2022- 2023ஆம் ஆண்டுக்கான கல்வியாண்டில் 1 முதல் 3ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு "எண்ணும் எழுத்தும்' என்கிற கற்பித்தல் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூன் மாதம் திருவள்ளுர் மாவட்டம் அழிஞ்சிவாக்கத்தில் உள்ள பள்ளியில் தொடங்கிவைத்தார்.

ed

இந்தத் திட்டத்திற்காக தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 30 ஆயிரம் பேருக்கு ஆன்லைன் பயிற்சி, நேரடிப்பயிற்சி என மூன்றுகட்டப் பயிற்சிகள் தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின ரால் மண்டல, மாவட்ட வாரியாக வழங்கப்பட்டது. பயிற்சிபெற்ற ஆசிரியர்கள் தாங்கள் கற்றதை பிள்ளைகளுக்கு கற்றுத்தர முடியாத நிலையில் உள்ளோம் என்கிறார்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய, தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் சிலர் "2020-ஆம் ஆண்டு ஒன்றாவது சேர்ந்த குழந்தைகள் கொரோனா பிரச்சனையால், ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு படிக்காமலே தற்போது மூன்றாம் வகுப்புக்கு வந்துவிட்டார்கள். அதேபோல் இரண்டாம் வகுப்பு பிள்ளைகள் மூன்றாம் வகுப்பு வந்துவிட்டார் கள். இவர்களுக்கு அ, ஆ, இ, ஈ, 1, 2, 3, ஆ, இ, ஈ, உ போன்றவை எப்படியிருக்கும், தமிழ் எழுத்து எது, ஆங்கில எழுத்து எது என்பதுகூட தெரியவில்லை. அவர்களால் மூன்றாம் வகுப்பு பாடத்தைப் படிக்கவோ, புரிந்து கொள்ளவோ, எழுதவோ தெரியவில்லை.

இதனை கருத்தில்கொண்டு, 2021 நவம்பர் மாதத்திலேயே 1 முதல் 3 ஆம் வகுப்பு வரையிலான குழந்தைகளின் கற்றல் இடைவெளியைச் சரிசெய்ய "எண்ணும் எழுத்தும்' திட்டத்தை நடைமுறைப்படுத்த முடிவுசெய்தது அரசு. இதற்கான பயிற்சியை எங்களுக்கு தந்தார்கள். வழக்கமாக மொழிப்பாடமான தமிழ், ஆங்கிலம், கணிதம் சிரமம் என்பதால் அதற்கு முக்கியத்துவம் தந்து எளிமையிலும், எளிமையாகக் கற்பிக்க அரும்பு, மொட்டு, மலர் என்கிற படிநிலையில் கையேடு உருவாக்கி பயிற்சியளித்தார்கள். இதற்கான பாடப்புத்தங்கள், பயிற்சிக் கையேடுகள் தயாரிக்கப்பட்டு அதன்படியே பயிற்சிகள் பெற்றோம்.

Advertisment

edd

ஏ பார் ஆப்பிள் என்றால் ஆப்பிள் கொண்டுவந்து காட்டுவது, குழந்தைகளிடம் யாருக்கு என்ன விலங்கு பிடிக்கும் எனக்கேட்டு அந்த உருவம் கொண்ட முகமூடிகளை அணிந்துகொண்டு நடனம், விளையாட்டு, பாடல் மூலம் சொல்லித்தருவது. இதன்மூலம் குழந்தைகள் நாம் கற்றுத்தருவதை மறக்கமாட்டார்கள். நன்றாகப் படிக்கும் குழந்தைகளுக்கு கிரீடம் அணிவித்து ஊக்குவித்து பாராட்டவேண்டும் என பயிற்சியில் சொல்லித் தந்தார்கள்.

இதனை வகுப்பில் சொல்லித்தர வேண்டும் என்றால் அதற்கான பயிற்சி உபகரணங்கள் பள்ளிகளில் இல்லை. இதுகுறித்து ஒன்றிய, மாவட்ட அளவில் உள்ள திட்ட ஒருங்கிணைப்பாளர்களிடம் கேட்டால், பள்ளிக்கென தனி நிதிகள் உள்ளது, அதிலிருந்து தலைமையாசிரியர்களை வாங்கித் தரச்சொல்லுங்கள் என்கிறார்கள். தலைமையாசிரியர் களிடம் கேட்டால், அதற்கு செலவு செய்யச்சொல்லி ஆர்டர் கிடையாது. துறையில் பட்டியலிட்டதுக்கு மட்டுமே செலவு செய்யமுடியும், இல்லையேல் தணிக்கையில் கேள்வி கேட்பார்கள் என நிதியைத் தரமறுக்கிறார்கள். இதனால் இந்தத் திட்டத்தின்படி பாடம் எடுக்க முடிவதில்லை. இந்த பிரச்சனை தமிழகம் முழுவதுமே உள்ளது''’என்றார்கள்.

Advertisment

dd

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில பொதுச்செயலாளர் நா.சண்முகநாதன், “"இந்தத் திட்டத்துக்கான கற்பித்தல் உபகரணங்கள் தந்தாங்க. ஆனால் அது பற்றாக்குறையாக இருக்கிறது என்கிற ஆதங்கம் ஆசிரியர்கள் மத்தியில் இருக்கு. ஆசிரியர்களையே சிலவற்றை செய்யச் சொல்றாங்க அதிகாரிகள். ஆசிரியர் களுக்கு வேலைப்பளு அதிகம். தினமும் எமிஸ் டேட்டா இணையத்தில் பதிவு செய்ய வேண்டும். இணைய நெட் பிரச்சனையால் அதுவே சிலமணி நேரங்களை எடுத்துக்கொள்கிறது. அதனால் உபகரணங்கள் தரவேண்டும் எனக் கேட்கிறோம். இதுகுறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை சந்தித்து முறையிட்டுள் ளோம்''’என்றார்.

பள்ளிகள் தொடங்கி இரண்டு மாதம் கடந்துள்ள நிலையில் இந்த பயிற்சி முறை வெற்றிகரமாகச் செயல்பட வேண்டுமென்றால் அதற்கான உபகரணங்கள் வழங்கி கற்பித்தல் முறையைக் கண்காணிக்கவேண்டும் என்பதே கல்வியாளர்களின் விருப்பம்.