ராங்கால் கவர்னருக்கு நீதிமன்றம் கடிவாளம்! பா.ஜ.க. அரசு ஷாக்! விஜயகாந்த்துக்கு என்ன ஆச்சு? மெடிக்கல் ரிப்போர்ட்!

ff

"ஹலோ தலைவரே, தே.மு.தி.க. தலைவரான நடிகர் விஜயகாந்த்தின் உடல் நிலை பற்றிய பேச்சுதான், அரசியல்வாதிகள் மத்தியிலும், திரையுலகினர் மத்தியிலும் இப்போது பரபரப்பாக அடிபடுகிறது.''”

"ஆமாம்பா, விஜயகாந்த்தின் உடல் நிலை சீராக இல்லை என்று அவர் அட்மிட் ஆகியிருக்கும் மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருக்கிறதே?''”

rr

"உண்மைதாங்க தலைவரே, மியாட் இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டதில் அவர் குடும்பத்தினருக்கே வருத்தமாம். காய்ச்சல் மற்றும் லேசான மூச்சுத் திணறல் காரணமாக கடந்த 18 ஆம் தேதி மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் விஜயகாந்த். உண்மையில் அவர் உடல் நிலை எப்படி இருக்கிறது என்று மருத்துவத்துறையில் இருக்கும் நம்பகமான வர்களிடம் விசாரித்தோம். நம்மிடம் பேசிய அவர்கள், விஜயகாந்த்துக்கு ஏற்கனவே கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் நடந்திருக்கின்றன என்றும், இதற்காகக் கொடுக்கப்பட்டு வரும் ’இம்யூனோ சூப்பர் செண்ட்’ என்ற மருந்து, உடலில் இருக்கும் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கக் கூடியது என்றும் சொல்கிறார்கள். இந்த நிலையில் காய்ச்சல் உள்ளிட்ட சில நோய்ப் பாதிப்புகள் அவருக்கு ஏற்பட்டிருப்பதால், அவருக்கு எதிர்ப்பு சக்தி மருந்துகளைக் கொடுப்பது சவாலாக இருந்தாலும், அவரைக் கவனிக்கும் மருத்துவர்கள் தேவையான எதிர்ப்பு சக்தியை உடலில் செலுத்தி பாதுகாத்து வருகிறார்கள். அவருக்கு சிகிச்சை அளித்துவரும் டாக்டர் ராஜன் ரவிச்சந்திரன், மிகவும் திறமையான மருத்துவராம்.''”

"இந்த இக்கட்டான சிக்கலில் இருந்து கேப்டன் மீண்டு வரவேண்டும் என்று நாமும் வாழ்த்துவோம்''”

"தி.மு.க. முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்காமே?''

"ஆமா தலைவரே, தமிழக அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, ஐ.பெரியசாமி, முன்னாள் அமைச்சர்கள் கோ.சி.மணி, குழந்தைவேலு ஆகியோர் மீது தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்குகளை உச்சநீதிமன்றம் ரத்து செய்திருக்கு. 1996-2001 தி.மு.க. ஆட்சிக்காலத்தில் அமைச்சர்களாக இருந்தவங்க வருமானத்திற்கு அதிகமாக சொத

"ஹலோ தலைவரே, தே.மு.தி.க. தலைவரான நடிகர் விஜயகாந்த்தின் உடல் நிலை பற்றிய பேச்சுதான், அரசியல்வாதிகள் மத்தியிலும், திரையுலகினர் மத்தியிலும் இப்போது பரபரப்பாக அடிபடுகிறது.''”

"ஆமாம்பா, விஜயகாந்த்தின் உடல் நிலை சீராக இல்லை என்று அவர் அட்மிட் ஆகியிருக்கும் மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருக்கிறதே?''”

rr

"உண்மைதாங்க தலைவரே, மியாட் இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டதில் அவர் குடும்பத்தினருக்கே வருத்தமாம். காய்ச்சல் மற்றும் லேசான மூச்சுத் திணறல் காரணமாக கடந்த 18 ஆம் தேதி மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் விஜயகாந்த். உண்மையில் அவர் உடல் நிலை எப்படி இருக்கிறது என்று மருத்துவத்துறையில் இருக்கும் நம்பகமான வர்களிடம் விசாரித்தோம். நம்மிடம் பேசிய அவர்கள், விஜயகாந்த்துக்கு ஏற்கனவே கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் நடந்திருக்கின்றன என்றும், இதற்காகக் கொடுக்கப்பட்டு வரும் ’இம்யூனோ சூப்பர் செண்ட்’ என்ற மருந்து, உடலில் இருக்கும் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கக் கூடியது என்றும் சொல்கிறார்கள். இந்த நிலையில் காய்ச்சல் உள்ளிட்ட சில நோய்ப் பாதிப்புகள் அவருக்கு ஏற்பட்டிருப்பதால், அவருக்கு எதிர்ப்பு சக்தி மருந்துகளைக் கொடுப்பது சவாலாக இருந்தாலும், அவரைக் கவனிக்கும் மருத்துவர்கள் தேவையான எதிர்ப்பு சக்தியை உடலில் செலுத்தி பாதுகாத்து வருகிறார்கள். அவருக்கு சிகிச்சை அளித்துவரும் டாக்டர் ராஜன் ரவிச்சந்திரன், மிகவும் திறமையான மருத்துவராம்.''”

"இந்த இக்கட்டான சிக்கலில் இருந்து கேப்டன் மீண்டு வரவேண்டும் என்று நாமும் வாழ்த்துவோம்''”

"தி.மு.க. முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்காமே?''

"ஆமா தலைவரே, தமிழக அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, ஐ.பெரியசாமி, முன்னாள் அமைச்சர்கள் கோ.சி.மணி, குழந்தைவேலு ஆகியோர் மீது தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்குகளை உச்சநீதிமன்றம் ரத்து செய்திருக்கு. 1996-2001 தி.மு.க. ஆட்சிக்காலத்தில் அமைச்சர்களாக இருந்தவங்க வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக அடுத்துவந்த அ.தி.மு.க. ஆட்சியில் வழக்கு தொடர்ந்தாங்க. அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அனைவரையும் விடுதலை செய்தது. 2015ஆம் ஆண்டு வெளியான இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அ.தி.மு.க. அரசு மேல்முறையீடு செய்தது. இப்போ அந்த மேல் முறையீட்டு வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கவாய், நரசிம்மா அமர்வு தள்ளுபடி செய்திருக்காங்க''

r

"கவர்னர்களுக்கு உச்ச நீதிமன்றம் கடுமையாகக் குட்டு வைத்திருக்கிறதே?''”

"ஆமாங்க தலைவரே, நம் தமிழ்நாடு அரசைப் போலவே கேரளம், பஞ்சாப் ஆகிய மாநில அரசுகளும் தங்களுக்கு இடைஞ்சல் தந்துகொண்டி ருக்கும் கவர்னர்களை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றுள்ள நிலையில், கடந்த 29 ஆம் தேதி கேரளா தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மாநில அரசு நிறைவேற்றும் மசோதாக்கள் மீது கவர்னர் காலதாமதம் இல்லாமல் விரைந்து முடிவு எடுக்க வேண்டும். அரசின் மசோதாக்களை கவர்னர்கள் நீண்ட காலம் நிலுவையில் வைத்திருப்பது எதற்கு? இனியாவது அரசின் மசோதாக்களுக்கு காலதாமதமின்றி கவர்னர் ஒப்புதல் அளிக்கவேண்டும். ஆளுநர் தனது கடமையை உரிய நேரத்தில் செயல்படுத்தாமல் போனால், மசோதாக்களுக்கு ஒப்புதல் தரும் விவகாரத்தில் உச்சநீதிமன்றமே புதிய விதிகளை வகுக்க நேரிடும் என்று, கவர்னர்கள் தலையில் பலமாகக் குட்டு வைத்திருக்கிறது. இது நம் கவர்னர் ரவி வரை திகைப்பை ஏற்படுத்தி யிருக்கிறது.''”

"இந்த குட்டு ஆளுநருக்கு வைக்கப் பட்டதில்லை; டெல்லிக்கு வைக்கப் பட்டதுன்னு அரசியல் நோக்கர்கள் சொல்றாங்களேப்பா?''”

"உண்மைதாங்க தலைவரே, பா.ஜ.க. ஆட்சி செய்யாத எதிர்க்கட்சிகளின் மாநிலங்களில், ஆளுநர்களை வைத்து அரசு நிர்வாகத்தில் நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகிறது மோடி தலைமையிலான பா.ஜ.க. ஒன்றிய அரசு. இந்த விசயத்தில் ஒன்றிய அர சின் கைப்பாவைகளாகத்தான் சம்பந்தப்பட்ட கவர்னர்கள் ஏடாகூடமாக ஆட்டம் போட்டு வருகிறார்கள். எனவே, உச்சநீதிமன்றம் இந்த குட்டினை, கவர்னர்களுக்கு வைக்கும் சாக்கில், ஒன்றிய அரசின் தலையில் வைத்திருக்கிறது என்றும், இதன்மூலம் ஒன்றிய அரசுக்கு எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டிருக்கிறது என்றும் சொல்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். மாநில அரசுகள் நிறைவேற் றும் சட்ட மசோதாக்களைக் கிடப்பில் வைத்தி ருக்கும் ஆளுநர்களை கண்டிக்கும் உச்சநீதி மன்றம், இதே பாணியை குடியரசுத் தலைவரும் பின்பற்றுவதால், அவருக்கும் இதேபோன்ற ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று சொல்கின்றன அர சியல் கட்சிகள். எனவே, மசோதாக்கள் விவகாரத் தில் இதேபோல் ஜனாதி பதிக்கு எதிராகவும் மாநில அரசுகள் வழக்குப் போடும் சூழல் உருவாகப் போகிறது என்கிற கருத்தும் அரசியல் விமர்சகர்களிடம் எதிரொலிக்கிறது.''”

ff

"பா.ஜ.க.வுடனான உறவு விசயத்தில் எடப்பாடி டிராமா போடு வதாக, அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகளே ஆதங்கப்படறாங்களே?''

’"ஆமாங்க தலைவரே, பா.ஜ.க.வுடனான எங்கள் உறவு முறிந்து விட்டது. நாடாளுமன்றத் தேர்தலிலும் அவர்களோடு கைகோர்க்க மாட்டோம் என்று அண்மையில் நடந்த மா.செ.க்கள் கூட்டத்தில் மீண்டும் மீண்டும் அழுத்தம்திருத்தமாகவே அறிவித்த எடப்பாடி, நீங்கள் பா.ஜ.க.வை கடுமையாக விமர்சிக்க வேண்டும் என்றும் கட்சி நிர்வாகிகளைக் கேட்டுக்கொண்டார். எனினும் எடப்பாடியோ, தான் கலந்துகொள்ளும் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், அதில் மோடி யைப் பற்றியோ, பா.ஜ.க.வைப் பற்றியோ எந்த விமர்சனத்தையும் வைக்காமல் மௌனம் சாதித்து வருகிறார். இதைக் கவனித்த மாஜி மந்திரிகள், மா.செ.க்கள் உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் "நம்மை மட்டும் பா.ஜ.க. தரப்பை எதிர்க்கச்சொல்லும் அவர், தான் மட்டும் தனக்கு எதிரான வழக்குகளில் இருந்து தப்பித்துக்கொள்ள நினைக்கிறாரா? நாம் மட்டும் பலிகடா ஆகவேண்டுமா?' என்று தங்களுக்குள் ஆதங்கத்தையும் பகிர்ந்துகொள்கிறார்களாம்.''”

rr

"பாராளுமன்றத் தேர்தல் தொடர்பா அ.தி.மு.க.வினர் மத்தியில் எடப்பாடி கடுப்பா பேசினாராமே?''

"ஆமா தலைவரே... தனது கட்சிக்காரர்களை நம்பாத எடப் பாடி, நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற் காக தனக்கு விசுவாசமுள்ள முன்னாள் உளவுத்துறை அதிகாரி களைக் கேட்டுக்கொண்டாராம். அவர்கள் தரும் லிஸ்ட்டிலிருந்து புதிய ஆட்களைத் தேர்வு செய்ய நினைத்தாராம். ஆனால் அ.தி.மு.க. நிர்வாகிகளோ, தங்கள் வாரிசுகளுக்கு சீட்டு கேட்டு வந்திருக்காங்க. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், வளர்மதி, ராஜன் செல்லப்பான்னு எல்லாரும் தங்கள் வாரிசுகளுக்கு சீட்டு கேட்டு நெருக்கடி கொடுத் திருக்காங்க. அதேபோல கோகுலஇந்திராவும் சீட் கேட்டு க்யூவில் நிற்கிறாராம். இதனால் அப்செட்டான எடப்பாடி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் பகுதிகளில் ஒரு தொகுதிகூட ஜெயிக்கவே யில்ல. நாம முழுமையா சென்னையை பிடிச் சிருந்தா நாமதான் ஆட்சி யில் இருந்திருப்போம். முதலில் சென்னையை நமதாக்குங்கள். அப்புறம் நீங்க கேட்டதெல்லாம் உங்களுக்கு கிடைக்கும்னு அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட் டத்தில் கறாரா பேசி னாராம்.''

"ஊசலாடும் ஜாமீன் விவகாரம், அமைச்சர் செந்தில்பாலாஜியை ரொம்பவே அப்செட் ஆக்கிவிட்டதாமே?''”

rr

’"அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, உடல் நிலையைக் காரணம் காட்டிக் கேட்டால் ஜாமீன் கிடைக்காது என் பதை பலமுறை நாம் பதிவு செய்திருக்கிறோம். அதைப் போலவேதான் நடந்திருக் கிறது. இந்த வழக்கின் விசா ரணை 28ஆம் தேதி உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, செந்தில் பாலாஜிக்காக ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோஹத் தகி, பாலாஜிக்கு மூளைப் பக்கவாதம் ஏற்படும் அபாயம் இருக்கிறது என்று சுட்டிக் காட்டினார். அமலாக்கத்துறை சார்பில் எதிர்த்து வாதாடிய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவோ, இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இரு தரப்பின் வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம், "செந் தில்பாலாஜியின் மருத்துவ அறிக்கையை ஆய்வு செய் தோம். அவரது உயிருக்கு எவ்விதமான ஆபத்தும் இல்லை. அவரது நோயை மருந்துகள் மூலமே குணப்படுத்த முடியும். மருத்துவ காரணங்களால் ஒருவருக்கு ஜாமீன் வழங்க முடியாது' என்று சொன்னதோடு, வழக்கமான நடைமுறைகளில் வேண்டுமானால் அவர் ஜாமீன் கேட்டு விசாரணை நீதிமன்றத்தை அணுகலாம் என்று சொல்லிவிட்டது. இதனால், மறுபடியும் ஆரம்பத்தில் இருந்தா? என்று செந்தில்பாலாஜியின் வழக்கறிஞர்கள் திகைத்துப்போக, ஓமந்தூரார் அரசு மருத்து மனையில் சிகிச்சையில் பெற்றுவரும் செந்தில் பாலாஜியோ, இதையறிந்து ரொம்பவே அப்செட் ஆகிவிட்டாராம்.''”

"ரெய்டு தகவலைக் கசியவிட்டதற்காக வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறதே?''”

"அண்மையில் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமனவரித்துறை ரெய்டு களை நடத்திப் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இந்த ரெய்டு பற்றிய தகவல் ஒரு நாளுக்கு முன்பாகவே சம்பந்தப்பட்ட தரப்புக்கு லீக் செய்யப்பட்டதாக தெரியவந்திருக்கிறதாம். இந்த விவகாரத்தைத் தோண்டித் துருவிய வருமானவரித்துறையின் புலனாய்வுப் பிரிவு உயரதிகாரிகள், அதே துறையில் ஐ.ஆர்.எஸ். அதிகாரியாக இருக்கும் முத்துசங்கர்தான் ரெய்டு நடக்க இருக் கும் தகவலைக் கசிய விட்டார் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்த முத்துசங்கர், தி.மு.க.வைச் சேர்ந்த மறைந்த முன்னாள் அமைச் சர் வீரபாண்டி ஆறுமுகத்துக்கு உறவினராம். இதைத் தொடர்ந்து, முத்துசங்கரை சென்னையில் இருந்து பெங்களூருக்கு அதிரடியாக இடமாற்றம் செய்திருக்கிறது வருமான வரித்துறை.''”

"நானும் பா.ஜ.க. தொடர்பான ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன். நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழகம் புதுவையுடன் சேர்த்து 40 தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்களை அறிவித்திருக்கிறது பா.ஜ.க.. அதில் காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பாளராக, பலான வீடியோ புகாரில் சிக்கிய கே.டி.ராகவனின் பெயரும் இடம் பெற்றிருப்பதைப் பார்த்து, பா.ஜ.க. மகளிரணி தரப்பு ஷாக்காகி இருக்கிறதாம். மேலும், அவர் பெயரைக் குறிப்பிடும் போது, மாநில செயற்குழு உறுப்பினர் என்று குறிப்பிட்டிருக்கிறார்களாம். இது அவர்களை மேலும் கடுப்பாக்கி இருக்கிறது. காரணம், தன் மீதான பாலியல் புகாரைப் பொய் என்று நிரூபித்துவிட்டு வருவதாகச் சொல்லிவிட்டுதான், ராகவன், தாமாகத் தன் கட்சிப் பதவியை ராஜினாமா செய்தார். அப்படி இருக்க, அந்த விவகாரத்தில் அவர் எப்போது தன்னை நிரபராதி என்று நிரூபித்தார் என்று அவர்கள் கேட்கிறார்கள். இவருக்கு எம்.பி. சீட்டும் கொடுக்கப்படலாம் என்கிற தகவல் பா.ஜ.க.வில் இருக்கும் பலரையும் எரிச்சலாக்கியிருக்கிறதாம்.''

nkn021223
இதையும் படியுங்கள்
Subscribe