ராங்கால் : வெள்ள அபாயத்திலும் கல்லா கட்டும் காண்ட்ராக்ட்! சங்கர மடத்தில் சர்ச்சை கிளப்பும் பெண்மணி!

rang

லோ தலைவரே, ரஜினி மறுபடியும் தன் மன்ற நிர்வாகிகளை நேரில் சந்திச்சி, உணர்ச்சி வசப்பட வச்சிருக்காரே...''

""ஆமாம்பா, அவர் தன்னோட ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்திச்சாலே, தமிழக அரசியல் பரபரப்பாயிடும். இந்த முறையும் அப்படித்தான் ஆனது. ஆனா, வழக்கம்போல ரஜினி தப்பிச்சிட்டாரே?''

rangcall

""உண்மைதாங்க தலைவரே, மா.செ.க்கள் கூட்டம் முடிஞ்சதும், வாசலில் திரண்டிருந்த ஊடகங்கள் முன் வந்த ரஜினி, "கூட்டத்தில் கருத்துப் பரிமாற்றம் நடந்தது. நான் எடுக்கும் முடிவுக்குக் கட்டுப் படுவதாக மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்திருக்கிறார்கள். நான் என் முடிவை விரைவில் அறிவிப்பேன்'னு சொல்லிவிட்டு, விறுவிறுன்னு உள்ளே போய்ட்டார். மா.செ.க்கள் கூட்டத்திலேயே, அரசியல் மூலம் சம்பாதிக்க நினைக்கும் நிர்வாகிகளுக்கு கண்டிப்பு காட்டிட்டு, பல பேர் மேலே புகார்கள் வருவதையும் சுட்டிக்காட்டியிருக்காரு. அத்துடன், தன்னுடைய உடல் நிலை குறித்து ரஜினி உருக்கமாக விளக்கி, கொஞ்ச நாளில் நான் ஆல் ரைட்டுங்கிற நிலைக்கு வந்துடுவேன். அதுவரை பொறுத்திருங்கன்னு கேட்டுக்கிட்டு, இந்த விவகாரத்துக்கு கமா போட்டிருக்காராம்.''

""மு.க.அழகிரியும் இன்னொரு பக்கம் இதே மாதிரியான பாபரப்பை ஏற்படுத்தியிருக்காரே?''

rang

“ஆமாங்க தலைவரே, மதுரையில் ஒரு துக்க நிகழ்ச்சியில் அழகிரி கலந்துக்கிட்டார். அப்ப அவரிடம் மைக்கை நீட்டிய ஊடகத்தினர், புதுசா அரசியல் கட்சியைத் தொடங்கப் போறீர்களான்னு கேட்க, அதுக்கு பதில் சொன்ன அழகிரி, வர்ற தேர்தல்ல என் பங்களிப்பு மிக முக்கியமானதா இருக்கும். என் ஆதரவாளர்களோடு கலந்துபேசி, என் முடிவை விரைவில் அறிவிப்பேன்னு அவரும் தன்னைமையமா சுற்றும் அரசியல் சர்ச்சைகளுக்கு, முற்றுப்புள்ளியை வைக்காமல் கமா போட்டிருக்கார்.''

""எடப்பாடி அரசுக்கு எதிரா போராட்டம் நடத்துன பா.ம.க, அங்கிருந்து தி.மு.க கூட்டணிக்கு வரும்னு பேசப்படுதே?''

""20% இடஒதுக்கீட்டுக்காக பா.ம.கவினர் நடத்திய போராட்டத்தால் சென்னையில் பதற்றம் ஏற்பட்டது. ஆனாலும், போலீஸ் தடியடி போன்ற கடுமை காட்டாம, ரொம்ப ஜாக்கிரதையா ஹேண்டில் செய்தது. போலீசுக்கு அதுதான் கோட்டையிலிருந்து ஆர்டராம். பா.ம.க தொண்டர்களால் ஏற் பட்ட நெருக்கடியை சி.பி.எம். உள்ளிட்ட கட்சிகள

லோ தலைவரே, ரஜினி மறுபடியும் தன் மன்ற நிர்வாகிகளை நேரில் சந்திச்சி, உணர்ச்சி வசப்பட வச்சிருக்காரே...''

""ஆமாம்பா, அவர் தன்னோட ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்திச்சாலே, தமிழக அரசியல் பரபரப்பாயிடும். இந்த முறையும் அப்படித்தான் ஆனது. ஆனா, வழக்கம்போல ரஜினி தப்பிச்சிட்டாரே?''

rangcall

""உண்மைதாங்க தலைவரே, மா.செ.க்கள் கூட்டம் முடிஞ்சதும், வாசலில் திரண்டிருந்த ஊடகங்கள் முன் வந்த ரஜினி, "கூட்டத்தில் கருத்துப் பரிமாற்றம் நடந்தது. நான் எடுக்கும் முடிவுக்குக் கட்டுப் படுவதாக மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்திருக்கிறார்கள். நான் என் முடிவை விரைவில் அறிவிப்பேன்'னு சொல்லிவிட்டு, விறுவிறுன்னு உள்ளே போய்ட்டார். மா.செ.க்கள் கூட்டத்திலேயே, அரசியல் மூலம் சம்பாதிக்க நினைக்கும் நிர்வாகிகளுக்கு கண்டிப்பு காட்டிட்டு, பல பேர் மேலே புகார்கள் வருவதையும் சுட்டிக்காட்டியிருக்காரு. அத்துடன், தன்னுடைய உடல் நிலை குறித்து ரஜினி உருக்கமாக விளக்கி, கொஞ்ச நாளில் நான் ஆல் ரைட்டுங்கிற நிலைக்கு வந்துடுவேன். அதுவரை பொறுத்திருங்கன்னு கேட்டுக்கிட்டு, இந்த விவகாரத்துக்கு கமா போட்டிருக்காராம்.''

""மு.க.அழகிரியும் இன்னொரு பக்கம் இதே மாதிரியான பாபரப்பை ஏற்படுத்தியிருக்காரே?''

rang

“ஆமாங்க தலைவரே, மதுரையில் ஒரு துக்க நிகழ்ச்சியில் அழகிரி கலந்துக்கிட்டார். அப்ப அவரிடம் மைக்கை நீட்டிய ஊடகத்தினர், புதுசா அரசியல் கட்சியைத் தொடங்கப் போறீர்களான்னு கேட்க, அதுக்கு பதில் சொன்ன அழகிரி, வர்ற தேர்தல்ல என் பங்களிப்பு மிக முக்கியமானதா இருக்கும். என் ஆதரவாளர்களோடு கலந்துபேசி, என் முடிவை விரைவில் அறிவிப்பேன்னு அவரும் தன்னைமையமா சுற்றும் அரசியல் சர்ச்சைகளுக்கு, முற்றுப்புள்ளியை வைக்காமல் கமா போட்டிருக்கார்.''

""எடப்பாடி அரசுக்கு எதிரா போராட்டம் நடத்துன பா.ம.க, அங்கிருந்து தி.மு.க கூட்டணிக்கு வரும்னு பேசப்படுதே?''

""20% இடஒதுக்கீட்டுக்காக பா.ம.கவினர் நடத்திய போராட்டத்தால் சென்னையில் பதற்றம் ஏற்பட்டது. ஆனாலும், போலீஸ் தடியடி போன்ற கடுமை காட்டாம, ரொம்ப ஜாக்கிரதையா ஹேண்டில் செய்தது. போலீசுக்கு அதுதான் கோட்டையிலிருந்து ஆர்டராம். பா.ம.க தொண்டர்களால் ஏற் பட்ட நெருக்கடியை சி.பி.எம். உள்ளிட்ட கட்சிகள் கண்டித்து அறிக்கை விட்ட நிலையிலும், அறிவாலயத் தரப்பு சைலண் டைக் கடைபிடிச்சிது. இதுவே திமு.க, பா.ம.க.வுக்கு இடையில் கூட்டணி மலர்வதற்கான அடையாளம்னு சிலர் சொல்றாங்க. காங்கிரஸோடு தி.மு.க.வுக்கு உடன்பாடு ஏற்படாமல் போனால், அந்த இடத்தை பா.ம.க.வைக் கொண்டு தி.மு.க. நிரப்பிக் கொள்ளும்கிற கணக்குகளும் போடப்படுது.''

""பா.ம.க.வை இழக்கும் மன நிலை அ.தி.மு.க.விடம் இருக்கிறதா?''

""தங்கள் கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு எவ்வளவு சீட்டுக்கள் வரை ஒதுக்க லாம்னு எடப்பாடி கணக்குப் போட்டு வச்சிருக்காராம் அதன்படி, பா.ஜ.கவுக்கு 25 சீட், தே.மு.தி.க.வுக்கு 15 சீட்டுன்னு குறித்து வைத்திருக்கும் அவர், பா.ம.க.வுக்கு 20 சீட்டுக்களை ஒதுக்க லாம்னு தீர்மானிச்சிருக்காராம். இதையறிந்த பா.ம.க., தனக்கு குறைந்த பட்சம் 30 சீட்டாவது தரனும் என்பதில் உறுதியாக இருக்கிறதாம். இதை எடப்பாடியிடம் பேசி உறுதிபடுத்தும்படி அன்பு மணியிடம் டாக்டர் ராமதாஸ் சொன்ன நிலையில், வன்னியர் சமூக உள் ஒதுக்கீடு தொடர்பான மனுவைக் கொடுக்க வந்த அன்புமணியிடம், கூட்டணி பற்றி பேசவே அனுமதிக்கவே இல்லையாம் எடப்பாடி. இதன்மூலம் அவரது மனநிலை தங்களுக்கு சாதகமாக இல்லை என்பதை பா.ம.க. புரிந்துகொண்டதாம்.''’’

""பா.ம.க.வை அ.தி.மு.கவுக்கு எதிராகத் தூண்டுவதே பா.ஜ.க.தான்னும் பேச்சு அடிபடுதே?''’

""அதுவும் உண்மைதாங்க தலைவரே, சமீப காலமாகவே வேல் யாத்திரை தொடங்கி எல்லா வற்றிலும் எடப்பாடி அரசு தங்களுக்கு எதிராக நடப்பதாக லோக்கல் பா.ஜ.க.வினரிடமிருந்து டெல்லிக்குப் புகார்கள் போய்க்கிட்டு இருக்கு. அத னால், எடப்பாடி அரசுக்கு செக் வைக்க, தமிழகத் தில் சட்ட ஒழுங்குப் பிரச்சனையை உருவாக்குங் கன்னு டெல்லி கொடுத்த சிக்னலால்தான், பா.ம.க இட ஒதுக்கீட்டு போராட்டத்தை தீவிரமாக் கையில் எடுத்ததுன்னு எடப்பாடிக்கு ரிப்போர்ட் அனுப்பியிருக்கு உளவுத்துறை. இந்த சூழலில், அ.தி.மு.க கூட்டணியில் இருப்பதை நாங்கள் விரும்பவில்லை. அதனால் புதிய கூட்டணியை உருவாக்குங்கன்னு பா.ம.க. தரப்பு டெல்லியிடம் தெரிவித்திருக்குதாம்.''

""பா.ம.க. தரப்பு மீது எடப்பாடி அரசு வழக்குகளைப் போட்டிருக்குதே?''

rang

""இட ஒதுக்கீட்டு போராட்டம் தொடர்பாக அன்புமணிமீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய் யப்பட்டிருக்கு.. ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி உள்பட 856 பா.ம.க.வினர் மீது வழக்குகள் பாய்ந்துள்ளன. இதற்கிடையே பொதுச் சொத்துக்களை சேதப் படுத்திய பா.ம.க.வைத் தடை செய்யயனும்ங்கிற கோரிக்கையோட ஒரு வழக்கும் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருக்கு. இதையெல்லாம் டெல்லியிடம் சொல்லி வருந்தியிருக்கு தைலாபுரத் தரப்பு. அதனால், அ.தி.மு.க தன் நடவடிக்கையை மாற்றிக் கொள்ளாவிட்டால், பா.ம.க உள்ளிட்ட கட்சி களோடு சேர்ந்து, தனி அணியை அமைக்கும் வியூ கத்திலும் பா.ஜ.க. இருப்பதாகச் சொல்கிறார்கள்.''’

""தேர்தல் நெருங்கும்வரை இப்படிப்பட்ட அரசியல் ஆட்டங்கள் நிறைய இருக்கும்ப்பா.''…’’

""ஆமாங்க தலைவரே, கிடைக்கிற கேப்பில் சிக்ஸர் அடிக்கிறதுதானே அரசியல். மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின் போது, தனக்கு மந்திரி பதவி கிடைக்கும்னு நம்பிக்கையோடு காத்திருக் கிறார் பா.ம.க. அன்புமணி. ஒருவேளை மத்திய அமைச்சர் பதவிதர இயலாத சூழல் டெல்லிக்கு ஏற்பட்டால், மத்திய கேபினட்டுக்கு இணையாக, மத்திய சுகாதார துறையில் அன்புமணிக்கு சேர்மன் பதவி யையும், வன்னியர் சமூகத்தைப் பெருமைப்படுத்தும் வகையில் புதுச்சேரி அல்லது தென்னிந்திய மாநிலம் ஒன்றில் டாக்டர் ராமதாஸுக்கோ அல்லது தைலாபுரம் சுட்டிக்காட்டும் ஒருவருக்கோ கவர்னர் பதவியையும் தரவேண்டும்னு அன்புமணி தரப்பிலிருந்து மோடியிடம் கோரிக்கை வைக்கப்பட்டு இருக்குதாம்.’''

""பா.ம.க.வுக்கு எதிரான மன நிலையில், அ.தி.மு.க.வில் இருக்கும் வன்னிய சமூகப் பிரபலங்கள் வந்துட்டாங்களாமே?''

""அதுவும் உண்மைதாங்க தலைவரே, அ.தி.மு.க.வில் உள்ள வன்னியர் சமூக எம்.எல்.ஏ.க்கள் பலரும், அமைச்சர் சி.வி.சண்முகத்தை கோட்டையிலும் அவரது இல்லத்திலும் சந்தித்து விவாதித்து வருகிறார்களாம். அப்போது அவர்கள், வன்னியர் களுக்கு இட ஒதுக்கீடு தருவதாக இருந்தால், அது நீங்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் கொடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும். மாறாக பா.ம.க. வினரின் போராட்டத்தால் நம் அரசு அதைக் கொடுத்ததாக இருக்கக் கூடாது. ஏனெனில், பா.ம.க.வின் போராட்டத்துக்கு பயந்து நாம் இட ஒதுக்கீட்டை அறிவித்தால் அது, அவர் களுக்குத்தான் அரசியல் லாபத்தை கொடுக்கும்ன்னு சொல்லியிருக்காங்களாம்.''

rang

""சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிக்கு எடப்பாடி போனதும்கூட சர்ச்சையாகுதே?''’

""ஆமாங்க தலைவரே, நிவர் புயலின் தாக்கத்தால் சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழை, பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. புறநகர்ப் பகுதிகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் தண்ணீரில் மிதந்தது. இதையெல்லாம் பார்க்க எடப்பாடி வர்றாருன்னு சொல்லப் பட, பாதிக்கப்பட்ட மக்கள் அவர் வரவுக்காக காத்திருந் தாங்க. ஆனால் எடப்பாடியோ, பள்ளிக்கரணை, துரைப்பாக்கம், பெருங்குடி, மற்றும் முட்டுக்காடு முகத்துவாரம் போன்ற பகுதிகளில் விசிட்டடிச்சார். வழி நெடுக கொடி-தோரணம் கட்டிய தோட, அவருக்கு சிவப்புக் கம் பள வரவேற்பையும் கொடுத்து, பொதுமக்களை ஆளும்கட்சியினர் திகைக்க வச்சாங்க. பிறகு தான், அது, 581 கோடி செலவில் பக்கிங்காமில் உருவாக்கப் பட இருக்கும் புதிய கால்வாய் தொடர்புடைய டெண்டருக்கான விசிட்டுன்னு எல்லோருக்கும் தெரிய வந்திருக்கு. வெள்ள பாதிப்புங்குற பேருல ஆளுந்தரப்பு காண்ட்ராக்டர்களின் கல்லா நிரப்பும் விசிட் நடந்திருக்குது.''’

""எடப்பாடியை வர வேற்கும் இந்தக் களேபரத்தில் ஒரு அப்பாவியின் உயிர் பறி போயிருக்கேப்பா?''

""உண்மைதாங்க தலைவரே, எடப்பாடியை வரவேற்க சாலையோரங்களில் கொடி, தோரணங்களைக் கட்டும்போது, அந்த வேலையில் ஈடுபட்டிருந்த நாவலூரைச் சேர்ந்த தே.மு.தி.க. தொண்டர் தியாகராஜன் என்பவர் மின்சாரம் தாக்கி, ஸ்பாட்டிலேயே இறந்துவிட்டாராம். விவரமறிந்து பதறிய அவரது உறவினர்களை, சி.எம். வந்துட் டுப் போகும்வரை, அவர் உடலைப் பார்க்க அனுமதிக்க மாட்டோம்னு ccvcசொல்லிட்டாங்களாம். இறந்துபோன தியாகராஜனுக்கு கடந்த வருடம்தான் திருமணம் ஆகியிருக்கு. இதைப் பெரிதுபடுத்தக்கூடாதுன்னு அவருடைய உறவினர்களிடம் அ.தி.மு.க. மா.செ. கந்தனும், பெரும்பாக்கம் ராஜசேகரனும் டீலிங்பேசி எல்லோர் வாயையும் அடைச்சிட்டாங்களாம். பலியான தியாகராஜன் குடும்பத்துக்கு அரசு சார்பில் இழப்பீடுகூட அறிவிக்கப் படலை என்பதுதான் பெரும் சோகம்.''

""ஓய்வுபெற இருக்கும் தலைமைச் செயலாளர் சண்முகத்தை விடுவிக்க எடப்பாடிக்கு மனமில்லையாமே?''

""ஏற்கனவே இரண்டுமுறை பணி நீட்டிப்பைப் பெற்றிருக்கும் தலைமைச் செயலாளர் சண்முகத்தை, மீண்டும் பணி நீட்டிப்பில் அமரவைக்க ஆசைப்படுகிறாராம் எடப்பாடி. இந்த நிலையில் கூடுதல் தலைமைச் செயலாளர்கள் 34 பேர், தலைமைச் செயலாளர் அந்தஸ்தை எதிர்பார்த்து கியூவில் காத்திருக்கிறார்களாம். அவர்களில் ஒருவரான ராஜீவ் ரஞ்சன் ஐ.ஏ.எஸ், எடப்பாடிக்கு நெருக்கமானவர். அவர், தன்னைத் தலைமைச் செயலாளரா ஆக்கனும்னு பிரஷர் கொடுத்துக்கிட்டு இருக்காராம். இப்ப இருக்கும் தலைமைச் செயலாளர் சண்முகம், முதல்வர் தொடர்பான பல்வேறு டீலிங்குகளின்போது உடனிருந்தவர். அதனால், அவரை வீட்டுக்கு அனுப்ப எடப்பாடி யோசிக்கிறார் என்கிறது கோட்டைத் தரப்பு''

""தமிழக பா.ஜக.வில் புதிய சர்ச்சைகள் கிளம்பியிருக்கே?''

""ஆமாங்க தலைவரே, பா.ஜ.க. தலைவர் முருகன், சினிமாத் துறையினருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார் என்றும், அவர்களிடமே ஆர்வமாக நட்பை வளர்த்துக்கொள்கிறார் என்றும் பா.ஜ.க. பிரமுகர்களுக்குள்ளேயே முணுமுணுப்பு கிளம்பியிருக்கிறது. இந்த நிலையில் திரைத்துறையைச் சேர்ந்த துணை நடிகைகள் தொடங்கி நடிகைகள் வரை நிறையபேர் கட்சிப் பதவி கேட்டு அவரிடம் வருகிறார்களாம். இந்த நிலையில், கட்சியின் கலை இலக்கியப்பிரிவு பொறுப்பாளராக இருக்கும் நடிகை காயத்ரி ரகுராம் தரப்போ, அவர் பழைய முகங்களை மதிப்பதில்லை. கட்சிக்குப் புதுவரவான நடிகை குஷ்புவுக்குதான் இங்கே மரியாதை கிடைக்குதுன்னு புலம்புதாம்.''

""நானும் ஒரு முக்கிய தகவலைப் பகிர்ந்துக்கறேன். சங்கர மடம் சம்பந்தப்பட்ட திருச்சி சமஸ்கிருதப் பள்ளியில் இருந்த கீர்த்திகா என்ற பெண்மணி, சங்கரமட விஜயேந்திரருக்கு வேண்டியவராம். அவருக்கு சிறிது காலம் அடைக்கலம் கொடுக்கும்படி விஜயேந்திரர் தரப்பு, திருவண்ணாமலையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடம் கீர்த்திகாவை அனுப்பி வைத்ததாம். ஆனால் அந்த தொழிலதிபரோ, அவரிடம் தவறாக நடந்துகொண்ட தோடு, பிரச்சினையாகாமல் இருக்க ஒரு கணிசமான தொகையையும் கொடுத்து சங்கரமடத்துக்கே கீர்த்திகாவை அனுப்பிவிட்டாராம். மடத்துக்கு வந்த பிறகும் அவருக்கு சோதனைகளாம். இப்போது அவர், தனக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு நிவாரணமா 6 கோடி கொடுங்கள். இல்லைன்னா மீடியாக்களிடம் பேசுவேன்னு அதிரடியாய் கொடி பிடிக்க, அவரை ஆடிட்டர் குருமூர்த்தி தரப்பு சமாதானப்படுத்தி வருகிறதாம்.''

nkn051220
இதையும் படியுங்கள்
Subscribe