மாணவி மரணத்தில் மதமாற்றமா? அம்பலப்பட்ட பா.ஜ.க! கட்சிக்குள் கோஷ்டி மோதல்!

ll

மாணவி லாவண்யா வின் தற்கொலைக்கு மதமாற்றம்தான் காரணம் என பா.ஜ.க.வும், குடும்ப விவகாரமும், அவரது சித்தி கொடுமையும்தான் காரணம் என பொதுமக்களும், பள்ளி நிர்வாகமும் முரணாகக் கூறிவந்த நிலையில்...

மாணவி இறப்பதற்கு முன்பு பேசியதாக இரண்டாவது வீடியோவும், பா.ஜ.க.வின் தேசிய அளவிலான ஆய்வுக் குழு வருகைக்கு மைக்கேல்பட்டி மக்கள் எதிர்ப்பும் என மீண்டும் பரபரப்பாகியுள்ளது.

ll

அரியலூர் மாவட்டம் வடுகபாளையத்தைச் சேர்ந்த முருகானந்தத்தின் முதல் மனைவிக்கு பிறந்த மகள் லாவண்யா. தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள மைக்கேல் பட்டி தூய இருதய மேல்நிலை பள்ளியிலுள்ள விடுதியில் தங்கி 12 ஆம் வகுப்பு படித்துவந்தார். அவர் தற்கொலை முயற்சி மேற்கொண்டு, கடந்த ஜனவரி 19-ஆம் தேதி மரணமடைந்தார்.

பள்ளி நிர்வாகம், லாவண்யாவை மதம் மாறும்படி தொடர்ந்து தொந்தரவு கொடுத்ததால்தான் தற்கொலை செய்துகொண்டார் என பா.ஜ.க.வினரும், விஷ்வஹிந்து பரிஷத் அமைப்பினரும், முன்னும்பின்னும் வெட்டப்பட்ட வீடியோ ஒன்றை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு பரபரப்பை உண்டாக்கியதோடு, தமிழகம் முழுவதும் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

இந்நிலையில், தனது மகளின் வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க உத்தரவிடக் கோரி மாணவி லாவண்யாவின் தந்தை முருகானந்தம் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, மாணவி பேசிய வீடியோவை பதிவுசெய்தவர்கள் வல்லம் துணைபோலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆஜராகவேண்டுமென உத்தரவிட்டிருந்தார். அதன்படி 25-ஆம் தேதி மாணவியின் தந்தை முருகானந்தம், சித்தி சரண்யா, வீடியோ எடுத்த அரியலூர் விஷ்வஹிந்து பரிஷத் மாவட்டச் செயலாளர் முத்துவேல் ஆகியோர் விசாரணை அதி

மாணவி லாவண்யா வின் தற்கொலைக்கு மதமாற்றம்தான் காரணம் என பா.ஜ.க.வும், குடும்ப விவகாரமும், அவரது சித்தி கொடுமையும்தான் காரணம் என பொதுமக்களும், பள்ளி நிர்வாகமும் முரணாகக் கூறிவந்த நிலையில்...

மாணவி இறப்பதற்கு முன்பு பேசியதாக இரண்டாவது வீடியோவும், பா.ஜ.க.வின் தேசிய அளவிலான ஆய்வுக் குழு வருகைக்கு மைக்கேல்பட்டி மக்கள் எதிர்ப்பும் என மீண்டும் பரபரப்பாகியுள்ளது.

ll

அரியலூர் மாவட்டம் வடுகபாளையத்தைச் சேர்ந்த முருகானந்தத்தின் முதல் மனைவிக்கு பிறந்த மகள் லாவண்யா. தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள மைக்கேல் பட்டி தூய இருதய மேல்நிலை பள்ளியிலுள்ள விடுதியில் தங்கி 12 ஆம் வகுப்பு படித்துவந்தார். அவர் தற்கொலை முயற்சி மேற்கொண்டு, கடந்த ஜனவரி 19-ஆம் தேதி மரணமடைந்தார்.

பள்ளி நிர்வாகம், லாவண்யாவை மதம் மாறும்படி தொடர்ந்து தொந்தரவு கொடுத்ததால்தான் தற்கொலை செய்துகொண்டார் என பா.ஜ.க.வினரும், விஷ்வஹிந்து பரிஷத் அமைப்பினரும், முன்னும்பின்னும் வெட்டப்பட்ட வீடியோ ஒன்றை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு பரபரப்பை உண்டாக்கியதோடு, தமிழகம் முழுவதும் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

இந்நிலையில், தனது மகளின் வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க உத்தரவிடக் கோரி மாணவி லாவண்யாவின் தந்தை முருகானந்தம் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, மாணவி பேசிய வீடியோவை பதிவுசெய்தவர்கள் வல்லம் துணைபோலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆஜராகவேண்டுமென உத்தரவிட்டிருந்தார். அதன்படி 25-ஆம் தேதி மாணவியின் தந்தை முருகானந்தம், சித்தி சரண்யா, வீடியோ எடுத்த அரியலூர் விஷ்வஹிந்து பரிஷத் மாவட்டச் செயலாளர் முத்துவேல் ஆகியோர் விசாரணை அதிகாரியான பிருந்தா முன் ஆஜராகினர்.

மூன்றுபேரிடமும் நீண்ட நேரம் விசாரணை நடந்தது. விசாரணை முடிந்து வெளியே வந்த முத்துவேல், "மாணவி லாவண்யாவைப் பார்க்க 17-ஆம் தேதி போனேன். மாணவியின் பெற்றோர்தான் என்னை வீடியோ எடுக்கச் சொன்னாங்க. போலீசாரிடம் வீடியோவை ஒப்படைச்சிருக் கேன். மாணவிக்கு நான் உறவினர் இல்லை. அவங்க குடும்பத்திற்கு தூரத்து நண்பர்''’என கூறிவிட்டு நழுவினார்.

ll

இரண்டாவதாக வெளியான வீடியோவில் லாவண்யா, "அந்தப் பள்ளியில் எட்டாம் வகுப்பு முதல் படித்து வர்றேன். பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தேன், ஆனால் 12-ஆம் வகுப்பில், குடும்பச் சூழல் காரணமா தாமதமாகத்தான் பள்ளியில் சேர்ந்தேன். பன்னிரண்டாம் வகுப்பில் நிறைய மதிப்பெண் பெறணும்னு விரும்பினேன், ஆனால் பள்ளி முடிந்து வந்ததுமே ஹாஸ்டல் வார்டன் சகாயமேரி என்னை கணக்கு வழக்குகளைப் பார்க்கச் சொல்லிக் கட்டாயப்படுத்துறாங்க. தாமதமாக பள்ளியில் சேர்ந்ததால், எனக்கு பாடம் எதுவுமே புரியல. அப்புறமா கணக்கு எழுதித் தர்றேன்னு சொன்னாலும் விடமாட்டாங்க. கணக்கை நான் சரியாக எழுதிக் கொடுத்தாலும் அதுல தப்பு, இதுல தப்புன்னு கூறி நீண்டநேரம் என்னைக் காக்க வச்சிடுவாங்க. அதனால என்னால் படிப்பில் கவனம் செலுத்த முடியல. இப்படியே போனால் என்னால் படிக்கவே முடியாதுன்னுதான் நான் மருந்து குடித்தேன்''’என அந்த வீடியோ நீள்கிறது.

இதற்கிடையில் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் குழு மாணவ-மாணவிகளிடம் கள ஆய்வு செய்து அறித்த அறிக்கை அடிப்படையில் அமைச்சர் அன்பில் மகேஷ், "அந்த அறிக்கையில், இந்த மாணவியை மட்டுமல்ல எந்த மாணவ- மாணவிகளையும் மதமாற்றம் செய்ய முயன்றதாக எந்த ஆதாரமும், புகாரும் இல்லை. மாணவிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்திவிட்டோம்''’என்கிறார்.

மாணவியின் சித்தி சரண்யா கொடுமைப்படுத்துவதாக கூறி (1098) சைல்டு லைனுக்கு 2020-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18-ஆம் தேதி ஒரு தொலைபேசி அழைப்பு வந்து, மாணவியின் வீட்டுக்குச் சென்று கவுன்சில் வழங்கியதாகவும், தொடர்ந்து நான்கு மாதங்களில் நான்கு முறை சென்று விசாரணை நடத்திய தாகவும், திருமானூர் சைல்டு லைன் அமைப்பினர் ஒரு அறிக்கையை தயார் செய்து, அரியலூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் கொடுத் திருப்பதாக புதியதொரு முடிச்சும் அவிழ்ந்திருக்கிறது.

லாவண்யா விவகாரம் குறித்த விசாரணை நடத்த தேசிய பா.ஜ.க., மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சந்தியா ராய் எம்.பி., தெலுங்கானாவைச் சேர்ந்த விஜயசாந்தி, மகாராஷ்டிராவை சேர்ந்த சித்ரா தாய்வாக், கர்நாடகாவைச் சேர்ந்த கீதாவிவேகானந்தா ஆகிய நான்குபேர் கொண்ட குழுவை அனுப்பியுள்ளனர். அந்தக் குழுவினர் முதலில் லாவண்யா வின் வீட்டிற்குச் சென்று அவரது பெற்றோர்களைச் சந்தித்துவிட்டே மற்ற இடங்களுக்குச் செல்லவேண்டும் என உத்தரவு போட்டிருக்கிறார் நட்டா.

இந்நிலையில், பள்ளி அமைந்துள்ள மைக்கேல்பட்டி பொதுமக்கள் ஒன்றுகூடி முடிவெடுத்து பா.ஜ.க.வின் நால்வர் குழுவை ஊருக்குள் அனுமதிக்கக்கூடாது என தஞ்சை மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் அளித்துள்ளனர்.

இது குறித்து குருமூர்த்தி மற்றும் அருள்நாதனிடம் விசாரித் தோம். "அந்தப் பள்ளி இருப்பது எங்களுக்கு மட்டுமல்ல இந்த மாவட்டத் திற்கே பெருமை. இங்கு படிக்கும் பெரும்பான்மை யான மக்கள் இந்து சமூகத்தை சார்ந்த, விளிம்பு நிலையில் வாழும் பட்டியல் சமூக மக்களே. இந்தப் பள்ளியை மூடி தனியார் பள்ளிகளுக்கு சாதகமாகவும், ஒற்றுமையாக இருக்கும் எங்கள் பகுதியில் மதமோதலை உண்டாக்கி அரசியல் செய்யவும் நினைக்கிறாங்க. இதனை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். அந்தக் குழு எங்கள் கிராமத்திற்கு வரக்கூடாது''’என்கிறார்கள்.

மைக்கேல்பட்டியைச் சேர்ந்த அஜீஸ் என்பவரோ, "அந்த குழுவில் உள்ளவங்களுக்கு தமிழே தெரியாது. கூட யாராவது மொழிபெயர்ப் பாளர் வருவாங்க, அவங்க நாங்க சொல்லுறதை திரித்துச்சொல்ல வாய்ப்பு அதிகமா இருக்கு''’ என்கிறார்.

மைக்கேல்பட்டிக்குச் சென்று ஆய்வுநடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணனோ, “"தற்போது பா.ஜ.க. ஏற்படுத்திவரும் பிரச்சாரத்தால் தொண்டு செய்பவர்களும் கூட மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். மாணவி மரணத்தை வைத்து அரசியல் செய்யும் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்''’என்கிறார்.

திருக்காட்டுப்பள்ளியைச் சேர்ந்த பா.ஜ.க. பிரமுகர் ஒருவரோ, “"மாணவி விவகாரம் முதலில் விஷ்வஹிந்து பரிஷத்தைச் சேர்ந்த முத்துவேலுக்கு தெரிந்திருக்கு. பணத்திற்காக ஒன்றுமில்லாத பிரச்சினையைக்கூட பெரிசா ஆக்கிடுவாரு. பெரிய நிர்வாகத்தின் விவகாரமாச்சே சும்மா இருப் பாரா...?… முதலில் வீடியோ எடுத்து நிர்வாகத்தில் பேரம் பேச நினைச்சார். ஆனால் அது சரிவராம போனதால், கருப்பு முருகானந்தத்திடம் தகவலைச் சொல்லியிருக்கிறார். விவகாரம் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்குப் போனது. இதற்கிடையில் அரியலூர் மாணவி அனிதா இறப்பில் எவ்வளவு நஷ்டஈடு கிடைத்ததோ, அதைவிட ஒரு மடங்கு அதிகமாக வாங்கித் தருகிறோம்னு மாணவியின் சித்தி சரண்யாவிடம் பேசி பூதாகரமாக்கிட்டாங்க.

அவர்கள் நினைத்தபடி மதமாற்ற விவகாரம் இல்லை என்பதால் பழைய பிரச்சினை ஏதாவது இருக்கான்னு ஊர் மக்களிடம் விசாரித்து, பிரச் சினையாக்கிட்டாங்க. இனிமேல் பின்வாங்கினா தேசிய அளவில் பா.ஜ.க.வுக்கு அசிங்கமாகிடும்னு ஏதேதோ செய்கிறார் அண்ணாமலை. பணத்திற்கு ஆசைப்பட்டு பெற்றவங்க தேவையில்லாம சிக்கிட்டாங்க. இந்த விவகாரத்துல, தான் வளர்ந்திடலாம்னு கருப்பு முருகானந்தம் கணக்கு போட்டு நகர்ந்தார், விஷ்வஹிந்து முருகவேல் பெருசா பணமாக்கிடலாம்னு கணக்கு போட்டார். இரண்டையும் உடைத்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை விவகாரமாக்கியதால் அவர் களுக்குள் கோஷ்டிப் பூசல் வெடிக்க ஆரம்பிச் சிடுச்சி''’என்கிறார்.

இந்நிலையில் குழந்தைகள் உரிமை பாதுகாப்புக்கான தேசிய ஆணையம், உள்ளாட்சித் தேர்தலுக்கான நடத்தை விதிகளைக் காரணம் காட்டி தமிழக அரசு, லாவண்யா மரணம் பற்றி விசாரிப்பதற்கு ஆதரவளிக்க மறுப்பதாக குற்றம் சாட்டியுள்ளது. அதே போல, விசாரணையில் முத்துவேல் ஒத்துழைக்க வில்லை என அரசு வழக்கறிஞர் செந்தில்குமார் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தெரிவித்துள்ளார்.

இறுதியாக இது குறித்து காவல்துறையின ரிடம் பேசியபோது, "முதலில் வெளியான வீடியோ வழக்கம்போல, அவர்கள் வெட்டு வேலை செய்தது. இரண்டாவது வெளியாகியிருக்கும் வீடியோதான் எதார்த்தமாக பேசியதுபோல இருக்கிறது. அந்த வீடியோவில் மதமாற்றம் என்கிற வார்த்தையே இல்லை. இந்த விவகாரத்தில் பள்ளி நிர்வாகத்திற்கு தொடர்பில்லை என வெட்டவெளிச்சமாகத் தெரிகிறது. வார்டன் கொடுத்த பணிச் சுமைதான் காரணம் என்று கூறியுள்ளார். வார்டன் சகாயமேரியை ஏற்கனவே கைது செய்துவிட்டோம். அந்த வீடியோவில் வரும் வாய்ஸ் லாவண்யா வுடையதுதானா என்கிற குழப்பம் அதிகரித் துள்ளது. வீடியோக்கள் ஆய்வுக்கு அனுப்பப் பட்டுள்ளது, குடும்பச் சூழலால் பள்ளியில் தாமதமாக சேர்ந்தேன் என கூறியிருக்கிறார். அது குறித்து விசாரணை நடக்கிறது''’என்கிறார்கள்.

nkn020222
இதையும் படியுங்கள்
Subscribe