பொதுமக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசிக் கடத்தலை தடுக்க அரசு பல்வேறு சட்டங்கள் போட்டாலும் அன்றாடம் அரிசிக் கடத்தல் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இதுபற்றி விசாரணையில் இறங்கினோம்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தீபாவளி நெருக்கத்தில் விருத்தாசலம் பீங்கான் தொழிற் பேட்டை அருகிலுள்ள செயல்படாத செராமிக் கம்பெனியின் குடோன் பகுதியில் தார்ப்பாயால் மூடப்பட்ட மினி லாரி வாகனமொன்று மர்மமாக நிற்பதாக நுண்ணறிவுப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் அங்குசென்று குடோனைத் திறந்து பார்த்தபோது 156 மூட்டை ரேஷன் அரிசி, பாலிஷ் செய்யப்பட்டு வேறு சாக்குகளில் ‘இட்லி அரிசி’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, கடத்துவதற்கு தயாராக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் 58 மூட்டை கோதுமை மற்றும் கோணிச் சாக்குகள், மூட்டைகளைத் தையலிடும் இயந்திரம் உள்ளிட்ட பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
ஒரு மாதம் கழித்து கோபுராபுரம் பகுதியில் ரேஷன் அரிசியை ஏற்றிக்கொண்டு சென்ற ஒரு லாரியை, வழியில் நிறுத்தி, இருசக்கர வாகனத்தில் வந்த ஐஸ் வியாபாரிக்கு ரேஷன் அரிசி மூட்டையை இறக்கிக் கொடுப்பது தெரிந்தது. அதையடுத்து ரேஷன் அரிசி விருத்தாச்சலம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்கில் இருந்து ரேஷன் கடைகளுக்கு எடுத்துச்செல்லப் படும்போது வழியில் இதுபோன்று விற்கப்படுவதாக ஏராளமான புகார்கள் எழுந்தன.
கடந்த ஆகஸ்ட் 22 முதல் 28-ஆம் தேதி வரை மட்டும் 8.30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 1.48 லட்சம் கிலோ அரிசியும், கடத்தலுக்கு பயன்பட்ட 41 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு, கடத்தலில் ஈடுபட்ட 212 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனாலும் அரிசிக் கடத்தல் குறைந்ததா என்றால் இல்லை. இந்த செப்டம்பர் மாதத்தில் கடலூர் மாவட்டத்தில் மட்டும் கடந்த 14-ஆம் தேதி நெய்வேலி காவல்துறையினர் மேலக்குப்பத்திலிருந்து வந்த மினி லாரியை மடக்கி சோதனை செய்தபோது கடத்தப்பட்ட 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. 18-ஆம் தேதி வேப்பூர் அருகே வாகனச் சோதனையின்போது மினி லாரியில் கடத்தப்பட்ட 2 டன் ரேஷன் அரிசியும், 21-ஆம் தேதி விருத்தாசலம் அருகே எடையூரில் ஒரு வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டி ருந்த 2.5 டன் ரேஷன் அரிசியை குற்றங்கள் நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆய்வாளர் சிவானந்தம், காவலர் ராஜசேகர் ஆகியோர் பறிமுதல் செய்தனர்.
இப்படி ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் ரேஷன் அரிசிக் கடத்தல் நடந்துகொண்டுதான் இருக்கிறது, பொதுவாக மக்களுக்காக வழங்கப்படும் ரேஷன் அரிசி 3 விதமாக கடத்தப்பட்டு, பதுக்கப்படுகிறது. ஒன்று, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக குடோன்களிலிருந்து நியாய விலைக்கடைகளுக்கு செல்லும் வழியில் கடத்தல், இது லாரிகளில் கொண்டுவருபவர்கள், நியாய விலைக்கடை பணியாளர்கள் இணைந்து கடத்துவது, அடுத்து ஒருசில நியாயவிலைக்கடை பணியாளர்கள் பயனாளிகளுக்கு வழங்காமல் பதுக்குவது. மூன்றாவது அரிசியை வாங்கிய பயனாளிகள் அதை பயன்படுத்தாமல் குறைந்த விலைக்கு விற்பனை செய்வது. இவைமட்டுமல்லாது டெண்டர் எடுத்த அரிசி ஆலைகளிலிருந்து மாவட்டங்களிலுள்ள குடோன்களுக்கு கொண்டுவரப்படும் அரிசி மூட்டைகள் குறைவாக கொண்டுவரப்படுவது, உயர் அதிகாரிகள் ஆதரவுடன் நடப்பதாகவும் குற்றச் சாட்டுகள் உள்ளது.
விருத்தாசலம் பகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக குடோனிலிருந்து நியாயவிலைக் கடைகளுக்கு எடுத்துச்செல்லப்படும் ரேஷன் பொருட்களை வழியில் கள்ளத்தனமாக கடத்துகின்ற வேலையை குடோனிலிருந்து லாரியில் ஏற்றிச்செல்லும் லாரி ஓட்டுனர்கள், மூட்டை தூக்குவோர் தொடர்ந்து செய்துவருகின்றனர். இதில் ஒருசில நியாய விலைக் கடைப் பணியாளர்கள் தங்கள் கடைக்கு வரவேண் டிய ரேஷன் பொருட்களை இதுபோன்று கள்ளத் தனமாக விற்பதற்கு உதவிபுரிகின்றனர். அப்படி கடத்தலுக்கு துணைபோய் 3 முறை ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டவர்தான் சித்தேரிக் குப்பம் விற்பனையாளர் ராதாகிருஷ்ணன்.
கடைகளுக்கு வரும் முன்பாகவே லாரி ஓட்டுனர்களுடன் கூட்டு சேர்ந்து அரிசியை மறைவிடத்தில் பதுக்கி வைத்துவிடுவார். தான் பணியாற்றும் கடையில் பயனாளிகளுக்கு ஒன்றுவிட்டு ஒரு மாதம்தான் அரிசி வழங்குவார் அல்லது அரிசிக்குப் பதிலாக கிலோவுக்கு 2, 3 ரூபாய் என பணமாக கொடுத்துவிடுவார் ராதாகிருஷ்ணன். வேப்பூர் அருகே ஐவதுகுடியில் ரேஷன் அரிசி பதுக்கிவைத்திருந்தபோது சிக்கியதால் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டதுடன், வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தேடப்படும் குற்றவாளியாக, கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தலைமறைவாக உள்ளார்.
ராதாகிருஷ்ணனைப் போன்று சில விற்பனையாளர்கள் முறையாக மக்களுக்கு வழங்காமல் பதுக்கிவைப்பது, அன்ன யோஜனா அட்டைதாரர்களுக்கு அட்டைக்கு 35 கிலோ அரிசி வழங்குவதோடு மட்டுமல்லாது நபர் 1-க்கு கூடுதலாக 5 கிலோ அரிசி என 4 பேர் உள்ள குடும்ப அட்டைக்கு 55 கிலோ வழங்கப்படுகிறது. தேவைக்கு அதிகமாக வழங்கப்படும் அரிசியையும், தரமற்றதாக வழங்கப்படும் அரிசியையும் வாங்கும் பயனாளிகள் அதைப் பயன்படுத்தாமல், ரேஷன் அரிசி வாங்குவதெற்கென கிராமங்களில் சுற்றிவரும் புரோக்கர்களிடம் குறைந்த விலைக்கு அரிசியை விற்பனை செய்கின்றனர்.
இவ்வாறு குறைந்த விலைக்கு வாங்கும் அரிசியை அந்தந்தப் பகுதிகளில் பதுக்கிவைத்து, டன் கணக்கில் கடத்தி ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் பதப்படுத்தி இட்லி அரிசியாக அதிக விலைக்கு விற்கின்றனர். இதற்கென வேலூர் பகுதிகளில் மெயின் புரோக்கர்கள் பலர் உள்ளனர். இன்னொரு பக்கம் சேலம், நாமக்கல் பகுதி களில் மாடு, கோழிப் பண்ணைகளுக்கு தீவன மாகவும் அதிக விலைக்கு விற்கின்றனர் புரோக்கர்கள்.
ரேஷன்கடை பணியாளர்களிடம் விசா ரித்ததில், “"பெரும்பாலான நியாயவிலை கடைகளுக்கு போதுமான அளவுக்கு ரேஷன் பொருட்கள் வருவதில்லை. குடோனிலிருந்து ரேஷன் பொருட்கள் உரிய எடை அளவு சரிபார்க்கப்பட்டு, நூல் மாற்றி, பின்னர் லாரியில் ஏற்றப்பட வேண்டும். ஆனால் பெரும்பாலும் அவ்வாறு செய்வதில்லை. எடுத்துக்காட்டாக ஒரு மூட்டை என்பது, 50 கிலோ அரிசியுடன் 750 கிராம் சாக்கு எடை சேர்த்து 50.750 கிலோ இருக்கவேண்டும். ஆனால் பெரும்பாலான மூட்டைகள் 45 கிலோ, 47 கிலோ 48 கிலோ என ஒரு மூட்டைக்கு 3--ருந்து 5 கிலோ வரை எடை குறைவாக வருகிறது''’என வேதனையுடன் புலம்புகின்றனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு நியாயவிலைக்கடை பணியாளர்கள் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்ரமணியன், “"ரேஷன் கடைகளில் முன்னுரிமை அட்டை, முன்னுரிமை யற்ற அட்டை, வறுமைக் கோட்டிற்கு கீழுள்ளோ ருக்கு அன்னயோஜனா அட்டை உள்ளிட்ட பல்வேறு வகையிலான 2.10 கோடி அட்டைகள் நடைமுறையில் உள்ளன. தேவைக்கு அதிகமாக கிடைக்கும் அரிசியையும், தரமற்றதாக வழங்கப்படும் அரிசியையும் பொது மக்கள் விற்பனை செய் கின்றனர். 35 ரூபாய் மதிப் புள்ள அரிசியை வெறும் 5 ரூபாய்க்கு விற்கின்றனர். எனவே மக்களின் விருப்பத்தை ஆண்டுக்கொருமுறை கேட்டறிந்து, அதற்கேற்ப தரமான பொருட்களை தேவைக் கேற்ப வழங்கவேண்டும். அப்படி வழங்கும் பட்சத்தில் கடத்தல் தடுக்கப்படுவதுடன், பல ஆயிரம் கோடி ரூபாய் பொருள்கள் விரயமாவது தவிர்க்கப்படும்.
அதிகாரிகள் ரேஷன் கடைகளில் மட்டுமே அடிக்கடி சோதனை செய்கின்றனர். ஆனால் அரிசி ஆலைகளிலிருந்து குடோன்களுக்கு வரும் போதே எடை குறை வாகவும், தரமற்றதாகவும் வருகிறது.
ஆகவே அரிசி ஆலைகளை ஆய்வுசெய்து தரமாக பதப்படுத்தப் படுகிறதா, சரியாக எடை பிடிக்கப்படுகிறதா என கண்காணிக்கவேண்டும். அதுபோல் நுகர்பொருள் வாணிபக் கிடங்குகளில் மாலை நேரங்களில் சோதனையிட்டாலே பெரும் முறைகேடுகளைத் தடுக்கமுடியும். 3 துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பொது விநியோகத் திட்டத்தை ஒரே துறையின்கீழ் கொண்டுவருவதன் மூலமும் பணியாளர்கள் பாதிக்கப்படுவது தடுக்கப்படுவதுடன், கடத்தலையும் கட்டுப்படுத்த முடியும்''’என்றார்.
இதுகுறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் கே.பாலசுப்ரமணியத்திடம் கேட்டோம்.
"அரிசிக் கடத்தலை தடுக்க மாவட்ட நிர்வாகம் அனைத்து துறைகளையும் முடுக்கி விட்டுள்ளது. குறிப்பாக விருத்தாசலம், வேப்பூர், மங்களுர் பகுதிகளில் அதிகளவில் பதுக்கல், கடத்தல் இருப்பதால் அப் பகுதிகளில் தீவிரசோதனை மேற்கொள்ளப்படு கிறது. குற்றத்தின் தீவிரம் பொறுத்து குண்டர் தடுப்புச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப் படுகிறது''’என்றார்.