ஊழல்... சிக்கும் சேலம் சர்வோதய சிவக்குமார்!

ss

வாரம்பாளையம் சர்வோதய சங்க செயலாளர் சிவக்குமார் தான் இந்த ஊழலுக்கு மூளையாகச் செயல்பட்டிருப்பதும், ஜக்கம்பட்டி கிளை முன்னாள் மேலாளர் பாலாஜி, சேலம் மாவட்டம் தாரமங்கலம் அத்தராம்பட்டியைச் சேர்ந்த பட்டுச்சேலை புரோக்கர்கள் சதாசிவம், கவுதமன், இளையராஜா ஆகியோர் உடந்தையாக இருந்ததும் சி.பி.ஐ. விசாரணையில் தெரிய வந்துள்ளது. தற்போது, இந்த விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

தற்போது, ஊழல் புகாரில் சிக்கிய சிவக்குமார், சி.பி.ஐ. போலீசாருக்கே விபூதி அடிக்கப் பார்த்தது, ஊழலை மறைக்க அதிகாரிகளை 'கில்மா' மேட்டர்களுடன் குளிப்பாட்டியது உள்ளிட்ட பல திடுக்கிடும் தகவல்கள் நக்கீரன் கள விசாணையில் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக சி.பி.ஐ. வட்டாரங்களில் விசாரித்தோம். ''மோசடிப் புகார்கள் குறித்து விசாரிப்பதற்காக சி.பி.ஐ. இன்ஸ்பெக்டர் மாணிக்கவேல், எஸ்.ஐ. சீனிவாசன் ஆகியோர், ஆவாரம்பாளையம் சர்வோதய சங்க செயலாளர் சிவக்குமாரை சென்னையிலுள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகும்படி கூறியுள்ளனர். அவரோ, சங்க பொருளாளர் பழனிசாமி, மேலாளர் சுருளிநாதன் ஆகியோரை அனுப்பி வைத்துள்ளார்.

cc

இதனால் உஷ்ணமான சி.பி.ஐ., "என்ன செய்வீர்களோ தெரியாது, ஆகஸ்ட் 16ஆம் தேதி காலை 10 மணிக்கெல்லாம் நேரில் ஆஜராக வேண்டும். நீங்கள் ஆஜராகா விட்டால் உள்ளூர் போலீசார் மூலம் உங்களைத் தூக்கி உள்ளே வச்சிடுவோம்' என சிவக்குமாரிடம் செல்போனி லேயே காய்ச்சி எடுத்தனர். இதனால

வாரம்பாளையம் சர்வோதய சங்க செயலாளர் சிவக்குமார் தான் இந்த ஊழலுக்கு மூளையாகச் செயல்பட்டிருப்பதும், ஜக்கம்பட்டி கிளை முன்னாள் மேலாளர் பாலாஜி, சேலம் மாவட்டம் தாரமங்கலம் அத்தராம்பட்டியைச் சேர்ந்த பட்டுச்சேலை புரோக்கர்கள் சதாசிவம், கவுதமன், இளையராஜா ஆகியோர் உடந்தையாக இருந்ததும் சி.பி.ஐ. விசாரணையில் தெரிய வந்துள்ளது. தற்போது, இந்த விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

தற்போது, ஊழல் புகாரில் சிக்கிய சிவக்குமார், சி.பி.ஐ. போலீசாருக்கே விபூதி அடிக்கப் பார்த்தது, ஊழலை மறைக்க அதிகாரிகளை 'கில்மா' மேட்டர்களுடன் குளிப்பாட்டியது உள்ளிட்ட பல திடுக்கிடும் தகவல்கள் நக்கீரன் கள விசாணையில் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக சி.பி.ஐ. வட்டாரங்களில் விசாரித்தோம். ''மோசடிப் புகார்கள் குறித்து விசாரிப்பதற்காக சி.பி.ஐ. இன்ஸ்பெக்டர் மாணிக்கவேல், எஸ்.ஐ. சீனிவாசன் ஆகியோர், ஆவாரம்பாளையம் சர்வோதய சங்க செயலாளர் சிவக்குமாரை சென்னையிலுள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகும்படி கூறியுள்ளனர். அவரோ, சங்க பொருளாளர் பழனிசாமி, மேலாளர் சுருளிநாதன் ஆகியோரை அனுப்பி வைத்துள்ளார்.

cc

இதனால் உஷ்ணமான சி.பி.ஐ., "என்ன செய்வீர்களோ தெரியாது, ஆகஸ்ட் 16ஆம் தேதி காலை 10 மணிக்கெல்லாம் நேரில் ஆஜராக வேண்டும். நீங்கள் ஆஜராகா விட்டால் உள்ளூர் போலீசார் மூலம் உங்களைத் தூக்கி உள்ளே வச்சிடுவோம்' என சிவக்குமாரிடம் செல்போனி லேயே காய்ச்சி எடுத்தனர். இதனால் பதட்டமான சிவக்குமார், கோவையிலிருந்து விமானத்தில் பறந்து, சொன்ன நேரத்தில் ஆஜரானார். அன்றைக்கு மாலை வரை துருவித்துருவி விசாரித்ததில், ஏ.சி., அறையிலும் அவருக்கு 'குப்'பென்று வியர்த்திருக் கிறது.

மோசடிகள் குறித்து சி.பி.ஐ. கேட்டதற்கு, 'ஒவ் வொரு ஊழியரையும் நான் தனித்தனியாகக் கண்காணித் துக் கொண்டிருக்க முடியாது,' எனக்கூறியுள்ளார். போலி நெச வாளர்களைச் சேர்த்துவிட்ட தாரமங்கலம் சதாசிவத்தை, 'மாஸ்டர் வீவர்' என்று சொல்லியிருக்கிறார். 'கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆவாரம் பாளையம் சர்வோதய சங்கத்தில் மட்டும் எப்படி 58 கோடி ரூபாய்க்கு பட்டுப்புடவை விற் பனை செய்தீர்கள்?' எனக்கேட்டு, அவரை சி.பி.ஐ. லாக் செய்தது. அதற்கு சிவக்குமார், 'கலெக்ட ரிடம் சிறப்பு அனுமதி பெற்று விற்பனை செய்தோம்' எனக் கூறவே, அதற்கான அனுமதிக் கடிதத்தை காண்பிக்குமாறு கேட்க, உதட்டைப் பிதுக்கி யுள்ளார் சிவக்குமார்.

பட்டு பாவு நூல், ஊடு நூல் சப்ளை இல்லாதபோது, ஜக்கம்பட்டி கிளையில் 160 தறிக்காரர்களுக்கும் மாதம் 6 முதல் 9 பாவு கொடுக்கப் பட்டதாக பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது எப்படி சாத்தியமாகும்? என்ற கேள்விக்கும் அவரிடம் பதில் இல்லை. "ஜக்கம்பட்டி கிளைக்குத் தேவையான பட்டுக்கூடுகளை எங்கிருந்து வாங்கினீர்கள்? என்று கேட்டதற்கு, கிளை மேலாளர் பாலாஜி வாங்கியதாக சிவக் குமார் கூறியுள்ளார். இப்படி ஒவ்வொரு கேள்விக்கும் முன்னுக்குப் பின்னாகப் பதில் தர, நீங்கள் சொல்வதனைத்தும் பொய். உண்மையை ஒப்புக் கொண்டால் தண்டனை குறையும்' என சி.பி.ஐ. குரலை உயர்த்த, 'சார்... மேலாளர் தப்பு செய்திருந்தால் அவரை கைது செய்து கொள்ளுங்கள்' என்று பவ்யமாக சொல்லியிருக்கிறார் சிவக்குமார்.

ஜக்கம்பட்டி கிளையில், ஒரே ஆண்டில் 16 கோடிக்கு விற்பனை நடந்ததாக போலிக் கணக்கு காட்டிய விவகாரம் பூதாகரமாக, மேலாளர் பாலாஜி வேலையை ராஜி னாமா செய்துவிட்டு ஓடிவிட் டார். கே.வி.ஐ.சி. துறையில், சிவக்குமாரால் பலன்களை அனுபவித்த இந்நாள், முன் னாள் நிர்வாகிகள், சிவக் குமாரை காப்பாற்றும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். ஒவ் வொரு கைத்தறி நெசவாளரும் வாரம் 10 புடவைகளை நெய்ததாகக்காட்டி, நெசவுக்கூலியாக புடவைக்கு 3,300 ரூபாய் வீதம் வழங்கியதாக போலிக்கணக்கு எழுதப் பட்டதையும் கண்டுபிடித் துள்ளோம்." என்கிறது சி.பி.ஐ. வட்டாரம். விசாரணையின் போது, 2021, செப். 11-14 நாளிட்ட நக்கீரன் இதழில், சர்வோதய சங்க ஊழல் குறித்து வெளியான கட்டுரையிலிருந் தும் குறிப்புகள் எடுத்துக் கொண்டதாக சோர்ஸ் தரப்பில் நமக்கு சொல்லப்பட்டது.

cc

சர்வோதய சங்க முன்னாள் ஊழியர்களிடம் பேசினோம். ''ஆவாரம் பாளையம் சர்வோதய சங்கத்திலிருந்து 2012 முதல் 2022 வரையிலான அனைத்து 'கேஷ் வவுச்சர்', எடை ஏடு, டே புக், தணிக்கை ஆவணங்களை சி.பி.ஐ. போலீசார் விடிய விடிய ஆய்வு செய்தனர். 2012-2013ம் ஆண்டில் மட்டும், கே.வி.ஐ.சி. அலுவலக கணக்காளர்கள் மனோகரன், சுப்ரமணி ஆகிய இருவரும் தணிக்கைப் பணிக்காக ஆவாரம்பாளையம் சங்கத்திற்கு வந்து சென்ற வகையில் 13 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டதாக பதிவு செய்திருந்ததைப் பார்த்து சி.பி.ஐ. டீம் அதிர்ந்து போனது. அவர்கள் இருவரையும் சொகுசு விடுதிகளில் தங்க வைத்து, பெரிய அளவில் கவனிப்பை நடத்தியிருக்கிறார் சிவக் குமார்.

தணிக்கைக்கு வரும் அதிகாரிகளை சொகுசு கார்களில் மூணார், ஊட்டி, கொடைக்கானல், ராமேஸ்வரம் ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்று குளிர வைத்து விடுவார் சிவக்குமார். மும்பையிலிருந்து வரும் கே.வி.ஐ.சி. அதிகாரி களையும் இதேபோல 'கவனித்து' கவிழ்த்தி யிருக்கிறார். இந்த 'கவ னிப்புகளால்' கே.வி.ஐ.சி. அதிகாரிகள், ஆவாரம் பாளையம் சர்வோதய சங்கத்தில் நடந்துவரும் ஊழல்களை கண்டு கொள்வதில்லை.

இது ஒருபுறமிருக்க, ஜக்கம்பட்டி கிளை மேலாளர் பாலாஜி பட்டுச்சேலைகளை கொள்முதல் செய்ததற் காக சேலம் தாரமங்கலம் சதாசிவத்துக்கு 7 கோடி ரூபாய் பாக்கி வைத் துள்ள விவரங்களையும் சேகரித்துள்ளது சி.பி.ஐ. பாலாஜியால் ஜக்கம்பட்டி கிளைக்கு 28 கோடி ரூபாய் இழப்பு ஏற் பட்டுள்ளது. அதனால் தான் அவரை சிவக்குமார் சிக்கவைக்கப் பார்க்கிறார். சர்வோதய சங்க விதிகளின்படி செயலாளர் பதவியில் ஒருவர் அதிகபட்சம் 60 வயது வரை மட்டுமே இருக்க முடியும். ஆனால் சிவக்குமாரோ, சங்க விதிகளைத் திருத்தம் செய்து, 65 வயதாகியும் தன்னை நிரந்தரச் செயலாளராக அறிவித்துக் கொண்டார். தற்போது அவர் 1.80 லட்சம் ரூபாய் சம்பளம் பெறுகிறார். இதே சங்கத்தில் அவருடைய மனைவி மல்லிகா, மகள் திவ்யபிரபா ஆகியோரையும் பணிக்கு அமர்த்தியுள்ளார். இப்படி மொத்த குடும்பமுமே இந்த சங்கத்தை சுரண்டிப் பிழைக்கிறது. கோவையில் பல இடங்களில் வீடுகள், நிலபுலன்களை வாங்கிப் போட்டுள்ள சிவக்குமார் 100 கோடி ரூபாய்க்குமேல் சொத்துகளைக் குவித்துள் ளார்'' என்கிறார்கள் முன்னாள் ஊழியர்கள்.

இதுகுறித்து ஆவாரம்பாளை யம் சர்வோதய சங்க செயலாளர் சிவக்குமாரிடம் கேட்டபோது ஜாலியாக சிரித்துக்கொண்டே பேசினார். ''சேலம் தாரமங்கலத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற எஸ்.ஐ. மாரிமுத்து, சங்கத்தின் முன்னாள் ஊழியர் முருகேசன் ஆகியோர் என் மீது பொய்ப்புகார் அளித்துள்ளனர். சி.பி.ஐ. விசாரணை முடியட்டும் பார்த்துக்கலாம். என்னிடம் பல கோடி ரூபாய் சொத்துகள் இருப்பதாகச் சொல்வோர் தாராளமாக பங்கு போட்டுக் கொள்ளலாம். என் மனைவி, மகள் ஆகியோர் சங்க விதிகளின்படிதான் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். எல்லாமே டிஜிட்டல் பரிவர்த்தனை ஆகிவிட்ட பிறகு, எப்படி ஊழல் செய்ய முடியும்? பெரிய அளவில் பைனான்ஸ் தொழில் பண்ணுவ தில்லை. சங்கத்தில் யாராவது கேட்டால் கடன் கொடுப்பேன். நேரம் இருந்தால் ஒருமுறை நேரில் வாங்களேன்'' என்றார் சிரித்துக் கொண்டே. சி.பி.ஐ. அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, 'சிக்கிக் கொண்டார் சிவக்குமார்' என்று மூன்றே சொற்களில் முடித்துக்கொண்டார்.

dd

nkn201223
இதையும் படியுங்கள்
Subscribe