ராங்கால் புதுச்சேரியில் ஆட்சிக் கவிழ்ப்பு? காங்கிரசுக்கு வியூகம் வகுக்கும் பிரசாந்த் கிஷோர்! உருவாகிறது சசிகலா பேரவை!

rann

"ஹலோ தலைவரே, 14-ந் தேதி கவர்னர் கொடுத்த டீ பார்ட்டியைப் புறக்கணித்த முதல்வர், அடுத்தநாள் நரிக்குறவர் சமுதாய மாணவிகளின் அழைப்பில் அவங்க வீட்டுக்கே போய் கறி விருந்து சாப்பிட்டது வைரலாயிடிச்சே...''”

"அரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும் கவர்னர் விருந்தைப் புறக்கணிச்சது டெல்லி வரை பரபரப்பாக்கியிருக்கு.''”

"உண்மைதாங்க தலைவரே, நீட் தேர்வு மசோதா உள்பட 12 மசோதாக்களை ஆளுநர் மாளிகை கிடப்பில் வைத்து, தமிழக மக்களின் உரிமையை மறுப்பதால், கவர்னரின் டீ பார்ட்டியில் கலந்துக்க முடி யாதுன்னு முதல்வர் தெரிவிச்சிட்டாரு. அதே நேரம் கவர்னரின் விருந்தில் கலந்துக்கிட்ட அ.தி.மு.க. தரப்புக்குள் சலசலப்பு கிளம்பியிருக்கு.''”

ravi

"ம்...''”

"எடப்பாடி, ஓ.பி.எஸ். இருவரும் ராஜ்பவன் விருந்துக்குப் போகலை. அவங்களுக்கு பதிலாக மாஜி மந்திரிகளான தங்கமணியையும் வேலுமணியையும் அனுப்பி வச்சாங்க. அங்கே விஜயபாஸ்கரும், தளவாய் சுந்தரமும் ஆஜராக, இரண்டு மணிகளும் ஷாக் ஆயிட்டாங்களாம். அவர்கள் இருவரும் கவர்னரின் நேரடி விருப்பத்தின் பேரில் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டது தெரியவந்திருக்கு. அ.தி.மு.க.வின ரிடம் பேசிய கவர்னர், ‘கூட்டணிக் கட்சிகள் கொடுத்த நிர்பந்தத்தால்தான், ஸ்டாலின் இந்த விருந்தில் கலந்துக்கலைன்னு சொல்லியிருக்கிறார்.''”

"அ.தி.மு.க. புள்ளிகள் பா.ஜ.க.வை நோக்கிப் படையெடுக்கத் திட்டமிடறாங்களே?''”

"கட்சியின் தொடர் தோல்வி, கட்சிக்குள் ஓயாத உள்ளடி, இதனால பலரும் கட்சித் தாவல்களில் ஆர்வம் காட்டுகிறார்களாம். தி.நகர் சத்யா, விருகை ரவி, வடசென்னை ராஜேஷ், வெங்கடேஷ் பாபு ஆகியோர் அடங்கிய நால்வர் அணி, இப்போது பா.ஜ.க.வில் ஐக்கியமாக டீலிங் பேச

"ஹலோ தலைவரே, 14-ந் தேதி கவர்னர் கொடுத்த டீ பார்ட்டியைப் புறக்கணித்த முதல்வர், அடுத்தநாள் நரிக்குறவர் சமுதாய மாணவிகளின் அழைப்பில் அவங்க வீட்டுக்கே போய் கறி விருந்து சாப்பிட்டது வைரலாயிடிச்சே...''”

"அரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும் கவர்னர் விருந்தைப் புறக்கணிச்சது டெல்லி வரை பரபரப்பாக்கியிருக்கு.''”

"உண்மைதாங்க தலைவரே, நீட் தேர்வு மசோதா உள்பட 12 மசோதாக்களை ஆளுநர் மாளிகை கிடப்பில் வைத்து, தமிழக மக்களின் உரிமையை மறுப்பதால், கவர்னரின் டீ பார்ட்டியில் கலந்துக்க முடி யாதுன்னு முதல்வர் தெரிவிச்சிட்டாரு. அதே நேரம் கவர்னரின் விருந்தில் கலந்துக்கிட்ட அ.தி.மு.க. தரப்புக்குள் சலசலப்பு கிளம்பியிருக்கு.''”

ravi

"ம்...''”

"எடப்பாடி, ஓ.பி.எஸ். இருவரும் ராஜ்பவன் விருந்துக்குப் போகலை. அவங்களுக்கு பதிலாக மாஜி மந்திரிகளான தங்கமணியையும் வேலுமணியையும் அனுப்பி வச்சாங்க. அங்கே விஜயபாஸ்கரும், தளவாய் சுந்தரமும் ஆஜராக, இரண்டு மணிகளும் ஷாக் ஆயிட்டாங்களாம். அவர்கள் இருவரும் கவர்னரின் நேரடி விருப்பத்தின் பேரில் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டது தெரியவந்திருக்கு. அ.தி.மு.க.வின ரிடம் பேசிய கவர்னர், ‘கூட்டணிக் கட்சிகள் கொடுத்த நிர்பந்தத்தால்தான், ஸ்டாலின் இந்த விருந்தில் கலந்துக்கலைன்னு சொல்லியிருக்கிறார்.''”

"அ.தி.மு.க. புள்ளிகள் பா.ஜ.க.வை நோக்கிப் படையெடுக்கத் திட்டமிடறாங்களே?''”

"கட்சியின் தொடர் தோல்வி, கட்சிக்குள் ஓயாத உள்ளடி, இதனால பலரும் கட்சித் தாவல்களில் ஆர்வம் காட்டுகிறார்களாம். தி.நகர் சத்யா, விருகை ரவி, வடசென்னை ராஜேஷ், வெங்கடேஷ் பாபு ஆகியோர் அடங்கிய நால்வர் அணி, இப்போது பா.ஜ.க.வில் ஐக்கியமாக டீலிங் பேசிவருகிறது. ஸ்மார்ட் சிட்டி ஊழல் விவகாரத்தில் வசமாகச் சிக்கியிருக்கும் தி.நகர் சத்யா, இதன்மூலம் தன் தலையைக் காப்பாற்றிக்கொள்ளலாம் என்று கணக்குப் போடுகிறாராம்.''”

"பாண்டிச்சேரியில் ரெங்கசாமி ஆட்சியைக் கவிழ்க்கத் திட்டங்கள் தீட்டப்படுகிறதே?''”

rr

"உண்மைதாங்க தலைவரே, புதுவையில் முதல்வர் ரெங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ் -பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்துக்கிட்டு இருக்குது. அங்கே மொத்தமுள்ள 30 எம்.எல்.ஏ.க்களில், என்.ஆர். காங்கிரஸைச் சேர்ந்த 10 எம்.எல்.ஏ.க் களும், பா.ஜ.க.வைச் சேர்ந்த 6 எம்.எல்.ஏ.க்களும் சேர்ந்துதான் ஆட்சியை அமைத்தார்கள். இதற்கிடையே சுயேச்சை எம்.எல்.ஏ. ஒருவரும் பா.ஜ.க.வில் சேர்ந்துவிட்டார். அதனால் பா.ஜ.க.வின் பலம் 7 ஆக இருந்தது. ஆட்சி அமைந்ததில் இருந்தே ரங்கசாமியை சுதந்திரமாகச் செயல்பட விடாமல், பா.ஜ.க. லகான் போட்டு வருவதால், அவர் மனம் புழுங்கியபடியே இருக்கிறார்.''”

"ஆமாம்பா, பா.ஜ.க.வைத் தூக்கிச் சுமக்க வேண்டியிருக்குன்னு என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினரும் புழுங்குறாங்களே?'' ”

"உண்மைதாங்க தலைவரே, பாண்டிச்சேரிக்கான 3 நியமன எம்.எல்.ஏ.க்களையும் பா.ஜ.க.வே நியமித்தது. இதனால் அதன் பலம் இப்போது 10. ஆட்சி அமைத்து ஓராண்டு முடியவிருக்கிற இந்த நிலையில்தான், ரெங்கசாமி தலைமையிலான ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு, தானே ஆட்சியை நடத்தும் முடிவுக்கு வந்திருக்கிறதாம் பா.ஜ.க. இதற்கு 16 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. தன்னிடம் உள்ள 10 பேரோடு, ரெங்கசாமி மீது அதிருப்தியில் இருக்கும் அவர் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 4 பேரையும் சுயேட்சை எம்.எல்.ஏ.க் களில் 3 பேரையும் வைத்துக்கொண்டு, பா.ஜ.க. தலைமையில் ஆட்சி அமைக்க, காய்கள் நகர்த்தப் படுது. 24-ந் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுவைக்கு வரும்போது, ரெங்கசாமி அரசின் தலையெழுத்து தீர்மானிக்கப்படும் என்கிறார்கள். இந்தச் சூழலில்தான் 17-ந் தேதி புதுவை கவர்னர் தமிழிசை டெல்லிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்.''”

"தென்மண்டல காவல்துறையில் புதிய விறுவிறுப்பு தெரியுதே?''”

ff

"உண்மைதாங்க தலைவரே, தென்மண்டல ஐ.ஜி.யாக இருக்கும் அஸ்ரா கார்க், தனது மண்ட லத்தை கடும் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக் கிறாராம். அதனால், க்ரைம் ரேட் அங்கே சரசரவென சரிந்து வருகிறதாம். அதேபோல் டிபார்ட்மெண்ட்டில் இருக்கும் ஏடாகூட அதி காரிகளுக்கும் அவர் சிம்மசொப்பனமாக இருக் கிறாராம். குறிப்பாக, திண்டுக்கல் எஸ்.பி. சீனிவாசன், கோட்டை உயரதிகாரி ஒருவருக்கு நெருக்க மானவர் என்ற கெத்தில், கொஞ்சம் அதிகமாக ஆடியதோடு, ஒரு மோசமான பேர்வழிக்கு எதிராகப் போராடிய எக்ஸ் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. பாலபாரதியைக் கைது செய் யவும் முயன்று, மக்களின் கடும் எதிர்ப்பைச் சம்பாதித்தார். இதையெல்லாம் அறிந்த ஐ.ஜி., எஸ்.பி.யை அழைத் துக் கடுமையாக வார்ன் பண்ணி யிருக்கிறாராம்.''”

"ஐபேக் பிரசாந்த் கிஷோர் விரைவில் காங்கிரஸில் சேரப்போகி றார்ன்னு செய்தி வருதே?''”

rr

"கடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, ஐபேக் அமைப்பைத் தன் சகாக்களிடம் ஒப்படைத்துவிட்டு, ஓய்வில் இருக்கும் பிரசாந்த் கிஷோர், ’யூத் இன் பாலிடிக்ஸ்’ என்ற பெயரில் இளைஞர்களை ஒருங்கிணைத்து வருகிறார். அதோடு, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு மகத்தான வெற்றியைத் தேடித் தரும் வகையில், அவர் வியூகங்களை வகுக்க இருக்கிறாராம். 350 தொகுதிகளை குறி வைத்து வேலை செய்யணும்னும், பூத்வாரியா கட்சியை வளர்த்து, நிர்வாக அமைப்பைப் பலப்படுத்தணும்னும், எந்த மாநிலத்தில் தனித்து நிற்பது, எங்கே கூட்டணியாகப் போட்டியிடுவது, யாரை பிரதமர் வேட்பாளரா நிறுத்துவதுங்கிறது வரை மேலிடத்திற்கு ஆலோசனை சொல்லியிருக்காராம்.''”

"ஒரு டெல்லி நபர், தமிழகத்தில் தர்பார் நடத்துகிறாரே?''”

"அந்த செய்தி உங்க காதுக்கும் வந்துடுச்சுங்களா தலைவரே, அதை விபரமாவே சொல்றேன். வேலூரைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர், முன்பு டெல்லியில் உள்ள இந்திய ரெட் கிராசில் பணியில் இருந்தார். நாடாளு மன்ற அலுவலக வட்டாரங்களில் தொடர்புகளை ஏற் படுத்திக் கொண்ட அவர், தமிழக எம்.பி.க்கள் பல ரோடும் கடந்த காலங்களில் நெருக்கம் பாராட்டிய தோடு, நாடாளுமன்றத்தில் எது குறித்த கேள்வியை எப்படிக் கேட்க வேண்டும்? என்றெல்லாம் எழுதிக் கொடுத்து, செல்வாக்கை வளர்த்துக்கொண்டிருக்கிறார். அதேபோல் எம்.பி.க்கள் பலருக்கும் அதிகாரப்பூர்வ மற்ற பி.ஏ.வாகவும் செயல்பட்டார். இந்த அனுபவங் களை வைத்து, தற்போது ஹரியானா துணை முதல் வரிடம், சிறப்பு அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.''”

"பலே... பிறகு?''”

"தற்போது வேலூர் மாவட்டத்தில் தனது பினாமிகள் மூலம் தமிழக அரசின் காண்ட்ராக்டுகளை அதிகமாக எடுத்து கஜானாவை நிரப்பிக்கொண்டிருக்கிறாராம். அதோடு, இங்குள்ள ஒன்றிய அரசின் கல்வி நிறுவனமான கேந்திர வித்யாலயா பள்ளிகளில், எம்.பி.க்கள் கோட்டா விலும், ஒன்றிய அமைச்சர்களின் கோட்டாவிலும் பலருக்கும் சீட்டுகள் வாங்கிக் கொடுத்து, அவர்களிடம் லம்ப்பா வசூலித்துவிட்டாராம். மெரிட்டில் சீட் வாங்கியவர்களிடமும், என்னால்தான் கிடைத்தது என்று வசூல் வேட்டை நடத்த, இது குறித்த புகார்கள் மேலிடங்களுக்குப் பறந்துகொண்டிருக்கின்றன. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் எம்.பி.க்கள் கோட்டாவை ஒன்றிய அரசு ரத்து செய்தது இவரோட புண்ணியத்தாலதானாம்.''’

"சசிகலாவின் அரசியல் தட்பவெப்பம் அடிக்கடி மாறுதேப்பா?''”

sasi

"உண்மைதாங்க தலைவரே, அ.தி.மு.க.வைக் கைப்பற்றப் போகிறார் என்று முதலில் செய்தி வந்தது. பிறகு ஓ.பி.எஸ். உள்ளிட்டவர் களை வளைத்துவிட்டார் என்று தகவல் கிளம்பி யது. அண்மையில், அ.தி.மு.க.வில் இருக்கும் எம்.எல்.ஏ.க்களை அவர் வளைக்கிறார் என்றும் சொல்லப்பட்டது. இந்த நிலையில், சசிகலா, அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக நீடிக்க முடியாது என்று நீதிமன்றத் தீர்ப்பு வந்ததில் இருந்து, அவர் இப்போது அப்செட்டில் இருக்கிறாராம். அதே நேரம், இதனால் உற்சாகம் அடைந்திருக்கும் எடப்பாடி, அடுத்த மாதம் கூட இருக்கும் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத் தில், இனி சசிகலா எப்போதும் கட்சிக்குள் நுழைய முடியாதபடி ஒரு தீர்மானத்தைப் போட நினைப்பதோடு, ஓ.பி.எஸ்.சின் பவரைக் குறைத்து, அவரை அடக்கி வைக்கவும் திட்டம் தீட்டி வருகிறாராம்.''”

"நானும் எனக்குக் கிடைச்ச தகவல்களைப் பகிர்ந்துக்கறேன். அ.தி.மு.க.வுக்குள் எளிதாக நுழைய விடமாட்டார்கள் என்பதால், விரைவில் தன் பெயரில், சசிகலா பேரவை என்ற ஒரு அமைப்பைத் தொடங்கவிருக்கிறாராம். இதன்மூலம், தேர்தலைச் சந்தித்து, தனது பலத்தை அவர் நிலைநாட்டத் திட்டம் வகுக்கிறாராம். இதை ஸ்மெல் செய்துவிட்ட டெல்லி, சசிகலா புதிய கட்சியையோ அமைப்பையோ தொடங்க நினைத்தால், கர்நாடக சிறையில் அவர் இருந்தபோது அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த விவகாரத்தைக் கையில் எடுத்து, அவரைச் சிறைக்கு அனுப்பி வைத்துவிடலாம் என்று வியூகம் வகுத்து வருகிறதாம்.''”

nkn200422
இதையும் படியுங்கள்
Subscribe