இந்தியா முழுவதும் நீட் தேர்வு கடந்த ஜூலை 17-ஆம் தேதி நடைபெற்ற நிலையில், நீட் தேர்வுக்குப் பயந்து அரியலூர் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
பெரம்பலூர் மாவட் டம் கீரனூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் நடராஜன்- உமா தம்பதி. நடராஜன் அரியலூர் ரயில்வே ஸ்டேஷன் அருகில் வீடு எடுத்து குடும்பத்துடன் தங்கியுள்ளார். 10 ஆண்டுகளாக வெளிநாட்டுக்குச் சென்று வேலைசெய்து சம்பாதித்து வருகிறார். இவரது மகள் நிஷாந்தினி நீட் தேர்வுக்கு இரண்டாம் முறையாக தயாராகி வந்துள்ளார். கடந்தாண்டு நீட் தேர்வு எழுதி அதில் 236 மதிப்பெண் கள் பெற்றுள்ளார்.
போதிய கட் ஆப் மார்க் பெற முடியாததால் பெற்றோர் மீண்டும் தேர்வெழுத அவரை உற்சாகப்படுத்தி யுள்ளனர். மாணவி நிஷாந்தினி மருத் துவராக வேண்டும் என்ற லட்சியம் கொண்டவர். கடந்த ஒரு ஆண்டாக திருச்சியிலுள்ள தனியார் நீட் கோச்சிங் மையத்தில் படித்துவந்துள்ளார். தேர்வு நெருங்கிய நிலையில் வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்கள் அவருக்கு சற்று கடினமாக உணர்ந்ததால் மன உளைச்சலில் இருந்துவந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 15-ஆம் தேதி இரவு பத்தரை மணி வரை அவரது தாயார் உமா மற்றும் குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருந்த நிஷாந்தினி., பின்னர் படிக்கச் செல்வதாக கூறி வீட்டிலுள்ள அறைக்குச் சென்று தாளிட்டுக்கொண்டார். அதிகாலை 2 மணியளவில் அவரது தாயார் உமா எழுந்து பார்த்தபோது நிஷாந்தினி அறையில் மின்விளக்கு எரிந்துகொண்டி ருந்தது. அறையில் மகளைக் காணாமல், சமையலறையில் சென்று பார்த்தபோது நிஷாந்தினி சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதைக்கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார்.
தற்கொலைக்கு முன்பு நிஷாந்தினி தனது தகப்பனா ருக்கு அனுப்பியுள்ள வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் மிஸ் யூ டாட் என்று தகவல் அனுப்பியுள்ளார். தந்தை மற்றும் தம்பிக்கு கடிதமும் எழுதிவைத்துள்ளார். கடிதத்தில், "நீட் தேர்வில் வெற்றி பெறுவோமா என்று குழப்பமாக உள்ளது. தோற்றுவிட்டால் என்ன செய்வது என்ற மனஉளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
தகவலறிந்த அரியலூர் டி.எஸ்.பி. வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் கோபி, சப்-இன்ஸ்பெக்டர் பாலாஜி ஆகியோர் நிஷாந்தினியின் உடலை அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
குழுமூர் மாணவி அனிதா தொடங்கி அரியலூர் நிஷாந்தினி வரை நீட் தேர்வு பல மாணவ- மாணவிகளின் உயிரைப் பலிவாங்கி வருகிறது. நீட் தேர்வுக்கெதிரான மசோதாவோ ஆளுநரின் மாளிகையிலும், மத்திய அரசிலும் இதையெதுவும் அறியாமல் நீள்துயிலில் இருக்கிறது.