ந்தக் காலத் துல எம்.ஜி.ஆர். குட்புக்ல அதிரடி அரசியல்வாதியா இருந்தாலும், தாமரைக்கனியோட அரசியல் வாழ்க்கைல எம்.எல்.ஏ.ங்கிற லெவலுக்கு மேல போகமுடியல. ஆனா... தாமரைக்கனி மேல ஜெயலலிதாவுக்கு இருந்த கோபத்துல, அவர் மகன் இன்பத்தமிழனால அமைச்ச ராக முடிஞ்சது. இப்ப இன்பத் தமிழனோட அரசியல் வாழ்க்கையும் சொல்லிக்கிற மாதிரியில்ல. ஆனா... தாமரைக் கனியோட இன்னொரு மகன் தங்கமாங்கனி, மம்சாபுரம் பேரூராட்சில தி.மு.க. கவுன்சிலராவும், அவருடைய மனைவி சுஜிதாமேரி தி.மு.க. பேரூராட்சி தலைவராவும் இருக்காங்க. அவங்களும் இப்ப நிம்மதியா இல்ல. ஏன்னா.. ஆளும்கட்சி கவுன்சிலரா இருந்தும், தங்கமாங்கனி மேல கொலைமிரட்டல் வழக்கு பதிவாயிருக்கு. ஏற்கனவே, 2007-ல அண்ணாதுரைசெல்வன் கொலை வழக்குல இருந்து அண்ணன், தம்பிங்க மீண்டதே பெரிய விஷயம். இப்ப இந்த வழக்கு வேற. "என்னன்னே தெரியல. தாமரைக்கனி வாரிசுகள் தடு மாறிட்டே வர்றாங்க. தொடர்ந்து சோதனைகளைச் சந்திக்கிறாங்க'” என்று தாமரைக்கனி குடும்ப விசுவாசி ஒருவர் நம்மிடம் புலம்பினார்.

dd

மம்சாபுரம் பேரூராட்சியில் என்ன நடக்கிறது?

பேரூராட்சி கூட்டத்தில் ஊழல் நடந்திருப்பதாகக் குரலெழுப்பி, தீர் மானங்களை நிறை வேற்ற விடாமல் புறக்கணித்து, 11 கவுன்சிலர்கள் வெளி நடப்பு செய்துள்ள னர். தி.மு.க. உட் கட்சிப் பூசலும் தங்கமாங்கனிக்கு எதிராகக் கொடி பிடிக்க, பேரூராட்சிக்கு போலீஸ் பாதுகாப்பெல்லாம் போடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தன்னை எதிர்க்கும் அ.தி.மு.க. கவுன்சிலர் பல்க் ராஜாவின் பெட்ரோல் பல்க் சென்ற தங்கமாங்கனி, தனது காருக்கு டீசல் நிரப்பியிருக்கிறார். அப்போது "உங்க ஓனர் கவுன் சில் கூட்டத்துல தீர்மானத்த நிறைவேற்றவிடாம செஞ்சுட்டா சும்மா விடமாட்டோம்'’ என்று கொலை மிரட்டல் விடுத்ததாக பல்க் ஊழியர் ராமராஜ் புகார் கொடுக்க... தங்கமாங்கனி உள்ளிட்ட மூவர் மீது சி.சி.டி.வி. காட்சியின் அடிப்படையில் வழக்கு பதிவாகியிருக்கிறது.

தங்கமாங்கனி தலைமறைவாகிவிட, அவர் தரப்பில் நம்மிடம் பேசினார்கள்.

dd

"ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்துல கட்சி (தி.மு.க.) சரியில்ல. கட்சிக்குள்ளயே காம்பெடிஷனை உருவாக்கி பெரிய பிரச்சனை ஆக்கிட்டாங்க. மொதல்ல மம்சாபுரத்துல எந்த பிரச்சினையும் இல்ல. இப்ப ஊடாலதான் "எலக்ஷ னுக்கு நெறய செலவு பண்ணிட் டேன்னு, பல்க் ராஜா ரூ.25 லட்சம் கொடு'ன்னு தங்கமாங்கனிகிட்ட கேட்டாரு. "கேட்ட பணத்த கொடுத்தா ஒதுங்கிக்கிறேன்'னு சொன்னாரு. அதுக்கு தங்கமாங்கனி, "ஆளுக்கு ஒரு கான்ட்ராக்ட் தர்றேன். அதுல கிடைக்கிற லாபத்த வச்சிக்கங்க'ன்னாரு. அடுத்தடுத்து சில கவுன்சிலருங்க மாத்தி, மாத்தி "10 லட்சம் கொடு... 15 லட்சம் கொடு'ன்னு தங்கமாங்கனிகிட்ட கேட்க, பணம் இல்லைன்னாரு. அப்பதான் தி.மு.க. மாவட்ட பிரதிநிதி அய்யனாரு ஆள அனுப்பி, "நீ வேணும்னா மாசம் இவ்வளவுன்னு பணம் வாங்கிக்க... நிர்வாகத்த நான் பார்த்துக்கிறேன்'னாரு. போன தடவ பல்க் ராஜா அய்யனார் கன்ட்ரோல்ல இருந்த மாதிரி, இந்த தடவ தங்க மாங்கனி இருக்கணும்னு ரூட் விட்டாரு. தங்கமாங்கனி பிடி கொடுக்கல. கேட்ட பணத்த தரலன்னு அ.தி.மு.க., தி.மு.க. கவுன்சிலருங்க தங்கமாங்கனிக்கு எதிரா ஒண்ணு சேர்ந்துட்டாங்க. நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்து சேர்மன் நாற்காலில இருந்து தங்கமாங்கனி வீட்டுக்காரம்மாவ இறக்கியே ஆகணும்னு ஒரு முடிவோடு செயல்படறாங்க. இத்தனைக்கும் அய்யனாருகூட இருக்கிற ஆளுக்கு, எலக்ஷன் டயத்துல 20 லட்சம் பணமும் 30 லட்சத்துக்கு செக்கும் கொடுத்தாரு தங்கமாங்கனி. இப்ப நடக்கிற பிரச்சினை எல்லாத்துக்கும் காரணம் தி.மு.க. ஒன்றிய செயலாளர் மல்லி ஆறுமுகம்தான்'' என்றனர்.

கவுன்சிலர் பல்க் ராஜாவை தொடர்புகொண்டபோது, நம்மிடம் பேசுவதைத் தவிர்த்தார். தி.மு.க. மாவட்ட பிரதிநிதி அய்யனாரின் கைபேசி தொடர்ந்து ஸ்விட்ச்-ஆப் நிலையில் இருக்க, ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றிய செயலாளர் மல்லி ஆறுமுகத்திடம் பேசினோம்.

"பல்க் ராஜா ஏ.டி.எம்.கே.தான். தங்கமாங்கனிதான் பல்க் ராஜாவுக்கு பணம் கொடுத்து ஜெயிக்க வச்சாரு. மாவட்ட பிரதிநிதி அய்யனார் என்ன உழப்புனாருன்னு எனக்குத் தெரியாது. பல்க் ராஜா, அய்யனார், இவங்க ரெண்டு பேருக்கும், தங்கமாங்கனிக்கும் இடையில பணப் பிரச்சனை இருக்கும்போல. தேர்தல் நேரத்துல பணம் கொடுக்கிறேன்னு தங்கமாங்கனி ஒத்துக்கிட்டாரு போல. செக் எல்லாம் கையெழுத்து போட்டு கொடுத்திருக் காரு. ரூ.40 லட்சம் வரை இருக்கும்னு சொல்லுறாங்க. நான் அய்யனாருக்கோ, யாருக்குமோ சப்போர்ட் பண்ணல. நான் தங்கமாங்கனிகிட்டயே சொன்னேன். நீங்க அப்படி நினைச்சா, நான் அய்யனார்கிட்ட பேசுறதயே விட்றேன்னு. தங்கமாங்கனிதான் தண்ணிய போட்டுட்டு, அய்யனார் கிட்ட குண்டக்கமண்டக்க சாதிய இழுத்தெல்லாம் பேசிருக்காரு. நானோ, மந்திரியோ அவர எதுவும் பண்ண முடியாது, 40 லட்சத்தயும் கொடுக்க முடியாதுன்னு பேசிருக்காரு. வைஸ் சேர்மன் லேடிகிட்டயும், அவங்க சரியில்லன்னு திட்டிருக்காரு. தங்க மாங்கனிய வச்சிக்கிட்டே சேர்மன் சுஜிதா மேரிகிட்ட, ஒரு பெண்ணை கெட்டவங்கன்னு எப்படி சொல்ல லாம்னு கேட்டேன். ஆரம்பத்துல இருந்தே தண்ணிய போட்டா என்னத்தயாச்சும் பேசிடறாரு. நான்தான் மந்திரி சொல்லி, தங்கமாங்கனி மனைவி சுஜிதாமேரியை சேர்மன் ஆக்கினேன். அமைச்சரையே தண்ணிய போட்டுட்டு வையிறாரு. தங்கமாங்கனி பேசினதுக்கெல்லாம் ரெகார்ட் வச்சிருக்காங்க. கடவுள் ஒரு வாய்ப்பு கொடுத்திருக்காரு. அதைப் பயன்படுத்தி மக்களுக்கு நாம நல்லது பண்ணனும்''’என்றார்.

மம்சாபுரம் பேரூராட்சி நிர்வாகத் தில் ஊழல், உட்கட்சிப் பூசல், மிரட்டல், உறுத்தலான நடவடிக் கைகள்... என சகலமும் மலிந்து கிடக்கின்றன.

Advertisment