மொய்விருந்து சர்ச்சை! வாங்கிக் கட்டிய அண்ணாமலை!

ss

டந்த சில நாட்களுக்கு முன்பு பேராவூரணி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வான அசோக்குமார், தன் பேரப்பிள்ளைகளின் காதணி விழாவை முன்வைத்து, ஆட்டுக்கறி கமகமக்க தடபுடலாக மொய்விருந்தை நடத்தினார். இதில் ஏறத்தாழ 10 கோடி ரூபாய்க்கு மேல் வசூலானது. இதை விமர்சித்த தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணா மலை, "காது குத்தப்பட்டது தி.மு.க. எம்.எல்.ஏ.வின் பேரக்குழந்தைகளுக்கா? அல்லது வருமானவரித் துறைக்கா? இது முற்றிலும் தி.மு.க. எம்.எல்.ஏ.வின் ஊழல் திறமையை வெளிக்காட்டுகிறது'’என்று குற்றம்சாட்டினார்.

dd

மொய்விருந்துப் பணத்துக்கு வருமான வரி வசூலிக்க வேண்டும் என்பதை சூசகமாகச் சொன்ன அவரது அந்தக் கருத்து, மொய்விருந்தைக் கடைப்பிடிக்கும் அனைவரையும் அதிர வைத்திருப்பதோடு, அவர்களின் கோபத்தையும் கிளறியிருக்கிறது.

இது குறித்து நம்மிடம் பேசிய நெடுவாசல் ராம் குமார், "மொய் விருந்துகள் என் பது தொன்று தொட்டுவரும் பழக்கம். கறி விருந்து கொடுத்து இது நடத்தப்படுகிறது. இதற்காக லட்சக்கணக்கில் செலவாகும் என்பதால் பலர் ஒன்றிணைந்து பந்த

டந்த சில நாட்களுக்கு முன்பு பேராவூரணி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வான அசோக்குமார், தன் பேரப்பிள்ளைகளின் காதணி விழாவை முன்வைத்து, ஆட்டுக்கறி கமகமக்க தடபுடலாக மொய்விருந்தை நடத்தினார். இதில் ஏறத்தாழ 10 கோடி ரூபாய்க்கு மேல் வசூலானது. இதை விமர்சித்த தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணா மலை, "காது குத்தப்பட்டது தி.மு.க. எம்.எல்.ஏ.வின் பேரக்குழந்தைகளுக்கா? அல்லது வருமானவரித் துறைக்கா? இது முற்றிலும் தி.மு.க. எம்.எல்.ஏ.வின் ஊழல் திறமையை வெளிக்காட்டுகிறது'’என்று குற்றம்சாட்டினார்.

dd

மொய்விருந்துப் பணத்துக்கு வருமான வரி வசூலிக்க வேண்டும் என்பதை சூசகமாகச் சொன்ன அவரது அந்தக் கருத்து, மொய்விருந்தைக் கடைப்பிடிக்கும் அனைவரையும் அதிர வைத்திருப்பதோடு, அவர்களின் கோபத்தையும் கிளறியிருக்கிறது.

இது குறித்து நம்மிடம் பேசிய நெடுவாசல் ராம் குமார், "மொய் விருந்துகள் என் பது தொன்று தொட்டுவரும் பழக்கம். கறி விருந்து கொடுத்து இது நடத்தப்படுகிறது. இதற்காக லட்சக்கணக்கில் செலவாகும் என்பதால் பலர் ஒன்றிணைந்து பந்தல் அமைத்து கறி விருந்து கொடுத்து மொய் வாங்குவது வழக்கம். தென்னை போன்ற விவசாயத்தில் கிடைக்கும் தொகையை சேமிப்பு போல உறவினர்கள், நண்பர்களின் மொய் விருந்துகளில் சேமித்து வைத்து, 5 ஆண்டுகள் முடிவடைந்த பிறகு அதனை மொத்தமாக வாங்கிக் கொள்வதுதான் மொய்விருந்து. இதில் எந்த முறைகேடும் நடக்காது, நடத்தவும் முடியாது. ஏனென்றால் ஒருவருக்கு மொய்எழுதும் போது பணத்தை வாங்கும் முன்பே தனது ஊர் எழுதப்பட்ட நோட்டில் முன்னெழுத்துடன் பெயர், கொடுக்கும் தொகை, அதற்கு மேல் கொடுக்கும் தொகையை புதுநடை என்று எழுதியதைப் பார்த்த பிறகே பணத்தைக் கொடுப்பார்கள்.

எந்தக் காலத்திற்கும் அழிக்க முடியாத ஆவணமாக இந்த மொய் வசூல் நோட்டுகள் பாது காக்கப்படும். கஜா புயலில்கூட இந்த மொய் நோட்டுகளைப் பத்திரமாக பாதுகாத்து வைத் திருந்தனர். மொய் பணத்தை தொழிலில் முதலீடு செய்தவர்கள் தொடர்ந்து முன்னேறிவருகிறார்கள். ஆயிரம் பேரிடம் கடன் வாங்குவதுதான் இந்த மொய் விருந்து. இதற்கு எந்த வரியும் போடமுடி யாது, போடவும் கூடாது. அடிப் படை உண்மை எதுவும் தெரியாமல் அண்ணாமலை, அசோக்குமார் எம்.எல்.ஏ. மீது புகார் சொல்கிறார். இது கண்டனத்திற்குரியது. அவரது பா.ஜ.க. பிரமுகர் களே தொடர்ந்து மொய் விருந்துகள் நடத்திவருகிறார்கள். இதுபற்றித் தெரிந்து கொண்டு அவர் பேசியிருக்க வேண்டும்''’என்றார் காட்டமாக.

ff

பேராவூரணியில் நாம் சந்தித்த ஊர் வழக்கமறிந்த அந்த பிரமுகர், "தமிழ்நாட்டில் காலங்கால மாக இருந்துவரும் ஒரு பழக்கம் மொய். உறவினர் கள் வீடுகளில் எந்த ஒரு விழாவாக இருந்தாலும் அவர்களின் விழா செலவுகளை சமாளிப்பதற்காக அன்பளிப்புகளாக உறவினர்கள் சிறு தொகையைக் கொடுத்து செலவில் பங்கெடுத்துக் கொள்ளும் வழக்கம் இன்றுவரை தொடர்கிறது. துக்க நிகழ்வு என்றாலும் அங்கும் மொய் எழுதுவதை இன்றளவும் வழக்கமாகவும் ஒரு பண்பாட்டு நிகழ்வாகவும் கடைப்பிடிக்கின்றனர். குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆடி மாதத்திலும் தஞ்சை மாவட்டத்தில் ஆவணி மாதத்திலுமாக இரு மாதங்களும் ஊரெல்லாம் மொய் விருந்துக் கறிச்சோறு கமகமக்கும்.

வெள்ளை வேட்டி, சட்டைகளின் நடமாட்ட மும் அதிகமாக இருக்கும். கட்டுக்கட்டாக வசூ லாகும் பணத்தை எண்ண, வங்கி அதிகாரிகளும், பணம் எண்ணும் இயந்திரங்களும் அங்கே வருவதைப் பார்க்கலாம். பாதுகாப்பிற்கு துப்பாக்கி ஏந்திய தனியார் பாதுகாவலர்களும் இருப்பார்கள். ஆட்டுக்கறி, மளிகை, சமையலர்கள், பந்தல் அமைப்பாளர்கள் என ஆயிரக்கணக்கானோருக்கு வேலையும் கிடைக்கும். ஆனால் கடந்த 5 வருடங்களாக கஜா புயல் தொடங்கி, கொரோனா ஊரடங்குகளால் மொய் விருந்துகள் முடங்கத் தொடங்கின. இப்போது காலம் மீண்டும் உயிர்க்கத் தொடங்கியிருப்பதால் மொய்விருந்தும் மெல்ல மெல்ல தலைகாட்ட ஆரம்பித்திருக்கின்றது.

ff

கடந்த வாரம் நெடுவாசலில் 30 பேர் சேர்ந்து நடத்திய மொய் விருந்தில் ரூ.14 கோடி வசூலானது. ஆனால் பேராவூரணி அசோக்குமார் எம்.எல்.ஏ. தனி ஒருவரின் மொய் வசூல் ரூ.10 கோடி. உறவினர்களும், நண்பர்களும் கொடுக்கும் கடன் தொகைதான் இது. எதிர்வரும் ஐந்து ஆண்டுகளில் அவர்கள் செய்த மொய்ப் பணத்துடன், புதுசாக மொய் செய்ய வேண் டும். இந்த பணத்தை தொழில் களில் முதலீடு செய்தால் தொய் வின்றி மொய் செய்யலாம்''’ என்றார் விளக்கமாக.

அ.ம.மு.க. தலைவரான டி.டி.வி தினகரனும், "தஞ்சை, புதுக்கோட்டை மாவட்ட மக்களின் கலாச்சார விழாவான மொய்விருந்து குறித்து அண்ணாமலை அவதூறாகப் பேசியிருக்கிறார்'' ’என்று காட்டமாகப் பேட்டியளித்தார்.

இதுகுறித்து அண்ணாமலையின் குற்றச் சாட்டுக்கு ஆளான அசோக்குமார் எம்.எல்.ஏ. விடமே நாம் கேட்டபோது, "5 வருடம் கடன் வாங்கி உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் செய்த மொய் பணத்தை, என் பேரக்குழந்தைகளின் காதணி விழாவில் வாங்கினேன். ஜாதி, மத பாகுபாடின்றி அனைவருக்கும் அழைப்பிதழ் கொடுத்து அழைத்து, விருந்து கொடுத்து, இந்த மொய் பணத்தை பெற்றிருக்கிறேன். கிட்டத்தட்ட 15 ஆயிரம் பேர் வயிறு நிறைய சாப்பிட்டார்கள். அந்த சந்தோசம் எனக்கு உண்டு. அன்று வசூலான மொய் பணத்தை அன்று மாலையே நான் வாங்கிய கடன்களுக்குத் திருப்பிக் கொடுத்துவிட்டு, நிம்மதியாகி இருக்கிறேன். இது பற்றி எதுவும் தெரியாமல் அரசியலுக்காக அண்ணாமலை அவதூறு பேசியிருக்கிறார்''’ என்றார் அழுத்தமாக மொய்விருந்து சர்ச்சையும் காரசாரமாக இருக்கிறது.

nkn070922
இதையும் படியுங்கள்
Subscribe