கோர்ட், கோர்ட்டாக ஏறும் ஓ.பி.எஸ்! கொடி, சின்னம் கிடைக்குமா? அ.தி.மு.க. பஞ்சாயத்து!

ss

"அ.தி.மு.க.வின் பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றைப் பயன்படுத்தக் கூடாது என ஓ.பி.எஸ்.ஸுக்கு விதிக்கப்பட்ட தடை செல்லும்' என்று டிவிசன் பெஞ்சின் உத்தரவு, ஓ.பி.எஸ்.ஸுக்கு பின்னடைவை தந்திருப்பதாகச் சொல்லப்பட்டாலும், உச்ச நீதிமன்றத்தில் இந்த வாரம் வரவிருக்கும் முக்கிய வழக்கினை எதிர்பார்த்து நம்பிக்கையுடன் இருக்கிறார் ஓ.பி.எஸ்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க.வில் உருவான பிளவுகள் அந்தக் கட்சியை சின்னாபின்னமாக்கி இப்போதுவரை கோர்ட் கோர்ட்டாக அலைந்துகொண்டிருக்கிறார்கள் இ.பி.எஸ்.ஸும் ஓ.பி.எஸ்.ஸும்.

சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு ஒற்றைத் தலைமையை உருவாக்க எடப்பாடி முயற்சித்தபோது, எடப்பாடிக்கும் பன்னீருக்கும் மோதல் வெடித்தது. கட்சியின் பொதுக் குழுவைக் கூட்டி பொதுச்செயலாளரான எடப்பாடி, ஓ.பி.எஸ். உள்பட அவரது ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கி தீர்மானமும் நிறைவேற்றினார். இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் ஓ.பி.எஸ். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி, "பொதுக்குழு செல்லாது' என உத்தரவிட்டார். இதனை எதிர்த்து இரு நீதிபதிகள் அடங்கிய பெஞ்சில் எடப்பாடி மேல்முறையீடு செய்ய, அங்கு எடப்பாடிக்கு சாதகமாக "பொதுக்குழு செல்லும்' என தீர்ப்பளிக்கப்பட்டது.

இதனை எதிர்த்தும், தீர்மானங்களுக்கு தடை கேட்டும் உச்சநீதிமன்றத்தில் ஓ.பி.எஸ். மேல்முறையீடு செய்ய, "பொதுக்குழு செல்லும்' என்ற தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், "தீர்மானங்கள் குறித்து உயர் நீதிமன்றத்தை அணுகலாம்' என்று தீர்ப்பளித்தது.

பொதுக்குழு செல்லும் என்றாலே அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் செல்லும் என்பதை ஓ.பி.எஸ்.ஸுக்கு அவர் தரப்பு வழக்கறிஞர்கள் எடுத்துச் சொன்னபோதும், அதனை ஏற்க மறுத்த ஓ.பி.எஸ்., தீர்மானத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார். வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ஓ.பி.எஸ். உள்ளிட

"அ.தி.மு.க.வின் பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றைப் பயன்படுத்தக் கூடாது என ஓ.பி.எஸ்.ஸுக்கு விதிக்கப்பட்ட தடை செல்லும்' என்று டிவிசன் பெஞ்சின் உத்தரவு, ஓ.பி.எஸ்.ஸுக்கு பின்னடைவை தந்திருப்பதாகச் சொல்லப்பட்டாலும், உச்ச நீதிமன்றத்தில் இந்த வாரம் வரவிருக்கும் முக்கிய வழக்கினை எதிர்பார்த்து நம்பிக்கையுடன் இருக்கிறார் ஓ.பி.எஸ்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க.வில் உருவான பிளவுகள் அந்தக் கட்சியை சின்னாபின்னமாக்கி இப்போதுவரை கோர்ட் கோர்ட்டாக அலைந்துகொண்டிருக்கிறார்கள் இ.பி.எஸ்.ஸும் ஓ.பி.எஸ்.ஸும்.

சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு ஒற்றைத் தலைமையை உருவாக்க எடப்பாடி முயற்சித்தபோது, எடப்பாடிக்கும் பன்னீருக்கும் மோதல் வெடித்தது. கட்சியின் பொதுக் குழுவைக் கூட்டி பொதுச்செயலாளரான எடப்பாடி, ஓ.பி.எஸ். உள்பட அவரது ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கி தீர்மானமும் நிறைவேற்றினார். இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் ஓ.பி.எஸ். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி, "பொதுக்குழு செல்லாது' என உத்தரவிட்டார். இதனை எதிர்த்து இரு நீதிபதிகள் அடங்கிய பெஞ்சில் எடப்பாடி மேல்முறையீடு செய்ய, அங்கு எடப்பாடிக்கு சாதகமாக "பொதுக்குழு செல்லும்' என தீர்ப்பளிக்கப்பட்டது.

இதனை எதிர்த்தும், தீர்மானங்களுக்கு தடை கேட்டும் உச்சநீதிமன்றத்தில் ஓ.பி.எஸ். மேல்முறையீடு செய்ய, "பொதுக்குழு செல்லும்' என்ற தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், "தீர்மானங்கள் குறித்து உயர் நீதிமன்றத்தை அணுகலாம்' என்று தீர்ப்பளித்தது.

பொதுக்குழு செல்லும் என்றாலே அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் செல்லும் என்பதை ஓ.பி.எஸ்.ஸுக்கு அவர் தரப்பு வழக்கறிஞர்கள் எடுத்துச் சொன்னபோதும், அதனை ஏற்க மறுத்த ஓ.பி.எஸ்., தீர்மானத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார். வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ஓ.பி.எஸ். உள்ளிட்டவர்களின் மனுக்களை தள்ளுபடி செய்தார்.

அப்போதும் அசராத ஓ.பி.எஸ்., உயர்நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்சின் கதவுகளைத் தட்டியபோது, "பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதால் அதன் தீர்மானங்களுக்கு தடை விதிக்க முடியாது' என்று கூறி, ஓ.பி.எஸ்.ஸின் மனுவை நீதிபதிகள் மகாதேவனும் ஷபீர் அகமதுவும் தள்ளுபடி செய்தனர்.

ops

இதன்பிறகும் அமைதியாகவில்லை ஓ.பி.எஸ். உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். இதன் மீதான விசாரணைதான் ஜனவரி 19-ல் வரவிருக்கிறது.

இந்த நிலையில்தான், "அ.தி.மு.க.வின் பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பி.எஸ். உள்ளிட்டவர் களுக்கு தடை விதிக்கவேண்டும்' என்று கடந்த செப்டம்பர் மாதம் வழக்குத் தொடர்ந்தார் எடப் பாடி பழனிச்சாமி. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார், பதில் மனு தாக்கல் செய்ய ஓ.பி.எஸ்.ஸுக்கு உத்தரவிட்டார். விசாரணையின் ஒரு கட்டத்தில், அ.தி.மு.க. பெயர், கொடி, சின்னம் பயன்படுத்த ஓ.பி.எஸ்.ஸுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார் நீதிபதி சதீஷ்குமார். குஷியானார் எடப்பாடி.

இதனை எதிர்த்து டிவிசன் பெஞ்சில் ஓ.பி.எஸ். முறையிட்டார். ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இரு தரப் பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டது. இரு தரப் பின் வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் மகாதேவன், ஷபீர்அகமது இருவரும் ஜனவரி 11-க்கு தீர்ப்பை தள்ளிவைத்தனர். அன்றைய தினம் தீர்ப்பை வாசித்த நீதிபதிகள், "தனி நீதிபதி கொடுத்த இடைக் காலத் தடை தொடரும். தனிநீதிபதியை அணுகி நிவா ரணம் பெற்றுக்கொள்ளலாம்' என்று கூறி ஓ.பி. எஸ்.ஸின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

eps

இந்தச் சூழலில்தான், அ.தி.மு.க. விவகாரத் தில் சட்டரீதியிலான அனைத்து முயற்சிகளும் ஓ.பி.எஸ்.சுக்கு பின்னடைவையே தந்துவருவதாக அவரது ஆதரவாளர்கள் சோர்வடைந்து வருகின்ற னர். அ.தி.மு.க. தொண்டர்களின் உரிமை மீட்புக் கூட்டத்தை தமிழகம் முழுவதும் நடத்திவரும் ஓ.பி.எஸ்.ஸிடம், இந்தப் பின்னடைவை ஆதங்கத்துடன் விசாரிக்கின்றனர் ஆதரவாளர்கள்.

இதுகுறித்து அவர்களிடம் பேசும் ஓ.பி.எஸ்., ’கட்சியின் பெயர், கொடி, சின்னம் குறித்த விவ காரத்தில் கொடுக்கப்பட்ட தடை தொடரும் என்பது நமக்கு பின்னடைவு இல்லை. தனி நீதிபதியிடமே முறையிடலாமே, "எங்களிடம் ஏன் வந்தீர்கள்?' என்பதுதான் நீதிபதிகளின் கேள்வி. அதனால், "தனி நீதிபதியிடம் நமக்கு நல்லது நடக்கும். அதே சமயம், தீர்மானங்களை எதிர்த்து நாம் போட்ட முக்கிய வழக்கு அடுத்த வாரம் சுப்ரீம் கோர்ட்டில் வருகிறது. அந்த விசாரணையில் நமக்கு சாதகமாக எல்லாம் நடக்கும், கவலைப்படாதீர்கள்'’என்று நம்பிக்கை தெரிவித்து வருகிறார் ஓ.பி.எஸ்.

ஓ.பி.எஸ்.ஸுக்கு தொடர்ந்து ஏற்பட்டுவரும் பின்னடைவு குறித்து அவரது ஆதரவு வழக்கறிஞர் களிடம் விசாரித்தபோது, ‘"கொடியையும் சின்னத் தையும் பயன்படுத்தக்கூடாது என எங்களுக்கு எதிராக எடப்பாடி போட்ட வழக்கில், பதில் மனுத் தாக்கல் செய்ய ஓ.பி.எஸ்.ஸுக்கு உத்தரவிட்டிருந் தார் நீதிபதி. ஆனால், பதில் மனு தாக்கல் செய்வதில் நாங்கள் காலதாமதம் செய்துவிட்டோம். அந்த கோபத்தில்தான், கொடியையும் சின்னத்தையும் பயன்படுத்தக்கூடாது என இடைக்காலத் தடை கொடுத்துவிட்டார் நீதிபதி சதீஷ்குமார்.

நாங்கள் காலதாமதம் செய்ததால்தான் தடை கொடுக்கப்பட்டதே தவிர, எடப்பாடி தரப்பில் நியாயம் இருக்கிறது, உண்மை இருக்கிறது என்பதற் காக கொடுக்கப்படவில்லை. ஆக, தடை உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் மேல்முறையீடு செய்தார் ஓ.பி.எஸ். வழக்கு விசாரணையில், நாங்கள் பதில் மனுத்தாக்கல் செய்வதற்குள் இடைக்காலத் தடை கொடுக்கப்பட்டுவிட்டது. அதனால் அதனை நீக்கவேண்டும் என நாங்கள் வாதிட்டபோது, அப்படியானால் தனி நீதிபதியை அணுகுங்கள் என தீர்ப்பளித்தனர் நீதிபதிகள். தனி நீதிபதியை அணு குங்கள் என சொல்லியிருப்பதால் இடைக்காலத் தடையில் எந்த முடிவையும் டிவிசன் பெஞ்ச் எடுக்க முடியாதில்லையா? அதனால்தான் அந்த இடைக்கால தடை தொடரும் என்றனர் நீதிபதிகள். இது எப்படி எங்களுக்குப் பின்னடைவாகும்? அதனால் தனி நீதி பதியிடம் நாங்கள் தாக்கல் செய்யப்போ கும் மனுவில் உள்ள விசயங்கள் எங்களுக்கு நீதியை பெற்றுத்தரும். இடைக்காலத் தடையை நீக்கி நீதிபதி உத்தரவிடுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. அப்போது கொடியும் சின்னமும் எங்களுக்கு வரும்'' என்கிறனர் ஆவேசமாக.

எடப்பாடி பழனிச்சாமியின் அ.தி.மு.க. சீனியர் வழக்கறிஞர்களிடம் பேசியபோது, "தனி நீதிபதியின் உத்தரவுக்கு மதிப்பளித்து ஓ.பி.எஸ். தரப்பில் மனுத் தாக்கல் செய்திருக்க வேண்டும். ஓ.பி.எஸ்.ஸோ பதில் மனுத்தாக்கல் செய்ய ஆர்வம் காட்டவில்லை. மாறாக, அவகாசம் கேட்டபடியே இருந்தார். பலமுறை அவகாசம் கொடுக்கப்பட்டும் மனுத்தாக்கல் செய்யப்படவில்லை. காரணம், வலிமையான பாயிண்டுகளை சொல்லி மனுத்தாக்கல் செய்ய எந்த விசயமும் அவர்களுக்கு கிடைக்காத தால் தான். அதாவது, பொதுக்குழுவையும் பொதுச்செயலாளராக எடப்பாடி தேர்வு செய்யப்பட்டதையும் நீதிமன்றங்களும் தேர்தல் ஆணையமும் ஏற்றுக் கொண்டுவிட்டன. இதனை தனது மனுவில் சுட்டிக்காட்டிய எடப்பாடி, இப்படிப்பட்ட சூழலில் அ.தி.மு.க. பெயர், கொடி, சின்னத்தை ஓ.பி.எஸ். பயன்படுத்துவது தொண்டர்களிடம் குழப்பத்தை விளைவிக்கிறது. அதனால் தடை விதிக்கவேண்டும் என கோரிக்கை வைத்தார். இந்த பாயிண்ட் வலிமையாக இருந்ததால்தான் இடைக்காலத் தடை கொடுத்தார் நீதிபதி. இந்த பாயிண்டுக்கு எதிராக ஓ.பி.எஸ். தரப்புக்கு எந்த பாயிண்டும் கிடைக்காததால்தான், ஓ.பி.எஸ்.ஸால் மனுத்தாக்கல் செய்ய முடியவில்லை.

ஆக, "தனி நீதிபதியிடம் மீண்டும் ஓ.பி.எஸ். முறையிட்டாலும் அவர் எதிர்பார்ப்பது நடக்கப் போவதில்லை. டிவிஷன் பெஞ்சே தடையை நீக்காத போது அதற்கு மாறான ஒரு தீர்ப்பை தனி நீதிபதி தந்துவிடமாட்டார். அதனால், இடைக்காலத் தடை என்பது நிரந்தரத் தடையாக தீர்ப்பு வரும். சும்மா சும்மா கோர்ட் படி ஏறுவதை தவிர்த்து விட்டு தனக்கான அரசியலை செய்வது ஓ.பி.எஸ் .ஸின் எதிர்காலத்துக்கு நல்லது'’என்கிறார்கள் எடப்பாடி தரப்பு வழக்கறிஞர்கள்.

எடப்பாடி தரப்பின் எதிர்பார்ப்பு இப்படி இருக்கும் நிலையில், தீர்மானங்களை எதிர்த்து ஓ.பி.எஸ். மேல்முறையீடு செய்துள்ள வழக்கின் விசாரணை இந்த வாரம் சுப்ரீம்கோர்ட்டில் வரவிருப்பதால், அன்றைய தினம் ஒரு முக்கிய உத்தரவு வரப்போகிறது; அது எடப்பாடிக்கு அதிர்ச்சியைத் தரும் என்கிற நம்பிக்கையில் தெம்பாக பேசிவருகிறார் ஓ.பி.எஸ்.

"சுப்ரீம் கோர்ட்டின் சீனியர் கவுன்சிலும், முன்னாள் அட்டர்னி ஜெனரலுமான கே.கே. வேணுகோபாலை தனது வழக்கிற்காக ஓ.பி.எஸ். நியமித்திருப்பதுதான் அவருடைய தெம்புக்கு காரணம். பொதுவாக, ஜெயிக்கக்கூடிய முகாந்திரம் இருந்தால்தான் ஒரு வழக்கை வேணுகோபால் கையாளுவார். அந்த வகையில், ஓ.பி.எஸ்.ஸுக்காக அவர் ஆஜராவது எடப்பாடி தரப்பினரை உன்னிப் பாக கவனிக்க வைத்திருக்கிறது' என்கிறார்கள்.

-சஞ்சய்

இறுதிச்சுற்று! சங்கமத் திருவிழா!

dd

பொங்கல் திருவிழாவையொட்டி, தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறை சார்பில் "சென்னை சங்கமம் -நம்ம ஊரு திருவிழா' நிகழ்வை ஜனவரி 13-ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தீவுத்திடலில் தொடங்கிவைத்தார். அப்போது கனிமொழி எம்.பி. அமைச்சர்கள் சாமிநாதன், சேகர்பாபு, ராஜகண்ணப்பன், தங்கம்தென்னரசு மற்றும் பலர் உடனிருந்தனர். ஜனவரி 14 முதல் 17 வரை தினமும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை சென்னையின் முக்கியப் பகுதிகளில் கிராமியக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. சென்னையின் முக்கியமான 18 இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. நிகழ்வு நடைபெறும் இடங்களில் கலைப் பொருட்கள் விற்பனைக் கடைகள், கிராமிய உணவு வகைகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

-கீரன்

nkn170124
இதையும் படியுங்கள்
Subscribe