"கள்ளச்சாராயம், போதைப்பொருள் பயன்பாட்டால் சாமானிய மக்களின் வாழ்க்கையை புரட்டிப் போடுவதைப் போலவே, மூன்று நம்பர் லாட்டரியும், காட்டன் சூதாட்டமும் எளிய மக்களின் வருவாய் அனைத்தையும் பிடுங்கி, அவர்களை நடுத்தெருவில் நிற்கச் செய்வதாகப் புலம்புகிறார்கள்' ராணிப்பேட்டை சமூக ஆர்வலர்கள்.
இதுபற்றி அவர்களிடம் விசாரித்தபோது, "அரக் கோணம், சோளிங்கர், ஆற்காடு, ராணிப்பேட்டை, விஷாரம் என மாவட்டம் முழுக்க காட்டன் சூதாட்டமும், மூன்று நம்பர் லாட்டரியும் கொடிகட்டிப் பறக்கின்றன. இந்த காட்டன், மூன்று நம்பர் லாட்டரி இரண்டுக்கும் இடையே பெரிய வித்தியாசம் கிடையாது. காட்டன் என்பது இரண்டு நம்பர் எழுதித் தர வேண்டும். உதாரணமாக, ஒரு பெட்டிக்கடைக்கு சென்று 35 எனச்சொன்னால் 10 ரூபாய் வாங்கிக்கொண்டு அந்த நம்பரை ஒரு துண்டுச் சீட்டில் எழுதித
"கள்ளச்சாராயம், போதைப்பொருள் பயன்பாட்டால் சாமானிய மக்களின் வாழ்க்கையை புரட்டிப் போடுவதைப் போலவே, மூன்று நம்பர் லாட்டரியும், காட்டன் சூதாட்டமும் எளிய மக்களின் வருவாய் அனைத்தையும் பிடுங்கி, அவர்களை நடுத்தெருவில் நிற்கச் செய்வதாகப் புலம்புகிறார்கள்' ராணிப்பேட்டை சமூக ஆர்வலர்கள்.
இதுபற்றி அவர்களிடம் விசாரித்தபோது, "அரக் கோணம், சோளிங்கர், ஆற்காடு, ராணிப்பேட்டை, விஷாரம் என மாவட்டம் முழுக்க காட்டன் சூதாட்டமும், மூன்று நம்பர் லாட்டரியும் கொடிகட்டிப் பறக்கின்றன. இந்த காட்டன், மூன்று நம்பர் லாட்டரி இரண்டுக்கும் இடையே பெரிய வித்தியாசம் கிடையாது. காட்டன் என்பது இரண்டு நம்பர் எழுதித் தர வேண்டும். உதாரணமாக, ஒரு பெட்டிக்கடைக்கு சென்று 35 எனச்சொன்னால் 10 ரூபாய் வாங்கிக்கொண்டு அந்த நம்பரை ஒரு துண்டுச் சீட்டில் எழுதித் தந்துவிடுவார்கள். நாம் சொன்ன நம்பர் செலக்டாகியிருந்தால் 700 ரூபாய் கிடைக்கும். ஒரு எண்ணுக்கு பத்து ரூபாய் என்பதால் பலரும் 35, 44, 55 என 10 முதல் 20 விதமான இரட்டை டிஜிட் எண்களை எழுதி அதற்கான பணத்தைத் தந்துவிடு வார்கள்.
இதில் ஓப்பன், குளோஸ் என மற்றொரு டைப் உள்ளது. ஓப்பன் என்றால், இரண்டு நம்பரில் முதல் எண்ணை மட்டும் குறிப்பிடுவது. அதாவது 1 முதல் 9 வரை என ஏதாவது ஒரு நம்பரைச்சொல்லி பணம் கட்டுவது. உதாரணமாக 4 நம்பர் மீது பணம் கட்டியிருந்தால் இதில் 40, 41, 42 என வந்தாலும் முதலில் 4 வந்தால் அதற்கு பரிசு தருவார்கள். அதாவது 10 ரூபாய் கட்டினால் 350 ரூபாய் கிடைக்கும். குளோஸ் டைப் என்பது, கடைசி எண் 1 முதல் 9 வரை ஏதாவது ஒரு எண்ணை குறித்துத் தர வேண்டும். உதாரணமாக 5 என வைத்துக் கொள்வோம். 45, 55, 65, 15 என எது வந்தாலும் கடைசியில் 5 என முடிந்தால் பாதித் தொகை கிடைக்கும். நீங்கள் 10 ரூபாய்தான் கட்டவேண்டும் என்கிற கட்டாயமில்லை. 100, 500 கூட கட்டலாம், பரிசுத்தொகை அப்படியே 10 மடங்கு அதிகமாகத் தருவார்கள். மூன்று நம்பர் லாட்டரி என்பது, ஒரு நம்பருக்கு 10 ரூபாய் செலுத்தவேண்டும். உதாரணமாக, 567 என எழுதித் தந்தால் 567 குலுக்கலில் வந்தால் அந்த நம்பரை எழுதித் தந்தவர்களுக்கு 12 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். 5 மட்டுமே வந்தது என்றால் 30 ரூபாய் தருவார்கள், 56 என இரண்டு நம்பர் வந்திருந்தால் 500 ரூபாய் தருவார்கள்.
எவரெஸ்ட் லக்கி என்ற நிறுவனம், மூன்று நம்பர் லாட்டரியின் குலுக்கல் நடத்தி, தினமும் காலை 9 மணி முதல் இரவு 7 மணிவரை ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை ரிசல்ட்டை ஆன்லைனில் வெளியிடுகிறது. அதேபோல் வின்னர் ஏஜென்ஸிஸ் உட்பட பல நிறுவனங்கள் உள்ளன. ஆற்காடு நகரத்தில், காட்டன் சுப்பிரமணியின் தம்பி மோகன், ஆற்காடு பா.ஜ.க. நிர்வாகி பல்ப் சேட்டு, ஆற்காடு காட்டன் பீரான் மகன் ஷபி ஆகியோர் முக்கிய ஏஜென்டுகளாக இதனை நடத்துறாங்க. இதில் பல்ப் சேட்டு தனக்கு கீழ் 20 பேரை வச்சிக்கிட்டு காட்டன் பிசினஸ் செய்யறாரு. சோளிங்கர் நகரில் காட்டன் தொழிலை எதிர்க்கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவரின் ஆசிர்வாதத்தில் நடத்தறாங்க.
ஆற்காட்டில் பிரபு, விஷாரத்தில் ராமு, வாலாஜா, ராணிப்பேட்டையில் அப்துல் சுபான், சோளிங்கர் நகரில் ராஜா, ரகு ஆகியோர் மூன்று சீட்டு நடத்தறாங்க. 100 ரூபாய்க்கு டோக்கன் எழுதினால், எழுதும் புரோக்க ருக்கு 30 ரூபாய் கிடைப்பதால், தொழிலாளர்கள் அதிகம் புழங்கும் காய்கறி மார்க்கெட், பூ மார்க்கெட், பேருந்து நிலையங்களில் உள்ள கடைகள் மற்றும் தனி அறைகளை எடுத்தும் பலர் எழுதுகிறார்கள். போலீஸ் கண்டுகொள்ளா மல் இருக்க, பிரபு மாதம் 1 லட்சமும், சுபான் 1 லட்சம், ராமு 80 ஆயிரமும் மாமூலாக சம்பந்தப்பட்ட ஏரியா ஸ்டேஷனுக்கு தர்றதா தகவல். போலீஸ் நெருக்கடி வந்தால், மொபைல் டெக்னாலஜி வழியாக நம்பர்களை புக் செய்கிறார்கள். அதை மெசேஜாக அனுப்பியும் வைக்கிறார் கள்'' என்றனர்.
இதுகுறித்து ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கிரண்ஸ்ருதி கவனத்துக்கு கொண்டு சென்றோம். "நீங்கள் கூறிய தகவல்களின் அடிப்படையில் விசாரித்து நடவடிக்கை எடுக்கிறேன்'' என்றார்.
ராணிப்பேட்டை மாவட்டம் மட்டுமல்ல, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை என வட தமிழகம் முழுவதுமே காட்டனும், மூன்று நம்பர் லாட்டரியும் கொடிகட்டிப் பறக்கிறது. அரசு இதனைத் தடுத்து நிறுத்தவேண்டுமென்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
-கிங்