கொரோனா ஒழிப்பிற்காக பிரதமர் தனிப்பட்ட முறையில் திரட்டிய பி.எம்.கேர் நிதியில் இருந்து 3 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்குவதாக அறிவித்துள்ளார். இதுதவிர உலக வங்கியிடம் இருந் தும் கொரோனா ஒழிப்பிற்காக நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் களை தமிழக அரசு திரட்டியுள்ளது. ஆனால் இந்த தொகை எல்லாம் எங்கே போனது என மர்மம் நிறைந்த கேள்விகளை கேட்கி றார்கள் தமிழக சுகாதாரத்துறை யைச் சார்ந்தவர்கள்.
கடந்த வியாழக்கிழமை 11,773 பேருக்கு சோதனை களை நடத்தியது தமிழக சுகாதாரத்துறை. அந்த சோதனையில் 447 பேருக்கு கொரோனா நோய் பாதித்தது என கண்டுபிடித்தது. மொத்தம் 9,674 கொரோனா நோயாளிகளைப் பெற்று இந்தியாவிலேயே 2வது இடத்தைப் பெற்றது தமிழகம்.
புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் 4.02 சதவிகிதம் கொரோனா நோயாளிகள் கண்டு பிடிக்கப்பட்டனர். மாறாக, வியாழக்கிழமை அன்று 3.08 சதவிகிதம் நோயாளிகள்தான் கண்டுபிடிக்கப்பட்டார்கள். அதுவரை 500க்கும் மேல் சென்றுகொண்டிருந்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 400ஐ தொட்டது.
உலக சுகாதார அமைப்பு நிறைய சோதனைகளை மேற்கொள்ள வேண்டும், சோதனைகள் மூலம் புதிய புதிய நோயாளிகளை கண்டுபிடிக்க வேண்டும், அவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களை கண்டுபிடிக்க வேண்டும், ஒருநோயாளி இருபது நிமிடம் நோய் இல்லாதவரிடம் பேசிக்கொண்டிருந்தாலே நோய் இல்லாத வருக்கு கொரோனா நோய் வந்துவிடும் என எச்சரிக்கிறது. இதற்கு நேர்மாறாக தமிழ கத்தில் கொரோனா நோய் பரிசோதனைகள் குறைக்கப்பட்டது ஏன்? என தமிழக சுகா தாரத்துறை அதிகாரி
கொரோனா ஒழிப்பிற்காக பிரதமர் தனிப்பட்ட முறையில் திரட்டிய பி.எம்.கேர் நிதியில் இருந்து 3 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்குவதாக அறிவித்துள்ளார். இதுதவிர உலக வங்கியிடம் இருந் தும் கொரோனா ஒழிப்பிற்காக நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் களை தமிழக அரசு திரட்டியுள்ளது. ஆனால் இந்த தொகை எல்லாம் எங்கே போனது என மர்மம் நிறைந்த கேள்விகளை கேட்கி றார்கள் தமிழக சுகாதாரத்துறை யைச் சார்ந்தவர்கள்.
கடந்த வியாழக்கிழமை 11,773 பேருக்கு சோதனை களை நடத்தியது தமிழக சுகாதாரத்துறை. அந்த சோதனையில் 447 பேருக்கு கொரோனா நோய் பாதித்தது என கண்டுபிடித்தது. மொத்தம் 9,674 கொரோனா நோயாளிகளைப் பெற்று இந்தியாவிலேயே 2வது இடத்தைப் பெற்றது தமிழகம்.
புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் 4.02 சதவிகிதம் கொரோனா நோயாளிகள் கண்டு பிடிக்கப்பட்டனர். மாறாக, வியாழக்கிழமை அன்று 3.08 சதவிகிதம் நோயாளிகள்தான் கண்டுபிடிக்கப்பட்டார்கள். அதுவரை 500க்கும் மேல் சென்றுகொண்டிருந்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 400ஐ தொட்டது.
உலக சுகாதார அமைப்பு நிறைய சோதனைகளை மேற்கொள்ள வேண்டும், சோதனைகள் மூலம் புதிய புதிய நோயாளிகளை கண்டுபிடிக்க வேண்டும், அவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களை கண்டுபிடிக்க வேண்டும், ஒருநோயாளி இருபது நிமிடம் நோய் இல்லாதவரிடம் பேசிக்கொண்டிருந்தாலே நோய் இல்லாத வருக்கு கொரோனா நோய் வந்துவிடும் என எச்சரிக்கிறது. இதற்கு நேர்மாறாக தமிழ கத்தில் கொரோனா நோய் பரிசோதனைகள் குறைக்கப்பட்டது ஏன்? என தமிழக சுகா தாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டோம்.
அதற்கு அவர்கள், ""கொரோனா நோயை சோதனை செய்யக்கூடிய பி.சி.ஆர். சோதனை கருவிகள் மிகக் குறைவாக இருப்பதுதான் தமிழக அரசு சோதனைகளை குறைத்ததற்கான காரணம்'' என்கிறார்கள்.
சோதனை செய்யக்கூடிய பி.சி.ஆர். கருவிகளை ஒருமுறைதான் பயன்படுத்தமுடியும். அதனால்தான் 10 லட்சம் பி.சி.ஆர். கருவிகளுக்கு தமிழக அரசு ஆர்டர் கொடுத்தது. கொரிய நிறு வனத்திடம் கொடுக்கப்பட்ட அந்த ஆர்டர்படி ஒரு லட்சம் பி.சி.ஆர். கருவிகள் வந்துவிட்டது என கடந்த வாரம் தமிழக அரசு பத்திரிகைகளில் செய்தி வெளியிட்டது. இந்த நிலையில் திடீரென பி.சி.ஆர். கருவிகள் பற்றாக்குறை ஏன் வந்தது? என கேட்டோம். ஒரு லட்சம் பி.சி.ஆர். கருவிகள், கொரிய நிறுவனத்திடம் இருந்து வரவில்லை. வந்ததாக சொல்லப்படும், பி.சி.ஆர். சோதனை கருவிகள் என்ன ஆனது என்றே தெரியவில்லை என்கிறார்கள்.
பி.சி.ஆர். சோதனை கருவிகள் பற்றாக் குறையால் கொரோனா சோதனை செய்வது நிறுத்தப்பட்டது என்பது எங்களுக்கே அதிர்ச்சி யான தகவலாகத்தான் இருக்கிறது. பி.சி.ஆர். கருவிகள் கொரோனாவில் இருந்து டாக்டர் களையும், நர்சுகளையும் பாதுகாக்கும் பி.பி.இ. ஆடைகள் என அனைத்தையும் வாங்குவதற் கான ஒப்பந்தங்களை தமிழ்நாடு மெடிக்கல் சேல்ஸ் கார்ப்பரேஷனின் நிர்வாக இயக்குநர் உமாநாத் மற்றும் அந்த நிறுவனத்தில் முதலமைச்சருக்கும், அமைச்சருக்கும் நெருக்கமான கண்சல்டன்ட் ஆனந்த் ஆகியோர் செய்து கொண்டே இருக்கிறார்கள்.
இப்பொழுது கூட ம்ண்ய்க்ழ்ஹஹ் என்கிற சீன நிறுவனத்திடம் இருந்த வெண்டி லேட்டர்களை வாங்குவதற்கு நூற்றுக்கணக் கான கோடி ரூபாய் ஆர்டர்களை தமிழக அரசு கொடுத்திருக்கிறது. சீனாவைச் சேர்ந்த இந்த தரம் குறைவான கம்பெனியிடம் வெண்டி லேட்டர்கள் வாங்குவதற்கு டாக்டர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அதை யும் மீறி முதலமைச்சர் எடப்பாடி, நூற்றுக் கணக்கான கோடி ரூபாய்க்கு வெண்டிலேட்டர் களை வாங்குவதற்கு உத்தரவிட்டுள்ளார். இது ஒரு மிகப்பெரிய ஊழல் என பகிரங்கமாகவே குற்றம் சாட்டுகிறார்கள் சுகாதாரத்துறை வல்லு நர்கள்.
தமிழகத்தில் கொரோனாவின் நிலை எப்படி இருக்கிறது என நடத்தப்படும் சோத னைகள் முறையானதாக இல்லை. தேவைக் கேற்றவாறு சோதனைகளை குறைவாகவும், அதிகமாகவும் நடத்தி கொரோனா நோயாளி களின் எண்ணிக்கையை குறைத்துக் காட்டு கிறார்கள். உண்மையில் தமிழகத்தில் கொரோனா நோய் சோதனைகள் சரியான எண்ணிக்கையில் நடத்தப்பட்டால் மகாராஷ்டிராவைத் தாண்டி முதலிடத்திற்குக் கூட தமிழகம் வரும் என எச்சரிக்கிறார்கள்.
நந்தம்பாக்கம் வணிக வளாகத்தில் கொரோனா நோயாளிகளுக்கென ஒரு சிறப்பு மையத்தை மாநகராட்சி உதவியுடன் தமிழக அரசு நிறுவியது. அந்த மையத்தில் போதிய வசதிகள் இல்லை என நோயாளிகள் சண்டை போட்டதால் அவர்களை எஸ்.ஆர்.எம். மருத் துவக் கல்லூரி, மீனாட்சி மிஷன் போன்ற மருத் துவ மனைகளுக்கு தமிழக அரசு அனுப்பி யுள்ளது.
இதுதவிர அங்கங்கே இருக்கக்கூடிய வசதி குறைந்த மையங்களுக்கு குறைந்த அளவு நோய் தொற்றுள்ள கொரோனா நோயாளிகளை தமிழக அரசு அனுப்பி வைக்கிறது. அவர்கள், அங்கு மருத்துவ வசதிகள் போதவில்லை என நாளொருமேனியும், பொழுதொரு வண்ணமாக தமிழக அரசின் கொரோனா சிகிச்சை மையங்கள் போராட்டங்களை சந்தித்து வரு கின்றன. இதற்கிடையே அப்பல்லோ போன்ற தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப் படும் பணக்கார நோயாளிகளிடம் நாள் ஒன்றுக்கு ரூபாய் ஒரு லட்சம் சிகிச்சைக்காக வாங்குகிறார்கள் என புகாரும் எழுகிறது.
கோவையில் கொரோனா நோய் இல்லை என்கிற நிலையை உருவாக்கிவிட்டதாக அமைச்சர் வேலுமணி அறிவிக்கிறார். அங்கும் ஈஷா யோகா மையத்தில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகள் பற்றிய எண்ணிக்கை மறைக்கப்படுகிறது என சமூக ஆர்வலர்கள் புகார் கூறுகிறார்கள். இதற்கிடையே அமைச்சர் விஜயபாஸ்கருக்கும், செயலாளர் பீலா ராஜேஷ்க்கும் இடையே ஒரு கடும் சண்டை சுகாதாரத்துறையில் நடைபெற்று வருகிறது. முதல்வர் எடப்பாடியின் தீவிர ஆதரவாளராக பீலா ராஜேஷ் மாறிவிட்டார். அதனால் தமிழ கத்தில் கொரோனா நோயாளிகள் எத்தனை பேர் பாதிக்கப்பட்டார்கள் என தினமும் அறிக்கை தரும் பொறுப்பையும் பீலா ராஜேஷிடம் இருந்து விஜயபாஸ்கர் பறித்துக்கொண்டார்.
கொரோனா ஒழிப்பிற்காக பல்வேறு மருத்துவ பணியாளர்களை சமீபத்தில் விஜய பாஸ்கர் நியமனம் செய்தார். மருத்துவ பணி யாளர்களை தேர்ந்தெடுக்க தனியான தேர்வாணை யம் உள்ளது. அதன்படி தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவ பணியாளர்களை அவரது சொந்த மாவட்டங்களில் நியமனம் செய்யாமல் வெவ் வேறு மாவட்டங்களில் நியமனம் செய்தார். அவர்கள் தங்களது சொந்த மாவட்டத்திற்கு பணிமாறுதல் செய்ய வேண்டும் என்றால் லட்சக் கணக்கில் பணம் தர வேண்டும் என்று கோடிக் கணக்கில் விஜயபாஸ்கர் வசூல் செய்கிறார்.
அதேபோல் சுகாதாரத்துறையில் அரசு சார்பு செயலாளராக விஜயபாஸ்கருக்கு நெருக்கமான ஒருவரை விதிமுறைகளை மீறி நியமனம் செய்திருக்கிறார் என பீலா ராஜேஷ் தரப்பு அமைச்சர் மீது குற்றம் சாட்டுகிறது. இப்படி அதிகாரப்போட்டி, ஊழல், வெளிப் படைத்தன்மை என எதுவும் இல்லாமல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டிருக்கிறது.
கொரோனாவுக்காக அரசு இதுவரை 6 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசிடம் இருந்து பெற்றிருக்கிறது. இதுதவிர உலக வங்கி போன்ற கடன் கொடுக்கும் நிறுவனங்களிடம் இருந்தும் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் பெற்றிருக்கிறது. இந்தப் பணத்தை தமிழக அரசு எப்படி செலவு செய்தது என்பது பற்றிய முழுமையான தணிக்கை விவரங்கள் தமிழக சுகாதாரத்துறையிடம் இல்லை. இது பெரும் ஊழல் என எச்சரிக்கை மணி அடிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
இது தவிர தமிழகத்தில் உள்ள பெரிய தொழில் நிறுவனங்கள் கோடிக் கணக்கான ரூபாய் நிதிகளாகவும், உபகரணங்களாகவும் அளித்துள்ளன. அவை யாவும் விழலுக்கு இறைத்த நீர் போல வீணாகிக் கொண்டிருக் கிறது. இந்தியாவில் மிகப்பெரிய கட்டுமான நிறுவனமான எல்&டி நிறுவனம், கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட்டில் நூற்றுக்கணக்கான படுக்கைகளுடன் அதிநவீன வெண்டிலேட்டர் களுடன் ஒரு பெரிய மருத்துவமனையையே தமிழக அரசுக்கு கொடுத்தது. அந்த மருத்துவ மனையை இன்று வரை தமிழக அரசு பயன் படுத்தவே இல்லை என வருத்தத்துடன் தெரிவிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
-தாமோதரன் பிரகாஷ்