தொடரும் பத்திரப்பதிவு மோசடிகள்! -அறப்போர் இயக்கம் அட்டாக்!

st

முன்னாள் அமைச் சரும் தற்போ தைய பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுமான நயினார் நாகேந்திரனின் மகன் பாலாஜி மீது சுமார் 100 கோடி மதிப்பிலான நில மோசடிப் புகார்களை எழுப்பியிருக்கிறது அறப்போர் இயக்கம். இந்த குற்றச்சாட்டு பா.ஜ.க.வில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இது குறித்து அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேச னிடம் நாம் விசாரித்தபோது, "சென்னை விருகம்பாக்கம் ஆற் காடு சாலையிலுள்ள 1.3 ஏக்கர் நிலத்திற்கு பலரும் உரிமை கோரு வதால், அது குறித்து சர்ச்சைகள் இருந்துவரும் நிலையில்... அந்த நிலத்தை கடந்த 2006-ல் சுந்தர மகாலிங்கம் மற்றும் வசந்தா ஆகிய இருவருக்கும் சரஸ்வதி என்பவர் விற்றுள்ளார். சுந்தரமகாலிங்கம், வசந்தா பெயரில் பட்டா மாற்றம் நடந்துள்ளது. ஆனால், இந்த நிலத்தை கௌரியம்மாள் மற்றும் சிலர் கடந்த 2008-ல் பாகப்பிரிவினை பத்திரப்பதிவு செய்ய அதனை எதிர்த்து சிட்டி சிவில் கோர்ட்டில் சுந்தரமகாலிங்கமும் வசந்தாவும் வழக்குப் போடுகிறார்கள். வழக்கு இப்போதுவரை நிலுவையில் இருக்கிறது.

ar

இதனையடுத்து, பத்திரப்பதிவு சட்டவிதி பிரிவு 28-ன்படி, ஒருவருடைய நிலம் 2 சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து உரிமையாளர் ஒருவராக இருந் தால் நிலத்தை ஏதேனும் ஒரு சார்பதி வாளர் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மற்றபடி ஒரு சார்பதிவாளர் அலுவலக எல்லைக்குட்பட்ட நிலத்தை மற்றொரு சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய முடியாது என்பதை சுட்டிக்காட்டி தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட பதிவாளர், சார்பதிவாளர் களுக்கு கடந்த 2022, ஜூன் 29-ந் தேதி ஒரு உத்தரவு போடுகிறார் பத்திரப் பதிவு தலைவர் சிவன்அருள்.

ஆனால், இந்த உத்தரவை சார்பதி வாளர்களும்

முன்னாள் அமைச் சரும் தற்போ தைய பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுமான நயினார் நாகேந்திரனின் மகன் பாலாஜி மீது சுமார் 100 கோடி மதிப்பிலான நில மோசடிப் புகார்களை எழுப்பியிருக்கிறது அறப்போர் இயக்கம். இந்த குற்றச்சாட்டு பா.ஜ.க.வில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இது குறித்து அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேச னிடம் நாம் விசாரித்தபோது, "சென்னை விருகம்பாக்கம் ஆற் காடு சாலையிலுள்ள 1.3 ஏக்கர் நிலத்திற்கு பலரும் உரிமை கோரு வதால், அது குறித்து சர்ச்சைகள் இருந்துவரும் நிலையில்... அந்த நிலத்தை கடந்த 2006-ல் சுந்தர மகாலிங்கம் மற்றும் வசந்தா ஆகிய இருவருக்கும் சரஸ்வதி என்பவர் விற்றுள்ளார். சுந்தரமகாலிங்கம், வசந்தா பெயரில் பட்டா மாற்றம் நடந்துள்ளது. ஆனால், இந்த நிலத்தை கௌரியம்மாள் மற்றும் சிலர் கடந்த 2008-ல் பாகப்பிரிவினை பத்திரப்பதிவு செய்ய அதனை எதிர்த்து சிட்டி சிவில் கோர்ட்டில் சுந்தரமகாலிங்கமும் வசந்தாவும் வழக்குப் போடுகிறார்கள். வழக்கு இப்போதுவரை நிலுவையில் இருக்கிறது.

ar

இதனையடுத்து, பத்திரப்பதிவு சட்டவிதி பிரிவு 28-ன்படி, ஒருவருடைய நிலம் 2 சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து உரிமையாளர் ஒருவராக இருந் தால் நிலத்தை ஏதேனும் ஒரு சார்பதி வாளர் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மற்றபடி ஒரு சார்பதிவாளர் அலுவலக எல்லைக்குட்பட்ட நிலத்தை மற்றொரு சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய முடியாது என்பதை சுட்டிக்காட்டி தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட பதிவாளர், சார்பதிவாளர் களுக்கு கடந்த 2022, ஜூன் 29-ந் தேதி ஒரு உத்தரவு போடுகிறார் பத்திரப் பதிவு தலைவர் சிவன்அருள்.

ஆனால், இந்த உத்தரவை சார்பதி வாளர்களும் மாவட்ட பதிவாளர்களும் மதிக்கவே இல்லை. அதாவது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட அடுத்த மாதமே (2022, ஜூலை), குறிப்பிட்ட விருகம்பாக்கத் திலுள்ள அந்த 1.3 ஏக்கர் நிலத்தை நெல்லை மாவட்டம் ராதாபுரம் சார்பதி வாளர் அலுவலகத்தில், பா.ஜ.க.வின் துணைத்தலைவரான நயினார் நாகேந் திரனின் மகன் நயினார் பாலாஜி பெய ரில் பத்திரப்பதிவு செய்யப்படுகிறது. இளையராஜா என்பவர் இந்த நிலத்தை நயினார் பாலாஜிக்கு விற்பதாக பதிவு செய்கிறார் சார்பதி வாளர் சரவண மாரியப்பன்.

குறிப்பிட்ட இந்த 1.3 ஏக்கர் நிலம், மகாராஷ்டிராவில் 1946-ல் இறந்துபோன குலாப்தாஸ் நாரயண தாஸின் பேரன் ஜெயந்திர ஓராவுக்கு சொந்தமானது என்றும், அவரின் பவர் ஏஜெண்ட் நான் தான் என்றும் சொல்லி ஜூலை 2022-ல் நயினார் பாலாஜி பெயருக்கு எழுதிக்கொடுக்கிறார் இளையராஜா. அந்த குலாப் தாஸ் 1946-ல் மகாராஷ்டிராவில் இறந்ததாக இளையராஜா ஒரு சான்றிதழ் வைத்திருக்கும் நிலையில், அந்த குலாப் தாஸ், 1944-ல் சென்னை யில் இறந்ததாக சென்னை மாநகராட்சியின் இறப்பு பதிவேடுகள் சொல் கிறது. 1944-ல் சென் னையில் இறந்து போன குலாப்தாஸ், 1946-ல் மகாராஷ் டிராவிலும் இறந்தது விந்தையாக இருக்கிறது. அதுமட்டுமல்ல, சென்னையிலும் மகாராஷ்டிராவிலும் இறந்த போன குலாப்தாஸ் நாராயணதாஸின் பெய ருக்கு ஆகஸ்ட் 2022-ல் பட்டா மாற்றம் செய்யப் பட்டிருக்கிறது. ஜூலை 2022-ல் பத்திரப்பதிவு செய்யப்பட்ட இந்த நிலத்திற்கு ஆகஸ்ட் 2022-ல் பட்டா கொடுக்கப்பட்டிருப்பதும் விந்தைதான்.

அந்த வகையில், நயினார் பாலாஜி பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டபோது குறிப்பிட்ட நிலத்தின் பட்டா குலாப்தாஸ் பெயரில் இல்லா ததையும் முந்தைய பதிவுகளிலும் இவரது பெயரில் பட்டா இல்லாததையும் சுட்டிக்காட்டி நிலத்தைப் பதிவு செய்யாமல் நிராகரித்திருக்க வேண்டும்.

STAm

மேலும், பதிவுத்துறை தலைவர் சிவன் அருளின் சுற்றறிக்கை உத்தரவின்படியும், பதிவுத் துறை சட்ட விதிகளின்படியும் சென்னையிலுள்ள நிலத்தை ராதாபுரத்தில் பதிவுசெய்ய முடியாது என்றும் சொல்லி நிராகரித்திருக்க வேண்டும். ஆனால், பதிவு செய்கிறார் சார்பதிவாளர் சரவண மாரியப்பன். அதேசமயம், தமிழ்நாடு அரசின் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் இந்த நிலத்தை கையகப்படுத்தவிருப்பதையும் கண்டு கொள்ளவில்லை. இப்படி முறைகேடான இந்த பத்திரப்பதிவு ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட நிலத்தை நயினார் பாலாஜி 46 கோடிக்கு வாங்குவதாகவும், அதற்கு முன்பணமாக 2.5 கோடி கொடுக்கப்பட்ட தாகவும், அதில் 50 லட்சம் ரூபாய் ரொக்கமாகக் கொடுத்திருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

ஆக, சுமார் 100 கோடி மதிப்பிலான இந்த நிலம் மோசடியாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரம் துறையின் உயரதிகாரிகளுக்குத் தெரியாமலும், அவர்களின் உதவி இல்லாமலும் நடந்திருக்க வாய்ப்பேயில்லை. பா.ஜ.க.வின் நயினார் நாகேந்திரனுக்காக அதிகார துஷ்பிரயோகம் நடந் துள்ளது. அதனால், இந்த மோசடியில் சம்பந்தப் பட்ட பதிவுத்துறை அதிகாரிகள் உட்பட அனை வரின் மீதும் கிரிமினல் நடவடிக்கையை எடுக்க வேண்டும்''’என்கிறார் ஜெயராம் வெங்கடேசன்.

இது ஒருபுறமிருக்க, மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நில மோசடி பத்திரப்பதிவு ஒன்றையும் அம்பலப் படுத்துகிறது அறப்போர் இயக்கம். மதுரையில் சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமாக சொக்கிகுளத்தில் 1.8 ஏக்கர் நிலம் இருக்கிறது.

இந்த நிலம் தங்களுக்கு சொந்தமென சொல்லி அதனை விற்கவும் அதற்குரிய பணத்தைப் பெற்றுக்கொள்ளவும் இளையராஜா மற்றும் அனீஷ் என்பவருக்கு பொது அதிகாரம் (பவர்) அளிக்கிறார் கள் 10 நபர்கள். அந்த பவரை வைத்து நெல்லை முரப்பநாடு சார்பதிவாளர் அலுவலகத் தில் 2021, ஜூலை 2-ந்தேதி பத்திரப்பதிவு செய்யப்படுகிறது. அந்த அலுவலகத் திலுள்ள சார்பதிவாளர் அனந்தராமன் பதிவு செய்துகொடுக்கிறார்.

இதனையடுத்து இந்த கோவில் நிலத்தை தங்களின் குடும்பச் செலவு களுக்காக இளையராஜாவும் அனீஷும் அடகு வைப்பதாக அதே ஜூலை மாதம் 19-ந்தேதி வடமதுரை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்கின்றனர். பதிவு செய்த சார்பதிவாளர் பிரஷாந்த் சந்தானக்கருப்பன்.

இவர்கள் அடகு வைப்பது யாரிடம் என ஆராய்ந்தால் இளையராஜா தனது மனைவி கவிதாவிடமும், அனீஷ் தனது தந்தையிட மும் அடகு வைக்கின்றனர். பல பத்திரப்பதிவுகள் நடந்திருக்கிறது எனச் சொல்லப்பட்டால்தான் கோவில் நிலத்தை ஆட்டையை போட வசதியாக இருக்கும் என இப்படி பதிவுகள் உருவாக்கு கிறார்கள்.

இந்த மோசடி குறித்து பதிவுத்துறை தலைவர் சிவன்அருளுக்கு பல புகார்கள் போனதையடுத்து அதனை விசாரிக்கிறார். பதிவு மோசடி செய்யப்பட்டிருப்பதை அறிகிறார். இதனைத் தொடர்ந்துதான் மேலே குறிப்பிட்ட சுற்றறிக்கை மூலம் உத்தரவிடுகிறார் சிவன்அருள். ஆனால், மோசடியாளர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.

"இப்படி சட்டவிதிகளுக்குப் புறம்பாக மோசடியான பத்திரப் பதிவுகள் மீது பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தியும், துறையின் செகரட்டரி ஜோதிநிர்மலாசாமியும்தான் நடவடிக்கை எடுக்கவேண்டும். பதிவுத்துறை மோசடிகளுக்கு எதிரான எங்களின் அறப்போர் தொடரும்'' என்கிறார் ஜெயராம் வெங்கடேசன்.

நயினார் பாலாஜிக்கு எதிரான குற்றச் சாட்டுகள் குறித்து நயினார் நாகேந்திரனிடம் கருத்தறிய அவரைத் தொடர்புகொண்டோம். நமது அழைப்பை அவர் எடுக்கவில்லை. மெசேஜ் அனுப்பினோம். அதற்கும் ரிப்ளை இல்லை.

குற்றம்சாட்டப்பட்டுள்ள இளையராஜாவை தொடர்புகொண்டு பேசியபோது, ‘’"சம்பந்தப்பட்ட நிலத்தை நாராயணசாமி என்பவரிடமிருந்து 1931-ல் அடமானம் பெறுகிற குலாப்தாஸ், போடப்பட்ட கண்டிசன்களை நாராயணசாமி கடைப்பிடிக் காததால் கோர்ட்டுக்கு போகிறார். இந்த விவகாரத்தில் 1934-ல் குலாப்தாஸுக்கு சாதகமாக தீர்ப்பு வருகிறது. இதன்பிறகு 1964, 1965களில் நாராயணசாமி வாரிசுகள் என மங்கையர்க்கரசி, கௌரியம்மாள் கணவர் ரெங்கநாதன் உள்ளிட்ட சிலர் செங்கல்பட்டு கோர்ட்டில் வழக்கு போடுகிறார்கள். அந்த வழக்கிலும் குலாப்தாஸுக்கு சாதகமாக தீர்ப்பளிக்கிறது. குலாப்தாஸ் பேரன் ஜெயந்திரா எனக்கு பவர் கொடுக்கிறார். அதன்பேரில்தான் முறையாக பத்திரப்பதிவு செய்கிறோம். நீதிமன்றத் தீர்ப்புகள், மூலப்பத்திரங்கள் அனைத்தும் முறையாக எங்களிடம் இருக்கிறது. இதில் எந்த மோசடியும் நடக்கவில்லை. என் மீதான கூற்றச்சாட்டுகள் தவறானது''” என்கிறார்.

பதிவுத்துறை செயலாளர் ஜோதிநிர்மலாசாமி யிடம் இதுகுறித்து பேசியபோது,”"இந்த விவகாரம் ஏற்கனவே எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது. டி.ஆர்.ஓ. விசாரணைக்கு உத்தரவிட்டோம். அதனை எதிர்த்து அப்பீல் போயிருக்கிறார்கள். விசாரணை இன்னும் முடியவில்லை. விசாரணை யின் முடிவு வந்ததும் அதன்பேரில் ஆக்ஷன் எடுக்கப்படும். போலி பத்திரப்பதிவுகள், மோசடிகள் எது நடந்திருந்தாலும் அதனை ரத்துசெய்ய எங்களுக்கு அதிகாரம் இருக்கிறது. மேலும், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்''’என்கிறார் உறுதியாக.

nkn220423
இதையும் படியுங்கள்
Subscribe