அதிகாரிகள் பிடியில் முதல்வர்! அமைச்சர் ஆவேசம்!

eps

eps-cm

கைதான துணைவேந்தர் கணபதியை தற்காலிக பணிநீக்கம் செய்திருக்கிறார் கவர்னர் பன்வாரிலால் புரோஹித். அரசுத்துறைகளில் நடக்கும் ஊழல்களுக்கு எதிராகப் போராடிவரும் சட்டப் பஞ்சாயத்து இயக்கமும், முன்னாள் துணைவேந்தர் என பலதரப்பிலிருந்தும் உயர் கல்வித்துறை ஊழல்கள் குறித்து கவர்னருக்கு புகார்கள் சென்றுள்ளன. சட்டப் பஞ்சாயத்தின் மாநிலச் செயலாளர் செந்தில் ஆறுமுகத்திடம் பேசியபோது, ""துணைவேந்தர் பதவிகள் அண்மைக்காலமாக ஏலத்தில் விடப்படுகின்றன. அந்தத் தொகை, உயர்கல்வித்துறையின் அமைச்சருக்கும், செயலாளராக இருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கும் பங்கு பிரிக்கப்பட்டுவிடுகிறது. அமைச்சருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கும் துணைவேந்தர்கள்தான் புரோக்கர்களாகச் செயல்பட்டு பல்கலைக்கழக நியமனங்களை விலை பேசுகிறார்கள்.

ministerபல்கலைக்கழகத்திலும் அதன் கட்டுப்பாட்டிலும் உள்ள கல்லூரிகளிலும் என்னென்ன நியமனங்கள் செய்யப்படவிருக்கின்றன? என்னென்ன பதவி உயர்வுகள் தரப்படவுள்ளன? இடமாறுதல்கள் எ

eps-cm

கைதான துணைவேந்தர் கணபதியை தற்காலிக பணிநீக்கம் செய்திருக்கிறார் கவர்னர் பன்வாரிலால் புரோஹித். அரசுத்துறைகளில் நடக்கும் ஊழல்களுக்கு எதிராகப் போராடிவரும் சட்டப் பஞ்சாயத்து இயக்கமும், முன்னாள் துணைவேந்தர் என பலதரப்பிலிருந்தும் உயர் கல்வித்துறை ஊழல்கள் குறித்து கவர்னருக்கு புகார்கள் சென்றுள்ளன. சட்டப் பஞ்சாயத்தின் மாநிலச் செயலாளர் செந்தில் ஆறுமுகத்திடம் பேசியபோது, ""துணைவேந்தர் பதவிகள் அண்மைக்காலமாக ஏலத்தில் விடப்படுகின்றன. அந்தத் தொகை, உயர்கல்வித்துறையின் அமைச்சருக்கும், செயலாளராக இருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கும் பங்கு பிரிக்கப்பட்டுவிடுகிறது. அமைச்சருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கும் துணைவேந்தர்கள்தான் புரோக்கர்களாகச் செயல்பட்டு பல்கலைக்கழக நியமனங்களை விலை பேசுகிறார்கள்.

ministerபல்கலைக்கழகத்திலும் அதன் கட்டுப்பாட்டிலும் உள்ள கல்லூரிகளிலும் என்னென்ன நியமனங்கள் செய்யப்படவிருக்கின்றன? என்னென்ன பதவி உயர்வுகள் தரப்படவுள்ளன? இடமாறுதல்கள் எப்போது செய்யப்பட உள்ளது? என்பதையெல்லாம் அமைச்சரும் துறையின் செகரட்டரியும் முடிவுசெய்து அதனைத் தெரிவித்துவிடுவர். அதற்கேற்ப, விலை நிர்ணயித்து ரகசியமாக விற்பார் துணைவேந்தர். அதனால், லஞ்சத்திற்கும் ஊழல்களுக்கும் துணைவேந்தர்கள் மட்டுமே பொறுப்பல்ல. துறையின் அமைச்சரும், செகரட்டரியும் பொறுப்பு. அந்த வகையில், அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஊழல்களின் நீள அகலங்களை விவரித்து கவர்னருக்கு கடிதம் அனுப்பியிருக்கிறோம்'' என்கிறார் மிக காட்டமாக!

இதற்கிடையே, கணபதி கைதின் பின்னணியிலுள்ள உயர்கல்வித்துறை ஊழல்கள் குறித்து கடந்த இதழில் விரிவாக நாம் எழுதிய செய்தி, கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனே துணைவேந்தர்கள், பதிவாளர்கள் மற்றும் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார் துறையின் செயலாளர் சுனில்பாலிவால் ஐ.ஏ.எஸ். அதில் பலவிதமான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. முதல்கட்டமாக, பாரதியார் பல்கலைக்கழக நிர்வாகத்தை கவனிக்க மூன்று பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டிருக்கிறது.

ministerஅதேசமயம், கணபதியின் ஊழல்கள் தன்னை நோக்கியும் பாய்வதால் அதிர்ந்துபோன அமைச்சர் அன்பழகன், கண்புரை அறுவைசிகிச்சை செய்து ஓய்வில் இருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கோபமாக சில விசயங்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

இதன் ரகசியங்களை அறிந்து நாம் விசாரித்தபோது, ""துவக்கத்திலிருந்தே அமைச்சர் அன்பழகனுக்கும் சுனில்பாலிவாலுக்கும் ஒத்துப்போகவில்லை. இதனை வெளிப்படையாகவே முதல்வரிடம் அன்பழகன் தெரிவித்தபோது, "சுனில்பாலிவால் நல்ல அதிகாரியாமே, தலைமைச்செயலாளரே சொல்கிறார்' என எடப்பாடி சொல்ல... "அவர் நல்ல அதிகாரின்னா உங்க பக்கத்துல வெச்சுக்குங்க. உங்ககிட்டேதான் நிறைய துறைகள் இருக்கே' என அன்பழகன் கடுமையாகச் சொல்ல, "கொஞ்ச நாள் பொறுமையா இருங்க'ன்னு சொல்லி அமைச்சரை அமைதிப்படுத்தினார் எடப்பாடி. இதனிடையே மத்திய அரசின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் எடப்பாடி அரசு சிக்கிக்கொள்கிறது. ஆட்சி அதிகாரத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடுகிறார்கள் உயரதிகாரிகள்.

அமைச்சர்கள் பலரும், தங்கள் துறைகளின் அதிகாரிகளை மாற்றுமாறு எடப்பாடியிடம் மன்றாடினர். அதன்படி மாற்ற முதல்வர் முடிவெடுக்கிறபோது, சில மாற்றங்களுக்கு மட்டுமே தலைமைச்செயலாளர் ஒப்புக்கொண்டார். பல மாற்றங்களுக்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் எடப்பாடி மீது அமைச்சர்களுக்கு கோபம். துறையின் செகரட்டரி சுனில்பாலிவாலை மாற்றும்படி மூன்றுமுறை எடப்பாடியிடம் கடிதம் கொடுத்தார் அமைச்சர் அன்பழகன். நேரிலும் வலியுறுத்தினார்.

அப்போது "தலைமைச்செயலாளரும், எனது செக்ரட்டரியும் அவருக்கு ஆதரவாக இருக்கிறார்கள். அவர்களை மீறி என்னால் எதுவும் செய்யமுடியாது' என மறுத்துவிடுகிறார் எடப்பாடி. இதைக்கேட்டு அதிர்ந்துபோன அன்பழகன், எடப்பாடியிடம் கோபமாகப் பேசிவிட்டு வெளியேறினார். இதே கோபத்தை, அ.தி.மு.க. தலைமைக்கழகத்தில் நடந்த ஒரு ஆலோசனைக் கூட்டத்தின்போது எடப்பாடியிடம் காட்டினார் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம். இதனையடுத்து தனிப்பட்ட முறையில் சண்முகத்தை அழைத்து நிலைமையைச் சொல்லி எடப்பாடி சமாதானப்படுத்தியதும் நடந்தது. ஆக, அந்தளவுக்கு உயரதிகாரிகளின் பிடியில் சிக்கி அச்சப்பட்டிருக்கிறார் முதல்வர்.

தற்போது உயர்கல்வி ஊழல் விவகாரம் பூதாகரமாகியிருப்பதால் எடப்பாடியிடம் மீண்டும் பேசிய அமைச்சர் அன்பழகன், "இப்போதாவது செகரட்டரியை மாற்றுங்கள்' என பதற்றத்துடன் சொல்ல, பழைய காரணத்தைச் சொல்லியே மீண்டும் மறுத்துள்ளார் எடப்பாடி.

இதற்கிடையே, கணபதி லஞ்சம் பெற்ற விவகாரத்தில் பல ஆதாரங்களை சேகரித்திருக்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை. இந்த ஆதாரங்கள் கோட்டையிலுள்ள ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் வரை நீள்கின்றன. "ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது ஊழல் நடவடிக்கை எடுக்க வேண்டுமானால் விஜிலென்ஸ் கமிஷனர் மோகன்பியாரேவிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் முன்அனுமதி பெறவேண்டும். இப்போதைய ஆட்சியில் அது நடக்கிற காரியமல்ல' என விரிவாக சுட்டிக்காட்டுகிறார்கள் நேர்மையான அதிகாரிகள்.

-சஞ்சய்

cm eps
இதையும் படியுங்கள்
Subscribe