு முடிந்தபிறகும் துபாயிலிருந்து ஸ்ரீதேவி உடல் இந்தியாவிற்கு வருவதில் ஏற்பட்ட தாமதமும் இந்த சந்தேகங்களை அதிகப்படுத்தியது. நீண்ட விசாரணையின் இறுதியில், பிப்ரவரி 27-ஆம் தேதி ஸ்ரீதேவியின் உடலை இந்தியா அனுப்பிவைக்க துபாய் காவல்துறை அனுமதியளித்தது. அன்றிரவே அனில் அம்பானியின் தனிவிமானம் மூலம் ஸ்ரீதேவி உடல் மும்பை -அந்தேரியிலுள்ள போனிகபூரின் வீட்டுக்கு வந்துசேர்ந்தது.

sridevi

மறுநாள் பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக செலிபிரேஷன் ஸ்போர்ட்ஸ் கிளப்புக்கு கொண்டுவரப்பட்ட கண்ணாடிப் பேழையில், பொன்னிற விளிம்புடன் கூடிய, சிவப்புநிற காஞ்சிபுரம் பட்டுச்சேலையில் அலங்கரிக்கப்பட்டு அஞ்சலிக்கு வைக்கப்பட்டார் ஸ்ரீதேவி. அவர் உடல் மீது மூவர்ண தேசியக் கொடியைப் போர்த்தி, முழு அரசு மரியாதை செலுத்தியது மகாராஷ்ட்ர அரசு. மாலையில் அவரது உடல் தகனம் செய்யப்பட, திரையுலகின் ஒரு சகாப்தம் நிறைவடைந்தது.

ஸ்ரீதேவியின் பூர்வீக கிராமம் மீனம்பட்டி, விருதுநகர் மாவட்டம் சிவகாசியிலிருந்து சாத்தூர் செல்லும் சாலையிலிருக்கிறது. பெரிய அளவிலான விவசாய நிலங்களைக் கொண்ட அய்யப்ப நாயக்கரின் இரண்டாம் மனைவி ராஜேஸ்வரிக்கு பிறந்த இரண்டு மகள்களில் மூத்தவர் ஸ்ரீதேவி. பிறந்த சில வருடங்களில் ஸ்ரீதேவி தாய்-தந்தையோடு சென்னைக்கு இடம் மாறினாலும், ஓரிரு முறை மீனம்பட்டிக்கு வந்துபோயிருக்கிறார்.

சுமார் 15 வருடங்களுக்கு முன்பு அவரது தந்தை காங்கிரஸ் சார்பில் சிவகாசி எம்.பி. தேர்தலில் போட்டியிட்ட போது பிரச்சாரத்திற்காக வந்துபோன ஸ்ரீதேவி அதன்பின் வரவில்லை. ஸ்ரீதேவிக்கு நான்கு வயதிருக்கும்போது, கவிஞர் கண்ணதாசனோடு அய்யப்பனின் வீட்டிற்கு வந்து ஸ்ரீதேவியைப் பார்த்த தலைவர் காமராஜர், "இந்தச் சிறுமியைச் சினிமாவில் சேர்த்துவிடப்பா… நல்லா வருவா'ன்னு கண்ணதாசனிடம் சொன்னார். காமராஜர் சொன்னதைத் தட்டாமல், சினிமாவில் அறிமுகம் செய்துவைத்தார் கண்ணதாசன். "ஒருவகையில் இது காமராஜர் தந்த வாழ்வு'’என ஃப்ளாஷ்பேக் சொன்னார் மீனம்பட்டிக்காரரான பாலகிருஷ்ணன்.

உத்திரப்பிரேதேச மாநிலத்தின் முஸாபர் நகரைச் சேர்ந்த அர்ஷத்கான் என்கிற துணி வியாபாரி வியாபாரம் நிமித்தமாக மீனம்பட்டிக்கு வந்திருக்கிறார். ஸ்ரீதேவியின் மரணச் செய்தி கேட்டவுடன் மறுபடியும் அங்கே வந்து, ஸ்ரீதேவியின் பூர்வீக இடத்தை வேதனையுடன் பார்த்துக்கொண்டிருந்ததைக் கண்டோம்.

சுப்பிரமணியசாமி, ""ஊடகச் செய்திகள் ஒன்றுக்கொன்று முரணாக உள்ளன. பிரேதப் பரிசோதனைக்கு முன்னரே மாரடைப்பால் இறந்தார் என மருத்துவர்கள் எப்படி சொல்லலாம். என்னைப் பொறுத்தவரை இது கொலைதான்''’என திரி கொளுத்திப் போட்டிருக்கிறார்.

"உடல்நலனுக்காக ஸ்ரீதேவி சமீப ஆண்டுகளாக என்னென்ன மருந்துகளை சாப்பிட்டு வந்தார்? அதன் அளவு என்ன? அவை ஏற்படுத்தக்கூடிய தாக்கம் என்ன? சுயநினைவின்றி குளியல் தொட்டியில் விழுந்தார் என்றால் சுயநினைவு இழக்க காரணம் என்ன? "விஸ்கி-பிராந்தி போன்ற அதிக போதை தரும் மதுபானங்களை ஸ்ரீதேவி அருந்துவதில்லை' என அரசியல்வாதி அமர்சிங் சொல்வது சரியா? கடைசி நேரத்தில் ஸ்ரீதேவி யார், யாருடன் போனில் பேசினார்? நீண்டநேரமாக ஏன் அவர் அறையிலிருந்து வெளியே வரவில்லை? போனிகபூருடன் கடைசிவரை இணக்கமாகத்தான் இருந்தாரா? "பணக்கஷ்டத்தால்தான் ஸ்ரீதேவி திரும்பவும் சினிமாவில் நடிக்கவந்தார்' என அவரது சித்தப்பா சொல்வது சரியா?' என பல கேள்விகள் தொடர்ந்தபடியே இருக்கின்றன.

துபாய் போலீசார் தங்கள் விசாரணையை முடித்துவிட்டு ஃபைலை க்ளோஸ் செய்த நிலையில், இந்திய அரசு இது குறித்து கூடுதல் விசாரணையை மேற்கொள்ளுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மறுபுறம் இயக்குநரும் ஸ்ரீதேவி ஆராதகருமான ராம்கோபால் வர்மா, “"ஸ்ரீதேவி கடைசிவரை நிம்மதியில்லாமல்தான் இருந்தார். படப்பிடிப்பைத் தவிர அவர் வாழ்வில் எப்போதும் சந்தோஷமாக இருந்ததில்லை'’என டுவிட்டரில் பெட்ரோல் குண்டு வீசியிருக்கிறார்.

-பரமசிவன், க.சுப்பிரமணியன்

ஸ்ரீதேவி வாங்கித் தந்த சீட்!

sridevi-rajiv

அரசியல் அதிகார மையத்தில் ஸ்ரீதேவிக்கு எப்போதுமே தனி செல்வாக்கு உண்டு. இவரது தந்தை அய்யப்பனுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் சிவகாசி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தந்தார் காங்கிரஸ் தலைவராக இருந்த ராஜீவ்காந்தி. ஆனால், அய்யப்பன் தோற்றுப்போனார். 1991-ல் நாடாளுமன்ற + சட்டமன்றத் தேர்தல் வந்தபோது, ஸ்ரீதேவியின் சொந்த சகோதரி லதாவின் கணவர் சஞ்சய் ராமசாமிக்கு (உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த ராமசாமியின் மகன்) சீட் வாங்க விரும்பினர். இதனையடுத்து, லதாவையும் அவரது கணவர் சஞ்சய் ராமசாமியையும் டெல்லிக்கு அழைத்துச் சென்று ராஜீவை சந்தித்தார் ஸ்ரீதேவி.

காங்கிரஸ் வேட்பாளர்களைத் தேர்வுசெய்யும் நாள் வந்தபோது தமிழகத்துக்கான வேட்பாளர் தேர்வுக் கமிட்டி சேர்மன் நரசிம்மராவ் தலைமையில் கூடியது. ஒவ்வொரு தொகுதிக்கும் வேட்பாளர் அறிவிப்பிலும் வாழப்பாடி ராமமூர்த்தி, மூப்பனார், ஆர்.வெங்கட்ராமன் இடையிலான மோதலுக்கிடையே தேர்வு நடந்தது.

அங்கு ஆஜராகியிருந்தார் ராஜீவ்காந்தி. விருதுநகர் தொகுதியை நரசிம்மராவ் கையிலெடுத்தபோது, தன் பாக்கெட்டிலிருந்து ஒரு சீட்டை எடுத்து "சஞ்சய் ராமசாமி' என்றார் ராஜீவ். எல்லோருக்கும் ஆச்சரியம். கட்சியின் மாநிலத் தலைவரான வாழப்பாடியார் எதிர்ப்பு காட்ட, ""தலைவர் ஒரே ஒரு சீட் கேட்கிறார், அதை ஏன் எதிர்க்கிறீங்க?'' என மூப்பனார் சமாதானப்படுத்தினார். விருதுநகருக்கு சஞ்சய் ராமசாமி ஓ.கே. ஆனதும், வீட்டுக்குச் சென்ற ராஜீவ், தனது செயலாளர் ஜார்ஜ் மூலம் நள்ளிரவு கடந்து 3 மணிக்கு ஸ்ரீதேவிக்கு போன் மூலம் தகவலைத் தெரிவித்தார். காலையில் முதல் ஃபிளைட்டை பிடித்து டெல்லிக்கு விரைந்த ஸ்ரீதேவி, ராஜீவை சந்தித்து நன்றி கூறினார்.

ஸ்ரீதேவி மரண மர்மங்களுக்கு விடை தெரிய, காங்கிரஸ் கட்சியாவது முயற்சிக்குமா என்றபடி பழைய நினைவுகளில் மூழ்குகிறார்கள் கதர்ச்சட்டையினர்.

-இளையர்

sridevi death
இதையும் படியுங்கள்
Subscribe