நாடாளுமன்றத் தொகுதி வாரியாக அறிவாலயத்தில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகிறது அமைச்சர்கள் அடங்கிய தி.மு.க. குழு. அந்த கூட்டத்துக்குச் சென்று, அதில் சமாதானப்படுத்தப்பட்ட நிலையிலும் இன்னும் ஒருவரோடு ஒருவர் உரசிக்கொண்டிருக்கிறார் கள் வேலூர் மாவட்ட குடியாத்தத்தைத் சேர்ந்த தி.மு.க. ஒன்றியக் கழக நிர்வாகிகள். அந்த அறிவாலயக் கூட்டத்தைத் தொடர்ந்து, குடியாத்தம் தெற்கு ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் வெளியிட்டிருக்கும் ஒரு துண்டுப்பிரசுரம் பலத்த பரபரப்பை அங்கே ஏற்படுத்தி வருகிறது. அந்தத் துண்டுப் பிரசுரத்தில்...

தகுதியற்ற நபர்களிடமிருந்து எங்களை மீட்ட உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி’ என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ff

அண்ணா அறிவாலயத்தில் அப்படி என்ன பஞ்சாயத்து நடந்தது? என குடியாத்தம் பகுதி தி.மு.க. நிர்வாகிகளிடம் நாம் விசாரித்தபோது...”"குடியாத்தம் ஒன்றியம் குறித்து உதயநிதி பேசும் போது, கடந்த நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் நன்றாக ஓட்டுக் களை வாங்கித் தந்துள்ளீர்கள். பாராட்டுக்கள்' என சிட்டிங் ஒ.செ.க்களைப் பாராட்டினார். அப்போது அங்கிருந்த முன்னாள் ஒ.செ. கிருஷ்ணமூர்த்தி, "தேர்தல் நேரத்தில் நான்தான் ஒ.செ.வாக இருந்தேன். நான்தான் கட்சிக்கு அதிக ஓட்டுக்களை வாங்கித் தந்தேன். இப்போது ஒ.செ.க்களாக இருப்பவர்கள், தேர்தல் நேரத்தில் இல்லை' என்றதோடு, குடியாத்தம் ஒன்றிய தி.மு.க.வில் நடந்துவரும் நிர்வாகக் குளறுபடிகளையும் பட்டியலிட்டார். இதையெல்லாம் கூர்ந்து கவனித்த உதயநிதி, ஒ.செ.அன்பரசனிடம், "பினாமியா செயல் படறீங்களா?' எனக் கேட்டு, "இனி அப்படிச் செயல்படக்கூடாது' என எச்சரித்தார். இந்த விவகாரம்தான் இப்போது துண்டுப் பிரசுரம் மூலம் வெளிப்பட்டிருக்கிறது''’என்றார்கள் மகிழ்ச்சியாக.

Advertisment

இதன் பிறகும் ஏன் பிரச்சினை என்று, குடியாத்தம் ஒன்றிய கவுன்சிலர்கள், ஒன்றிய நிர்வாகிகள் சிலரிடம் பேசியபோது, "இங்கே கிழக்கு ஒன்றியத்துக்கு நத்தம் பிரதீஷ், மேற்கு ஒன்றியத்துக்கு கல்லூர் ரவி, வடக்கு ஒன்றியத்துக்கு சத்தியானந்தம், தெற்கு ஒன்றியத்துக்கு அன்பரசன் ஆகியோர் செயலாளர்களாக பொறுப்பில் இருக்கிறார்கள். இவர்களில், கிழக்கு ஒ.செ.வான பிரதீஷ், தெற்கு ஒ.செ.வாக தனது நண்பரான அன்பரசனை நியமிக்கச் சொல்லி மா.செ. நந்தகுமாரிடம் சிபாரிசு செய்து அவரைப் பதவிக்குக் கொண்டுவந்தார். அதன்பிறகு அன்பரசனை செயல்பட விடாமல் தடுத்து, தெற்கு ஒன்றியத்திலும் பிரதீஷே நிர்வாகம் செய்கிறார். உட்கட்சி தேர்தலின்போது, கிழக்கு ஒன்றி யத்திலுள்ள 14 ஊராட்சி, தெற்கு ஒன்றியத்திலுள்ள 13 ஊராட்சி கிராமங்களில் 200 கிளைகளில் போட்டி இருந்தது. அங்கு தேர்தலே நடத்தாமல், தீவிரமான களச் செயல்பாட்டாளர்களாக இருந்த கிளைச் செயலாளர்கள், அவைத் தலைவர்கள், கிளை நிர்வாகிகள் ஆகியோரையெல்லாம் ஒதுக்கிவிட்டு, தனக்கு வேண்டப்பட்டவர்களை கிளைக் கழகப் பொறுப்புகளில் நியமித்தார் பிரதீஷ்.

குடியாத்தம் கிழக்கு ஒன்றியத்துக்குட்பட்ட அகரம்சேரி, சின்னசேரி, கூத்தம்பாக்கம், பள்ளிக் குப்பம், கொல்லமங்கலம் ஆகிய ஊராட்சிகளின் கிளைகளில் போட்டியில்லாமல் கி.செ. மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அகரம்சேரி ஊராட்சி என்பது மறைந்த முன்னாள் எம்.பி. சண் முகத்தின் ஊர். அங்கே உட்கட்சியில் போட்டியே இல்லை, அங்கேயும் கி.செ. மாற்றப்பட்டார். அதேபோல் 36 கிளைகளில் சமரசமாக போட்டியே இல்லாமல் தேர்வானவர்களையும் பிரதீஷ் மாற்றினார். தேர்தல் நடத்தவந்த ஆணையர்கள் மூலமாக மோசடியாக ஒரு பட்டியல் தயார் செய்து மேலே அனுப்பினார். இதனை ஏற்கக்கூடாது என நாங்கள் மா.செ.வுக்குத் தெரிவித்தோம். ஆனால். இதுவரை பதில் இல்லை. தீபாவளி, பொங்கலின்போது தலைமைக் கழக உத்தரவுப்படி தரப்படும் பரிசுப் பொருட்கள் கூட, பிரதீஷ் குறிப்பிடுகிறவர்களுக்கு மட்டுமே தரப்படுகின்றன.

கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி, குடியாத்தம் எம்.எல்.ஏ. அமுலு விஜயன், தனது தொகுதியில் உள்ள ஒவ்வொரு கிளைக்கும் ஆயிரம் ரூபாய் தரச் சொல்லி ஒ.செ.க்களிடம் பணத்தை ஒப்படைத்தார். கிழக்கு ஒ.செ. நத்தம் பிரதீஷோ, தெற்கு ஒன்றியத் துக்கும் சேர்த்து பணத்தை வாங்கிக் கொண்டுபோய் தன் விருப்பம்போல் வழங்கினார். 10 ஆண்டுகாலம் எதிர்க்கட்சியாக இருந்தபோது கட்சிக்காக உழைத்த வர்களை எல்லாம் ஒதுக்கிவிட்டு, கட்சிக்கு சம்பந் தமே இல்லாதவர்களை பொறுப்புக்கு கொண்டு வந்திருக்கிறார். இப்படிப்பட்ட ஒ.செ.பிரதீஷ் செய் யும் தவறுகளை மா.செ. நந்தகுமார் நினைத்திருந் தால் தடுக்கலாம். ஆனால் அவர் அவரை ஆதரிக் கிறார். இதனால் கட்சிக்காக உழைத்த பலரும் மனம் வெறுத்துப்போய், "எங்களுக்கு கட்சி முக்கியம்தான், அதைவிட சுயமரியாதை மிகவும் முக்கியம்' என்று ஒதுங்கி நிற்கிறார்கள். அவர்களின் ஆதங்கத்தை கட் சித் தலைமையும் கண்டுக்கொள்ளாமல் இருக்கிறது'' ’என்றார்கள் விரக்தியும், கோபமும் கலந்த குரலில்.

Advertisment

குற்றச்சாட்டுகள் குறித்து கிழக்கு ஒ.செ.வான நத்தம் பிரதீஷிடமே நாம் கேட்டபோது, ”"பதவி கிடைக்காதவர்கள் அந்த ஆதங்கத்தில் என்மீது ஏதாவது குற்றம்சாட்ட வேண்டும் என்று இப்படியொரு நோட்டீஸ் போட்டுள்ளார்கள். அந்த ஒன்றியத்தைச் சேர்ந்த கட்சியினர் யாரும் என் மீது குற்றம்சாட்டவில்லை. அந்த ஒன்றியத்தில் கவுன்சிலர்கள்தான் பணிகளை எடுத்துச் செய்கிறார்கள். நான் இப்போதுதான் இரண்டு பணிகளை எடுத்துச் செய்கிறேன்''’ என்றார் காட்டமாய்.

கட்சிப் பொதுச்செயலாளரான அமைச்சர் துரைமுருகனின் சொந்த மாவட்ட தி.மு.க.வி லேயே இவ்வளவு உரசல்கள்! இதை எப்படி சரிசெய்யப் போகிறது அறிவாலயம்?

dd