அ.தி.மு.க.வைக் கைப்பற்ற அ.ம.மு.க.! ஜெ. படும் பாடு!

dinakaranparty

""இன்னும் மூன்று மாதத்தில் துரோகிகள் எடப்பாடி-பன்னீர் ஆட்சியை வீழ்த்துவோம்'' -என கடந்த ஒருவருடமாக சொல்லிக் கொண்டிருந்த டி.டி.வி.தினகரன், திடீரென ஒரு வாரத்திற்கு முன்பு, புதிய கட்சி தொடங்கப் போவதாக அறிவித்தார். தாங்கள் தேர்ந்தெடுத்துள்ள மூன்று கட்சிப் பெயர்களில் ஏதாவது ஒன்றையும், எங்கள் கட்சிக்கு குக்கர் சின்னத்தையும் ஒதுக்க, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடுமாறு, டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார் தினகரன்.

dinakaranparty

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரேகாபாலி, தினகரன் தரப்பின் கோரிக்கையை பரிசீலிக்குமாறு கடந்த 09-ஆம் தேதி இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டார். எல்லாம் நல்லபடியாக முடிந்த திருப்தியில், "மதுரை-மேலூரில் 15-ஆம் தேதி எங்களின் புதிய கட்சியும் கொடியும் அறிவிக்கப்படும்' என டெல்லியிலிருந்தவாறே அறிவித்தார் தினகரன்.

தினகரன் அறிவித்த மறுநிமிடமே விழாவுக்கான ஏற்பாடுகளை விறுவிறுப்பாக செய்ய ஆரம்பித்தார் முன்னாள் எம்.எல்.ஏ. மேலூர் சாமி. அவருக்கு ஒத்தாசையாக செந்தில் பாலாஜி, பழனியப்பன், மாணிக்க ராஜா, திருச்சி மனோகரன் ஆகியோர் இரவு-பகல் பார்க்காமல், வேலைகளை துரிதப்படுத்தினர். இதையெல்லாம் பார்த்தபின் ஆளும் தரப்பு சும்மா இருக்குமா? தனது விசுவாசியான மேலூர் மாஜி எ

""இன்னும் மூன்று மாதத்தில் துரோகிகள் எடப்பாடி-பன்னீர் ஆட்சியை வீழ்த்துவோம்'' -என கடந்த ஒருவருடமாக சொல்லிக் கொண்டிருந்த டி.டி.வி.தினகரன், திடீரென ஒரு வாரத்திற்கு முன்பு, புதிய கட்சி தொடங்கப் போவதாக அறிவித்தார். தாங்கள் தேர்ந்தெடுத்துள்ள மூன்று கட்சிப் பெயர்களில் ஏதாவது ஒன்றையும், எங்கள் கட்சிக்கு குக்கர் சின்னத்தையும் ஒதுக்க, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடுமாறு, டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார் தினகரன்.

dinakaranparty

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரேகாபாலி, தினகரன் தரப்பின் கோரிக்கையை பரிசீலிக்குமாறு கடந்த 09-ஆம் தேதி இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டார். எல்லாம் நல்லபடியாக முடிந்த திருப்தியில், "மதுரை-மேலூரில் 15-ஆம் தேதி எங்களின் புதிய கட்சியும் கொடியும் அறிவிக்கப்படும்' என டெல்லியிலிருந்தவாறே அறிவித்தார் தினகரன்.

தினகரன் அறிவித்த மறுநிமிடமே விழாவுக்கான ஏற்பாடுகளை விறுவிறுப்பாக செய்ய ஆரம்பித்தார் முன்னாள் எம்.எல்.ஏ. மேலூர் சாமி. அவருக்கு ஒத்தாசையாக செந்தில் பாலாஜி, பழனியப்பன், மாணிக்க ராஜா, திருச்சி மனோகரன் ஆகியோர் இரவு-பகல் பார்க்காமல், வேலைகளை துரிதப்படுத்தினர். இதையெல்லாம் பார்த்தபின் ஆளும் தரப்பு சும்மா இருக்குமா? தனது விசுவாசியான மேலூர் மாஜி எம்.எல்.ஏ.தமிழரசனை அழைத்த அமைச்சர் உதயகுமார், ""போக்குவரத்துக்கு இடையூறாக ரோட்டை மறித்து பந்தல் போடுகிறார்கள், கட்-அவுட் வைக்கிறார்கள்'' என மேலூர் போலீசில் புகார் கொடுக்க வைத்தார். ஆனால் போலீசாரோ, "பெர்மிஷன் வாங்கித்தான் எல்லாம் நடக்குது' எனக்கூறி, புகாரை ரிட்டர்ன் பண்ணிவிட்டனர். இது ஆளுந்தரப்புக்கு முதல் அதிர்ச்சி.

இந்தத் தகவலை டெல்லியிலிருந்த டி.டி.வி.க்கு மேலூர் சாமி சொன்னதும், ""இப்படியெல்லாம் இடைஞ்சல் பண்ணுவார்கள்னு தெரியும். ’எதா இருந்தாலும் தில்லா ஃபைட் பண்ணுங்க. புதுக்கட்சியை அறிவிக்கும் பொதுக்கூட்டத்தை சென்னையில் பிரம்மாண்டமா நடத்தி, துரோகிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கலாம்னு தான் நினைச்சேன். ஆனா மதுரை தான் எனக்கு ராசியான ஊரு'' என உற்சாகமாக கூறியிருக்கிறார் டி.டி.வி.

எல்லா ஏற்பாடுகளும் பக்காவாக முடிந்தபின், 14-ஆம் தேதி இரவு மதுரை வந்தார் தினகரன். மறுநாள் காலை 7 மணியிலிருந்தே நூற்றுக்கணக்கான வேன்கள், கார்கள், பஸ்களில் ஆண்களும் பெண்களும், மேலூர் பொதுக்கூட்ட மைதானத்தில் குவியத் தொடங்கினர். தினகரன் படம் போட்ட ஸ்டிக்கர் ஒட்டிய அனைத்து வாகனங்களுக்கும் நான்கு வழிச்சாலையில் உள்ள டோல்கேட்டில் மொத்தமாக பணத்தைக் கட்டிவிட்டார் புறநகர் மா.செ.மகேந்திரன். இவரது ஆளான உசிலம்பட்டி பிரகதீஸ்வரன், டோல்கேட்டில் உட்கார்ந்து புதுக்கட்சி விழாவுக்கு வரும் வாகனங்களை கணக்கெடுத்துக் கொண்டிருந்தார்.

பொதுக்கூட்ட மேடையில் எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதாவுக்கு நிகராக சசிகலாவும், தினகரனும் பேனர்களில் சிரித்துக் கொண்டிருந்தனர். மேடைக்கு அருகே இருந்த கட்-அவுட்டில் அண்ணாவை ஓரமாக வைத்தவர்கள், பெரியாரைத் தவிர்த்துவிட்டார்கள். 8:45-க்கு ஓட்டலில் இருந்து புறப்பட்ட தினகரனுக்கு வழியெங்கும் அமர்க்களமான வரவேற்புதான். 10 மணிக்கு மேடையேறிய தினகரன், அங்கு அமர்ந்திருந்த தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேருடன், கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்னசபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன் ஆகிய எம்.எல்.ஏ.க்களைப் பார்த்து உற்சாகமானார்.

அப்போது மேடையில் பேசிக் கொண்டிருந்த நாஞ்சில் சம்பத்தைப் பார்த்து "10:30-க்குள் நல்ல நேரம் முடியப் போகிறது' என ஜாடை காட்டியதும் பேச்சை நிறுத்தினார் நாஞ்சில் சம்பத். மைக் பிடித்த தினகரன், திரும்பத் திரும்ப இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். தரப்பை வெளுத்து வாங்கிவிட்டு, ""நமது கட்சியின் பெயர் "அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்', இதோ நமது கொடி என்றவாறு, கருப்பு-வெள்ளை-சிவப்பில் ஜெயலலிதா உருவம் பொறிக்கப்பட்டிருந்த கொடியை அறிமுகப்படுத்திவிட்டு, மேடை அருகில் இருந்த கொடி மேடையில் கட்சிக் கொடியை ஏற்றினார்.

நல்ல நேரம் முடிவதற்குள் எல்லாவற்றையும் நடத்தி முடித்த தினகரன், ராகுகாலம் ஆரம்பித்ததும் பேச ஆரம்பித்தார். ""அ.தி.மு.க. எனும் மாபெரும் இயக்கத்தை துரோகிகளிடம் இருந்து மீட்போம், இரட்டை இலையை மீட்போம்'' எனப் பேசி அ.ம.மு.க. தொண்டர்களை கிறுகிறுக்க வைத்தார் டி.டி.வி.

peoplevoice

நிகழ்ச்சி முடிந்து கிளம்பத் தயாரான டி.டி.வி.யிடம், "கட்சிப் பெயரில் திராவிடம் இல்லையே?' என நாம் கேட்டதற்கு, ""அதான் அம்மா இருக்காங்களே'' -சிம்பிளாக சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.

அவர் சென்றபின், அ.ம.மு.க.தொண்டர்களின் பல்ஸ் பார்த்தோம்.

குலமங்கலம் ராஜேந்திரன்: ஓ.பி.எஸ்.சும் இ.பி.எஸ்.சும் அம்மாவிடம் கூழைக் கும்பிடு போட்டவர்கள். இப்ப பி.ஜே.பி.க்கு அடிமையா இருக்கிறார்கள். இனிமே டி.டி.வி.தான் அ.தி.மு.க.வுக்குத் தலைவர்.

செல்வம்: எம்.பி. எலெக்ஷன் வரைக்கும்தான் குக்கர் சின்னம்னு சொல்றாரு. ஒரே குழப்பமா இருக்குங்க.

நாகை சத்தியா: கட்சிக்கு இன்னார்தான் அடுத்த தலைவர்னு, அம்மா அடையாளம் காட்டாமல் போனது தப்பு.

சாயல்குடி பாண்டியன்: இருபத்தஞ்சு லட்சம் செலவு செஞ்சு நல்ல கூட்டத்தைக் கூட்டிப்பிட்டாரு சாமி.

கொட்டாம்பட்டி பச்சையம்மா: காலை டிபன், தண்ணீர், டீ செலவுக்கெல்லாம் காசு கொடுத்து நல்ல மரியாதையோட கூட்டி வந்தாங்க.

கூட்டத்திற்கு வந்தவர்கள் ஊர்களுக்குத் திரும்பிப் போகும்போது, அனைத்து வாகனங்களிலும் அ.ம.மு.க.வின் கொடியைக் கட்டியிருந்தார்கள் டி.டி.வி.யின் தொண்டர்கள்.

எம்.ஜி.ஆர். ஆட்சி அமைப்பேன் எனச் சொல்லி பகீரூட்டினார் ரஜினி. ஜெயலலிதா ஆட்சி அமைப்பேன் என திகிலூட்டியிருக்கிறார் தினகரன்.

-அண்ணல், ஷாகுல்

----------------------------------------

எடுத்த எடுப்பில் அதிருப்தி!

தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் கூட்டத்தைக் கூட புறக்கணித்து, மதுரை மேலூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை தொடங்கி வைத்தார் ஆர்.கே. நகர் எம்.எல்.ஏ. தினகரன். ஆனால் கழகம் தொடங்கிய மறுநாள், மதுரை ஜெயந்திபுரத்தில் ரகசிய கூட்டம் போட்டு இராஜலிங்கத்துக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர் அ.ம.மு.க.வினர். "கொம்பன்' படத்தில் வில்லனாக நடித்திருக்கும் இவர், ஓ.பி.எஸ். அணியிலிருந்து தினகரன் அணிக்குத் தாவியவர்.

""ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரனுக்கு எதிரா வாக்கு கேட்டவருக்கே பதவியா? அடுத்து செல்லூர் ராஜு வந்தா அவருக்கும் பதவியைத் தூக்கிக் கொடுத்துடுவாங்களா?'' என கொதித்திருக்கின்றனர். எதிர்ப்பாளர்களை எப்படி சமாதானப்படுத்துவதென்ற யோசனையில் இருக்கிறாராம் தினகரன்.

Amma Makkal Munnetra Kazhagam dinakaran Dinakaran New party Dinakaran Party Flag Dinakaran Party Name
இதையும் படியுங்கள்
Subscribe