மேற்கு வங்கத்தில் 8 கட்டத் தேர்தல்களில் இதுவரை 7 கட்டத் தேர்தல்கள் முடிவடைந்துள்ளன. இந்தியா முழுக்க கொரோனா இரண்டாம் அலையின் பரவல் மிகத்தீவிரமாக உள்ளது. அனைத்து மாநிலங்களிலும், கொரோனா பரவல் தீவிரத்துக்கேற்ப பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால், தேர்தல் கமிஷனின் கட்டுப்பாட்டிலுள்ள மேற்குவங்கத்தில் மட்டும், கொரோனா பரவல் குறித்து எவ்வித அச்சமுமின்றி, ஒவ்வொரு கட்டத் தேர்தலும், தேர்தலுக்கான பிரச்சாரமுமாகத் தேர்தல் திருவிழா அமோகமாக நடக்கிறது.
ஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்கள் கட்சியின் பிரச்சாரத்தில் கூட்டத்தைக் கூட்டி வலிமையை நிரூபிப்பதில் தீவிரம் காட்டுகின்றன. உள்துறை அமைச்சர் அமித்ஷாவே, தங்கள் கட்சியின் பிரச்சார ஊர்வலத்தை ட்விட்டரில் காட்டி பெருமைப்பட்டுக்கொண்டார். இப்படியாக, மேற்குவங்கத்தைத் தாண்டிய இந்தியாவில் பதட்டமான சூழல் இருக்கும்போது, மேற்குவங்கத்தில் மட்டும் தேர்தல் கமிஷனின் நல்லாசியுடன் தேர்தல் திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கொரோனாப் பரவலைக் காரணம் காட்டி, 5, 6, 7-வது கட்டத் தேர்தல்களை ஒரேகட்டமாக நடத்தும்படி தேர்தல் கமிஷனைக் கேட்டபோது, அதற்கு மறுத்துவிட்டது. ஏற்கனவே தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவிட்டதாகவும், இனி அதில் மாறுதல் செய்யமுடியாதென்றும் குறிப்பிட்டது.
மேலும், கொரோனா பரவலுக்கான விதிமுறைகள் கடுமையாகச் செயல்படுத்தப்படுவதாகவும், தேர்தல் பரப்புரைக்கான நேரத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், பரப்புரையை 48 மணி நேரத்துக்குமுன் முடித்துக்கொள்ள வேண்டும் என்பதை, சாக்குபோக்கு சொல்- 72 மணி நேரமாக அதிகரித்துள்ளதாகவும் கூறியிருந்தது.
தேர்தல் கமிஷன் இப்படி தனது பொறுப்பைத் தட்டிக்கழித்துச் செயல்பட் டாலும்கூட, மம்தா பானர்ஜி தனது பொறுப்பை உணர்ந்து, கொல்கத்தா பிரச்சாரத் தைப் பாதியிலேயே முடித்துக் கொண்டதோடு, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், "இனி தேர்தல் பிரச் சாரத்தில் ஈடுபடமாட்டேன்' என்று அறிவித்துள்ளார்.
அவர் அறிவித்ததை யடுத்து, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் தனது மேற்குவங்கத் தேர்தல் பிரச் சாரத்தை முழுமையாக ரத்து செய்வதாக அறிவித்தார். அதோடு, "மற்ற தலைவர்களும் இதுகுறித்து சிந்திக்க வேண் டும்' என்று வேண்டுகோள் வைத்தார். ஆனால் பா.ஜ.க. தரப்பில் தேர்தல் பிரச்சா ரத்தை ரத்துசெய்யும் எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை. உள்துறை அமைச்சர் அமித்ஷா, மேற்குவங்கத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம், ஊர்வலங்கள் என பலவற்றி லும் பங்கேற்கவுள்ளதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது.
"தேர்தல் கமிஷனின் செயல்பாடு சரியில்லாததால், இது விஷயத்தில் உயர்நீதி மன்றம் தலையிட்டு தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும்' என்றுகூறி மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப் பட்டிருந்தன. அதுகுறித்து விசாரித்த உயர்நீதிமன்றம், தேர்தல் கமிஷனைக் கடுமை யாக விமர்சித்திருந்தது. "நாட்டில் கொரோனா பரவல் குறித்து தேர்தல் கமிஷன் கொஞ்சம் அக்கறையில்லாமல் மேற்குவங்கத்தில் 8 கட்டமாகத் தேர்தலை நடத்திக்கொண்டிருக்கிறது. 1990-களில் டி.என்.சேஷன் தேர்தல் ஆணையராக இருந்தபோது, பல்வேறு சீரமைப்புகளைக் கொண்டு வந்தார். அவரது காலத்தில் செயல்பட்டதில் பத்தில் ஒரு பங்குகூட தற்போதுள்ள தேர்தல் கமிஷன் செயல்படவில்லை' என்று காட்டமாகத் தெரிவித்தது.
2019-ம் ஆண்டு நவம்பரில் டி.என்.சேஷனின் மறைவின்போது ராகுல்காந்தி தனது ட்விட்டர் பதிவிலும் கிட்டத்தட்ட இதே கருத்தைத்தான் குறிப்பிட்டிருந்தார். தேர்தல் கமிஷனுக்கு தற்போது நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், மேற்குவங்கத் தேர்தல் பிரச்சாரத்தில் கெடுபிடிகளைச் சற்று அதிகரித்துள்ளது. தேர்தல் பொதுக்கூட்டங்களில் அதிகபட்சம் 500 பேருக்கு மேல் கலந்துகொள்ளத் தடை விதித்துள்ளது.
அதேபோல, அனைத்துவிதமான அரசியல் பேரணிகளுக்கும் தடை விதித்துள்ளது. ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ள பேரணி களுக்கும், அனுமதியை ரத்து செய்துள்ளது. தேர்தல் கமிஷன் இப்படி யெல்லாம் அறிவித்து தன்னை ஒரு ஸ்ட்ரிக்ட் ஆபீசர் போலக் காட்டிக் கொள்ள நினைத்தாலும்கூட, மேற்கு வங்கத்தில் ஆட்சியமைத்தே ஆக வேண்டுமென்று பல்வேறு உத்திகளைச் செயல்படுத்திவரும் அமித்ஷா- மோடி கூட்டணிக்குமுன் இந்த அதிகாரமெல்லாம் செல்லுபடியாகுமா என்பது கேள்விக்குறியே!
அதுபோலவே, தமிழ்நாட்டில் ஏறத்தாழ ஒருமாத காலமாக மின்னணு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களின் ஸ்ட்ராங்க் ரூமில் உள்ளன. அந்த மையங்களுக்கு மர்மநபர்கள் நள்ளிரவு நேரங்களில் வருவதும், ஆன்லைன் வகுப்பு என்ற பெயரில் மையங்கள் அமைந்துள்ள கல்லூரி வளாகங்களில் உலவுவதும், சம்பந்தமேயில்லாமல் கண்டெய்னர் லாரிகளைக் கொண்டுவந்து நிறுத்துவதும், அதில் உள்ள கருவிகளும், வேட்பாளர்களின் ஏஜெண்ட்டுகளுக்கு மட்டுமல்ல, வாக்காளர்களுக்கும் சந்தேகத்தை வலுவாக்கியுள்ளது.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றமும் தேர்தல் ஆணையத்தைக் கண்டித்திருப்பதுடன், "கொரோனா விதிமுறைகளை ஒழுங்காகக் கடைப்பிடிக்காவிட்டால் வாக்கு எண்ணும் தேதியை தள்ளி வைக்க நேரிடும்' எனத் தெரிவித்துள்ளது.
"எடுப்பார் கைப்பிள்ளை' போல செயல்படும் தேர்தல் ஆணையம் குறித்து, நீதிமன்றங்கள் தெரிவிக்கும் கருத்துகள் வாக்காளர்களின் வாய்ஸ் போலவே உள்ளன.
-தெ.சு.கவுதமன்